Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"புதிய அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்­று­வ­தற்­கு இந்­தியா பூர­ண­மான ஒத்­து­ழைப்­பினை வழங்கும்"

Featured Replies

"புதிய அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்­று­வ­தற்­கு இந்­தியா பூர­ண­மான ஒத்­து­ழைப்­பினை வழங்கும்"

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்­று­வ­தற்­காக இந்­தியா தனது பூர­ண­மான ஒத்­து­ழைப்­பினை வழங்கும் என இந்­திய வெளிவி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்­த­னி­டத்தில் உறு­தி­ய­ளித்­துள்ளார். 

tna-sushma.jpg

இந்து சமுத்­திர மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள இந்­தி­யாவின் வெளிவி­வ­கார அமைச்­ச­ரான சுஷ்மா சுவராஜ் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும் இடை­யி­லான சந்­திப்பு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் உள்ள பிர­மு­கர்­க­ளுக்­கான பகு­தியில் நேற்று வெள்ளிக்­கி­ழமை முற்­பகல் 11.45 மணியளவில் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தது. இச்­சந்­திப்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­தி­ரனும் பங்­கேற்­றி­ருந்தார். 

அரை மணி­நே­ர­மாக நடை­பெற்ற இச்­சந்­திப்­பின் ­போது எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன், இந்திய வெளிவி­வ­காரக அமைச்சரின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­த­தா­வது,

"புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்கும் கரு­மத்­திற்கு உரிய முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட வேண்டும். இதனை மேலும் இழுத்­த­டிக்­கப்­ப­ட­லா­காது.  இந்த விடயம் சம்­பந்­த­மாக ஏற்­க­னவே பல்­வேறு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

அந்த நட­வ­டிக்­கை­களின் அடிப்­ப­டையில் மேலும் கால­தா­மதம் ஏற்­ப­டாத வகையில் அர­சி­ய­ல­மைப்பு யாப்பின் வரை­வா­னது இந்த வருட இறு­திக்குள் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்டு, அதனைத் தொடர்ந்து உட­ன­டி­யாக அது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும். 

இலங்கை அர­சாங்­க­மா­னது இந்த நாட்டு மக்­க­ளுக்கும், சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் கொடுத்த வாக்­கு­று­தி­களின் அடிப்­ப­டையில் இந்தக் கரு­மத்­தினை நிறை­வேற்­று­வ­தனை இந்­திய அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்றார். 

இதன்போது இந்திய அரசாங்கத்தினது ஒத்துழைப்பை மீளவும் உறுதி செய்த வெளி விவகார அமைச்சர், இந்த நடவடிக்கைகளை நிறைவுக்குக் கொண்டுவருமுகமாக தமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு இருக்கும் எனவும் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/23895

  • தொடங்கியவர்
’புதிய அரசமைப்பு இடித்தடிக்கப்படலாகாது’
 

image_4fdb23c3fb.jpg

புதிய அரசமைப்பு உருவாக்குவதற்குரிய முக்கியத்துவம் வழங்கப்படல் வேண்டும் என்றும் இழுத்தடிக்கப்படலாகாது என்றும், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, நேற்று (01) இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்த விடயம் சம்பந்தமாக, ஏற்கெனவே, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கைகளின் அடிப்படையில், மேலும் காலதாமதம் ஏற்படாத வகையில், அரசமைப்பின் வரைவானது, இந்த வருட இறுதிக்குள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து, உடனடியாக, அது சர்வஜன வாக்கெடுப்புக்கு, உட்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கமானது, இந்த நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில், இந்தக் கருமத்தை நிறைவேற்றுவதை, இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

இந்திய அரசாங்கத்தினது ஒத்துழைப்பை, மீள் உறுதி செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்த நடவடிக்கைகளை நிறைவுக்குக் கொண்டுவரும் முகமாக, தமது தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதாக கூறினார்.

image_78e8dfff31.jpg

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/புதிய-அரசமைப்பு-இடித்தடிக்கப்படலாகாது/175-203132

  • தொடங்கியவர்

புதிய அரசமைப்பு தாமதமடைவது குறித்து இந்தியாவிடம் முறையீடு

சுஷ்மாவைச் சந்தித்தபோது சம்பந்தன் எடுத்துரைப்பு

 

புதிய அர­ச­மைப்பு முயற்சி தாம­த­ம­டை­வது தொடர்­பில் இந்­திய அய­லு­ற­வுத்­துறை அமைச்­ச­ரி­டம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத் தனது கவ­லையை நேற்று வெளிப்­ப­டுத்­தி­யது.

தமிழ் மக்­க­ளின் அன்­றா­டப் பிரச்­சி­னைக­ளி­லும் சொல்­லிக்­கொள்­ளும்­ப­டி­யான முன்­னேற்­றம் இல்லை என்­ப­தை­யும் அது எடுத்­து­ரைத்­தது.

இந்­திய அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் சுஷ்மா சுவ­ராஜ் கொழும்பு வந்­துள்­ளார். இந்­தி­யப் பெருங்­க­டல் மாநாட்­டில் கலந்­து­கொள்­வ­தற்­காக வருகை தந்த அவர் அர­சி­யல் தலை­வர்­க­ளை­யும் சந்­தித்­துப் பேசி­னார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ ரன் ஆகிய இரு­வ­ரும் அவரை நேற்­று­முன்­தி­னம் இரவு அல­ரி­மா­ளி­கை­யில் இரவு விருந்­து­டன் சந்­தித்­துப் பேசி­னர்.

புதிய அர­ச­மைப்பு முயற்­சி­யில் ஏற்­பட்­டுள்ள தடங்­கல், தமிழ் மக்­க­ளின் அன்­றா­டப் பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்து வைப்­ப­தில் அரசு காட்­டும் அசி­ரத்தை தொடர்­பில் கூட்­ட­மைப்­பி­னால் சுஷ்­மா­வுக்கு எடுத்­துக் கூறப்­பட்­டது. அரச தலை­வர்மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைத் தான் சந்­திக்­கும்­போது இது தொடர்­பில் பேசு­வார் என்று அவர் தெரி­வித்­தார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்­றுக் காலை சந்­தித்­துப் பேச்சு நடத்­திய பின்­னர், இந்­தி­யா­வுக்­குத் திரும்­பும் வழி­யில் கட்­டு­நா­யக்கா பன்­னாட்டு வானூர்தி தளத்­தில் கூட்­ட­மைப்­பின் தலை­வர்­களை சுஷ்மா மீண்­டும் சந்­தித்­தார். அவ­ச­ர­மா­கத் திடீ­ரென இந்­தச் சந்­திப்பு ஒழுங்கு செய்­யப்­பட்­டது. சுமார் அரை மணி நேரம் நீடித்­தது.

‘‘புதிய அர­ச­மைப்­புத் தாம­தம் தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வு­டன் பேசி­னேன். 2016ஆம் ஆண்­டுக்­குள் முடி­வ­டை­யும் என்று கூறி­யி­ருந்­தீர்­கள், ஆனால் அது முடி­வ­டை­ய­வில்­லையே என்­ப­தைக் கேட்­டேன்.

இந்­தி­யத் தலைமை அமைச்­சர் மோடியை கடந்த மே மாதம் சந்­தித்­த­போது ஓகஸ்ட் மாதத்­திற்­குள் எல்­லாம் முடிந்து விடும் என்று கூறி­யி­ருந்­தீர்­கள் என்­ப­தை­யும் சுட்­டிக்­காட்­டி­னேன்.

ஏன் தாம­த­மா­கின்­றது என்று அரச தலை­வ­ரி­டம் கேள்வி எழுப்­பி­னேன். தற்­போது கிடைத்­துள்ள சந்­தர்­பத்தை நழு­வ­வி­டு­வது போன்று உள்­ளது என்­கிற இந்­தி­யா­வின் உணர்­வை­யும் வெளிப்­ப­டுத்­தி­னேன்.

நாம் உங்­க­ளின் உள் விவ­கா­ரங்­க­ளில் தலை­யி­ட­வில்லை. ஆனா­லும் தமிழ் மக்­க­ளுக்­குத் தீர்வு விரைந்து கிடைக்­கப் பெற வேண்­டும் என்­ப­தில் இந்­தியா அக்­க­றை­யாக – உறு­தி­யாக இருப்­ப­தாக, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் கூறி­னேன்’’ என்று சுஷ்மா சுவ­ராஜ் கூறி­னார் என்று கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­தார்.

அரச தலை­வ­ரி­டம் இருந்து சாத­க­மான பதிலே கிடைக்­கப்­பெற்­ற­தா­க­வும் சுஷ்மா சுவ­ராஜ் தெரி­வித்­தெ­தார் என்று சுமந்­தி­ரன் கூறி­னார்.

http://newuthayan.com/story/24925.html

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போரை அமெரிக்கா முன்னின்று நடத்தியிருந்தால் போர் முடிந்த உடனேயே ஒரு அரசியல் தீர்வு முன் வைத்திருக்கும்.

முதுகெலும்பில்லாத நாடுகள் முன்னின்றதால் இத்தனை வருடமாகியும் இன்னமும் இழுபட்டுக் கொண்டே போகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.