Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சரவையில் நான் அங்கம் வகித்தமைக்கு வெட்கமடைகின்றேன்

Featured Replies

அமைச்சரவையில் நான் அங்கம் வகித்தமைக்கு வெட்கமடைகின்றேன்

p16-1cff512b645f9556f6dc9c34938e4b9852a602f6.jpg

 

(எம்.சி.நஜி­முதீன்)

தேசிய வளங்­க (ரொபட் அன்­டனி)

நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜ­ப­க் ஷவின் பதவி நீக்கம் தொடர்­பான பிரச்­சி­னை­யா­னது ஐக்­கிய

தேசி­யக்­கட்­சியின் விவ­கா­ர­மாகும். அதில் நாங் கள் தலை­யிட விரும்­ப­வில்லை.

அதை ஐக்­கிய தேசி­யக்­கட்சி பார்த்­துக்­கொள்­ளட்டும் என்று அமைச்­

ச­ரவைப் பேச்­சாளர் தயா­சிறி ஜய­சே­கர

 தெரி­வித்தார்.

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்­பில்­எ­ழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

கேள்வி: விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ விவ­காரம் தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் நிலைப்­பாடு என்ன?

பதில்: நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜ­ப­க்ஷவின் பதவி நீக்கம் தொடர்­பான பிரச்­சி­னை­யா­னது ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் விவ­கா­ர­மாகும். அதில் நாங்கள் தலை­யிட விரும்­ப­வில்லை. அதை ஐக்­கிய தேசி­யக்­கட்சி பார்த்­துக்­கொள்­ளட்டும்

கேள்வி: எனினும் உங்கள் கட்­சியில் சுசில் பிரே­ம­ஜ­யந்த இவ்­வாறு அமைச்­ச­ரவைக் கூட்­டுப்­பொ­றுப்பை மீறி கருத்து வெளி­யி­டு­கின்றார். அது தொடர்பில் என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்?

பதில்: அது தொடர்பில் ஆரா­ய­வேண்டும். இது தொடர்பில் ஜனா­தி­ப­தியும் சுதந்­தி­ரக்­கட்­சியும் முடி­வெ­டுக்­க­வேண்டும். சிலர் தனிப்­பட்ட கருத்­துக்­களை வெளி­யி­டு­வார்கள்,. ஆனால் அமைச்­ச­ரவைக் கூட்­டுப்­பொ­றுப்பை மீறி யாரும் பேசக்­கூ­டாது. தனிப்­பட்ட கருத்­துக்கள் நிலைப்­பா­டுகள் இருக்­கலாம். ஆனால் கட்சி முடி­வெ­டுத்­து­விட்டால் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும்.

கேள்வி: தேசிய அர­சாங்­கத்தை ஐக்­கிய தேசி­யக்­கட்­சிதான் நடத்­து­வ­துபோல் தெரி­கி­றதே? சுத ந்திரக்­கட்சி பார்­வை­யா­ளர்போல் இருப்­ப­து­போன்று தெரி­கின்­றதே? என்­னதான் நடக்­கின்­றது?

பதில்: ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் விவ­கா­ரத்தை கையில் எடுக்க விரும்­ப­வில்லை. இரண்டு கட்­சிகள் இணைந்து நாட்டை ஆட்சி செய்­கின்­றன. எனவே இங்கு கருத்து முரண்­பா­டுகள் ஏற்­ப­டலாம். ஆனால் தீர்­மா­னங்கள் எடுத்­த­பின்னர் இணைந்து பய­ணிக்­க­வேண்டும். விஜ­ய­தாஸ விவ­கா­ரத்தில் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியே தீர்­மானம் எடுத்­தி­ருக்­கி­றது. அது அந்­தக்­கட்­சியின் முடிவு, ஜனா­தி­ப­தியோ, சுதந்­தி­ரக்­கட்­சியோ இது தொடர்பில் எதுவும் பேச­வில்லை.

கேள்வி: உங்கள் கட்­சி­யினர் விஜே­தா­ஸவை சிறந்த அமைச்சர் என்று கூறி­யி­ருக்­கின்­றனர்.?

பதில்: அது அவர்­களின் தனிப்­பட்ட கருத்­தாக இருக்­கலாம். இங்கு அர­சாங்­கத்தின் பொது­வி­ட­யங்கள், தனிப்­பட்ட விட­யங்கள் என பல விட­யங்கள் உள்­ளன. இவற்றைப் புரிந்­து­கொண்­டுதான் பய­ணிக்­க­வேண்டும். கட்­சிய என்ற ரீதி­யிலும் அர­சாங்கம் என்ற ரீதி­யிலும் பய­ணிக்­க­வேண்­டி­யுள்­ளது.

கேள்வி: பிர­த­மரை மாற்றும் எண்ணம் சுதந்­தி­ரக்­கட்­சிக்கு உள்­ளதா?

பதில்: சிலர் கன­வு­காண்­கின்­றனர். ஆனால் இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து ஆட்சி நடத்­தி­னாலும் கட்­சி­களில் உள்ள அமைச்­சர்­க­ளுக்கு அதன் தார்­ப­ரியம் புரி­ய­வில்­லைபோல் தெரி­கி­றது. ஒரு­சிலர் என்­னையும் கூட விமர்­சித்­தி­ருந்­தனர். இவ்­வாறு சேறு பூச முற்­ப­டும்­போது நாங்­களும் பதில் கூற­வேண்டி ஏற்­ப­டு­கின்­றது. இப்­போது உதா­ர­ண­மாக கூறு­வ­தென்றால் சைட்டம் தொடர்பில் எங்­க­ளுக்கு வேறு நிலைப்­பாடு உள்­ளது. ஆனால் தேசிய அர­சாங்கம் கூட்­டுப்­பொ­றுப்பு என வரும்­போது நாங்கள் பொது­வான நோக்­கத்தில் பய­ணிக்­கின்றோம். இவற்றை வெளியில் சென்று விமர்­சித்­துக்­கொண்­டி­ருப்­பதில் அர்த்­த­மில்லை. அது கூடாது.

கேள்வி: அப்­ப­டி­யாயின் 2020 வரை இவ்­வாறு சத்­தம்­போட்­டுக்­கொண்டு இருக்­கப்­போ­கின்­றீர்­களா?

பதில்: வேறு என்­னதான் செய்­வது? நான்­கறை வரு­டத்­திற்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியாது. ஐக்கியதேசியக்கட்சியிடம் 106 எம்.பி.க்கள் உள்ளது. அவர்களுக்கு இன்னும் 7 ஆசனம் கிடைத்தால் தனித்து ஆட்சி அமைக்க முடியும். எமக்கு இன்னும் 17 ஆசனங்கள் கிடைத்தால் தனித்த ஆட்சி அமைக்க முடியும். ஆனால் சாத்தியமில்லை. இது மக்களின் தீர்ப்பு, எனவே தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இவ்வாறுதான் பயணிக்கவேண்டியுள்ளது. ளை விற்­பனை செய்யும் அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிப்­ப­தை­விட வெட்­கப்­ப­டக்­கூ­டிய வேறு விட­யங்கள் எதுவும் இல்லை என்றே எனது மன­ச்சாட்­சிக்குப் புலப்­ப­டு­கி­றது. மேலும் தேசிய வளங்­களை விற்­பனை செய்யும் இந்த அர­சாங்கம் தொடர்பில் மக்கள்

 எவ்­வ­கை­யான தீர்­மானம் எடு்­க­வுள்­ளனர் என்­பது தொடர்பில் அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருக்­கிறேன். எனது இரு அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்தும் நான் வில­க­வில்லை. என்னை விலக்­கி­யுள்­ளனர் என்று பதவி நீக்­கப்­பட்ட விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

 விஜ­ய­தாஸ ராஜ­ப­க்ஷவை அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து விலக்­கி­ய­தை­ய­டுத்து அவர் நேற்று பிற்­பகல் வேளையில் அமைச்­சி­லி­ருந்து வெளி­யே­றினார். அப்­போது அமைச்சு அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து விடை­பெ­றும்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்கை வர­லாற்றில் இதற்கு முன்னர் பத­வி­வ­கித்த நீதி­ய­மைச்­சர்கள், சட்­டமா அதிபர் திணைக்­களம் மற்றும் நீதி­மன்­றங்­க­ளுக்கு அழுத்தம் கொடுத்­தமை தொடர்­பி­லான குற்­றச்­சாட்டே இருந்து வந்­தது. எனினும் குறித்த நிறு­வ­னங்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு என்­மீது சுமத்­தப்­பட்­டுள்­ளது.

மேலும் எமது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பை அமைச்­ச­ரவை மீறி­யுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பின் 157 ஆம் உறுப்­பு­ரைக்­க­மை­வாக அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­ப­டிக்கை போன்ற உடன்­ப­டிக்­கைகள் தொடர்­பி­லான யோசனை முன்­வைக்­கும்­போது அதற்கு பாரா­ளு­மன்றில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ரவு அத்­தி­யா­வ­சி­ய­மாக இருக்க வேண்டும். எனவே அதற்குப் புறம்­பாக செய்­யப்­பட்­டுள்ள அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­ப­டிக்கை வெறும் கட­தா­சி­ய­ள­வி­லேயே உள்­ளது. ஆகவே அந்த உடன்­ப­டிக்கை சட்­டத்­திற்கு முர­ணா­ன­தாகும்.

 அந்த உடன்­ப­டிக்கை விவ­காரம் தொடர்­பி­லான யாதார்த்­தத்தை நான் வெளிப்­ப­டுத்­தினேன். அதன் பின்னர் சில குழுக்கள் என்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு முனைந்­தன. மேலும் அம்­பாந்­தோட்டை துறை­முக விட­யத்தில் ஆரம்­பித்து மத்­தள விமான நிலையம் வரையில் சில நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

 எனவே இவ்­வா­றான தேசிய வளங்­களை விற்­பனை செய்யும் அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிப்­ப­தை­விட வெட்­கப்­ப­டக்­கூ­டிய வேறு விட­யங்கள் இல்லை என்றே எனது மன­சாக்குப் புலப்­ப­டு­கி­றது.

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பாண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவின் அர­சாங்­கத்தில் நான் அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்­க­வில்லை. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜப்­க­ஷவின் அர­சாங்­கத்தில் ஐந்து மாதங்கள் மாத்­திரம் அமைச்சுப் பதவி வகித்து, பின்னர் அதி­லி­ருந்து வில­கினேன். மேலும் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து என்னை விலக்­கி­யுள்­ள­தா­கவே தற்­போது பேசு­கின்­றனர்.

அத்­துடன் பண்­டு­கா­பய மன்­னரின் ஆட்சி முதல் இன்று வரை­யான காலப்­ப­கு­தியில் நாட்டில் இடம்­பெற்ற மிகப்­பெரும் மோச­டி­யாக அமைந்­தி­ருப்­பது மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டைய மோச­டி­யே­யாகும். அது தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மித்­த­மை­யினால் அத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்­களின் விபரம் வெளி­வர ஆரம்­பித்­துள்­ளது.

ஆகவே அதன் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­களும் குறித்த மோச­டியை மூடி மறைப்­ப­தற்கு முன்­நின்­ற­வர்­களின் பெயர்­களும் வெளி­வ­ர­வுள்ள நிலையில் அவர்கள் அச்­ச­ம­டைந்­துள்­ளனர். மேலும் குறித்த மோச­டி­யுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­யு­மாறு மக்கள் வேண்­டுகோள் விடுக்­கின்­றனர். ஆகவே நீதி­ய­மைச்­சரை நீக்­கி­விட்டு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் வினைத்­தி­ற­ன­மிக்க செயற்­பா­டு­க­ளையும் முடக்­கு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.

அதற்­கி­ணங்­கவே கடந்த 15 ஆம் திகதி சட்­டமா அதி­பரை அலரி மாளி­கைக்கு வர­வ­ழைத்து அவரை நிந்­தித்­தது மாத்­தி­ர­மல்­லாது, “அர­சாங்­கத்­திற்கு எதி­ரான தரப்­பி­னரின் வழக்­கு­களை இரு வாரங்­களுள் நீதி­மன்றில் தாக்கல் செய்­யு­மாறு” கேட்­டுக்­கொண்­டுள்­ளனர்.

 விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் “டீல்” செய்­து­கொண்டு குறித்த வழக்­கு­களை தாம­தப்­ப­டுத்­து­வதாக் குறிப்­பிட்டு, மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவ­கா­ரத்தை இருட்­ட­டிப்பு செய்­வ­தற்கு முனை­கின்­றனர். இவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­ப­வர்­களில் அதி­க­மானோர், 2007 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தயில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சி­யி­லி­ருந்து நான் வெளி­யே­றி­ய­போது அவ­ருடன் ஒட்­டிக்­கொண்­டி­ருந்­த­வர்­க­ளே­யாவர். தற்­போது எனக்­கெ­தி­ராக இவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றனர்.

  நான் அங்கம் வகித்த சகல ஆட்­சி­யிலும் தேசிய வளங்கள் சூறை­யா­டப்­ப­டு­வ­தற்கு எதிராகவே குரல் கொடுத்துள்ளேன். அவ்வாறு சூறையாடப்பட்டவைகளையும் நாட்டுக்காக மீட்டுக்கொடுத்துள்ளேன். எனவே தேசிய வளங்களை விற்பனை செய்யும் இந்த அரசாங்கம் தொடர்பில் மக்கள் எவ்வகையான தீர்மானம் எடு்க்கவுள்ளனர் என்பது தொடர்பில் அவதானித்துக்கொண்டிருக்கிறேன்.

 எனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தெடர்பில் பின்னர் தெரிவிக்கவுள்ளேன். மேலும் எனது இரு அமைச்சுப் பதவியிலிருந்தும் நான் விலகவில்லை. என்னை விலக்கியுள்ளனர். தற்போதைய நிலையில் அப்பதவியில் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.