Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டில்லியில் தமிழக மந்திரிகள் ஆலோசனை அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் எப்போது

Featured Replies

டில்லியில் தமிழக மந்திரிகள் ஆலோசனை
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் எப்போது
 
 
 

எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம், நம்பிக்கை ஓட்டெடுப்பு, பொதுக்குழு என மூன்று விஷயங் களும், ஒரே நேர்கோட்டில் வந்து நிற்பதால், இவற்றை எளிதாக கையாளுவது குறித்த அறிவுரைகளை, தமிழக அமைச்சர்கள், டில்லியில் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

டில்லியில், தமிழக, மந்திரிகள், ஆலோசனை,  அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், தகுதி, நீக்கம், எப்போது

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்து, டில்லி அரசியல் வட்டா ரங்கள் கூறியதாவது:தமிழகத்தில், அ.தி.மு.க., வைச் சேர்ந்த, 19 எம்.எல்.ஏ.,க்கள், கவர்னரிடம் மனு அளித்து விட்டு, புதுச்சேரி புறப்பட்டுச் சென்றதிலிருந்தே, முதல்வர் பழனிசாமி தலை மையிலான அரசு, ஆட்டம் காணத் துவங்கி விட்டது. இந்த திடீர் திருப்பத்தை, டில்லியில் இருப்பவர்கள் கூட எதிர்பார்க்கவில்லை.
 

கலவரம் ஏற்படும்


சற்று சுதாரித்த பின், அடுத்தடுத்து நடந்த ஆலோசனைகளின் அடிப்படையில், 19 எம்.எல். ஏ.,க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப் பட்டது. விளக்கம் தர, போதிய அவகாசம் அளிக்காதது உட்பட, பல சட்ட நுணுக்கங்கள், கர்நாடகாவில் நடந்த எடியூரப்பா வழக்கில் கோட்டை விடப் பட்டன.அதுபோல அல்லாமல், சரியாக திட்ட மிட்ட பின், அதிருப்தி, எம்.எல். ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனால், 19 எம்.எல்.ஏ.,க்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதை எதிர்த்து, கோர்ட்டிற்கு சென்றாலும், இந்த விவகாரத்தில், அவ்வளவு எளிதாகவோ, விரைவாகவோ தீர்வு ஏற்பட்டு விடாது; அதற்குள், ஆட்சியை நீட்டித்து விடலாம்.

பொதுக் குழுவை கூட்டுவதில் தான், பிரச்னை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது; அதில்,

சசிகலா வை நீக்கும் முடிவை எடுத்தால், நிச்சயம் கலவரம்ஏற்படும்.'பழனிசாமி அணியில், அமைச்சர் கள், எம்.எல்.ஏ.,க்கள் என பலரும், 'ஸ்லீப்பர் செல்' களாக உள்ளனர்' என, தினகரன் கூறுவதை, அலட்சி யப் படுத்தி விட முடியாது.எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம், பொதுக்குழுவில் சசிகலா நீக்கம், நம்பிக்கை ஓட்டெடுப்பு ஆகிய மூன்று விஷயங்களையும் ஒரே நேர்கோட்டில் பார்க்க வேண்டியஅவசியம் ஏற்பட்டுள்ளது.
 

முறையீடு


இந்த மூன்றில், பொதுக்குழுவுக்கு மட்டுமே தேதி குறிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு விஷயங்களுக் கும், எப்போது தேதி குறிப்பது என்பதில் தான், இத்தனை குழப்பங்களும், ஆலோசனைகளும். எதிர் கட்சிகளின் அழுத்தம், ஜனாதிபதி வரை முறையீடு என, பலரும் ஆளாளுக்கு கிளம்பி விட்டனர். அடுத் ததாக, கோர்ட் தலையீடும் வர வாய்ப்புள்ளது. எனவே, நம்பிக்கை ஓட்டெடுப்பை, சற்று தாமதப் படுத்தலாமே தவிர, தட்டிக் கழித்து விட முடியாது.

நம்பிக்கை ஓட்டெடுப்பை எப்போது நடத்துவது, எப்படி நடத்துவது என்ற விஷயத்தில் தான், கவர்னரின் பங்களிப்பு மிக அவசியமாகிறது. அதைவிட, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப் போகும் தேதியும், மிக முக்கியமானது. இந்த அனைத்து விஷயங்களுக்கும் தீர்வு கிடைக்கும் இடம் தான், டில்லி.

இதன் அடிப்படையிலேயே, அமைச்சர்கள் ஜெய குமார், தங்கமணி, சண்முகம் மற்றும் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர், டில்லியில் நடந்த ஆலோசனைகளில் அறிவுரை பெற்றுள்ளனர். முதல் நாள் ஆலோசனையின் முடிவுகளை தெரிவிப்பதற்காக, இரவோடு இரவாக, அமைச்சர் சண்முகம், சென்னை திரும்பினார். நள்ளிரவில், முதல்வர் இல்லத்துக்கு சென்று, ஆலோசித்து, மீண்டும்சில தகவல்களுடன், நேற்று காலை டில்லி வந்தார்.

எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தையும், நம்பிக்கை ஓட்டெடுப்பையும் பொதுக்குழுவுக்கு முன் நடத்தி முடித்தால் தான், சரியாக வருமென கருதப்படு கிறது. எனவே, எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் நடந்த ஒருசில நாட்களுக்குள், நம்பிக்கை ஓட்டெடுப்பும் நடந்து முடிந்து விட அதிக வாய்ப்புள்ளது.

எல்லாம் முடிந்தபின், பொதுக்குழுவில் எடுக்கப்

போகும் சசிகலா நீக்கம் பற்றிய முடிவை மையமாக வைத்து, 'ஸ்லீப்பர் செல்'லில் இடம் பெற்றுள்ள, எம்.எல்.ஏ.,க் களால் ஏற்படும் பிரச்னையைத் தாண்டி, ஆட்சி நிலைத்து விடும்.செப்., 12க்கு முன், அனைத் தும் நடந்து முடிந்துவிடும். இதனால், இனி வரும் ஒவ்வொரு நாளும், அரசியல் பரபரப் புகள், உச்சகட்டத்தை தொடப் போகின்றன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 

திசை திருப்பிய பலே தந்திரம்


பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெறுவதற் காக, டில்லி வந்தது போல, வேண்டு மென்றே செய்தி கசியவிட்டு, ஊடகங்களின் கவனத்தை தந்திரமாக திசை திருப்பி, டில்லியில், அதிரடி ஆலோசனை களை நடத்தினர், அ.தி.மு.க., வினர். இந்த உண்மை தெரியாமல், இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி, தினகரன் அணியின் புகழேந்தி, தேர்தல் ஆணையத்திற்கு விழுந்தடித்து ஓடி வந்தது, வேடிக்கை.

மாநில நலன்களுக்காக, அ.தி.மு.க., என்ன செய்தது என அடிக்கடி கேட்கின்றனர். இத னால் தான், மத்திய அமைச்சர்களை டில்லி யில் சந்திக்கிறோம்; முடிந்தவரை போராடு கிறோம். இன்று கூட, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தோம். இறுதியில் எல்லா விஷயத்திலுமே, உச்ச நீதிமன்றம் தான் இடையூறாகி விடுகிறது.

தம்பிதுரை

லோக்சபா துணை சபாநாயகர், அ.தி.மு.க.,


-நமது டில்லி நிருபர்-

http://www.dinamalar.com/news_detail.asp?id=1844959

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.