Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்குச் சிறை!!

Featured Replies

லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்குச் சிறை!!

 
லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்குச் சிறை!!
 Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கடந்த அரச தலைவர் தேர்தலின் போது நாடளாவிய ரீதியில் சில் துணி பகிரப்பட்டது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத்தொடர்புகள் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இருவருக்கும் தலா மும்மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 லட்சம் ரூபா தண்டப்பணம் விதித்துள்ள மேல் நீதிமன்றம், ஏற்பட்ட நட்டத்துக்காக தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு 100 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

100 மில்லியன் ரூபாவை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு செலுத்த தவறும் பட்சத்தில் குறித்த இருவருக்குமான சிறைத்தண்டனை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்படும் என்பதோடு, குற்றவாளிகள் இருவரில் ஒருவரேனும் 20 இலட்சம் ரூபாவைச் செலுத்த தவறும் பட்சத்தில் விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை காலம் மேலும் ஆறு மாதத்திற்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரச தலைவர் தேர்தலின் போது தொலைத்தொடர்புகள் சீர்திருத்த ஆணைக்குழுவின் நிதியில் சுமார் 600 மில்லியன் ரூபா செலவில் சில் துணிகள் பகிரப்பட்டன என்று அனுஷ பெல்பிட்ட மற்றும் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

http://newuthayan.com/story/26438.html

  • தொடங்கியவர்

லலித் வீரதுங்க அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டு சிறை

 

ஜனாதிபதி தேர்தலின்போது சில் துணி வழங்கிய விவகாரத்தில் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு 

(எம்.எப்.எம்.பஸீர்)

20 இலட்சம் ரூபா அபராதம்  50 இலட்சம் ரூபா நஷ்டஈடு  செலுத்தவும் உத்தரவு

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் செய­லாளர் லலித் சந்­திர குமார் வீர­துங்க, தொலைத்­தொ­டர்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் நிஷான் பெல்­பிட்ட கோர­ளகே அனுஷ பெல்­பிட்ட ஆகிய இரு­வ­ருக்கும் மூன்று வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை வி­தித்து கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று தீர்­ப்ப­ளித்­தது.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது தொலைத்­தொ­டர்­புகள் ஆணைக்­கு­ழு­விற்கு சொந்­த­மான 600 மில்­லியன் ரூபாவை பயன்­ப­டுத்தி நாட­ளா­விய ரீதியில் விகா­ரை­க­ளுக்கு பெளத்த பக்தர்கள் அணியும் வெள்ளை நிற ஆடை­க­ளுக்­கான துணி­யினை (சில் துணி) விநி­யோ­கித்­தமை தொடர்பில் சட்­டமா அதி­ப­ரினால் 3 குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கில் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்­ட­தை­ய­டுத்தே இவ்­வாறு தீர்­ப­ளிக்­கப்­பட்­டது. 

கொழும்பு மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி திஹான் குல­துங்க இந்த தீர்ப்பை வழங்­கினார் . கடூ­ழிய சிறைத்­தண்­ட­னைக்கு மேல­தி­க­மாக தலா 20 இலட்சம் ரூபாவை அப­ராதம் செலுத்­தவும் தலா 50 இலட்சம் ரூபாவை தொலைத்­தொ­டர்­புகள் ஆணைக்­கு­ழு­விற்கு நட்­ட­ஈ­டாக வழங்­கவும் இதன் போது நீதி­பதி உத்­த­ர­விட்டார்.

நட்­ட­ஈட்டு தொகை­யினை எதிர்­வரும் செப்­டெம்பர் 20 ஆம் திக­திக்கு முன்னர் செலுத்த வேண்டும் எனவும் நீதி­பதி தனது தீர்ப்பில் சுட்­டிக்­காட்­டினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 30 ஆம் திகதி மற்றும் 2015 ஜன­வரி மாதம் 5 ஆம் திகதி ஆகிய கால எல்­லைக்குள் கொழும்பு மேல் நீதி­மன்ற அதி­கார பகு­திக்கு உட்­பட்ட பிர­தே­சத்­தி­லுள்ள இலங்கைத் தொலைத்­தொ­டர்­புகள் ஆணைக்­கு­ழு­விற்கு சொந்­த­மான 600 மில்­லியன் ரூபா, 1996 ஆம் ஆண்டில் 27 ஆம் இலக்க இலங்கை தொலைத் தொடர்­புகள் திருத்த சட்­டத்தி விதி­வி­தா­னங்­க­ளுக்கு மாற்­ற­மான முறையில் (ஜனா­தி­பதி செய­லாளர் ) எனும் பெய­ரி­லான இலங்கை வங்கி கிளையில் 7040016 எனும் வங்கி கணக்­கிற்கு சில் துணி­களை பகிர்­வ­தற்­காக வழங்­கி­யமை தொடர்பில் 3 குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் முன்னாள் சட்­டமா அதிபர் யுவ­ஜன ஜவ­கர்லால் ஜன­சுந்­தர விஜய தில­க­வினால் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டது.

அதில் பிர­தி­வா­தி­க­ளாக தொலைத்­தொ­டர்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் நிஷான பெல்­பிட்ட கோர­ளகே அனுஷ பெல்­பிட்ட, முன்னாள் ஜனா­தி­ப­தியின் செய­லாளர் லலித் சந்­திர குமார வீர­துங்­கவும் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தனர்.

முதல் பிர­தி­வா­தி­யான அனுஷ பெல்­பிட்­ட­வுக்கு எதி­ரா­கவும் முன்னாள் ஜனா­தி­ப­தியின் செய­லாளர் லலித் வீர­துங்­க­வுக்கு எதி­ரா­கவும் தண்­டனை சட்­டக்­கோ­வையில் 113 ஆ, 102 , 386 ஆகிய பிரி­வு­களின் கீழும் 1982 ஆம் ஆண்டு 12 இலக்க பொதுச்­சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் 5(1) அத்­தி­யா­யத்தின் கீழும் 3 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன.

அரச பணத்தை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை, அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை, அது தொடர்பில் ஒன்­றி­ணைந்து சதித்­திட்டம் தீட்­டி­யமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்கள் இரு­வ­ருக்கு எதி­ரா­கவும் சுமத்­தப்­பட்­டன. இதில் முதல் 2 குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் தொலைத்­தொ­டர்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்­ட­வையும் 2 ஆம் 3 ஆம் குற்­றச்­சாட்டு தொடர்பில் ஜனா­தி­ப­தியின் முன்னாள் செய­லாளர் லலித் வீர­துங்­க­வையும் நீதி­மன்றம் குற்­ற­வா­ளி­க­ளாக கண்­டது.

அத­னை­ய­டுத்து அவ்­வி­ரு­வ­ருக்கும் எதி­ரான தீர்ப்­பினை நீதி­மன்றம் நேற்று அறி­வித்­தது. அதன்­ப­டியே குற்­றா­வா­ளி­க­ளாக காணப்­பட்ட ஒவ்­வொரு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் தலா ஒன்­றரை வருட சிறை தண்­டனை வீதம் இரு­வ­ருக்கும் தலா மூன்று வருட கடூ­ழிய சிறைத்­தண்­ண­ட­னையை மேல் நீதி­மன்ற நீதி­பதி திஹான் குல­துங்க அறி­வித்தார்.

அத்­துடன் இரு­வ­ருக்கும் தலா 20 இலட்சம் ரூபாய் அப­ராத தொகை­யி­னையும் அவர் விதித்தார். இவற்­றுக்கு மேல­தி­க­மாக தொலைத்­தொ­டர்­புகள் ஆணைக்­கு­ழு­விற்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட நட்டம் தொடர்பில் இருவரும் தலா 50 இலட்சம் ரூபா வீதம் நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டவும் சிறைக்காவலர்களால் பொறுப்பேற்கப்பட்டு கைவிலங்கு அணிவிக்கப்பட்டு சிறைச்சாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.