Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூலைக் கலவரமும் தீர்வின்றி தொடரும் தமிழ் மக்கள் கோரிக்கையும்!

Featured Replies

யூலைக் கலவரமும் தீர்வின்றி தொடரும் தமிழ் மக்கள் கோரிக்கையும்!

 

இற்றைக்கு 34 வருடங்களுக்கு முன்னர் தீவிரம் பெற்ற தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டமும், அதன் கோரிக்கைகளும்   இன்றும் தீர்க்கப்படாத நிலையிலேயே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் புதிய குடியேற்றங்களின் மூலமாகவும் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகவும் முன்பை விடவும் மோசமான நிலைக்கு சென்றிருக்கின்றது.

 

பிரித்­தா­னிய ஏகா­தி­பத்­தி­யத்­திடம் இருந்து இலங்கை சுதந்­திரம் பெறு­வ­தற்கு முன்­பி­ருந்தே தமிழ் தேசிய இனம் தனது உரி­மைக்­காக குரல் கொடுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. பிரித்­தா­னியர் ஆட்சிக் காலத்தில் 1920 ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட மனிங் அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்தம் சட்­ட­வாக்க கழ­கத்தில் தமிழ், - சிங்­கள இனங்­க­ளுக்கு இடையில் பிர­தி­நி­தித்­துவ ரீதி­யாக பாரிய இடை­வெ­ளியை உரு­வாக்­கி­யி­ருந்­தது. அதனை அப்­போ­தைய தமிழ் மித­வாத தலை­மைகள் தட்டிக் கேட்ட நிலையில் சிங்­கள பௌத்த மித­வா­திகள் அதனை எதிர்த்­தனர். இதன் விளை­வாக சேர் பொன் அரு­ணா­சலம் தலை­மை­யி­லான தமிழ் மித­வாத தலை­வர்கள் இலங்கை தேசிய காங்­கி­ரஸில் இருந்து தமது தலைமைப் பத­வி­க­ளையும் கைவிட்டு வெளி­யே­றி­ய­துடன் தமிழர் மகா­ச­பையை  உரு­வாக்­கினர். அன்­றிலிருந்து உரி­மைக்­காக தமிழ் தேசிய இனம் சிங்­கள பௌத்த கடும் போக்­கா­ள­ருக்கு எதி­ராக பல்­வேறு படி­நி­லை­களில் போராட வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் இந்த நிலை உச்ச நிலை பெற்­றி­ருந்­தது. இதனை வெளிப்­ப­டுத்­திய பிர­தான சம்­ப­வ­மாக 1983 யூலைக் கல­வரம் இடம்­பெற்­றி­ருந்­தது.

இற்­றைக்கு 34 வரு­டங்­க­ளுக்கு முன்னர் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் திகதி முதல் இனக்­க­ல­வரம் என்ற பெயரால் தமிழ் தேசிய இனத்­திற்கு எதி­ராக கட்­ட­விழ்ந்து விடப்­பட்ட வன்­மு­றையே யூலைப் படு­கொலை. கல­வரம் என்­பது இரண்டு தரப்­புக்­களும் குழப்­பத்தில் ஈடு­ப­டு­வ­தாகும். ஆனால் இது கல­வரம் என்ற பெயரில் அமை­தி­யாக இருந்த தமிழ் தேசிய இனத்­திற்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு வன்­முறை. இது இனப்­ப­டு­கொலை என்று அன்று பல­ராலும் விமர்­சிக்­கப்­பட்­டது. நாட்டின் தலை­ந­க­ரான கொழும்பு, மலை­யகம், தென்­ப­குதி என பர­வ­லாக வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்­கள காடை­யர்கள் மேற்­கொண்ட காட்­டு­மி­ராண்டித் தன­மான தாக்­கு­தல்கள் கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் கொல்­லப்­பட்­ட­துடன், அவர்­க­ளது அசையும் மற்றும் அசையா சொத்­துக்­களும் ஏனைய உட­மை­களும் சூறை­யா­டப்­பட்­டன. பல தமிழ்­பெண்­களின் கற்­புகள் பறிக்­கப்­பட்­ட­துடன், பச்­சிளம் குழந்­தைகள் முதல் முதி­யவர் வரை வேறு­பாடு இன்றி பலர் வீதி­களில் பெற்றோல் ஊற்றி உயி­ருடன் எரித்து கொலை செய்­யப்­பட்­டனர். இவ்­வா­றாக தமிழ் மக்கள் கொல்­லப்­பட்ட போதும், கொடூ­ர­மான முறையில் வன்­முறை கட்­ட­விழ்ந்து விடப்­பட்ட போதும் அப்­போது ஆட்­சியில் இருந்த ஜே. ஆர் ஜெய­வர்த்­தன அர­சாங்கம் சுமார் ஒரு­வா­ர­காலம் நடை­பெற்ற இந்த வன்­மு­றை­களை கண்டு கொள்­ளாது வேடிக்கை பார்த்­துக் கொண்­டி­ருந்­தது. அந்த அர­சாங்­கத்தின் அன்­றைய அந்த நிலை அர­சாங்க ஆத­ர­வு­ட­னேயே இந்த படு­கொ­லைகள் நடந்­தே­றி­யதை வெளிச்சம் போட்டுக் காட்­டின. 

அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்டின் கீழ் இருந்த சிறைச்­சா­லை­களில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் அர­சியல் கைதி­க­ளான குட்­டி­மணி, தங்­கத்­துரை உள்­ளிட்ட 53 பேர் மிகவும் கொடூ­ர­மான முறையில் கொலை செய்­யப்­பட்­டனர். கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய சிறையில் இருந்­த­வர்கள் கூட கொலை செய்­யப்­பட்­ட­மை­யா­னது இந்த நாட்டின் நீதி­த்துறை மீதும் கேள்­வியை எழுப்­பி­யி­ருந்­தது.  ஆகவே இவை அனைத்தும் ஒரு திட்­ட­மிட்ட படு­கொலை என்­பது நிரூ­ப­ண­மா­கி­றது. இதனை பின் நாட்­களில் ஆட்சிக்கு வந்த ஆட்­சி­யா­ளர்கள் ஏற்றுக் கொண்டும் உள்­ளனர்.

1977 ஆம் ஆண்டு தேர்­தலில் வெற்றி பெற்று நிறை­வேற்று அதி­கா­ரத்­துடன் ஆட்­சிக்கு வந்­தி­ருந்த ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன தமிழ் தேசிய இனத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் தீவிரம் பெறு­வ­தற்கு கார­ண­மாக விளங்­கி­யி­ருந்தார். 1982 ஆம் ஆண்டு அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன 'போர் என்றால் போர், சமா­தானம் என்றால் சமா­தானம்' என்று  தெரி­வித்­தி­ருந்­த­துடன், வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்­பிலும் தெரி­வித்த கருத்­துக்கள் தமிழ் தேசிய இனத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கைகளை ஜே.ஆர் அர­சாங்கம் கண்டு கொள்­ளாது என்­பதை புலப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. யூலைக் கல­வரம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட மக்­களை வெளி­யேற்­று­வ­தற்கு இந்­திய அர­சாங்­கத்தின் உத­வி­யுடன்  கப்பல் சேவையும் இடம்­பெற்­றது. தலை­நகர் உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில் இருந்து தமிழ் மக்கள் அடித்து விரட்­டப்­பட்ட நிலையில் அவர்கள் தமது சொந்த இட­மான வடக்கு, கிழக்­கிற்கும் ஏனை­ய­வர்கள் இந்­தி­யா­விற்கும் குடி­பெ­யர்ந்­தி­ருந்­தனர். 

ஐ.நா.வின் முன்னாள் மனி­த­ உ­ரிமை ஆணை­யாளர் நவிப்­பிள்ளை 'ஒரு இனக் குழு­மத்தைச் சேர்ந்­த­வர்­களை தனி­யா­கவோ, கூட்­டா­கவோ அழித்­தொ­ழிப்­பது என்­பது ஒரு இனப்­ப­டு­கொ­லைக்கு சமன்' என்று கூறி­யி­ருக்­கிறார். இந்த நிலையில் யூலைப் படு­கொ­லையே தமிழ் தேசிய இனத்­திற்கு எதி­ராக இலங்­கையில் சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தி­களின் அடக்கு முறை ஆட்­சி­யையும் இனப்­ப­டு­கொலை முகத்­தையும் உல­கிற்கு படம் போட்டு காட்­டி­யது. தமிழ் தேசிய இனமும் விரும்­பியோ, விரும்­பா­மலோ இந்த நாட்டில் நிம்­ம­தி­யாக தாமும் வாழ்­வ­தற்­காக தற்­காப்­புக்­காக ஆயுதம் ஏந்த வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. ஆயுதப் போராட்டம் இந்த படு­கொ­லைக்கு பின்­னரே தீவி­ரமும் பெற்­றி­ருந்­தது. இனக்­க­ல­வ­ரத்தால் அப்­போ­தைய இளை­ஞர்கள் மத்­தியில் ஏற்­பட்ட கோபமும், ஆத்­தி­ரமும் அவர்­களை ஆயுதப் போராட்­டத்­திற்கு வலிந்து தள்­ளி­யி­ருந்­தது. 

தென்­ப­கு­தியில் இருந்து தமிழ் மக்கள் விரட்டப்­பட்ட நிலையில் அதன் பின்னர் இலங்கை இரா­ணுவம் ஒரு ஆக்­கி­ர­மிப்பு படை­யாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிர­தேசம் மீது தனது ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கையை தொடர்ந்­தது. அதி­லி­ருந்து தம்­மையும், தமது மண்­ணையும் பாது­காக்க தமிழ்  இளை­ஞர்கள், யுவ­திகள் ஆயுதம் ஏந்திப் போரா­டி­னார்கள். 2009 வரை தமிழ் மக்கள் ஆயுத ரீதி­யாக போராடி வந்த நிலையில் சர்­வ­தேச நாடு­களின் ஆத­ர­வுடன் தமிழ் மக்­களின் உரிமைப் போராட்டம் முள்­ளி­வாய்க்கால் படு­கொ­லை­யுடன் மௌனிக்கச் செய்­யப்­பட்­டது. யூலைப் படு­கொ­லையை அடுத்து தீவிரம் பெற்ற ஒரு இனத்தின் ஆயுத ரீதி­யான விடு­தலைப் போர் முள்­ளி­வாய்க்கால் படு­கொ­லை­யுடன் முடி­வுக்கு வந்­தது. ஆனால் அந்த மக்­களின் உரிமை என்­பது இன்று வரை கானல் நீரா­கவே இருக்­கின்­றது. 

கடந்த மஹிந்த அர­சாங்கம் போரை முடி­வுக்கு கொண்டு வந்த போதும் தமிழ் தேசிய இனத்தின் பிரச்­ச­ினை­களை தீர்ப்­ப­தற்கு முய­ல­வில்லை. சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ர­வுடன் போரை முடி­வுக்கு கொண்டு வந்த மஹிந்த சர்­வ­தே­சத்­திற்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற தவ­றி­யி­ருந்தார். இதனால் தமிழர் விவ­கா­ரத்தை முன்­வைத்து மஹிந்த அர­சாங்­கத்­திற்கு சர்­வதேச சமூகம் கடும் அழுத்தம் கொடுத்து வந்­தது. அதன் தொடர்ச்­சி­யா­கவே இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு ரணில்,- மைத்­திரி கூட்­டாட்சி உரு­வா­கி­யது. ஆட்சி மாற்­றத்தின் போது ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழித்தல், தேர்தல் முறை­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­துதல், நாட்டில் புரை­யோ­டிப்­போ­யுள்ள இனப்­பி­ரச்­ச­ினைக்கு நிரந்­தர தீர்வு காணல் என்­ப­வற்றை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை கொண்டு வரு­வ­தாக தேர்தல் மேடை­களில் வாக்­கு­று­தி­ய­ளித்த இந்த அர­சாங்கம் ஜனா­தி­பதி அதி­கா­ரங்கள் சில­வற்றை குறைத்து அதனை தற்­போ­தைய நடை­முறை அர­சியல் யாப்பின் மூலம் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றி­யுள்­ளது. தேர்தல் திருத்­தச சட்ட மூலம் கூட இந்த யாப்பின் திருத்­தத்தின் ஊடாக நிறை­வேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு என்ற விட­யத்தில் அர­சாங்கம் சிரத்தை கொண்­ட­தாக தெரி­ய­வில்லை. 

இந்த நிலையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் தென்­னி­லங்­கையின் பௌத்த மகா­நா­யக்­கர்கள் தெரி­வித்து வரும் கருத்­துக்­களும், அர­சாங்­கத்தின் பிர­தா­னிகள் தெரி­வித்து வரும் கருத்­துக்­களும் ஆட்சி மாற்­றத்­திற்கு அடி­கோ­லிய சர்­வ­தேச சமூ­கத்­தையும், அதற்கு ஆத­ர­வாக  வாக்­க­ளித்த தமிழ் மக்­களை எரிச்­ச­லூட்­டு­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. இந்த நாட்டின் சிங்­கள பௌத்த அடிப்­படை வாதி­களும், பௌத்த தேசிய கடும் போக்­கா­ளர்­களும் இனப்­பி­ரச்­ச­ினையை தீர்க்­க­வி­ரும்­பாது தமிழ் தேசிய இனத்தை அடக்கி ஆளு­வ­திலும் இந்த நாட்டை ஒரு சிங்­கள  பௌத்த தேசிய நாடாக காட்­டு­வ­திலும் முனைப்­பாக இருப்­ப­தா­கவே எண்­ண­வேண்­டி­யுள்­ளது. இந்த கடும்­போக்­கா­ளர்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தற்கு மைத்­திரி - ரணில் நல்­லாட்சி அர­சாங்­கமும் தயங்­கு­கி­றது. இத்­த­கைய குழப்­பங்­க­ளுக்கு மத்­தியில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான விட­யங்கள் அடுத்த ஆண்டு வரை கிடப்பில் போடப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் டிசம்பர் 31 ஆம் திக­தி­யுடன் அர­சாங்கம் அமைத்­துள்ள இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்கு இடையில் செய்து கொள்­ளப்­பட்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் முடி­வுக்கு வரு­கி­றது. அதன் பின் இந்த தேசிய அர­சாங்கம் நீடிக்­குமா...? அல்­லது ஒரு கட்சி தனக்­கான ஆத­ரவைத் திரட்டி ஆட்சி அமைக்­குமா..? என்­பது குறித்தும் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும், ஐக்­கிய தேசியக் கட்­சியும் தனித்து ஆட்சி அமைப்­பது தொடர்பில் கவனம் செலுத்தி வரு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. தமிழ் மக்­களின் தலை­மை­யான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­டமும் இது தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் செய்­திகள் வெளி­யாகி உள்­ளன. 

இன்று வரையில் இந்த நாட்டில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள அர­சியல் யாப்பும், சட்­டங்­களும் அவ்­வப்­போது ஆட்சி செய்­ப­வர்­களின் பத­வி­களை தக்க வைத்துக் கொள்­வ­தற்கும், மீண்டும் ஆட்­சியை கைப்­பற்­று­வ­தற்கும் தங்­க­ளுக்கு இடை­யி­லான அர­சியல் எதி­ரி­களை மௌனிக்கச் செய்து அவர்­களை செய­லி­ழக்கச் செய்­வ­தையே நோக்­க­மாக கொண்டு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே இந்த நல்­லாட்சி அர­சாங்­கமும் 5 வரு­டங்­க­ளுக்கு பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடி­யாது என்ற சட்ட மூலத்தை இயற்றி பல­வீ­ன­முற்று இருக்கும் இரண்டு கட்­சி­களும் தங்­க­ளது இருப்பை தக்க வைத்துக் கொள்­வ­தற்­காக உரு­வாக்­கின என்­பதும் இங்கு கவ­னிக்­கத்­தக்­கது. 

இந்த நிலையில், தமது இருப்­புக்­கான மாற்­றங்கள் தற்­போ­தைய யாப்பில் திருத்தச் சட்­டங்கள் மூலம் கொண்டு வரப்­பட்­டுள்ள நிலையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு வருமா? அல்­லது தற்­போ­தைய அர­சியல் யாப்பில் திருத்­தத்­துடன் அது முடி­வுக்கு வருமா? என்­பதே கேள்­வி­யா­க­வுள்­ளது. 1983 யூலைப்­ப­டு­கொலை ஆயுதப் போராட்­டத்தை தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு ஏற்­பட்ட முள்­ளி­வாய்க்கால் படு­கொ­லையை ஒரு மூல­த­ன­மாக கொண்டு மாறி­வந்த சர்­வ­தேச சூழலை சரி­யாக பயன்­ப­டுத்த கூட்­ட­மைப்பு தலைமை தவ­றி­யி­ருக்­கி­றது.  கூட்­ட­மைப்பின் ஆத­ர­வுடன் சர்­வ­தேச ரீதியில் இருந்த அழுத்­தங்­களை குறைத்து இராஜ தந்­திர வெற்­றியை இந்த அர­சாங்கம் பெற்­றி­ருக்­கி­றது. 

குறிப்­பாக இலங்­கையில் நடை­பெற்ற மனி­த­வு­ரிமை மீறல்கள், போர்க்­குற்­றங்கள் என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு 2015 இல் ஐ.நா மனி­த­வு­ரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 30-1 தீர்­மானம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான அறி­கு­றிகள் எது­வு­மின்­றியே அதே தீர்­மா­னத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு 34-1 இன் மூலம் மேலும் இரண்டு ஆண்­டுகள் கால அவ­காசம் வழங்­கப்­பட்டு இருக்­கி­றது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலை­மையின் ஆத­ர­வுடன் இந்த கால­நீ­டிப்பில் அர­சாங்கம் வெற்றி பெற்­றி­ருக்­கி­றது.  

இந்த நிலையில் இற்­றைக்கு 34 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தீவிரம் பெற்ற தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்­டமும், அதன் கோரிக்­கைகளும்  இன்றும் தீர்க்­கப்­ப­டாத நிலை­யி­லேயே இருக்­கி­றது. இன்னும் சொல்லப் போனால் புதிய குடி­யேற்­றங்­களின் மூல­மா­கவும், இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பின் மூல­மா­கவும் முன்பை விடவும் மோச­மான நிலைக்கு சென்­றி­ருக்­கின்­றது. இன­வி­கி­தா­சா­ரத்­தையும், இனப்­ப­ரம்­ப­லையும் தேர்­தல்­களை அடிப்­ப­டை­யாக வைத்து மாற்­றி­ய­மைக்கும் முயற்­சிகள் நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் தீவி­ர­மாக நடை­பெ­று­கின்­றன. இந்த நாட்டில் புரை­யோடி போயுள்ள தேசிய இனப்­பி­ரச்­சினை தீர்க்­க­ப­டாத வரை­யிலும், நடந்த சம்­ப­வங்­களில் இருந்து பாடம் கற்­காத வரை­யிலும் உண்­மை­யான நல்­லி­ணக்­கத்­திற்­கான வாய்ப்பே இல்லை.

இதனை தென்­னி­லங்­கையின் பிர­தான இரு அர­சியல் கட்­சி­களும் ஆட்­சி­யா­ளர்­களும், தமிழ் தலை­மை­களும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரி­தலின் அடிப்­ப­டையில் அவர்கள் இத­ய­சுத்­தி­யுடன் செயற்­பட முன்­வ­ர­வேண்டும். புதிய அர­சி­ய­ல­மைப்பு மூலம் இந்த பிரச்­ச­ினையை தீர்க்க அர­சிற்கும் தமது தலை­மை­க­ளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்­டிய பொறுப்பு ஜன­நா­ய­கத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும், அபி­வி­ருத்­தி­யையும் விரும்பும் இந்த நாட்டு மக்கள் அனை­வ­ரதும் கடமையாகும். அதன் மூலமே ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டு இது எமது நாடு என்று ஒன்றாக பயணிக்க கூடிய ஒரு நிலை உருவாகும்.

ருத்­திரன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-29#page-7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.