Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டு தயாரித்தவரை அடையாளம் காண புதிய மரபணு தொழில்நுட்பம்

Featured Replies

குண்டு தயாரித்தவரை அடையாளம் காண புதிய மரபணு தொழில்நுட்பம்

வெடிகுண்டு சிதறல்களுடன் மரபணுக்களை தொடர்புபடுத்தி குறிப்பிட்ட குண்டை தயாரித்தவரினை இனம் காணக்கூடிய நவீன முறையினை தடயவியல் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பானது, சொந்தமாக வெடிபொருட்களை தயாரிக்கும் தீவிரவாதிகளையும் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்காக குண்டுகளை தயாரித்த நபரையும் இனம் காண்பதற்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பொலிஸார் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர்களை கண்டுபிடிப்பதற்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆர்வமாகவுள்ளனர். சிலவேளைகளில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் காணப்படும் இரத்தக் கறைகள் குற்றவாளியுடன் ஒத்துப்போகாதவையாகவுள்ளன.

உள்ளூர் வெடிகுண்டொன்று வெடிக்க வைக்கும் போது அதிலிருந்து உயர் வெப்பம் வெளியிடப்படுகின்றது. இதன் காரணமாக மரபணுக்கள் சேதமடைகின்றன. இதனால், கடந்த காலங்களில் வெடிகுண்டு சிதறல்களிலிருந்து, பயன்படுத்தக்கூடிய மரபணு கைவிரலடையாளங்களை பயன்படுத்த முடியாமலிருந்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற தடயவியல் மாநாட்டில் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டெபுனி கிரெமெர் தனது புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவர்கள் வழமையான குண்டுகளைத் தயாரித்துள்ளனர். பின்னர், தரையிலுள்ள மரபணு அழிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் அங்கு கூடியிருந்தவர்களை அதனைக் கையாளுமாறு கேட்டுள்ளனர். பின்னர் மூடிய அறையுள் குண்டு வெடிக்க வைக்கப்பட்டு சிதறல்கள் ஆய்விற்காக சேர்க்கப்பட்டுள்ளன.

அவர்கள் சேகரித்த 38 மாதிரிகளில் 18 சரியான சந்தேக நபர்களுடன் பொருந்தியுள்ளன. ஏனைய ஏழும் ஓரளவு சரியாக அமைந்துள்ளன.

இதன் காரணமாக வெடித்த குண்டுகளிலிருந்து பயன்படுத்தக் கூடிய மரபணுவை எடுக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது என்று கிரெமெர் தெரிவித்துள்ளார்.

இன்னுமொரு குழு ஆராய்ச்சியாளர்கள் குண்டுவெடிப்பதற்கு முதல் இரத்த மாதிரிகள் தரையிலிருந்தால் முழுமையான மரபணுவைப் பெறலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

http://www.thinakkural.com/news/2007/2/27/importantnews_page22287.htm

நல்ல விசயம்! இந்தக் குண்டுகள் எல்லாம் அமெரிக்காவினால் செய்யப்பட்டு வேறு நாடுகளிற்கு விற்கப்படுவதாகவும் கூறுகின்றார்கள். அப்படியாயின் குண்டுகளைச் செய்யும் குற்றவாளிகள் புதிய மரபணு தொழில்நுட்பம் மூலம் இணங்காணப்படும்போது அவர்கள் அமெரிக்காவின் உள்ளேயே காணப்படுவதால் அவர்களை பிடித்து தண்டனை கொடுப்பதும் இலகுவாக இருக்கும்! :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.