Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

11 தமிழர்கள் கடத்தல் குறித்து பொய் உரைக்கிறார் வீரவன்ச பெற்றோர்கள் விசனம்

Featured Replies

11 தமி­ழர்­கள் கடத்­தல் குறித்து பொய் உரைக்­கி­றார் வீர­வன்ச

பெற்­றோர்­கள் விச­னம்

 
11 தமி­ழர்­கள் கடத்­தல் குறித்து பொய் உரைக்­கி­றார் வீர­வன்ச
 

“கடற்­ப­டை­யி­ன­ரின் சாட்­சி­யங்­க­ளின் அடிப்­ப­டை­யில்­தான் கொம­டோர் தச­நா­யக்க கைது செய்­யப்­பட்­டார். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ச கூறு­வ­தைப் போன்று எங்­கள் பிள்­ளை­க­ளுக்கு விடு­த­லைப் புலி­க­ளு­டன் எந்­தத் தொடர்­பு­மில்லை. அர­சி­ய­லுக்­காக விமல் வீர­வன்ச பொய் உரைக்­கி­றார்”
இவ்­வாறு தலை­ந­க­ரில் கடத்­தப்­பட்ட 5 மாண­வர்­கள் உள்­ளிட்ட 11 தமி­ழர்­க­ளின் பெற்­றோர் கவலை வெளி­யிட்­ட­னர்.

கொழும்­பில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே அவர்­கள் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­த­னர். “எமது பிள்­ளை­கள் கடத்­தப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பில் நாம் 2009ஆம் ஆண்­டி­லி­ருந்தே விசா­ர­ணைக்­குக் கோரிக்­கை­வி­டுத்து வந்­துள்­ளோம். கடந்த காலங்­க­ளில் மூடி அறைக்­குள் விசா­ர­ணை­கள் இடம்­பெற்­றன. அங்கு என்ன நடக்­கி­றது? என்­பது யாருக்­கும் தெரி­ய­வ­ர­வில்லை. தற்­போது பகி­ரங்­க­மான விசா­ரணை நடை­பெ­று­கின்­றது.

கடற்­ப­டை­யி­னர் வழங்­கிய வாக்­கு­மூ­லங்­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே கொம­டோர் தச­நா­யக்க கைது செய்­யப்­பட்­டார். உண்மை இது­வாக இருக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ச அர­சி­ய­லுக்­காக பொய் உரைக்­கி­றார்” என்று அவர்­கள் மேலும் தெரி­வித்­த­னர்.

http://uthayandaily.com/story/12095.html

  • தொடங்கியவர்

பணத்திற்காக கடற்படையினர் கடத்திய எமது பிள்ளைகள் எங்கே?

01-4feed9b8a4ae3876fa884efdfbce6035e9f081ab.jpg

 

அரசியல் சாயம் பூசவேண்டாம்; வெள்ளைவேனில் கடத்தப்பட்ட  5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் உறவுகள் கண்ணீர் மல்க கோரிக்கை
(எம்.எப்.எம்.பஸீர்)

படித்து நாட்­டுக்கு சேவை செய்ய இருந்த எமது பிள்­ளை­களை பணத்­துக்­காக கடத்திச் சென்றனர். எம்­மிடம் கோடிக்கணக்கில் கப்பம் கோரினர். இதுவரை அவர்கள் தொடர்பில் எந்த தக­வல்­களும் இல்லை. கடற்­ப­டை­யி­னரே இந்த கடத்­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்­பதை குaற்றப்புல னாய்வுப் பிரிவின் விசா­ர­ணைகள் ஊடா­கவே நாம் அறிந்தோம். தற்­போது சில அர­சியல்வாதிகள் எமது பிள்­ளை­களை  பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்தி­ரிக்க முற்­ப­டு கின்­றனர்.

8 வரு­டங்­க­ளாக நாம் எமது  
பிள்­ளை­களை தேடு­கின்றோம்.  

அவர்கள் எங்கே? தயவு செய்து இந்த விட­யத்தில் அர­சியல் சாயம் பூசாது, எமக்­கான நியா­யத்தைப் பெற்­றுத்­தா­ருங்கள் என்று கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் உற­வி­னர்கள் நேற்று கண்ணீர் விட்­டு கதறிய­ழுது வேண்­டுகோள் விடுத்­தனர்.  

கொழும்பு - நிப்போன் ஹோட்­டலில் விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடாத்­தியே அவர்கள் அர­சாங்­கத்­திடம் இந்த வேண்­டு­கோளை விடுத்­த­துடன் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்துச் செல்ல அனு­ம­திக்­கு­மாறும் அவர்­க­ளுக்கு இடை­யூறு செய்யும் வகை­யி­லான அர­சியல் தலை­யீ­டு­களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் வேண்­டுகோள் விடுத்­தனர்.

2008 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து கடத்­தப்பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரும் விடு­தலை புலிகள் என முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச ஊடகங்­க­ளிடம் தெரி­வித்த கருத்­துக்கு மறுப்பு தெரி­விக்கும் வித­மாக , காணாமல் ஆக்­கப்பட்­டோரின் பெற்­றோர்கள் இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர். இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரிவித்தபோதே கண்­ணீ­ருடன் குறித்த உற­வுகள் மேற்­படி விட­யத்தை வெளிப்­ப­டுத்­தினர்.

காணாமல் ஆக்­கப்பட்ட ரஜீவ் நாக­நா­தனின் தாய் சரோ­ஜினி நாக­நாதன்:

2008 செப்­டம்பர் மாதம் 17 ஆம் திகதி எனது மகன் கடத்­தப்பட்டார். எனக்கு இருந்­தது ஒரே ஒரு மகன். உயர் கல்­விக்­காக வெளி­நாடு செல்ல இருந்த நிலையில் அவன் கடத்­தப்பட்டான். தில­கேஸ்­வரன், டிலான் ஆகிய தனது இரு நண்­பர்­க­ளுடன் அவன் வீட்டில் இருந்து காரில் சென்றபோதே, தெஹி­வ­ளையில் வைத்து கடத்­தப்­பட்­டுள்ளான்.

 கடற்­ப­டை­யி­னரால் அவன் கடத்­தப்பட்டு தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்த போது தொலை­பேசி ஊடாக எங்­க­ளுடன் கதைத்தும் உள்ளார். அவர்கள் பேசும் தொலை­பேசி இலக்­கத்­துக்கு நாமே ரீலோட்டும் செய்­துள்ளோம். மகனை விடு­விக்க என்­னிடம் ஒரு கோடி ரூபா கப்பம் கோரப்பட்­டது. நான் 75 இலட்சம் ரூபா­வுடன் நாரம்­ம­லைக்கு செல்ல முற்­பட்ட போது அப்­போ­தைய அமைச்சர் பீலிக்ஸ் பெரே­ராவின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய நான் அங்கு செல்­ல­வில்லை.

 பீலிக்ஸ் பெரேரா அப்­போது கடற்­படை தள­பதி கரண்­ணா­கொ­ட­வுடன் பேசி, எனது மகனை விடு­விக்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தார். எனினும் இன்று வரை எனது மகன் விடு­விக்­கப்­ப­ட­வில்லை.

இன்று அர­சியல் வாதிகள், கடத்­தல்­க­ளுக்கு பொறுப்புக் கூற வேண்­டிய தஸ­நா­யக்க எனும் கடற்­படை அதி­கா­ரியைக் கைது செய்­ததும், தஸ­நா­யக்­கவின் பிள்­ளைகள் மனைவி அழு­வ­தாக பேசு­கின்­றனர்.

 உங்கள் மன­சாட்­சியைத் தொட்டு சொல்­லுங்கள். கடந்த 8 வரு­டங்­க­ளாக நாம் அழுத அழு­கையும், உங்­க­ளிடம் விடுத்த வேண்­டு­கோள்­களும் உங்­க­ளுக்கு தெரி­ய­வில்­லையா?. எமது பிள்­ளை­க­ளுக்­காக நாமும் இப்­படித் தானே 8 வரு­டங்­க­ளாக அழு­து­கொண்­டி­ருக்­கின்றோம்.

எனது மகனை கடத்திச் சென்று முதலில் வெலி­சறை முகாமில் வைத்­தி­ருந்­தனர். பின்னர் சைத்­திய வீதியில் உள்ள மறை­வி­டத்­திலும், பின்னர் திரு­மலை இர­க­சிய முக­ாமிலும் வைத்­தி­ருந்­தனர். இவை சம்பத் முன­சிங்க, ஹெட்டி ஆராச்சி மற்றும் ரண­சிங்க ஆகி­யோரின் கீழேயே இடம்­பெற்­றன. இதனை மகன் எனக்கு தொலை­பே­சியில் கதைக்கும் போதே தெரி­வித்தார். தயவுசெய்து எமது பிள்­ளை­களை எம்­மிடம் தாருங்கள் என கண்ணீர் மல்க தெரி­வித்தார்.

இதன் போது கடத்­தப்பட்ட ஐவரில் உள்­ள­டங்கும் டிலான் மொஹம்மட் எனும் மாண­வனின் பெற்றோர் பேசு­கையில்:

எமது பிள்­ளையைக் கடத்­தி­ய­வர்கள் கடற்­ப­டை­யினர் என்­பது தெரி­ய­வந்த போது மிக கவ­லை­யாக இருந்­தது. ஏனெனில் நாமும் இரா­ணுவ குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள். எனது கணவர் ஓய்­வு­பெற்ற இரா­ணுவ வீரர். எனினும் இவ்­வா­றான கடத்­தல்­களை ஒரு போதும் உண்­மை­யான இரா­ணுவ வீரர்கள் புரி­ய­மாட்­டார்கள்.

எமது பிள்­ளைகள் புலிகள் இல்லை. அதனை நான் அடித்துச் சொல்வேன். எனது மகன் புலி என நிரூ­பித்தால் நான் எனது முறைப்­பாட்டை மீளப் பெற்­றுக்­கொள்வேன். அப்­பா­வி­களை கடத்தி காணாமல் ஆக்­கிய­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை வேண்டும்.

 எமது பிள்­ளை­களை கடத்­தி­யோரை நாம் அடை­யாளம் காண­வில்லை. ஆனால் புல­னாய்வுப் பிரி­வி­னரே, கடற்­படை அதி­கா­ரிகளின் சாட்­சி­யங்­க­ளுக்கு அமை­வா­கவே அவற்றை வெளிப்­ப­டுத்திக் கொண்டுள்ளனர். அதன்­படி கைது செய்­யப்பட்­டுள்­ள­வர்கள் எமது பிள்­ளை­களை கடத்­தி­ய­மைக்கு பொறுப்புக் கூற வேண்டும். தயவு செய்து அர­சி­யல் இலா­பத்­துக்­காக எமது பிள்­ளை­களைப் பயன்­ப­டுத்த வேண்டாம் எனக் கோரினார்.

இத­னை­ய­டுத்து தனது கணவன் மற்றும் மகன் ஆகியோர் கடற்­ப­டை­யி­னரால் கடத்­தப்பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில் சம்சுன் நிஹாரா எனும் பெண் ஊட­கங்­க­ளுக்கு பேசினார்.

'தனது காத­லி­யுடன் வேனில் போகும் போது எனது மகன் 2008.09.11 ஆம் திகதி கடத்­தப்பட்டார். பின்னர் வீட்­டுக்கு வந்­த­வர்கள் எனது கண­வரை 2008.10.17 ஆம் திகதி கடத்திச் சென்­ரனர். மகன் கணவர் இருவர் தொடர்­பிலும் இது­வரை தகவல் இல்லை.

என்­னிடம் மக­னையும் கண­வ­ரையும் விடு­விக்க கடற்­ப­டையின் அண்ணாச்சி என தன்னை அறி­முகம் செய்த ஒருவர் கப்பம் கோரினார். 15 இலட்சம் கோரினார். என்­னிடம் அவ்­வ­ளவு பணம் இல்லை என்றேன். இறு­தியில் 5 இலட்சம் கோரி அதனை மூன்று இலட்­ச­மாக குறைத்­துக்கொண்டு பணத்­தையும் எடுத்துக் கொண்டு நாரம்­மல பகு­திக்கு சென்று கொடுத்தேன். அப்­போதும் அவர்­களை விடு­விக்­க­வில்லை. கொடுத்­ததில் ஒரு 1000 ரூபா நோட்டு குறை­வ­தாக கூறினர். மக­னையும் கண­வ­ரையும் திருப்பித் தர­வில்லை.

அண்­மை­யி­லேயே மகன் பய­ணித்த வேன் கைப்­பற்­றப்பட்­டுள்­ளது. அதிலும் எஞ்ஜின், செஸி இலக்­கங்கள் வேறாக்­கப்பட்­டுள்­ள­தாக புல­னாய்வுப் பிரி­வினர் கூறு­கின்றனர். என்ன நடக்­கி­றது என தெரி­ய­வில்லை. தயவு செய்து எனது கண­வ­ரையும் மகனையும் மீட்டுத் தாருங்கள் என்றார்.

இத­னை­ய­டுத்து கடத்­தப்பட்டு காணாமல் போயுள்ள மொஹம்மட் சாஜித் எனும் நபரின் சகோதரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவரும் தனது சகோதரை மீட்டுத் தருமாறும் அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் எவ்வித சம்ப்ந்தமும் அற்றவர் எனவும் கூறினார்.

 குறிப்பாக விமல் வீரவன்ச தமது பிள்ளைகளை புலிகள் இயக்கத்துடன் தொடர்பு படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், 8 வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு விடயத்தை அவர் தெரிவிப்பதானது கவலையளிப்பதாகவும் பெற்றோர் தெரிவித்ததுடன் இந்த சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என கை கூப்பி வேண்டுகோள் விடுத்தனர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.