Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டெனீஸ்வரன் கட்சியில் இருந்து விலக்கி வைப்பு

Featured Replies

டெனீஸ்வரன் கட்சியில் இருந்து விலக்கி வைப்பு

 

வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரனை கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு  விலக்கி வைக்கவுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

deniswaran-minister.jpg

 

http://www.virakesari.lk/article/23372

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கப் போவது இதுதான்...ரிசாத்துவுடன் சேர்ந்து...தேர்தலில் நிற்பார்...கிடைகிற வன்னி சீற்றில் 2 ரிசாத்துவுக்குப் போகும் ...இவருக்கு நிறைய காசு கிடைக்கும்.....

  • தொடங்கியவர்

டெனீஸ்வரன் ஆறு மாதங்களுக்கு கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

 
டெனீஸ்வரன் ஆறு மாதங்களுக்கு கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து ஆறு மாத காலத்திற்கு டெனீஸ்வரன் இடைநிறுத்தபட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ அமைப்பின் காரியாலயத்தில் வடக்கு மாகாண அமைச்சரவை விவகாரம் மற்றும் டெனீஸ்வரன் தொடர்பில் நேற்று மதியம் 2.30 தொடக்கம் இரவு 10 மணி வரை நடைபெற்ற ரெலோ தலைமைக்குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நேற்றையதினம் ரெலோ இயக்கத்தின் தலைமைக்குழு கூடி விவாதித்து எங்கள் கட்சி சார்பில் வடமாகாண சபை அமைச்சரவையில் இடம்பெற்று வந்திருக்கின்ற டெனீஸ்வரன் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கின்றது.

ஏற்கனவே அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, ஏன் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, ஏன் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககூடாது என்பதற்கு ஏதாவது காரணம் இருந்தால் தெரிவிக்குமாறு அவரிடம் கோரப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கடந்தவாரம் தலைமைத்துவ கூட்டத்திற்கு அவர் அழைக்கப்பட்ட நிலையில் வருகை தந்திருந்தார். கட்சி கட்டுப்பாட்டை மீறி அதாவது கட்சியின் அனுமதி பெறாமலும், அங்கீகாரம் பெறாமலும், கட்சியுடன் ஆலோசிக்காமலும், தன்னிச்சையாக வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் இட்டதன் மூலம் அவர் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியிருந்தார்.

இதுதொடர்பில் அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் நாங்கள் கருத்து பரிமாற்றங்களுக்கு பின்னர் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கினோம். ஏற்கனவே கூட்டமைப்பின் நான்கு கட்சி தலைவர்களும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடி எடுத்துக்கொண்ட முடிவின் பிரகாரம் வடமாகாண முதலமைச்சர் தனது தலைமையிலான அமைச்சரவையை மீள அமைப்பதற்கு ஏதுவாக டெனீஸ்வரனுக்கு இராஜினாமா செய்யவேண்டும் என்றும் அவ்வாறு கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக இராஜினாமா செய்தால் அவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை சுமுகமாக கொண்டு வரப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டு அவருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதற்கான காலஅவகாசமும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அடுத்துவரும் ஒரு நாளில் அந்த முடிவை அறிவிக்குமாறும் கோரப்பட்டிருந்தார். அதற்கு அமைவாக மறுநாள் இரவு கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்பு கொண்டு தான் இராஜினாமா செய்யும் நிலைப்பாட்டில் இல்லை என்பதை தெரிவித்திருந்தார். பின்னர் பத்திரிகை மாநாட்டை நடத்தியும் அதனை தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் கட்சியின் தலைமைக்குழு கூடி அவர் தொடர்பான ஒழுங்கு விவகார நடவடிக்கையை விரிவாக ஆராய்ந்து ஈற்றிலே ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றோம்.எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த ஆறுமாதகாலம் அவருக்கு இடைக்கால தடை நடைமுறையில் இருக்கும், ஆறுமாதகால இடைக்காலத்தடை நடைமுறையில் இருக்கும்.ஆறு மாதகால முடிவில் கட்சி மீண்டும் அவருடைய விவகாரத்தை எடுத்து இறுதி தீர்மானம் ஒன்றினை எடுக்கும். ரெலோ அமைப்பின் தலைமைக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், குணசீலன், சிவாஜிலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், கட்சி தலைமைக்குழு உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், சிறிகாந்தா, கிரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Denisevaran-suspended-from-party-for-six-months

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.