Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரசொலி பவளவிழா... அரசியல் கூட்டணியின் அச்சாரமா?

Featured Replies

முரசொலி பவளவிழா... அரசியல் கூட்டணியின் அச்சாரமா?

 
 

கருணாநிதி

க்களின் மனதில் எழுச்சியை ஏற்படுத்த வெறும் துண்டறிக்கையாக தி.மு.க தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்டதுதான் முரசொலி. துண்டறிக்கை, வாரஇதழ், பின் நாளேடு என பல்வேறு வடிவங்களை எட்டி தற்போது தனது 75 ஆண்டுகாலப் பயணத்தை வெற்றிகரமாக கடந்திருக்கிறது தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி! இதற்காக வருகிற ஆகஸ்ட் 10, மற்றும் 11-ம் தேதிகளில் முரசொலி பத்திரிகைக்கு பவள விழா கொண்டாடுவதற்கு தி.மு.க. தலைமை பிரமாண்ட ஏற்பாடு செய்துள்ளது. வியாழக்கிழமை கலைவாணர் அரங்கத்திலும், வெள்ளிக்கிழமை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திலும் இதற்கான விழா நடைபெற உள்ளது. 

10.08.1942-ல் தனது 18-வது வயதில் கருணாநிதியால் துண்டறிக்கையாக தொடங்கப்பட்டது. இந்தத் துண்டறிக்கை பயணமானது 1948-ம் ஆண்டிலிருந்து வார இதழாக வெளிவரத் தொடங்கியது. அதன்பின்னர் 1960-ம் ஆண்டிலிருந்து நாளிதழாக மலர்ந்து இன்றும் எழுச்சிமிக்க முரசொலி பவளவிழாநாளேடாக வெளிவந்துகொண்டிருக்கிறது. மக்களின் மனதில் எழுச்சியை விதைக்கும் அளவுக்கு தமிழரின் வீரம், கலாசாரம், தொன்மை ஆகியவற்றைப் பிரதிபலித்தே இந்நாளேட்டில், தொடர்ந்து கருணாநிதி எழுதிவருகிறார். 'கருணாநிதியின் மற்றொரு வடிவம்தான் முரசொலி' என்று தி.மு.க தலைவர்கள் இன்றும் சொல்லிவருகின்றனர். முரசொலியின் இந்த 75 ஆண்டுகால வெற்றிப் பயணத்தை பவளவிழாவாகக் கொண்டாட முரசொலி அறக்கட்டளை சார்பில், ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னின்று நடத்துகிறார்.

இந்த விழாவையொட்டி படக்காட்சி, அரங்கம் திறப்புவிழா, மலர் வெளியீடு, பத்திரிகை மற்றும் திரையுலக ஆளுமைகள் கலந்துகொள்ளும் வாழ்த்தரங்கம் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கு பெரும் பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. முதல்நாள் நிகழ்ச்சியாக 10-ம் தேதி காலை 10 மணிக்கு முரசொலி காட்சி அரங்கம் திறப்பு விழா, முரசொலி அலுவலக வளாகத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறவிருக்கிறது. அன்று மாலை 5 மணியளவில் பவளவிழா வாழ்த்தரங்கம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக "என்.ராம்(தலைவர், இந்து குழுமம்), பா.சீனிவாசன்(மேலாண் இயக்குநர், ஆனந்த விகடன் குழுமம்), சி.பாலசுப்ரமணிய ஆதித்தன்(அதிபர்,தினத்தந்தி குழுமம்), மனோஜ்குமார் சந்தாலியா(தலைவர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்), நக்கீரன் கோபால்(ஆசிரியர், நக்கீரன்), ரமேஷ் (ஆசிரியர், தினமலர்), அருண்ராம் (ஆசிரியர், டைம்ஸ் ஆப் இந்தியா), பகவான் சிங்(ஆசிரியர், டெக்கான் க்ரானிக்கள்), மனோஜ் குமார்(செய்தி ஆசிரியர், தினகரன்)" மற்றும் நடிகர் கமலஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் பங்கு பெறுகின்றனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக பவளவிழா பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்புரை வழங்க, பேராசிரியர் அன்பழகன் விழாவினைத் தலைமை ஏற்று நடத்துகிறார். கடந்த மே மாதம் கலைஞரின் வைரவிழா நடந்தது. அதில், 'டெல்லியில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் அழைப்பு விடுத்திருந்தார்கள்; தமிழக கட்சித் தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கவில்லை' என பல்வேறு கட்சித் தலைவர்களும் குறைபட்டிருந்தார்கள். ஆனால், இந்த முரசொலி பவள விழாவுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கியக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் தி.மு.க அழைத்துள்ளது. பவளவிழா பொதுக்கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன்,  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா,  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் பல தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் நிர்வாகிகளும் கலந்துகொள்கிறார்கள். இந்த அழைப்பு அரசியல் கூட்டணியாக மாறுவதற்குக்கூட வாய்ப்பிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

முரசொலி பவளவிழா என்பது, வைரவிழா கண்ட கருணாநிதியின் அரசியல் பயணத்தில் மற்றுமொரு மைல்கல் என்பது உண்மை! ஆனால், இந்த பவளவிழா, புதிய கூட்டணிக்கு அச்சாரம் அமைக்குமா என்பதே அரசியல் கட்சித்தலைவர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/97759-murasoli-platinum-jubliee-2017.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.