Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களின் பதவி ஒரு வாரத்தில் பறிபோகும்?

Featured Replies

குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களின் பதவி ஒரு வாரத்தில் பறிபோகும்?
 

-எஸ்.நிதர்ஷன் 

வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில், இன்னும் ஒரு வார காலத்துக்குள் பதலளிப்பதாக, வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார். 

வடமாகாண ஆளுநருக்கும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு, நேற்று (22) மாலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இச்சந்திப்பின் போது, வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில், ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.  

இதற்கமைய, முன்னாள் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளரும், தற்போது மடு வலயத்துக்கு கல்விப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள திருமதி மாலினி வெனிற்றன் மற்றும் வவுனியா விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றி, தற்போது மன்னார் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் தனபாலசிங்கம் ஆகியோரின் முறையற்ற மீள் நியமனங்கள் தொடர்பாகவே ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன. 

இதனடிப்படையில், க.தனபாலசிங்கத்துக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில், இவர் 55 வயதுடன் அரச சேவையில் இருந்து 04.04.2017 அன்று கட்டாய ஓய்வு பெறவேண்டும் என்று ஒழுக்காற்று தண்டனை விதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.  

 ஆனால், தற்போது வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அவர் சேவையை தொடர அனுமதி வழங்கியுள்ளமையையும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் சிபாரிசில் தனபாலசிங்கம் தொடர்பான நிதிக் குற்றச்சாட்டுகள் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதேவேளை, திருமதி மாலினி வெனிற்றனுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில், இவர் 396,450.00 பணத்தை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும் என்பதுடன், 01.07.2017 அன்று அரச சேவையில் இருந்து கட்டாய ஓய்வு பெறவேண்டும் என்ற ஒழுக்காற்றுத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆளுநரின் அனுமதிக்கமையவே, மடு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார் என ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இவற்றைக் கவனத்தில் எடுப்பதாகக் கூறிய ஆளுநர், ஒரு வார காலத்துக்குள் இது தொடர்பாக ஆராய்ந்து பதிலளிப்பதாக தெரிவித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேவேளை, திருமதி மாலினி வெனிற்றனுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில், இவர் 396,450.00 பணத்தை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும் என்பதுடன், 01.07.2017 அன்று அரச சேவையில் இருந்து கட்டாய ஓய்வு பெறவேண்டும் என்ற ஒழுக்காற்றுத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆளுநரின் அனுமதிக்கமையவே, மடு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார் என ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

 

இவற்றைக் கவனத்தில் எடுப்பதாகக் கூறிய ஆளுநர், ஒரு வார காலத்துக்குள் இது தொடர்பாக ஆராய்ந்து பதிலளிப்பதாக தெரிவித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.    

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/குற்றச்சாட்டு-சுமத்தப்பட்டவர்களின்-பதவி-ஒரு-வாரத்தில்-பறிபோகும்/71-202743

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.