Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவுடன் கூட்டு வைப்பாரா சம்பந்தன்?

Featured Replies

மஹிந்தவுடன் கூட்டு வைப்பாரா சம்பந்தன்?

Page-01-image-825858657af4940d8a3a0a157ec98209c4763c57.jpg

 

மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து பணி­யாற்ற விரும்­பு­கிறேன் என்ற- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனின் கருத்து பல்­வேறு வித­மா­கவும் வியாக்­கி­யா­னப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.

மஹிந்­த­வுடன் இணைந்து ஆட்சி புரிய வேண்டும் என்று சம்­பந்தன் அழைப்பு விடுத்­துள்­ளது போலவும், செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்­பட வேண்டும் என்று கூறி­ய­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

எவ்­வா­றா­யினும், மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் ஆட்­சியில் அமர்த்­து­வ­தற்கோ, அவ­ருடன் இணைந்து ஆட்­சியில் பங்­கெ­டு ப்­ப­தற்கோ சம்­பந்தன் விரும்­புவார் என்று தோன்­ற­வில்லை.

ஏனென்றால், மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி 2015ஆம் ஆண்டு கவிழ்க்­கப்­பட்­டமை தமிழ் மக்­களின் அவ­சியத் தேவை­ யாக அவர் அண்­மைய நாட்கள் வரை வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கிறார்.

மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் அமர்­வ­தற்கு இட­ம­ளிக்கக் கூடாது என்றும் அவர் கூறி வந்­தி­ருக்­கிறார்.

இப்­ப­டி­யான நிலையில், மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து ஆட்­சி­ய­மைக்கும் கனவு சம்­பந்­த­னுக்கு வந்­தி­ருக்கும் என்று ஒரு­போதும் கருத முடி­யாது.

மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து ஆட்­சி­ய­மைக்கக் கூடிய வாய்ப்பு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எப்­போதோ கிடைத்­தி­ருந்­தது. போர் முடி­வுக்கு வந்த பின்னர் அதனை அவர்கள் செய்­தி­ருக்­க

லாம். ஆனால், அப்­போது அதனை செய்­யாத சம்­பந்தன், தற்­போ­தைய சூழ லில் அவ்­வா­றா­ன­தொரு முடி­வுக்கு செல் வார் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

அதே­வேளை, 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ராக வாக்­க­ளிக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எடுத்த முடிவு தான், அவ­ரது தோல்­விக்குக் காரணம் என்று இரா.சம்­பந் தன் இன்னும் நம்பிக் கொண்­டி­ருந்தால் அது அவ­ரது பல­வீனம்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, அந்த முடிவை எடுப்­ப­தற்கு முன்­னரே, தமிழ் மக்கள் அந்த முடிவை எடுத்து விட்­டனர். மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ராக வாக்­க­ளிக்க அவர்கள் தீர்­மா­னித்து விட்­டனர். அதனை ஓர­ள­வுக்கு உணர்ந்து கொண்ட பின்னர் தான், கூட்­ட­மைப்பும் பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ரான மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பக்கம் சாய்ந்­தது.

எனவே, மஹிந்த ராஜபக் ஷவை பத­வி யில் இருந்து அகற்­று­வ­தற்கு முடி­வெ­டுத் துச் செயற்­பட்ட தமிழ் மக்கள், மீண்டும் அவர் பத­விக்கு வரு­வதை விரும்­பு­வார்­களா என்­பது முக்­கி­ய­மான கேள்வி.

சிங்­கள மக்­களின் தலை­வ­னா­கவே இரு க்க விரும்பும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு, இனி­மேலும் வாக்­க­ளிக்க சிங்­கள மக்கள் விரும்­பு­வார்கள். ஏனென்றால் அங்கு மாறி மாறி இரு கட்­சி­களும் அதி­கா­ரத்­துக்கு வரு­வது இயல்பு.

ஆனால், மஹிந்த ராஜபக் ஷவை விரட்­டு­வ­தற்கு சந்­தர்ப்பம் பார்த்துக் காத்­தி­ருந்த தமிழ்­மக்கள், சிங்­கள மக்­களைப் போலவே, மைத்­தி­ரியோ, ரணிலோ இல்­லா ­விட்டால் மஹிந்த என்ற முடிவை எடுப்­பார் கள் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

2010 ஜனா­தி­பதி தேர்­தலில் சரத் பொன்­சே­காவை ஆத­ரிக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முடிவு செய்­தது. ஆனாலும், தமிழ் மக்கள் அவரை ஆத­ரிக்கத் தயா­ராக இருக்­க­வில்லை.

ஆக, தமிழ் மக்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­காமல் எத்­த­கைய முடி­வையும் எடுத்து விடலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நினைக்கக் கூடாது. இரா.சம்­பந்­த­னுக்கு இந்த அடிப்­படைப் பாடம் கூடப் புரிந்­தி­ருக்­காது என்று எதிர்­பார்க்க முடி­யாது.

அதை­விட, மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­துடன், சம்­பந்தன் 18 சுற்றுப் பேச்­சுக்­களை நடத்தி வெறும் கையுடன் திரும்­பி­ யவர். இனி­மேலும், அவ­ருடன் கூட்டுச் சேர்ந்து எதையும் சாதிக்க முடியும் என்று நம்­பிக்கை கொள்வார் என்று எப்­படி எதிர்­பார்க்க முடியும்.

அவ்­வா­றாயின், எதற்­காக மஹிந்த ராஜ பக் ஷவுடன் இணைந்து செயற்­பட விரும்­பு­வ­தாக சம்­பந்தன் கூறினார் என்ற கேள்வி இருக்­கி­றது.

இதற்குப் பலரும் பல்­வேறு கார­ணி­க­ளையும் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

1. அர­சாங்­கத்தை எச்­ச­ரிப்­பது.

2. அர­சாங்­கத்­துக்கு துணை­யாக இருக்கும் பிராந்­திய, சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுப்­பது.

3. அர­சாங்­கத்தின் மீது அதி­க­ரித்து வரும் தமிழ் மக்­களின் எதிர்ப்பைச் சமா­ளிப்­பது.

இப்­படிப் பலரும் பல்­வேறு கார­ணங்­க­ளையும் அடுக்­கு­கின்­றனர். மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்­பட சம்­பந்தன் விருப்பம் வெளி­யிட்­டி­ருப்­பது, அதுவும் தற்­போ­தைய தரு­ணத்தில் அந்த அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருப்­பது முக்­கி­ய­மா­ன­தொரு விடயம் தான்.

அதா­வது, இரண்­டரை ஆண்­டுகளுக்கு முன்னர் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஆட்சி மாற்­றத் தின் பலன்­களை தமிழ் மக்கள் அனு­ப­விக்க முடி­யாமல், அர­சாங்கம் ஏமாற்றி விட்­ட­தான வெறுப்­பு­ணர்வில் இருக்­கின்ற சூழல் இது,

அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­படும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின். மீதும் தமிழ் மக்­க­ளுக்கு வெறுப்பும் கோப மும் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. 

அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­துக்­கான பணிகள், கிட்­டத்­தட்ட முடங்கிப் போயி­ருக்­கின் ­றன. இந்த முடக்­கத்­துக்கு ஐ.தே.க. வினதும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னதும் செயல்­களே காரணம் என்று இரா.சம்­பந்தன் பகி­ரங்­க­மா­கவே குற்­றம்­சாட்டத் தொடங்­கி­யி­ருக்­கிறார்.

சில வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­க­ளிடம் இதனைக் கூறி, அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களைக் கொடுக்க வேண்டும் என்றும் கோரி­யி­ருந்தார்.

அதை­விட, வடக்கின் பாது­காப்பு நிலை­மைகள் தொடர்­பா­கவும், அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் தொடர்­பா­கவும், பேச்சு நடத்த நேரம் ஒதுக்கித் தரு­மாறு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­திக்கு கடிதம் எழுதி மூன்று வாரங்­க­ளா­கியும், சந்­திப்­புக்குச் சாத­க­மான சமிக்­ஞைகள் இன்­னமும் கிடைக்­க­வில்லை.

ஆக, மொத்­தத்தில், கூட்­ட­மைப்பை அர­சாங்கம் ஏமாற்ற முனை­கி­றதா என்ற சந்­தேகம், சம்­பந்­த­னுக்கும் ஏற்­பட்­டுள்ள சூழலில் தான், மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்­பட விருப்­பத்தை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

இதன் மூலம், அவர் அர­சாங்­கத்­துக்கு ஒரு மறை­முக செய்­தியை அல்­லது எச்­ச­ரிக்­கையை கொடுக்க முனைந்­தி­ருக்­கலாம்.

ஏனென்றால். இப்­போது அர­சாங்­கத்­துக்கு எதி­ரான பலம்­வாய்ந்த சக்­தி­யாக இருப்­பது மஹிந்த ராஜபக் ஷ தான். மஹிந்த ராஜபக் ஷவுடன் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது போன்ற தோற்­றப்­பாட்டைக் காண்­பித்து, பொறுப்­பு­களில் இருந்து விலகிச் செல்ல முனையும், மைத்­திரி- ரணில் அர­சாங்­கத்தை தமது பக்கம் திருப்ப சம்­பந்தன் முனை­கி­றாரா என்ற சந்­தே­கத்தில் நியா­யப்­பா­டுகள் இருக்­கத்தான் செய்­கின்­றது.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை இழுத்­த­டிக்கும் அர­சாங்­கத்­துக்கு கடி­வாளம் போடு­வ­தற்கு இது­போன்ற இரா­ஜ­தந்­திர உத்­தி­களும் அவ­சி­ய­மா­னவை என்று அவர் கருதக் கூடும்.

ஆட்­சியில் இருக்­கின்ற இப்­போ­தைய அர­சாங்­கமோ முன்­னைய அர­சாங்­கமோ தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களை இதய சுத்­தி­யோடு அணு­கி­யதும் இல்லை. அதனைத் தீர்ப்­ப­தற்கு உண்­மை­யான முயற்­சி­களை மேற்­கொண்­ட­து­மில்லை.

எனவே, பிரச்­சி­னை­களைத் தீர்க்கக் கூடிய தரப்பின் பக்கம் சார்­வது இயல்­பா­னதே என்ற எச்­ச­ரிக்கை வேட்டு ஒன்றை தீர்க்க சம்­பந்தன் முயன்­றி­ருக்­கலாம்.

ஆனால், மைத்­திரி- ரணில் கூட்டு அர­சாங்கம் தொடர வேண்டும், அதன் மூலம் தான் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண முடியும் என்ற உறு­தி­யான நம்­பிக்­கையை அண்­மையில் கூட சம்­பந்தன் பாரா­ளு­மன்­றத்தில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார் என்­பதை மறந்­து­விட முடி­யாது.

அதை­விட, அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கையும் கூட்­ட­மைப்பின் மீதான நம்­பிக்­கையும் கரையத் தொடங்­கி­யுள்ள சூழலில், இரண்டு தரப்­பு­க­ளையும் காப்­பாற்றிக் கொள்ள வேண்­டிய பொறுப்பில், தான் இருப்­ப­தாக சம்­பந்தன் உணர்­கி­றாரோ தெரி­ய­வில்லை.

அடுத்து, இந்த அர­சாங்­கத்தை பத­விக்குக் கொண்டு வந்த சர்­வ­தேச மற்றும் பிராந்­திய சக்­திகள், ஆட்­சி­மாற்­றத்­துக்கு உத­விய தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களின் மீதான கரி­ச­னை­களைக் குறைத்­தி­ருக்­கின்­றன.

அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களைக் கொடுத்­தி­ருந்தால், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தரத் தீர்வு காண்­ப­தற்­கான வாய்ப்­பு­களும் சூழல்­களும் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கும்.

அதற்கு மாறாக, அர­சாங்­கத்தை காப்­பாற்­று­வ­தி­லேயே சர்­வ­தேச பிராந்­திய சக்­திகள் கவனம் செலுத்தி வரு­வ­தா­னது, தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை இழுத்­த­டிக்கும் அர­சாங்­கத்தின் உத்­திக்கு இன்னும் வலுச்­சேர்ப்­ப­தாக அமைந்­தி­ருக்­கி­றது.

இத்­த­கைய நிலையில், மஹிந்த ராஜபக் ஷவுடன் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது போன்ற தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்தி பிராந்­திய, மற்றும் சர்­வ­தேச சக்­தி­களின் கவ­னத்தை மீண்டும் ஈர்ப்­ப­தற்கு சம்­பந்தன் முயன்­றி­ருக்­கலாம்.

காணிகள் விடு­விப்புத் தொடர்­பான வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்­பதைச் சுட்­டிக்­காட்டி, அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுக்­கு­மாறு ஐ.நா. பொதுச்­செ­யலர், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர், வெளி­நாட்டு தூத­ர­கங்­க­ளுக்கும் சம்­பந்தன் கடிதம் ஒன்றை அனுப்­பி­யி­ருக்­கிறார்.

இதுவும், இந்த விவ­கா­ரத்தில் மீண்டும் சர்­வ­தேச தலை­யீ­டு­க­ளையும் அழுத்­தங்­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கின்ற ஒரு நகர்வு தான்.

இதற்கும் அப்பால், அர­சாங்­கத்­து­ட­னான நெருக்கம் தமிழ் மக்­க­ளுக்கு எரிச்­ச­லையும் கோபத்­தையும் அதி­க­ரித்து வரு­வ­தையும் சம்­பந்தன் உணர்ந்­தி­ருக்­கலாம், அர­சாங்­கத்­துடன் கூடுதல் நெகிழ்வுப் போக்கை கடைப்­பி­டிப்­ப­தாக தமிழ் மக்கள் கருதும் நிலையில், ஓர் இடை­வெ­ளியை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான எத்­த­ன­மா­கவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இவையெல்லாம் ஊகங்களாகவே இருந்தாலும், ஆட்சிமாற்றத்தின் பிரதான பங்காளர்களில் ஒருவர் என்ற வகையில், சம்பந்தன் அரசாங்கத்தை அவ்வளவு சுலபமாக கைவிட்டுவிட மாட்டார்.

அதுபோல, மஹிந்த ராஜபக் ஷவுடன் இவர் இலகுவில் கைகோர்த்து விடவும் முடியாது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என்று சம்பந்தன் நம்புகின்ற அரசியலமைப்பு மாற்றத்துக்கு மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவும் தேவை என்பது அவரது தொடர்ச்சியான வலியுறுத்தலாகவே இருந்து வந்திருக்கிறது.

இப்படியான நிலையில், அதனை மையப்படுத்தியே, மஹிந்தவுடன், இணைந்து செயற்படுவது பற்றிக் கூறியிருக்க முடியுமே தவிர, ஆட்சியில் சேர்ந்து இயங்குவது பற்றி சம்பந்தன் அவ்வாறு கூறியிருக்க முடியாது.

ஒருவேளை, மஹிந்தவுடன் இணைந்து ஆட்சியில் பங்கெடுக்கும் முடிவை சம்பந்தன் எடுப்பாராயின், அது அவருக்கும் கூட்டமைப்புக்கும் கசப்பான விளைவுகளையே ஏற்படுத்தும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-20#page-1

  • கருத்துக்கள உறவுகள்

ஏலுமோ அய்யாவாலை.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.