Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூநகரியை நோக்கி தொடரும் வான், எறிகணை தாக்குதல்கள்.

Featured Replies

பூநகரியை நோக்கி தொடரும் வான், எறிகணை தாக்குதல்கள்.

கிளிநொச்சி பூநகரி மீது சிறிலங்காப் படையினரின் வான் தாக்குதல் மற்றும் எறிகணை வீச்சுக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

1991 ஆம் ஆண்டு 'வலம்புரி' படை நடவடிக்கை மூலம் சிறிலங்காப் படையினர் பூநகரியை ஆக்கிரமித்தனர். இதன் காரணமாக பூநகரியிலிருந்து 4,500 வரையான குடும்பங்கள் இடம்பெயர்ந்தனர்.

இடம்பெயர்ந்த குடும்பங்கள் ஜெயபுரம், பூநகரி, முழங்காவில், வன்னேரிக்குளம் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்தனர்.

1993 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சிறிலங்காப் படையினரின் பூநகரி படைத்தளம் மீது 'தவளை நடவடிக்கை' மேற்கொள்ளப்பட்டது. இதன் போது பல நூற்றுக்கணக்கான சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர்.

1996 ஆம் ஆண்டு 'ஓயாத அலைகள் - 01' நடவடிக்கை மூலம் முல்லைத்தீவு படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டது.

முல்லைத்தீவு படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டமையினால் கடற்கரையோரங்களிலுள்ள படைத்தளங்களை பாதுகாக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்ட சிறிலங்கா படைத்தரப்பு பூநகரி படைத்தளத்தை விட்டு பின்வாங்கியது.

பூநகரியிலிருந்து சிறிலங்காப் படையினர் பின்வாங்கி ஓடியதன் பின்னர் இடம்பெயர்ந்த சில குடும்பங்கள் மீளக்குடியமர்ந்தனர்.

இருப்பினும் யாழ். குடாநாட்டிலிருந்து சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக எறிகணை வீச்சுக்களை பூநகரி மீது தொடர்ச்சியாக நடத்தி வந்தனர்.

2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட பின்னர் பூநகரியிருந்து 1991 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த குடும்பங்கள் பெருமளவில் குடியமர்ந்தனர்.

சிறிலங்காப் படையினாரால் பூநகரியில் அழிக்கப்பட்ட சகல கட்டுமானங்களையும் புனரமைக்கும் பணிகளும் இடம்பெற்று வந்தன.

தற்போது ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக பூநகரியிருந்து மக்கள் முற்றாக மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர்.

பூநகரி மீது யாழ். குடாநாட்டிலிருந்து சிறிலங்காப் படையினர் நாள்தோறும் எறிகணை வீச்சுக்களை நடத்தி வருகின்றனர். அடிக்கடி வான் தாக்குதலும் இடம்பெறுகின்றன.

இதன் காரணமாக பூநகரியின் சகல கட்டுமானங்களும் அழிவடைந்துள்ளன. கிளிநொச்சி வலய கல்வி பணிமனையின் தகவலின் படி சிறிலங்காப் படையினரின் வான் தாக்குதல் மற்றும் எறிகணை வீச்சுக்களினால் இரு பாடசாலைகள் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும், ஐந்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் சேதங்களை சந்தித்துள்ளதாகவும் எறிகணை வீச்சுக்கள் தொடர்ந்து இடம்பெறுவதால் இடம்பெயர்ந்த பாடசாலைகளில் இருந்து தளபாடங்கள், உபகரணங்களை ஏற்ற முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பூநகரியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் ஜெயபுரம், முழங்காவில், வன்னேரிக்குளம் ஆகிய பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

பூநகரியில் மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாய முயற்சிகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணம், முகமாலை, நாகர்கோவில், வவுனியா, ஓமந்தை, முல்லைத்தீவு மணலாறு ஆகிய பகுதிகளிருந்து சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியாக எறிகணை தாக்குதல்களை அடிக்கடி மேற்கொண்டு வருகின்றனர்.

1996 ஆம் ஆண்டு சிறலங்கா படையினர் கிளிநொச்சி மீது மேற்கொண்ட 'சத்ஜெய' ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போதும் 1997 ஆம் ஆண்டு வன்னி மீது மேற்கொண்ட 'ஐயசிக்குறு' படை நடவடிக்கையின் போதும் தமது படை நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர் மக்கள் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களையும், வான் தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

-Puthinam-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.