Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா நாடு கடத்தும் 83 தமிழர்களும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள்

Featured Replies

* இந்தோனேசியா அறிவிப்பு

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழ் அகதிகள், இந்தோனேசியாவில் தங்க அனுமதிக்கப்படாது உடனடியாகவே இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் அகதிகள் அந்தஸ்து கோரி அண்மையில் படகொன்றில் சென்ற 83 தமிழர்கள், கிறிஸ்மஸ் தீவுக்குச் சமீபமாக அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இவர்கள் தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் அகதிகள் அந்தஸ்து வழங்கி அவுஸ்திரேலியாவினுள் தங்க அனுமதிக்குமாறு அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம் உட்பட பல சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

எனினும், அவுஸ்திரேலியாவுக்கு நேரில் சென்ற அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இவர்களை உடனடியாக நாடு கடத்துமாறு அவுஸ்திரேலிய அரசிடம் வற்புறுத்தியிருந்தார்.

இதற்கிடையில் இந்த அகதிகள் இந்தோனேசியாவிலிருந்தே அவுஸ்திரேலியாவினுள் நுழைய முற்பட்டதால் அவர்களைத் தாங்கள் இந்தோனேசியாவுக்குள் நாடு கடத்தப்போவதாக அவுஸ்திரேலியா அறிவித்தது.

எனினும், இவர்களை இந்தோனேசியாவுக்குள் அனுமதிக்கப் போவதில்லையென அந்நாட்டு அரசு கூறவே நிலைமை மேலும் சிக்கலடைந்தது.

எனினும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் வற்புறுத்தலின் பேரிலும் இந்தோனேசியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் தீவிர முயற்சியின் பலனாகவும் இந்த 83 தமிழர்களையும் இலங்கைக்கு நாடு கடத்துவதில் அவுஸ்திரேலியாவும் இந்தோனேசியாவும் இணக்கமொன்றை எட்டின.

இதன்படி, அவுஸ்திரேலியாவிலிருந்து 83 தமிழர்களும் இந்தோனேசியாவுக்கு அனுப்பப்பட்டால் அவர்களை அங்கு தங்க அனுமதிக்காது உடனடியாக இலங்கைக்கு அனுப்ப இந்தோனேசியா முடிவு செய்துள்ளது.

அகதிகள் தொடர்பான ஐ.நா. சாசனத்தில் இந்தோனேசியா கைச்சாத்திடாததால் எவருக்கும் தங்கள் நாட்டில் அகதிகள் அந்தஸ்து வழங்க வேண்டிய உரிமை தங்களுக்கில்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து 83 இலங்கையர்களும் இந்தோனேசியா வந்ததும் அவர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டு விடுவரென இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தேஷ்ரா பேஹயா தெரிவித்துள்ளார்.

இந்த 83 பேரும் உடனடியாக அவர்களது சொந்த நாடான இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுவரென்பதால

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க ஜோன் ஹவாட்டின் அரசாங்கம் வளர்க அவுஸ்திரேலிய டமிழரின் தமிழின பற்று

அந்தப் பற்றப் பற்றி ஏன் கேட்கிறீங்கள். தங்கள் தங்கள் குடும்பங்கள் வெளிநாட்டில செற்றில் ஆகிட்டாச் சரி. அது போயிடும். அப்புறம் அவையள் வெள்ளைக்காரர் பாருங்கோ. நாடென்ன தமிழென்ன. அப்பப்ப இணையத்தளங்களில ஒன்றிரண்டு எழுதிக் கொள்ளுறது. தாங்கள் ஏதோ ஆர்வமான தமிழினப் பற்றாளர்கள் என்று காட்டிக்கிறதுக்கு. ஜஸ்ட் ரைம் பாசிங் அண்ட் பப்ளிசிற்றி. அதையெல்லாம் பாசம் பற்று என்று எண்ணக் கூடாது. எண்ணி ஏமாறுறது அவர்களின் குற்றமல்ல எண்ணும் உங்களது. :D:icon_idea:

  • தொடங்கியவர்

அந்தப் பற்றப் பற்றி ஏன் கேட்கிறீங்கள். தங்கள் தங்கள் குடும்பங்கள் வெளிநாட்டில செற்றில் ஆகிட்டாச் சரி. அது போயிடும். அப்புறம் அவையள் வெள்ளைக்காரர் பாருங்கோ. நாடென்ன தமிழென்ன. அப்பப்ப இணையத்தளங்களில ஒன்றிரண்டு எழுதிக் கொள்ளுறது. தாங்கள் ஏதோ ஆர்வமான தமிழினப் பற்றாளர்கள் என்று காட்டிக்கிறதுக்கு. ஜஸ்ட் ரைம் பாசிங் அண்ட் பப்ளிசிற்றி. அதையெல்லாம் பாசம் பற்று என்று எண்ணக் கூடாது. எண்ணி ஏமாறுறது அவர்களின் குற்றமல்ல எண்ணும் உங்களது. :D:icon_idea:

நீங்கள் சொல்லுவது உண்மை கடந்த வெள்ளிக்கிழமை மெல்பேன் நகரத்தில் இருக்கும் குடிவரவு திணைக்களத்துக்கு முன்னால் இவர்களை திருப்பி அனுப்பவேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்வதாக செய்தி வந்தது அதாவது மாலை 5 மணிக்கு.நானும் என் 4 நண்பர்களும் அங்க போனால் எம்முடன் சேர்த்து 30 பேர் நிக்கீனம்.சிட்டிக்குள் வேலை செய்யும் தமிழ் சனம் வேலை முடிந்து வந்திருந்தாலேயே 400 பேரை கடந்திருக்கும் .ஆனால் அண்டைக்குத்தானே பார்டி இருக்கும் அதுதானே அதுகளுக்கு முக்கியம்.இதில என்ன கொடுமை எண்டால் இங்க இருகிற டமிழரில் 75%வர்கள் அகதியாக வந்தவர்களே!!!! கேட்டால் சொல்லுவீனம் குறுகியகால அவகாசம் என.ஆனப்பாருங்கோ ஜானகி அம்மையாரும் லொள்ளு சபா சந்தானமும் வருகீனம் அடுத்த வாரம் டிக்கட் 150 -30 டொலர் அதெல்லாம் இப்பவே விற்று தீர்ந்திருக்கும்.லீவெல்லாம் எடுத்து அதுக்கு போவீனம்.

  • தொடங்கியவர்

இப்ப அனுப்பாமல் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் இருக்கும் ஒருதீவில் வைத்து அகதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என தகவல் வந்துள்ளது.நாடுகடத்தக்கோரி நிமால் சிறிபாடி சில்வா ஒற்றைக்காலில் நின்றும் அவர்களுக்கு இலங்கை பாதுகாப்பானது என அறிக்கை தரமுடியுமா என கேட்டதுக்கு பதில் தராமல் நழுவியுள்ளார் நிமால்.

நல்ல செய்தி ஆனால் இந்த 83 உறவுகளுக்கும் ஒஸ்திரேலிய டமிழரின் வியாதி தொத்தாமல் பழையதை மறக்காமல் இருப்பார்கள் என நம்புகின்றேன்

  • தொடங்கியவர்

திருப்பியனுப்பப்படுவார்களா? அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய தமிழ் இளைஞர்களின் கேள்விக்குறியான எதிர்காலம்

-அ.ரஜீவன்- கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தைகள் முடிவற்று தொடர்கின்றன.

மனித உரிமை அமைப்புகளினதும் அரசியல் கட்சிகள் சிலவற்றினதும் கடும் எதிர்ப்பு காரணமாக அவுஸ்திரேலிய, இந்தோனேசிய அரசாங்கங்களால் அவர்களை திருப்பியனுப்பும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள முடியாமலுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மனிதாபிமான முகத்தினை மீண்டும் வெளிப்படுத்திய சம்பவமாக இது அமைந்துள்ளது.

கிறிஸ்மஸ் தீவினை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிய கப்பலொன்றை அவுஸ்திரேலிய கப்பல் இடைமறித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பெப்ரவரி 19 ஆம் திகதியிலிருந்து அவுஸ்திரேலியாவின் எல்லை காவற்படையினர் (Border Protection Command) இவர்களை கண்காணித்து வந்துள்ளனர்.

பெப்ரவரி 20 ஆம் திகதி கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்து 50 கடல் மைல் தொலைவில் எச்.எம்.எஸ். சக்ஸஸ் எனும் அவுஸ்திரேலியா கடற்படை கப்பல் இவர்களை இடைமறித்துள்ளது.

குறிப்பிட்ட படகு எவ்வகையான சட்டபூர்வமான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அதிலிருந்த 85 பேரும் அனுமதிக்கப்படாத வரவுகள் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சு தெரிவித்திருந்தது.

அவுஸ்திரேலிய கடற்படை படகிலிருந்தவர்கள் சிறிய படகிலிருந்தவர்களுடன் தொடர்பு கொண்டபோது அந்தப் படகிலிருந்தவர்கள் தமது படகு பழுதடைந்து விட்டதாகவும் கடல் பயணத்திற்கு ஏற்றதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கடல் பயணத்திற்கு சரிவராத படகிலிருப்பதற்கு பயந்து 85 பேரும் அவுஸ்திரேலிய கடற்படை படகில் ஏறுவதற்கு இணங்கினர் என்றும் அவுஸ்திரேலியா தெரிவித்தது.

எனினும், அவுஸ்திரேலியா இவர்கள் நாட்டிற்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்களா அல்லது கிறிஸ்மஸ் தீவிற்கு எடுத்துச் செல்லப்படுவார்களா என்பதை ஆரம்பத்தில் தெரிவிக்கவில்லை. படகிலிருந்தவர்கள் குறித்த முழுமையான விபரங்களும் வெளியிடப்படவில்லை.

எனினும், அவுஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமை அமைப்புகளும் தமிழ் அமைப்புகளும் தருகின்ற தகவல்களின்படி 83 இலங்கையர்களும் 30 வயதிற்குட்பட்டவர்கள் என தெரிய வருகின்றது. அநேகமானவர்கள் தமிழர்கள் என்பதுடன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற ஊகமும் வெளியிடப்படுகின்றது.

இலங்கையிலிருந்து இந்தோனேசியாவிற்கு இவர்களை அழைத்து வந்த சட்டவிரோத பயண முகவர்கள் பல மாதங்கள் அங்கு வைத்திருந்த பின்னர் ஜகார்த்தாவில் வைத்து படகில் ஏற்றி அனுப்பியுள்ளனர்.

அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹேவார்ட்டின் அரசாங்கம் கடந்த காலப்பகுதிகளில் அடைக்கலம் கோருபவர்களையும் சட்ட விரோத குடியேற்றவாசிகளையும் கையாண்ட விதம் குறித்து நன்கு அறிந்திருந்த மனித உரிமை அமைப்புகள் 85 பேர் நடுக்கடலில் வைத்து மீட்கப்பட்டதாக தகவல் வெளியானதும் இதனை உற்று கவனிக்கத் தொடங்கின.

இதற்கிடையில் அவுஸ்திரேலியாவின் ஹெரால்ட் செய்தித்தாள் அவுஸ்திரேலியா, இந்தோனேசியாவுடன் 85 பேரையும் திருப்பியனுப்புவது தொடர்பாக இரகசிய பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளது என தெரிவித்தமை கடும் உணர்வலைகளை உடனடியாக தோற்றுவித்தது.

அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜகார்த்தாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு அனுப்புவது குறித்தே இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் சாசனத்தில் கைச்சாத்திடாத நாடு இந்தோனேசியா என்பதால் 85 பேருக்கும் அரசியல் தஞ்சம் அளிக்க வேண்டிய தேவை அதற்கில்லை. இதன் காரணமாக அது உடனடியாக அவர்களை இலங்கைக்கு அனுப்பலாம்.

குறிப்பிட்ட சட்ட விரோத குடியேற்றவாசிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மேலும் பலர் அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கு இது காரணமாக அமைந்துவிடும் என்ற அச்சம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

2001 இல் பாரிய சர்ச்சையை தோற்றுவித்த தம்பா நெருக்கடிக்குப் பின்னர் தனது கடற்பகுதிக்கு இவ்வளவு பெருந்தொகையானவர்கள் வந்தது இதுவே முதல் தடவை என்கிறது அவுஸ்திரேலியா.

அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹேவார்ட் கடலில் கைது செய்யப்பட்டவர்கள் நாட்டிற்குள் வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான தனது கொள்கையில் மாற்றமில்லை என்பதை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 2001 இல் தேர்தலில் பின்தங்கிய நிலையிலிருந்த ஹவார்ட் சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டிற்குள் அனுமதிக்கப்போவதில்லை என்ற கோஷத்தை முன்வைத்தே தேர்தலில் வெற்றி பெற்றார்.

அவுஸ்திரேலியாவிற்குள் யார் வருவது என்ன சூழலில் வருவது என்பதை நாங்கள் தீர்மானிப்போம் என்பது அவரது பிரகடனமாக விளங்கியது.

இலங்கையர்களை ஜாவாவிற்கு கப்பலில் அனுப்புவதா அல்லது ஜகார்த்தாவுக்கு விமானத்தில் அனுப்புவதா என்பது பற்றியும் இரு நாடுகளும் ஆராய்ந்துள்ளன. அவர்களுடைய படகிலேயே அனுப்புவது பாதுகாப்பற்றது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

சட்டவிரோத குடியேற்றவாசிகள் இந்தோனேசியாவிற்கு சட்டவிரோதமாக வந்துள்ளதால் ஜகார்த்தா அவர்களை இலங்கைக்கு திருப்பியனுப்புவதை நியாயப்படுத்தலாம் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. மேலும் இவர்கள் அரசியல் தஞ்சம் கோருவதையும் அல்லது போராட்டங்களில் ஈடுபடுவதையும் தவிர்ப்பதற்காக உடனடியாக நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா இவ்வாறு அகதிகள் விவகாரத்தை கையாளாமல் ஜகார்த்தாவிடம் கையளிப்பது போலியானது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் தீவில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் ஜகார்த்தாவிற்கு திருப்பியனுப்பப்படமாட்டார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.