Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலைச் சந்தித்து பேசினார் ஐ.நாவின் ஜெப்ரி பெல்ட்மன்

Featured Replies

ரணிலைச் சந்தித்து பேசினார் ஐ.நாவின் ஜெப்ரி பெல்ட்மன்

ரணிலைச் சந்தித்து பேசினார் ஐ.நாவின் ஜெப்ரி பெல்ட்மன்
 

இலங்கைக்கு வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்த்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இன்று காலை நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியும், இலங்கையின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் உடனிருந்தனர்.

தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றபோது ஜெப்ரி பெல்ட்மனைச் சந்தித்து அரசமைப்பு மறுசீரமைப்பு, நல்லிணக்கம் போன்றவற்றில் தாக்கம் செலுத்தும் காரணிகள் தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் அனைத்து மத பேரவைப் பிரதிநிதிகளையும் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் நாளை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.(ற)

http://newuthayan.com/story/12690.html

  • தொடங்கியவர்

ஐ.நா.வின் அரசியல் பிரதிநிதி பிரதமர் ரணிலுடன் சந்திப்பு

p20-4af58ca25a0f6afb91c1c5febcd5817f4a73322e.jpg

 

(ரொபட் அன்­டனி)

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள ஐக்­கி­ய­நா­டுகள் சபையின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி செய­லாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் நாட்டின் யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான நல்­லி­ணக்க மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டுகள் தொடர்பில் ஆராய்ந்து வரு­வ­துடன் பல்­வேறு அர­சியல் தலை­வர்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­கிறார்.  

நேற்­றை­ய­தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­திய ஐக்­கி­ய­நா­டுகள் சபையின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி செய­லாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் நேற்று முன்­தினம் வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்­லா­கம மற்றும் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஸீர் அஹமட் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நேற்­றுக்­காலை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய ஐ.நா.வின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி செய­லாளர் பெல்ட்மன் நாட்டின் தற்­போ­தைய நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விவ­காரம் போருக்குப் பின்­ன­ரான நிலைமை உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார்.

நாட்டின் தற்­போ­தைய அர­சியல் நிலை­மைகள் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்க செயற்­பா­டுகள், பொறுப்­புக்­கூறல் பொறி­முறை குறித்த நிலை, அர­சியல் தீர்வு செயற்­பா­டுகள் மற்றும் காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐ.நா.வின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பா­ன­வர்­க­ளுக்கு விளக்­க­ம­ளித்­துள்ளார்.

மேலும் ஐக்­கிய நாடுகள் சபையும் இலங்­கையும் இணைந்து எதிர்­கா­லத்தில் செயற்­ப­டு­வது தொடர்­பா­கவும் இதன்­போது விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. விசே­ட­மாக 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் பிரே­ரணை தொடர்­பா­கவும் இந்த சந்­திப்­பின்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

மிக­முக்­கி­ய­மாக அர­சாங்கம் முன்­னெ­டுத்­து­வரும் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐ.நா. பிர­தி­நி­திக்கு விளக்­க­ம­ளித்­துள்ளார். இதன்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­ப­ட­வுள்ள முக்­கி­ய­மான விட­யங்கள் தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

இது இவ்­வா­றி­ருக்க ஐ.நா.வின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி செய­லாளர் பெல்ட்மன் நேற்­று­முன்­தினம் வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வையும் சந்­தித்து உரை­யா­டினார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை மற்றும் அந்த பிரே­ர­ணையை தொடர்ந்து அமுல்­ப­டுத்­த­வ­தற்­காக இரண்டு வரு­டங்கள் கால அவ­காசம் வழங்­கப்­பட்­டமை தொடர்­பாக விரி­வாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­போது 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை கால அவ­கா­சத்தின் போது அமுல்­ப­டுத்­து­வது குறித்தும் அதன் சவால்கள் தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக வெளி­வி­வ­கார அமைச்சின் தக­வல்கள் தெரி­வித்­தன.

இதே­வேளை நேற்று முன்­தினம் கிழக்கு மாகா­ணத்­திற்கு விஜயம் செய்த ஐ.நா. பிர­தி­நிதி ஜெப்ரி பெல்­டமன் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஸீர் அஹமட், கிழக்­கு­மா­காண ஆளுநர் ரோஹித்த போகொல்­லா­கம, ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். கிழக்கு மாகா­ணத்தின் தற்­போ­தைய நிலைமை கிழக்கு மாகா­ணத்தில் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் தொடர்­பா­கவும் ஆரா­யப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இலங்கை வந்­தி­ருக்கும் ஐ.நா.வின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி செய­லாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் இன்­றைய தினம் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் உள்­ளிட்ட கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

இதன்­போது தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­வ­ழங்­கு­வ­தற்­கான பொறுப்­புக்­கூறல் செயற்­பாடு தொடர்­பாக விரி­வாக ஆரா­யப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அத்­துடன் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வதில் காணப்­படும் தாமதம் தமிழ் பேசும் மக்­களின் அடிப்­படை பிரச்சினை இதுவரை தீர்க்கப்படாமை, அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் மீளளிக்கப்படாமை, காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வு காணப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஐ.நா. பிரதிநிதிக்கு தெளிவுபடுத்த உள்ளது.

அதுமட்டுமன்றி புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகள், அதனூடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு, உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது பரந்துபட்ட ரீதியில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.