Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் பேச்சுக்கு வருவதற்கு சர்வதேச சமூகம் பாரியளவில் அழுத்தம் கொடுக்க வேண்டும்

Featured Replies

என்கிறார் வெளிவிவகார அமைச்சர் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சர்வதேச சமூகம் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும். அதற்கான நேரம் வந்துள்ளது. அதேவேளை விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு சர்வதேச சமூகம் பாரியளவில் அழுத்தம் கொடுக்கவேண்டும். இலங்கையின் வரைபடத்தில் புலிகள் வலயம் என்று ஒன்று இல்லை என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் வெளிநாட்டு தூதுவர்கள் கொழும்புக்கு வெளியே செல்ல வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என்ற சம்பிரதாயபூர்வமான விதிமுறை கடுமையாக அமுல்படுத்தப்படும். எந்தவொரு இக்கட்டான நிலைமையிலும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. கடந்த காலங்களில் புலிகள் எமது அரசியல் தலைவர்களை கொலை செய்த நிலைமையிலும் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதியுடனான சீன விஜயத்தை இடைநடுவில் முடித்துக்கொண்டு நேற்று அவசரமாக நாடு திரும்பிய அமைச்சர் போகொல்லாகம, வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

செய்தியாளர் மாநாட்டை நடத்துவதற்கு முன்பதாக அமைச்சர் இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டு தூதுவர்களையும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் சமாதான செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:மட்டக்களப்பில் வெளிநாட்டு தூதுவர்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியமையை அரசாங்கம் கடுமையாக கண்டிக்கின்றது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விரிவாக அவதானம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதியுடனான எனது சீன விஜயத்தை இடைநடுவில் முடித்துக்கொண்டு நான் இன்று (நேற்று) நாடு திரும்பினேன். இலங்கை வந்தவுடன் தாக்குதலில் படுகாயமடைந்த இத்தாலி தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். பின்னர் இலங்கையில் செயற்படுகின்ற அனைத்து வெளிநாட்டு தூதுவர்களை எனது அமைச்சில் வைத்து சந்தித்தேன். இதன்போது நான்கு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் தமது பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரினர். அரசாங்கம் என்ற வகையில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ராஜதந்திர நோக்கங்களுக்காக குறிப்பிட்ட நான்கு நாடுகளின் பெயர்களை கூற நான் விரும்பவில்லை.

இருப்பினும் இங்கு முக்கிய விடயமொன்றை குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது பொதுவாக வெளிநாட்டு தூதுவர்கள் கொழும்புக்கு வெளியே செல்லும்போது வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெறவேண்டும். இது சம்பிரதாயபூர்வ விதிமுறையாகும். ஆனால், வெளிநாட்டு தூதுவர்களின் மட்டக்களப்பு பயணமானது வெளிநாட்டு அமைச்சுக்கு அறிவிக்கப்படவில்லை. காரணம் எப்போதும் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துக்கொண்டிருப்பது சாத்தியமாக அமையாது. இருப்பினும் மட்டக்களப்பிற்கு சென்ற வெளிநாட்டு தூதுவர்கள் தொடர்பாக முழுமையான பாதுகாப்பையும் பாதுகாப்பு அமைச்சு வழங்கியது. புலிகளின் தாக்குதல் இடம்பெற்றபோதும் தூதுவர்களுக்கு பாரிய அளவில் சேதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இனிவரும் காலங்களில் வெளிநாட்டு தூதுவர்கள் கொழும்புக்கு வெளியே செல்லும் போது வெளிவிவகார அமைச்சின் அனுமதியை கட்டாயம் பெறவேண்டும்.

அத்துடன், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும். இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் அழைப்பின் பேரிலேயே வெளிநாட்டு தூதுவர்கள் மட்டக்களப்புக்கு மனிதாபிமான பணிகளை ஆராய சென்றுள்ளனர். ஆனால் வெளிநாட்டு தூதுவர்கள் மட்டக்களப்பு வருவது தெரிந்த நிலையிலும் புலிகள் மோட்டார் தாக்குதல்களை மேற்கொண்டனர். இது புலிகளின் பயங்கரவாத சொருபத்தை வெளிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டு தூதுவர்களிடம் அரசாங்கம் சார்பாக சில விடயங்களை நான் முன்வைத்தேன். சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள புலிகள் தற்போது வெளிநாட்டு தூதுவர்கள் மீதும் ராஜதந்திரிகள் மீதும் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். கடந்த வருடம் கடந்த வருடம் இடம்பெற்ற முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் மீதான தாக்குதலையும் குறிப்பிடலாம். சர்வதேச சமூகம் தற்போது எமது அரசாங்கத்துடன் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதை குழப்புவதற்கும் புலிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச ஆதரவை கோருகின்றோம். தற்போதைக்கும் சர்வதேச சமூகம் எமது நாட்டுக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது. அதேவேளை, புலிகள் பயங்கரவாதத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வர சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் எப்போது தயாராகவே இருக்கின்றது. கடந்த காலங்களில் புலிகள் எமது நாட்டின் அரசியல் தலைவர்களை, பாதுகாப்பு அதிகாரிகளை, சிவிலியன்களை படுகொலை செய்த இக்கட்டான காலக்கட்டத்தில் நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளோம். இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தையூடாக அரசியல் தீர்வின் மூலம் தீர்த்துவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அத்துடன், ஜனாதிபதி அனைத்து கட்சிகளையும் இணைத்து அரசியல் தீர்வொன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவை யாவற்றையும் குழப்புவதற்காகவே புலிகள் தூதுவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதேவேளை, புலிகளுக்கு அறிவிக்காது மட்டக்களப்புக்கு தூதுவர்களை அழைத்துச் சென்றமை தவறு என்று கூறப்படுகின்றது. அதற்கான அவசியம் எமக்கு இல்லை. இலங்கையின் வரைப்படத்தில் புலிகளின் வலயம் என்று ஒன்று இல்லை என்பதை யாவரும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். கிழக்கை அரசாங்கம் கைப்பற்றிய உள்ள நிலையில் புலிகளால் எவ்வாறு தாக்குதல் நடத்தப்படமுடியும் என்று கேள்வி எழுப்பப்படுகின்றது. அப்படியானால் கொழும்பு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. ஆனால் புலிகள் கொழும்பிலும் தாக்குதல் நடத்தியுள்ளனரே? பயங்கரவாதத்தை எதிர்வு கூறுவது கடினமாகும்.

அரசாங்கம் ஜனநாயகத்தை மதிக்கின்றது. அதுபோன்று புலிகளும் ஜனநாயகத்தை மதிக்கவேண்டும். அதற்கு சர்சதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும். நாங்கள் புலிகளிடம் அடிபணிந்தால் அனைத்தும் தவறிவிடும். எனவே, புலிகளின் பயங்கரவாதத்தை தைரியமுடன் ஒழிக்க நாங்கள் முன்வரவேண்டும். அதனை அரசாங்கம் இப்பொழுது செய்துகொண்டிருக்கிறது.

எதிர்வரும் 7ஆம் திகதி நான் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்கின்றேன். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் அழைப்பையேற்று அங்கு செல்கின்றேன். அத்துடன் எதிர்வரும் 16ஆம் திகதி அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான ராஜாங்க செயலாளர் கொண்டலிசா ரைசின் அழைப்பையேற்று அமெரிக்கா செல்லவுள்ளேன். இந்த விஜயங்களின் போது இரு நாடுகளின் பிரதிநிதிகளிடமும் இலங்கையின் தற்போதைய நிலைமை பற்றியும் பயங்ரவாதம் பற்றியும் மற்றும் சமாதான செயற்பாடுகளில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாகவும் விளக்கிக்கூறுவேன். நான் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற குறுகிய காலத்தில் மாலைதீவு, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து இலங்கை தொடர்பான நிலைமையை விளக்கியுள்ளேன்.

தொடங்கிட்டாங்கையா தங்க நரிதந்திர பிரச்சார வேலைகளை. எடுத்து விடுங்கள் மனித உரிமைமீறல் பட்டியல்களை இவங்கள் போய் வந்த, போக இருக்கும் நாடுகளுக்கு. தமிழா உன் அறிவை செயலில் காட்டு. நமக்கு ஏன் என்று இருந்தால் எல்லாம் எதிரிக்கு சாதகமாக அமையும். ஒன்று பட்டு செயற்பட்டால் எங்கோ மறைவான் எதிரி.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம் இடம்பெற்ற முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் மீதான தாக்குதலையும் குறிப்பிடலாம்.

ஆனால் பாகிஸ்தான் அரசாங்கம் இத்தாக்குதலுக்கு இந்தியா றோ தான் காரணம் என்று சொல்லி இருந்தது

  • தொடங்கியவர்

ஆனால் பாகிஸ்தான் அரசாங்கம் இத்தாக்குதலுக்கு இந்தியா றோ தான் காரணம் என்று சொல்லி இருந்தது

கந்தப்பு உமக்கு விஷயம் தெரியாதா...........?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.