Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் தீவிரமடையும் பொலிஸ் கெடுபிடிகள்

Featured Replies

வடக்கில் தீவிரமடையும் பொலிஸ் கெடுபிடிகள்

Page-01-image-2cc9ce26680f8e613e2b6c2d90ef0e0e26fed31b.jpg

 

வடக்கு மாகா­ணத்தின் அர­சி யல் சூழலைப் போலவே, பாது­காப் புச் சூழலும், பர­ப­ரப்புமிக்­க­தா ­கவே மாறி­யி­ருக்­கி­றது.

துன்­னாலை இளைஞன் பொலிஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் கடந்த மாதம் மர­ண­மான பின்னர், நல்­லூரில் நடந்த துப்­பாக்கிச் சூடு, கொக்­குவில் வாள்­வெட்டு மற்றும் சில வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் என்று அடுத்­த­டுத்து நடந்த சம்­ப­வங்கள் குடா­நாட்டின் பாது­காப்புச் சூழலைக் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யி­ருந்­தன.

கொக்­கு­விலில் பொலிஸார் மீது நடத்­தப்­பட்ட வாள்­வெட்டைத் தொடர்ந்து, ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரைக் கள­மி­றக்­கிய பொலிஸ் மா அதிபர், தொடர் சுற்­றி­வ­ளைப்­புகள், சோத­னை­களை நடத்­து­வ­தற்கு உத்­த­ர­விட்டார்.

இதனால், துன்­னாலைப் பகுதி மாத்­திரம், இரண்டு மூன்று நாட்­க­ளுக்குள் நான்கு தட­வை­க­ளுக்கு மேல் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டது. அங்­கி­ருந்து 42 பேர் கைது செய்­யப்­பட்­டனர். அல்­வாயில் 18 பேர் கைது செய்­யப்­பட்­டனர்.

அது­போல வலி­காமம் பிர­தே­சத்­திலும் பல இடங்­களில் தொடர் சுற்­றி­வ­ளைப்­பு­களும் தேடு­தல்­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதன் மூலம் கைது செய்­யப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை 100 வரை இருக்­கலாம் என்றும் கூறப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்கள் அனை­வ­ருமே வாள்­வெட்டு மற்றும் அண் ­மைய வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் அல்ல. வேறு பல குற்­றங்­க­ளுக்­காக தேடப்­பட்­ட­வர்­களும், பொலி­ஸாரின் கண்­கா­ணிப்பு வளைத்­துக்குள் இருந்­த­வர்­களும் கூட இருந்­தனர்.

கடந்த வாரத்தில் குடா­நாட்டில் அதி­ர­டிப்­ப­டை­யி­னரைக் கள­மி­றக்கி மேற்­கொள்­ளப்­பட்ட தேடு­தல்­களும், சுற்­றி­வ­ளைப்­பு­களும், 2009ஆம் ஆண்­டுக்கு முந்­திய கால­கட்­டத்தை பல­ருக்கு நினை­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருக்கும், இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் வேறு­பாட்டைக் கண்­ட­றியத் தெரி­யாத பலரும், மீண்டும் இரா­ணு­வத்­தி­னரே கள­மி­றக்­கப்­பட்டு விட்­ட­தாக நினைத்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். அச்­ச­ம­டைந்­தி­ருக்­கின்­றனர்.

சுற்­றி­வ­ளைப்­புகள், தேடு­தல்கள், அடை ­யாள அட்டை சோத­னைகள், ஆள் அடை­யா­ளத்தை நிரூ­பிக்க முடி­யா­த­வர்கள் பொலிஸ் நிலை­யத்­துக்கு கொண்டு செல்­லப்­ப­டுதல் எல்­லாமே, போர்க்­கா­லத்தில் வடக்கு-, கிழக்கில் மாத்­தி­ர­மன்றி கொழும்­பிலும் கையா­ளப்­பட்ட பாது­காப்பு நடை­மு­றைகள் தான்.

2009ஆம் ஆண்டு போர் முடி­வுக்கு வந்த பின்னர் இத்­த­கைய பாது­காப்புக் கெடு­பி­டிகள் சற்று குறைந்­தி­ருந்­தன. ஆனால், 2015ஆம் ஆண்­டுக்குப் பின்னர் இது­போன்ற சூழலை மக்கள் எதிர்­கொள்­ள­வில்லை என்றே கூறலாம்.

அவ்­வா­றா­ன­தொரு நிலையில், திடீ­ரென இந்த பாது­காப்புக் கெடு­பி­டிகள் தம் மீது திணிக்­கப்­ப­டு­வதை தமிழ் மக்கள் இல­கு­வான விட­ய­மாக எடுத்துக் கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. ஏனென்றால் இது அவர்­களை சிர­மப்­ப­டுத்தி உள­வியல் ரீதி­யா­கவும் பௌதிக ரீதி­யா­கவும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கி­றது.

அடுத்­த­டுத்து நிகழ்ந்த சில சம்­ப­வங்­களை அடுத்தே, பாது­காப்பு இறுக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. ஒரு வகையில் இது தேவை­யான நட­வ­டிக்­கை­யா­கவே பார்க்­கப்­பட்­டது. அத்­த­கைய விம்பம் ஒன்றும் தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை, கண்­மூ­டித்­த­ன­மான கைது­களும், பொது­மக்­க­ளுக்கு பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான பாது­காப்புக் கெடு­பி­டி­களும், சிர­மங்­க­ளையும் அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இது தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­னது, தமிழ் மக்கள் மத்­தியில் எதிர்­ம­றை­யான எண்­ணங்­க­ளையும் கருத்­துக்­க­ளை­யுமே ஏற்­ப­டுத்தக் கூடி­யன.

வடக்கில் திடீ­ரென பொலிஸ் தரப்பு. விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரை கள­மி­றக்கி சுற்­ற­வ­ளைப்­பு­களை மேற்­கொண்ட போது ஆரம்­பத்தில் தமிழ் அர­சியல் தலை­மைகள் எந்தக் கருத்­தையும் வெளி­யி­டாமல் மௌனம் காத்துக் கொண்­டி­ருந்­தன.

அதற்கு வடக்கில் நிகழ்ந்த விரும்­பத்­த­காத சில வன்­முறைச் சம்­ப­வங்­களும் கார­ண­மாக இருந்­தன. ஆனாலும், அதனைக் காரணம் காட்டி பொது­மக்­க­ளுக்கு எதி­ ரான அல்­லது அவர்­களை துன்­பு­றுத்­து­கின்ற வகை­யி­லான செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக அவர்கள் குரல் கொடுத்­தி­ருக்க வேண்டும்.

இரண்டு நாட்கள் கழித்தே, முத­ல­மைச் சர் விக்­னேஸ்­வரன், சுற்­றி­வ­ளைப்­புகள் போன்ற மக்­களை அசௌ­க­ரி­யப்­ப­டுத்­து­வதை நிறுத்தக் கோரி, பிரதி பொலிஸ் மா அதி­ப­ருக்கு கடிதம் எழு­தினார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை வர் இரா. சம்­பந்­தனும், ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு கடிதம் எழு­தினார்.  ஆனாலும், வடக்கில் தொடர்ந்தும் சுற்­றி­ளைப்­புகள் தேடு­தல்கள், கைதுகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்­தன. இவர்­களின் கடி­தங்­களால் எதையும் சாதிக்க முடி­ய­வில்லை. 

வடக்கில் நடக்­கின்ற கைதுகள் தனியே சில குறிப்­பிட்ட தாக்­குதல் சம்­ப­வங்­களை மட்டும் வைத்து இடம்­பெ­ற­வில்லை. இதுதான் முத­லா­வதும் முக்­கி­ய­மா­ன­து­மான பிரச்­சினை.

வடக்கில், வாள்­வெட்டுக் குழுக்­களின் அட்­ட­கா­சங்கள் அவ்­வப்­போது உச்­சக்­கட்­டத்தை எட்­டு­வதும் பின்னர் குறை­வதும் வழக்­க­மா­ன­தாக மாறி­யி­ருந்­தது.

வாள்­வெட்டு போன்ற வன்­மு­றை­களில் ஈடு­பட்ட இளைஞர் குழுக்­களை பொலிஸார் அடக்­கு­வ­தற்கு முறை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்தால், விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரை கள­மி­றக்கும் அள­வுக்கு நிலை­மைகள் சென்­றி­ருக்­காது.

பொலிஸ்­சாரைப் பொறுத்­த­வ­ரையில் வாள்­வெட்டு போன்ற வன்­மு­றை­களில் ஈடு­படும் குழுக்­களை முற்­றாக அடக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்­பதே உண்மை.

நல்­லூரில் பொலிஸ்சார் ஒருவர் சுடப்­பட்­ட­தற்குப் பின்­னரும், கொக்­கு­விலில் இரண்டு பொலிசார் வெட்­டப்­பட்­ட­தற்குப் பின்­னரும் தான், வாள்­வெட்டுக் குழுக்­களை அடக்கும் நட­வ­டிக்­கைகள் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆனால் வாள்­வெட்­டுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்று கைது செய்­யப்­பட்­ட­வர்கள் பலரும், இரண்டு மூன்று ஆண்­டு­க­ளா­கவே இத்­த­கைய வாள்­வெட்­டுகள் வன்­மு­றை­களில் ஈடு­பட்டு வந்­த­வர்கள் என்­பதை, பொலிஸ் பேச்­சா­ளரின் தகவல் உறு­திப்­ப­டுத்­து­கி­றது.

அவ்­வா­றாயின். இது­வ­ரையில் இவர்கள் எப்­படி பொலிஸ்­சா­ரிடம் சிக்­காமல் இருந்­தனர் என்ற கேள்வி எழு­கி­றது. அதுவும் பொலிஸ்சார் இலக்கு வைக்­கப்­பட்­ட­வுடன் தான் இவர்கள் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

சாதா­ரண பொது­மக்கள் இதனால் பாதிக்­கப்­பட்ட போது அதனை பொலிஸ் தரப்பு கண்டு கொள்­ளாமல் இருந்­தி­ருக்­கி­றது என்­பதும் இப்­போது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது. பொலிஸ்சார் மீது கை வைக்­கப்­பட்­டதும், தான் அவர்கள் விழித்துக் கொண்டு செயற்­பட முனைந்­தி­ருக்­கி­றார்கள் என்­பது இத­னையே உணர்த்­து­கி­றது.

இது மாத்­தி­ர­மன்றி, கொக்­கு­விலில், வட­ம­ராட்சி கிழக்கில், நல்­லூரில் நடந்த சம்­ப­வங்­களை மாத்­திரம் வைத்துக் கொண்டு இந்த கைதுகள் நடந்­தி­ருக்­க­வில்லை என்­பதும் இந்த வாதத்தை வலுப்­ப­டுத்­து­கி­றது.

அதை­விட நல்லூர், கொக்­குவில் சம்­ப­வங்­களை அடுத்து பழைய குற்றச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களைக் கூட கைது செய்ய முடிந்­தது என்றால், அவர்கள் பற்­றிய தக­வல்கள் பொலிஸ்­சா­ரிடம் இருந்­தி­ருக்­கின்­றன. ஆனாலும் அவர்கள் நட­வ­டிக்கை எடுக்­காமல் மௌனம் காத்­தி­ருக்­கின்­றனர் என்று தான் உணர வைக்­கி­றது.

ஆக, வடக்கில் இப்­போது பாது­காப்புக் கெடு­பி­டிகள் அதி­க­ரிக்­கப்­பட்­ட­மைக்கு தனியே நல்லூர் , கொக்­குவில் , துன்­னா­லையில் நடந்­தது போன்ற சம்­ப­வங்கள் மாத்­திரம் காரணம் என்று கூற முடி­யாது.

அதற்கு அப்பால் சமூக விரோத செயற்­பா­டு­களை ஒடுக்­கு­வதில் பொலிஸ்சார் காண்­பித்த மெத்­தனப் போக்கும் கூட இதற்குக் காரணம் என்றே புரிந்து கொள்ள முடி­கி­றது.

காலத்­துக்குக் காலம் ஆவா குழு என்ற அடை­மொ­ழிக்குள் தோன்­றிய வன்­முறைக் குழுக்­களை முறைப்­படி ஒடுக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்தால், அதி­ர­டிப்­ப­டை­யினர் சுற்­றி­வ­ளைத்துத் தேடு­கின்ற நிலை ஏற்­பட்­டி­ருக்­காது.

அது மாத்­தி­ர­மன்றி, வடக்கில் நடந்த வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுடன் உட­ன­டி­யா­கவே முன்னாள் போரா­ளி­களை தொடர்­பு­ப­டுத்தி வந்த பொலிஸ் தரப்பு, இப்­போது கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் முன்னாள் போரா­ளி­களும் இருக்­கி­றார்­களா என்று சரி­யாகப் பதி­ல­ளிக்­காமல் இழுத்­த­டிக்­கி­றது.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களின் விப­ரங்­களை புல­னாய்வுப் பிரி­வுக்கு அனுப்­பி­யி­ருப்­ப­தா­கவும், அவர்­களின் விசா­ர­ணை­களின் பின்­னரே முன்னாள் போரா­ளிகள் இருக்­கி­றார்­களா என்று உறுதி செய்ய முடியும் என்றும் பொலிஸ் பேச்­சாளர் கூறி­யி­ருந்தார்.

வடக்கின் அண்­மைய சம்­ப­வங்கள் எதேச்­சை­யாக நடந்­த­வையோ, திட்­ட­மிட்டு இடம்­பெற்­ற­வையோ என்பது ஒரு புறத்தில் இருக்க, இந்தச் சம்பவங்களை வைத்து பொலிஸ் தரப்பும் அரசாங்கமும் திட்டமிட்டு காய்களை நகர்த்துகின்றன என்றே சந்தேகங்கள் எழுகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடு என்ற பெயரில், அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மக்களை சிரமங்களுக்கு உள்ளாக்குகின்ற நிலையிலும் அதுபற்றி அரசாங்கம் எந்தக் கரிசனையும் கொள்ளவில்லை.

ஏன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட இந்த விடயத்தை இன்னும் கூடிய கரிசனையுடன் முன்னெடுத்திருக்க வேண்டும்.

கொழும்பு அரசியலில் ஏற்பட்டிருந்த குழப்பங்களாலும் வடக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களாலும், இரண்டு தரப்பினருமே குழம்பிப் போயிருக்கின்ற நிலையில், வடக்கின் பாதுகாப்பு நிலை பற்றிய கரிசனைகள் அரசியல் மட்டத்தில் குறைந்து போயிருக்கிறது என்பதே உண்மை.

வடக்கில் உள்ள மக்களின் மீது பொலிஸ்சாரோ, அதிரடிப்படையினரோ நெருக்கடிகளை ஏற்படுத்தும் போது, அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற வரலாற்றை பலரும் இப்போது மறந்து விட்டார்கள் போலவே தெரிகிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-13#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.