Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காபந்து, குதிரை பேரம்.... தமிழக அரசியலை இயக்கும் 10 வார்த்தைகள்! #HallOfShameADMK

Featured Replies

காபந்து, குதிரை பேரம்.... தமிழக அரசியலை இயக்கும் 10 வார்த்தைகள்! #HallOfShameADMK

 

மாடல்

“அரசியல் அபிலாஷைகளை வளர்த்துக்கொள்வது பெரும்பாவம்... அரசியல் பேசுவது பெருங்குற்றம்... அரசியல் கட்சிகளில் சேர்வது மனித தன்மையற்றச் செயல்...”  என்று பேசி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறை இப்போது விழிப்படைந்துவிட்டது.  இனியும் அரசியலை யாரோ ஒருவரின் தனிப்பட்ட சொத்து என்று கருதி விலகிச் செல்லக்கூடாது என்பதைத் தெளிவாக புரிந்துகொண்டுவிட்டது.  அரசியல் பயில விரும்புகிறது. அரசியல் குறித்து உரையாட பேரார்வம் கொள்கிறது. தேர்தல்... வாக்கு வங்கி அரசியலைக் கடந்து களத்தில் இறங்கி மாற்று அரசியல் செய்ய விரும்புகிறது. அவர்களுக்கு ஏற்றார் போலத்தான் இப்போது தமிழக அரசியல் களமும் இருக்கிறது. இப்படியான சூழலில் கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் அதிகமாக உச்சரிக்கப்படும் சில வார்த்தைகளை அதன் அடர்த்தியில் புரிந்துகொள்ள வேண்டியது நம் கடமை. அப்படியான பத்து வார்த்தைகளையும், அதன் பொருளையும் பட்டியலிட்டுள்ளோம்...!

அரசியல் நெருக்கடி :

ஒரு ஸ்திரமற்றத் தன்மை அரசியல் களத்தில் நிகழ்வது. இதற்கு வரலாற்றின் பக்கங்களில் இருந்து எல்லாம் உதாரணம் தேடத் தேவையில்லை. இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது அதுதான்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தன் உட்கட்சி பூசலால் மக்களுக்கான அரசு என்னும் நிலையில் இருந்து சிதைந்துபோய், அரசு தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கே திணறிக் கொண்டிருக்கிறது. இதுதான் அரசியல் நெருக்கடி. 

குதிரை பேரம் :

குதிரை வர்த்தகம் உச்சத்தில் இருந்த தொடக்க காலத்தில், குதிரைகளை அவற்றின் பயன்கள் அல்லது தனித்திறனை முன்னிறுத்தி விற்பனை செய்ய வழியில்லாததால் ஒரு குதிரையின் விற்பனை மதிப்பை  எப்படி மதிப்பிடுவது என்று வர்த்தகர்கள் திணறினார்கள். இதனால் அந்த வர்த்தகத்தில் பொய்யும், புரட்டும், ஏமாற்றுவதும் உச்சத்தில் இருந்தது. இந்த அறமற்றத் தன்மையின் தொடர்ச்சிதானே தற்கால அரசியல்.  அதனால், இயல்பாக இந்த வார்த்தையை அரசியல் உள்வாங்கிக் கொண்டது. அரசியலில் ஒரு பிரிவின் நலனுக்காக, சுயநலத்துக்காக இன்னொரு பிரிவின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது. ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளுவது குதிரை பேரம். 

மாடல்

 பெரும்பான்மை பலம் :

ஒவ்வொருவருக்கும் இங்கே தனித்தன்மை இருக்கிறது. தனிப்பட்ட விருப்பம் இருக்கிறது. அனைவருக்கும் ஒன்றைப் பிடிக்கும் என்று எதனையும் அடையாளம் காட்டிவிட முடியாது. இந்தக் கருத்தின்  மீதுதான் ஜனநாயகத்தின் சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் பெரும்பான்மை மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ... அவர்களே சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் செல்கிறார்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிறார்களோ அவர்களே மாநில, மத்திய அரசுகளை ஆள்கிறார்கள். சில அசாதாரண சூழ்நிலைகளால் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி இரண்டு அணியாக உடையும்போது, அரசைத் தொடர்ந்து நடத்த எந்த அணியை அதிகமான உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள்? அல்லது யாரிடம் பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்க இயலாதபோது ஆட்சி கலையும். இப்போது தமிழகத்தில் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கத்தான் அறத்தை ‘கோல்டன் பே’ ரிசார்ட்டில் குழித் தோண்டி புதைத்திருக்கிறார்கள் நம் சட்டமன்ற உறுப்பினர்கள்.

குரல் வாக்கெடுப்பு :

எங்கள் அணியிடம்தான் அதிக பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிரூபிக்க சில வழிகளை இந்திய அரசியலமைப்பு வழங்கி இருக்கிறது. அதில் ஒன்று, ‘குரல் வாக்கெடுப்பு’. மாநில அரசாக இருக்கும் பட்சத்தில்,  சட்டமன்றத்தில் ஆளுநர் முன்னிலையில்  தாங்கள் யாரை ஆதரிக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அதுதான் குரல் வாக்கெடுப்பு. இதுமட்டுமல்லாமல், ஜனாதிபதி முன்பு தங்கள் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து  அணிவகுப்பு நடத்துவது, ரகசிய வாக்கெடுப்பு என அரசியலமைப்பு வேறு வழிகளையும் வழங்கி இருக்கிறது. 

எடப்பாடி பழனிசாமி

காபந்து அரசு :

ஒரு முதல்வர் அமைச்சரவையைக் கலைத்துவிட்டு  தன் பதவியை ராஜினாமா செய்யும்போது... அடுத்த அமைச்சரவை பொறுப்பேற்கும் வரை, ராஜினாமா செய்த முதல்வரே அரசு நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். அந்த அரசு காபந்து அரசு எனப்படும். 

ஜனாதிபதி ஆட்சி :

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு ஆளுநருக்கென சில பிரத்யேக அதிகாரங்களை வழங்கி இருக்கிறது. ஒரு மாநிலத்தில் ஸ்திரத்தன்மையற்ற நிலை நிலவும்போது, எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாதபோது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி நிர்வாகம் நடக்காதபோது... ஆளுநர் அந்த ஆட்சியைக் கலைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கலாம். குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றபின் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356-வது பிரிவின் படி ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். மாநில ஆட்சி நேரடியாக மத்திய அரசின் கட்டுபாட்டுக்குவரும். மாநிலத்தின் ஆளுநர் நிர்வாக முடிவுகளை எடுப்பார்.

சட்டசபையை முடக்கி வைப்பது :

ஆட்சியில் இருந்த அரசு, சில காரணங்களால் தன் பெரும்பான்மையை இழந்துவிடும்போது, உடனடியாக சட்டசபை முடக்கப்படும். அதாவது எந்த புது அறிவிப்புகளையும் வெளியிட முடியாது... எந்தத் திட்டங்களையும் அறிவிக்கமுடியாது. இதற்கு சமீபத்திய உதாரணம் 2014-ம் ஆண்டு டெல்லியில்  நடந்த நிகழ்வு. காங்கிரஸ் துணையுடன் ஆட்சி அமைத்திருந்த ஆம் ஆத்மி, லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற இயலவில்லை என்ற காராணத்தால், பதவி விலகியபோது டெல்லி சட்டசபை முடக்கி வைக்கப்பட்டிருந்தது. 

சட்டவிரோத சிறை :

இந்தியச் சட்டம் அனைவருக்கும் சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும், அவரின் விருப்பத்துக்கு மாறாக வீட்டில் அடைத்துவைப்பதை குற்றம் என்றும் அது சட்டவிரோத சிறை என்றும் சொல்கிறது சட்டப் பிரிவு.  இதை அரசியல் சூழ்நிலையுடன் பொருத்தி விளக்க, ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சண்முகநாதன் சொல்வதைக் கேளுங்கள், ''அ.தி.மு.க., எம்.எல்.ஏ-க்களின் செல்போன்களைப் பறித்து வைத்துக்கொண்டு கொத்தடிமைபோல், சட்டவிரோதமாக சிறை வைத்துள்ளார்கள்”.

தங்க தமிழ்ச்செல்வன்

அரசியல் சாசன வெற்றிடம் :

அரசியல் அமைப்புச் சட்டத்தின்படிதான் இந்திய அரசு நிர்வாகம் இயங்குகிறது. ஆனால், சில காரணங்களால் இயங்காமல், அரசு முடங்கி இருப்பதை அரசியல் சாசனத்தில் வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது என்று குறிக்கிறார்கள். மு.க. ஸ்டாலின், தமிழக ஆளுநரைச் சந்தித்து அளித்த மனுவில், “ஆளும் கட்சியின் சுயநலனுக்காக அரசு எந்திரம் சீர்குலைந்து, கடந்த 9 மாதங்களாக மக்கள் நலன் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. மாநிலத்தில் தற்போது அரசியல் சாசன வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சிச் சண்டையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.” என்கிறார். 

மாற்று அரசு:

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சரவை கலைக்கப்பட்டு ஒரு அரசு செயலற்று இருக்கும்போது, ஒரு குழப்பம் நிகழும்போது... உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, சுதந்திரமாக பெரும்பான்மைக்கான தேர்வு நடத்தப்பட்டு, கால தாமதம் இல்லாமல் ஒரு அரசை அமைக்கவேண்டும். இதற்கு உதாரணம் எஸ்.ஆர். பொம்மை வழக்கு. 1994-ல் கர்நாடகத்தில் எஸ்.ஆர். பொம்மை தலைமையிலான ஜனதா அரசை அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பதவி நீக்கம் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம், “மாநில அரசுக்குள்ள பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டிய இடம் ஆளுநர் மாளிகையோ வேறு இடங்களோ அல்ல, சட்டப்பேரவைதான் என்று திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியது”. இது ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தாமல் ஒரு மாற்று அரசை உண்டாக்க வழிகோலுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/100812-this-is-what-happened-in-tamilnadu-politics.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.