Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள தமிழ்த் தரப்பு தெற்கின் முற்­போக்­கா­ளர்­க­ளுடன் இணை­ய­வேண்டும்

Featured Replies

அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள தமிழ்த் தரப்பு தெற்கின் முற்­போக்­கா­ளர்­க­ளுடன் இணை­ய­வேண்டும்

p4-19470625f2ce3a6e96a7525114335bf2b12aa0f8.jpg

 

சிரேஷ்ட அர­சியல் ஆய்­வாளர் குஷல் பெரேரா தெரி­விப்பு

(ஆர்.ராம், எம்.நியூட்டன்)

தமிழ் மக்­களின் அபி­லா­ஷைகள், எதிர்­பார்ப்­புக்கள் நிறை­வே­று­வ­தற்கு தெற்­கி­லுள்ள முற்­போக்­கான சிந்­த­னை­யா­ளர்­க­ளுடன் இணைந்து பணி­யாற்­று­வ­தற்கு தமிழ்த் தரப்­பினர் முன்­வ­ர­வேண்டும்

என சிரேஷ்ட அர­சியல் ஆய்­வாளர் குஷல் பெரேரா தெரி­வித்தார்.

தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் புதிய அர­சியல் அமைப்புத் தொடர்­பான தெளி­வு­ப­டுத்தல் கூட்டம் "ஓர் அர­சியல் தீர்வை எதிர்­கொள்ளல்" எனும் தலைப்பில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை யாழ்.வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இதன்­போது சிரேஷ்ட அர­சியல் ஆய்­வா­ள­ரான குஷல் பெரேரா கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­து­வரும் தமிழ் மக்கள் தொடர்பில் 2015 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் ஆட்­சியில் அமர்ந்த அர­சாங்கம் கவனம் செலுத்­து­வ­தாக கூறி­யி­ருந்­தது. இருப்­பினும் அந்த அர­சாங்கம் தமி­ழர்­களின் நலன்­களில் அக்­கறை செலுத்தி புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­க­வில்லை என்­ப­தற்­கான கார­ணத்தை நீங்கள் அறிந்­து­கொண்டால் கவ­லைப்­ப­ட­மாட்­டீர்கள் என்று நான் கரு­து­கின்றேன்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை ஆட்­சி­யி­லி­ருந்து மாற்­ற­வேண்டும் என்ற சிந்­தனை எங்கு எழுந்­தது என்­பதை நாங்கள் சற்றுக் கூர்ப்­பாக நோக்­க­வேண்டும். அதற்­காக அவ­ரு­டைய ஆட்சி தொட­ர­வேண்டும் என்று நான் கரு­து­பவன் என்று நீங்கள் கரு­தி­வி­டக்­கூ­டாது.

உண்­மை­யி­லேயே கொழும்­பி­லுள்ள மத்­திய தர வர்க்­கத்­தி­னரின் உந்­து­த­லி­லேயே கடந்த ஆட்சி மாற்­றப்­பட்டு புதிய ஆட்­சி­யொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்ற சிந்­தனை எழுந்­தி­ருந்­தது. இதன் ஓர் அங்­க­மா­கவே வணக்­கத்­திற்­கு­ரிய சோபித தேரர் தலை­மை­யி­லான சமூக நீதிக்­கான மக்கள் இயக்கம் ஜன­நா­யகம் நல்­லாட்சி என்ற தொனிப்­பொ­ருட்­களில் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தன. இவ்­வாறு சமூக நீதிக்­கான மக்கள் இயக்கம் அதன் தலைவர் சோபித தேரர் தலை­மையில் நிகழ்­வொன்றை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

இந்­நி­கழ்வில் பங்­கேற்­ப­தற்­காக சமூக அக்­கறை உள்­ளவன் என்ற அடிப்­ப­டை­யிலும் பத்­தி­ரி­கை­யாளன் என்ற அடிப்­ப­டை­யிலும் நான் நேர­டி­யாகச் சென்­றி­ருந்தேன். இந்­நி­கழ்வில் ஒரு விஞ்­ஞா­பனம் வெ ளியி­டப்­பட்­டது. அந்த விஞ்­ஞா­ப­னத்தை அடிப்­ப­டை­யாக வைத்­துக்­கொண்டு நான் அக்­கா­லப்­ப­கு­தியில் கட்­டுரை ஒன்றை வரைந்­தி­ருந்தேன். மிகக் கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்தேன். நான் விமர்­சிப்­ப­தற்குக் கார­ணங்கள் இல்­லாமல் இல்லை. அந்த விஞ்­ஞா­ப­னத்தில் மூன்று, நான்கு தசாப்­தங்­க­ளாக பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்­பாக எந்­த­வி­த­மான விட­யங்­களும் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. வடக்­குக்­கி­ழக்கு மக்கள் அவர்­களின் கோரிக்­கைகள் தொடர்­பா­கவும் எவ்­வி­த­மான கவ­னமும் செலுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை.

மாறாக தென்­னி­லங்­கையில் ஊழல், லஞ்சம், துஷ்­பி­ர­யோகம் போன்­ற­வற்றை முடி­வுக்குக் கொண்­டு­வந்து பௌத்த சிந்­த­னையை முன்­னி­லைப்­ப­டுத்­திய ஒரு ஜன­நா­ய­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தையே அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருந்­தது.

இத்­த­கைய மத்­திய வர்க்­கத்­தினை மைய­மாகக் கொண்ட தரப்­பினர் மாற்­றத்­திற்­காக கொழும்பை மையப்­ப­டுத்­திய ஐக்­கிய தேசியக் கட்­சியின் அணி­யி­ன­ருடன் கூட்­டாக இணைந்து கொண்­டார்கள். பொது வேட்­பா­ளரை நிறுத்­த­வேண்டும் என்­ப­தற்கும் ஆத­ர­வ­ளித்­தார்கள்.

பொது வேட்­பாளர் சிந்­தனை இத்­த­கைய தரப்­புக்­களால் முன்­வைக்­கப்­பட்­ட­போது சிங்­கள பௌத்தர் அல்­லாத ஒரு­வரே பொது வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்­ற­வொரு மாற்று முன்­மொ­ழி­வொன்றை நான் எனது கட்­டு­ரை­யூ­டாக செய்­தி­ருந்தேன். குறிப்­பாக வட­மா­காண முத­ல­மைச்­ச­ராக இருந்த முன்னாள் நீதி­ய­ரசர் விக்­னேஸ்­வரன் பொது வேட்­பாளர் பத­விக்கு முழுத்­த­கை­மையும் உடை­யவர் என்­பதை நான் சுட்­டிக்­காட்டி அந்த முன்­மொ­ழிவுக் கட்­டு­ரையை எழு­தி­யி­ருந்தேன்.

இச்­ச­ம­யத்தில் பாரா­ளு­மன்­றத்தில் இந்த விடயம் சம்­பந்­த­மாக கேள்வி எழுப்­பப்­பட்­டது. அப்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான எம்.ஏ.சுமந்­திரன், பொது வேட்­பா­ள­ராக விக்­னேஸ்­வ­ரனை நிய­மிப்­பது என்­பது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யோசனை அல்ல. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அவ்­வா­றான கலந்­து­ரை­யாடல் எத­னையும் செய்­ய­வில்லை. அது சிங்­கள பௌத்த எழுத்­தாளர் ஒரு­வரின் தனிப்­பட்ட யோசனை என்றே பதி­ல­ளித்­தி­ருந்தார்.

இவ்­வா­றி­ருக்­கையில் மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டு வெற்­றி­பெற்றார். இவர் தலை­மையில் தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது. இந்த தேசிய அர­சாங்கம் கொள்கை அடிப்­ப­டையில் அதா­வது பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டையில் கொள்­கையின் அடிப்­ப­டையில் அமை­யப்­பெற்ற அர­சாங்கம் ஒன்­றல்ல.

தற்­போது ஐக்­கிய தேசியக் கட்­சிக்குத் தலைமை தாங்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குத் தலைமை தாங்கும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் தாங்கள் அர­சி­யலில் தப்பிப் பிழைத்துக் கொள்­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்­டதே இந்த தேசிய அர­சாங்­க­மாகும். இந்த தேசிய அர­சாங்கம் ஆட்­சியில் அமர்ந்­த­வுடன் 100 நாள் திட்­ட­மொன்றை முன்­வைத்­தார்கள். இந்தத் திட்­டத்தில் தமிழ் மக்­களின் காணி விடு­விப்பு, மீள்­கு­டி­யேற்றம், காணா­மல்­போனோர் தொடர்­பான விட­யங்கள், அர­சியல் கைதிகள் விடு­தலை சம்­பந்­த­மான விட­யங்கள், வட­கி­ழக்கு பொரு­ளா­தார மீள்­கட்­டு­மானம் சம்­பந்­த­மான விட­யங்கள், யுத்­தத்தில் இழைக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் குற்­றங்­க­ளுக்­கான பரி­கா­ரங்கள் தேடும் வகை­யி­லான பொறுப்­புக்­கூறல் சம்­பந்­த­மான விட­யங்கள் பற்றி எந்­த­வொரு இடத்­திலும் குறிப்­பிட்­டி­ருக்­க­வில்லை.

அதே­நேரம் தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. இந்த அர­சி­ய­ல­மைப்பு எதற்­காக உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. தமிழ் மக்­களின் கோரிக்­கைகள் என்ன? அதி­லுள்ள நியா­யப்­பா­டுகள் என்ன? அவற்றை வழங்­க­வேண்­டி­ய­தற்­கான கார­ணங்கள் என்ன என்­பன தொடர்­பாக அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதில் பங்­கெ­டுப்­ப­வர்கள் உட்­பட எந்­த­வொ­ரு­வரும் துணிந்து வெ ளிப்­ப­டுத்­து­வ­தற்குத் தயா­ராக இல்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யங்­களை சிங்­கள மக்கள் மத்­தியில் ஒரு விவாதப் பொரு­ளா­கவோ அல்­லது கலந்­து­ரை­யா­டப்­படும் விட­ய­மா­கவோ வைப்­ப­தற்கும் பெரும்­பான்மைப் பிர­தி­நி­திகள் தயா­ராக இல்லை.

இவ்­வா­றி­ருக்­கையில் தமிழ் மக்­களின் தலை­மைகள் எந்­த­வி­த­மான நிபந்­த­னை­க­ளு­மின்றி பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் விட்­டுக்­கொ­டுப்­புக்­களை செய்து வரு­கின்­றன. இதன்­மூலம் தமக்கு ஏற்­ற­தொரு வகை­யி­லா­னதும் தமிழ் மக்­களை திருப்­திப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­து­மான ஒரு அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கி­வி­ட­மு­டியும். அத­னூ­டாக ஒரு அர­சியல் தீர்­வினைப் பெற்­று­வி­டலாம் என்று நம்­பிக்கை கொண்­டி­ருக்­கின்­றார்கள். புதிய அர­சி­ய­ல­மைப்புச் செயற்­பா­டுகள் இவ்­வாறு விட்­டுக்­கொ­டுப்­ப­த­னூ­டா­கவோ அல்­லது இர­க­சி­ய­மாக மேற்­கொள்­வ­த­னூ­டா­கவோ முழு­மை­யாக நிறை­வேற்றிக் கொண்­டு­வி­டலாம் என்று கரு­தி­வி­ட­மு­டி­யாது.

காரணம் அர­சி­ய­ல­மைப்புச் செயற்­பா­டுகள் நிச்­ச­ய­மாக பகி­ரங்­க­மான நிலைமை ஒன்­றுக்கு வந்­தா­க­வேண்டும். அவ்­வாறு வரு­கின்­ற­போது சிங்­கள தேசிய கடும்­போக்­கா­ளர்கள் நிச்­ச­ய­மாக அதனை எதிர்ப்­பார்கள். இவ்­வா­றான எதிர்ப்­புக்­களை வர­லாற்று ரீதி­யாக அறிந்­தி­ருக்­கின்றோம்.

இவ்­வா­றி­ருக்­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தற்­போது தொடர்ச்­சி­யாக பாரா­ள]­மன்ற அர­சி­யலில் 40 ஆண்­டு­களை நிறைவு செய்து அதனைக் கொண்­டா­டு­கின்றார். 1977 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக் கட்சி ஆறி்ல் ஐந்து பெரும்­பான்­மையைப் பெற்று சிங்­கள பௌத்த பேரி­ன­வாதக் கட்­சி­யாக ஆட்­சியில் அமர்ந்­தது. அதே­வ­ருடம் தனி­நாட்டுக் கோரிக்­கையை முன்­வைத்து போட்­டி­யிட்ட தமிழர் விடு­தலைக் கூட்­டணி மிகப் பெரும் வெற்­றியைப் பெற்­றது. இந்­தாண்டு இது நாடு பிரி­வ­டை­வ­தற்­கான அடித்­த­ளத்­தினை இட்­டி­ருக்­கின்­றது.

இதே காலப்­ப­கு­தியில் ஜே.ஆர். ஜெய­வர்த்­தன தலை­மை­யி­லான அரசு நக­ரங்­களை மையப்­ப­டுத்­திய திறந்த பொரு­ளா­தாரக் கொள்­கையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இது கிரா­மிய சிங்­கள மக்­களை ஒதுக்­கு­கின்ற ஒரு செயற்­பா­டாகப் பார்க்­கப்­ப­டு­கின்­றது. கிரா­மிய சிங்­க­ள­வர்கள் ஒதுக்­கப்­ப­டு­கின்­ற­போது அவர்­களின் ஆத­ரவு அர­சாங்­கத்தை விட்டுச் செல்­லக்­கூ­டாது என்­ப­தற்­காக தேசிய பாது­காப்பு என்ற விட­யத்தை கையி­லெ­டுக்­கின்­றார்கள். அதற்­கா­கவே பயங்­க­ர­வாதத் தடைச் சட்டம், அவ­ச­ர­காலச் சட்டம், பயங்­க­ர­வா­தத்­திற்­கெ­தி­ரான போர் போன்ற விட­யங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள். இத்­த­கைய நிலைப்­பாட்­டி­லுள்­ள­வர்கள் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தற்­காக சிந்­தித்துச் செயற்­ப­டு­வார்கள் என்றோ அல்லது அக்கறை காட்டுவார்கள் என்றோ நீங்கள் எதிர்பார்க்கமுடியும்?

உண்மையிலேயே யதார்த்த ரீதியில் இக்கருத்துக்களைக் கூறினாலும் எதிர்மறையான கருத்தொன்றை உங்களுக்கு முன்னால் விட்டுச் செல்கின்றேன் என்ற மனச்சஞ்சலம் எனக்குள்ளது. ஆகவே நீங்கள் இதனை கருத்திற்கொண்டு தவறாக சிந்திக்கவேண்டாம். எமக்கு சந்தர்ப்பம் இருக்கின்றது. சந்தர்ப்பம் முழுதாகக் கைநழுவி விடவில்லை.

தெற்கைப் பொறுத்தவரையில் அங்கு முற்போக்கான சிந்தனையாளர்கள் இருக்கின்றார்கள். ஜனநாயகவாதிகள் இருக்கின்றார்கள். சிவில் அமைப்பாளர்கள் இருக்கின்றார்கள். மதத் தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களை தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொள்ளாதவாறு பிரதான கட்சிகள் ஒதுக்கி வைத்திருக்கின்றன.

உங்களுடைய அபிலாஷைகள் எதிர்பார்ப்புக்கள் வெற்றியடையவேண்டுமானால் தெற்கிலுள்ள நான் சொன்னவாறான தரப்பினருடன் இணைந்து நீங்கள் பணியாற்றமுடியும்.

அதன் மூலம் உங்களுடைய எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. அதற்கான ஒரு தொடர்பாளராக வழிநடத்துனராக நான் என்றுமிருப்பேன் என்று இந்த சபையில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.