Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாத்தளன் மீனவர்களுடைய படகு நேற்றுக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது

Featured Replies

மாத்தளன் மீனவர்களுடைய படகு நேற்றுக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது

 
மாத்தளன் மீனவர்களுடைய படகு நேற்றுக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது
 

முல்லைத்தீவு மாத்தளன் மீனவர்களுடைய படகு மாத்தளன் கடற்பரப்பில் சேதப்படுத்தப்பட்டு மூழ்கடிக்கப்பட்து. தென்னிலங்கை மீனவர்களே படகை மோதி மூழ்கச் செய்தனர் என மாத்தளன் மீனவர்கள் குற்றம் சாட்டினர். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது.

சம்பவத்தை வடக்கு மாணசபை உறுப்பினர் து.ரவிகரன் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த அப்பகுதி மீனவர்களின் படகினை தென்னிலங்கை மீனவர்கள் வேண்டுமென்றே விஷமத்தனமாக மோதித் தள்ளியுள்ளனர்.

இதனால் படகு கடுமையாகச் சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளது. அந்தப் படகில் பயணித்த இரண்டு மீனவர்களும் உயிருக்குப் போராடிய நிலையில் சக மீனவர்களின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான விஷமத்தனமான செயலால் மீனவர்களின் உயிரைப் பறிக்க நினைத்துள்ளனர். இந்தச் செயலைச் செய்த படகினை அப்பகுதியில் நின்ற ஏனைய மீனவர்கள் துரத்திச் சென்று அவர்கள் யார் என அடையாளம் கண்டுள்ளனர்.

அதன் பின்னர் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் எனது கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினேன். அப்போது இவ்வாறான சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இடம்பெற்றதாகவும். அதிலிருந்து தாம் மீண்ட நிலையில் நேற்று அதிகாலையும் தென்னிலங்கை மீனவர்கள் தங்களை மோதித் தள்ளி கடலில் மூழ்கடித்துள்ளனர் எனவும் மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.

”நாம் கடலில் இறந்திருந்தால் எமது குடும்பத்தின் நிலை என்ன? தொடர்ச்சியாக எமது படகுகளை சேதப்படுத்தினால் எமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுகின்றது. எனவே கொழும்பு அரசு மற்றும் மாகாண சபை ஆகியன உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சனைக்கு தீர்வினை வழங்க வேண்டும்” என மீனவர்கள் என்னிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

நான் அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகவே வடக்கு மாகாண முதலமைச்சருக்கு தகவலை வழங்கினேன். மேலும் இச் சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றையும் இன்றையதினம் சமர்ப்பிக்கவுள்ளேன் என்றார்.

http://newuthayan.com/story/26272.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.