Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘முதல்வன்’ பாணியில் முதல்வர்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘முதல்வன்’ பாணியில் முதல்வர்...

ஒரே நாளில் 125 பேர் சஸ்பெண்ட்!

‘‘நீங்க இந்தியாவோட மூத்த அரசியல் வாதிங்கறது எல்லோருக்கும் தெரிஞ்ச சேதி... ஆனா, அடிப்படையில நீங்க ஒரு விவசாயிங்கறது பலபேருக்கு தெரியாத விஷயம். நீங்க பொறந்த மாவட்டம் உள்பட காவிரி டெல்டா விவசாயிங்களுக்கு உங்க காலத்துலயே ஒரு விடிவு வரணும்னு ஆசைப்படறோம். அது ஒருபக்கம் இருந் தாலும் உங்ககிட்ட நாங்க இன்னொரு கோரிக் கைய வைக்க பிரியப்படுறோம். பெரிசா ஒண்ணுமில்லீங்க... எங்க ஏரியா பக்கம் இருக்கற நெல் நேரடி கொள்முதல் நிலையங் கள்ல நடக்கற முறைகேடுகளை பெரிய மனசு வச்சு தீர்த்து வெச்சா அதுபோதும் எங்களுக்கு...’’

& இப்படி ஒரு வேண்டுகோள் முதல்வர் கருணாநிதியின் தனிப் பார்வைக்கு வர, புருவம் உயர்த்திய அவர் உடனடியாக உத்தரவுகளைப் பொழிந்து தள்ளியிருக்கிறார். விளைவு, உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய டீம் ஒன்று குதிரைப் பாய்ச்சலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிரடி விசிட் அடித் திருக்கிறது. அதோடு, நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறது.

இது சம்பந்தமாக டெல்டா பகுதி விவசாயிகள் சிலரிடம் பேசினோம். முதல்வரின் புகழை உரக்கப் பாடியபடி பேச ஆரம்பித் தார்கள்.

‘‘இப்போ இந்தப் பகுதியில சுமாரா ஆயிரத்துக்கும் அதிகமான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்கு. தமிழ்நாட்டுக்குத் தேவைப்படுற அரிசியில முக்கால்வாசியை நாங்கதான் விளைவிச்சுத் தர்றோம். எங்களுக்கும் அரசாங்கத்துக்கும் பாலமா இருக்கறதே இந்த நெல் கொள்முதல் நிலையங்கள்தான். இங்க எல்லாமே இலவசமா கிடைக்கணும், விவசாயி கொண்டுவர்ற நெல்லை உடனுக்குடன் வாங்கி அப்பவே கையில பணத்தைக் கொடுத்து அனுப்பணும்ங்கறது கலைஞர் முதல்வரானதும் போட்ட உத்தரவு. காரணம், எங்களோட கஷ்டநஷ்டங்கள் அவருக்கு நல்லாத் தெரியும். இப்ப நாங்க முதலமைச்சர்கிட்ட வெச்சது மூணு கோரிக்கைதான்.

முதல்ல, விவசாயி சாயங்காலம் ஆறு மணிக்கு மேல நெல்லைக் கொண்டு வந்தா, நேரமாகிப் போச்சு நாளைக்கு வான்னு சுலபமாச் சொல்லிடறாங்க. ஆனா நாங்க கொண்டு போன நெல்லை திரும்பவும் வீட்டுக்கு கொண்டு போய் திரும்பவும் மறுநாள் காலையில கொண்டு போறது பெரிய வேலையா இருக்கு. அடுத்து, ஒரு மூட்டை நெல் முப்பத்தஞ்சு கிலோதான் இருக்கணும், சாக்கைச் சேர்த்து கூட எழுநூறு கிராம் வரைக்கும் இருக்கலாம். ஆனா பல கொள்முதல் நிலையங்கள்ல நாப்பது கிலோ நெல்லை ஒரு மூட்டையா கணக்குல எடுத்துக்கிட்டு எங்ககிட்டயிருந்து வாங்கறாங்க. இதுல தினமும் பல லட்ச ரூபாயை அதிகாரிங்க கொள்ளை அடிக்கறாங்க. மூணாவதா, நெல்லை தூத்தறதுக்கு அரசாங்கமே மெஷினை வாங்கிப் போட்டிருக்கு. போன கவர்ன்மெண்டுல மூட்டைக்கு அஞ்சு ரூபா வாங்கிக்கிட்டு இருந்தாங்க. இந்த கவர்ன்மெண்டுல நெல்லை தூத்தற துக்கு பைசா வாங்கக் கூடாதுன்னு கலைஞர் உத்தரவு போட்டிருந்தாரு. ஆனாலும் அதையும் மீறி விஷயம் தெரியாத விவசாயிங்க கிட்ட இப்பவும் மூட்டைக்கு அஞ்சு ரூபா வாங்கிக்கிட்டிருக்காங்க. இதைத்தான் பிரதான புகாரா முதலமைச்சருக்குச் சொல்லியிருந்தோம்.

நாங்க அவருக்கு மனுப்போட்ட ஒரு வாரத்துல அமைச்சர் வேலு, ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி, முதல்வர் அலுவலக அதிகாரிங்கன்னு பெரிய படையே எங்க பகுதிக்கு வந்தாங்க. ஒரு வாரம் டெல்டா மாவட்டங்கள்ல ரவுண்ட் அடிச்சாங்க. முதல்ல கடலூர் மாவட்டத்துல இருக்கற முட்லூர், கீரப்பாளையம், மஞ்சக்கொல்லை, புவனகிரி, முட்டம், மோவூர், லால்பேட்டைன்னு விசிட் அடிச்சவங்க, இங்கெல்லாம் அரசு நிர்ணயிச்ச அளவைவிட அதிக மான நெல்லை விவசாயிங்க கிட்டயிருந்து வாங்கிக்கிட்டிருந்த கொள்முதல் பணியாளர்களை தனியா நிக்கவெச்சாங்க. இவங்களையும், விவசாயிங் களையும் ஒண்ணா உட்கார வெச்சு பேசச் சொன்னாங்க. அவங்க மேல விவசாயிங்க அடுக்கடுக்கா புகார்களை சொன்னாங்க. எந்த புகாருக்கும் கொள்முதல் பணியாளர்களால் பதில் சொல்ல முடியலை. முப்பத்தஞ்சு கிலோ வுக்குப் பதிலா நாற்பது கிலோ வரைக்கும் விவசாயிங்ககிட்டயிருந்து நெல் வாங்குனது நிரூபிக்கப்பட்டதுமே அங்கேயே நாற்பது பணி யாளர்களை அமைச்சரும் அதிகாரிங்களும் சஸ்பெண்ட் செஞ்சாங்க.

அடுத்து நாகை மாவட்டத்துல ஆசாள்புரம், நல்லூர், பழையபாளையம், மாதானம் ஆகிய ஊர்கள்ல பகல்லயே விவசாயிங்க தங்களோட நெல்லை கொள்முதல் நிலையங்களுக்குக் கொடுக்க முடியாம நடுரோடுல நின்னுக் கிட்டிருந்தாங்க. அதிகாரிங்க இந்த விவசாயிங்க கிட்டயும் விசாரிச்சாங்க. ‘எங்க நெல்லை வைக்க இடமில்லைன்னு வாங்க மாட்டேங்கறாங்க’ன்னு விவசாயிங்க சொன்னாங்க. உடனடியா சம்பந்தப்பட்ட ரெண்டு முதுநிலை மண்டல மேலாளர் களையும் ஸ்பாட்டுக்கு வரவழைச்சாங்க. விவசாயிங்களை வெச்சுக்கிட்டே விசாரணை நடந்துச்சு. கடைசியில இந்த விஷயம் முதல்வர் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலமா சொல்லப்பட்டது. காரணம், இவங்க முதல்வர் பொறுப்புல இருக்கற பொதுத்துறைக்குக் கீழ வர்ற அதிகாரிங்க. ‘தப்பு செஞ்சிருந்தா அவங்க மேல தாராளமா நடவடிக்கை எடுக்கலாம்’னு முதல்வரே சொல்ல, அவங்க ரெண்டு பேரும் ஸ்பாட்டுலயே டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டாங்க. இதுபோல சில நேரடி கொள்முதல் நிலையங்கள்ல நெல்லைத் தூத்தறதுக்கு காசு வாங்குனதையும் முதல்வர் அனுப்புன ஆளுங்க கண்டுபிடிச்சாங்க. அவங்களையும் சஸ்பெண்ட் செஞ்சு ஸ்டாட்டுலயே உத்தரவு போட்டாங்க. முதல்வர் எடுத்த நடவடிக்கையில மொத்தம் 125 கொள்முதல் பணியாளர்கள், ரெண்டு முதுநிலை மண்டல மேலாளர்கள்னு பெரிய கும்பலையே களையெடுத்துட்டாங்க. முதல்வர் கவனத்துக்கு ஒரு விஷயம் போயிடுச்சுன்னா அவரு நடவடிக்கை எடுப்பார்னு நிரூபிச்சுட்டாரு’’ என்று உணர்ச்சிவசப்பட்ட விவசாயிகள், ‘‘இனி எந்தப் பிரச்னைன்னாலும், சென்னையில இருக்கற உணவுத்துறை உயரதிகாரிங்களோட நேரடியா பேச அவங்க போன் நம்பரையும் கொடுத்திருக்காங்க’’ என்றார்கள்.

நேரடி கொள்முதல் விவகாரங்களில் இனி எந்தப் பிரச்னை யென்றாலும் அதை உடனடியாக தீர்த்து வைக்கும் பொறுப்பை பிச்சைக்கண்ணு, பாலகிருஷ்ணன், திருவேங்கடம் ஆகிய மூன்று மண்டல அதிகாரிகள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ‘முதல்வன்’ பட பாணியில் நம் முதல்வர் களத்தில் இறங்க, தவறு செய்த டெல்டா மாவட்ட அரசு அதிகாரிகள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!

நன்றி விகடன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட்ட இடம் ஏது madam? :o

sorry கண்டுட்டன் :o

இந்தக்கதையை ஜெயா டீவியில் செல்வி ஜெயா உறுதிப்படுத்தினால்தான் நான் நம்புவேன்! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்கதையை ஜெயா டீவியில் செல்வி ஜெயா உறுதிப்படுத்தினால்தான் நான் நம்புவேன்! :P

:o இதானே வேண்டாங்கிறது அம்மையார் செய்தியை அப்படியே திரித்துக் கூறுவார். ஹையோ ஹையோ... ஜெயா செய்தி கேட்டால் ஒரே சிரிப்புத்தான் போங்கள்.

திமுக மைனாரிட்டி அரசு எடுத்த தடாலடி நடவடிக்கைகளால் நியாயமான அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட செய்யப்பட்டார்கள். "...

என்பார். :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.