Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்காகவே புதிய யாப்பு

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்காகவே புதிய யாப்பு

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்காகவே புதிய யாப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது தேவையை நிறைவேற்றும் வகையிலேயே சமஷ்டியை அடிப்படையாகக் கொண்டு புதிய யாப்பை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும், ஜெனீவாவிற்கான ஸ்ரீலங்காவின் முன்னாள் தூதுவருமான கலாநிதி தயான் ஜயதிலக்க இதனால் புதிய அரசியல் யாப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தயான் ஜயதிலக்க, புதிய யாப்பின் ஊடாக நாடு பிளவடையாவிட்டாலும் அதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளார். 

 

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுவரும் புதிய அரசியல் யாப்பிற்கு எதிராக மக்களை அணித் திரட்டும் நோக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைப்பு நேற்றைய தினம் கொழும்பில் கூட்டமொன்றை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் நெருங்கிய விசுவாசிகளில் ஒருவராகக் கருதப்படும் கலாநிதி தயான் ஜயதிலக்கவும் கலந்துகொண்டு புதிய அரசியல் யாப்புத் தயாரிப்புப் பணிகள் மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதனால் பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தயான் ஜயதிலக்க “இந்த நாடு தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்து சவால்களிலிலும் வெற்றிக்கொண்டுள்ளது. இந்த நாட்டின் அரசு மிகவும் சக்தி வாய்ந்தது. சாத்தியப்படாமல் போன விடயங்கள் ஏதாவது இருக்குமாயின் அது அரசாங்கத்தின் பலவீனமே தவிர, அரசின் பிழையல்ல. ஆகவே யாப்பு மாற்றம் என்பது வெற்றிகரமான செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரசினை மாற்றும் ஒரு செயலாகும். அதனை மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே நாங்கள் மாற்றத்தை வேண்டாமென கூறவில்லை. எனினும் யாப்பில் ஏதாவது மாற்றங்களை செய்யலாம். சில திருத்தங்களை மேற்கொள்ள முடியும். அதற்காக யாப்பினை முழுமையாக மாற்றவேண்டிய தேவையில்லை. யாப்பினை மாற்றியமைக்க வேண்டுமாயின் அதற்கென ஒரு எண்ணக்கரு இருக்க வேண்டும். ஆகவே புதிதாக உருவாக்கப்படவுள்ள யாப்பின் எண்ணக்கரு என்னவென யாருக்கும் தெரியாது. அந்த எண்ணக்கருவை ஏன் தெரிவிக்க மறுக்கின்றார்கள். அதில் இருக்கும் திருட்டுத்தனம் என்ன? அதனை மறைக்க முடியாது. அந்த எண்ணக்கருவின் பின்னணியில் எம்.ஏ.சுமந்திரன் இருக்கின்றார். யாப்பில் ஒற்றையாட்சி என்ற விடயம் இருந்தால் பரவாயில்லை. எனினும் எமக்கு சமஷ்டி என்ற விடயத்திற்கு உறுதியளித்துள்ளதாக அவர் சுமந்திரன் குறிப்பிடுகின்றார். ஆகவே இந்த யாப்பு உருவாக்கத்தின் எண்ணக்கரு சமஷ்டியே.“

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்களையும் நோர்வே போன்ற வெளிநாடுகளையும் திருப்திப்படுத்தும் வகையில் புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதை நிறுத்திவிட்டு ஸ்ரீலங்கா சிங்கள மக்களுக்கு மாத்திரம் சொந்தமானது என்ற எண்ணக் கருவை மாற்றியமைக்கக்கூடிய வகையில் அரசியல் யாப்பில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்றும் கலாநிதி தயான் ஜயதிலக்க கோரிக்கை விடுக்கின்றார்.

தயான் ஜயதிலக்க - “நாட்டிற்குள் அதிகாரத்தைப் பகிர்வதில் தவறில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகவே அதிகாரத்தை பகிர்வது பிரிவினைவாதம் அல்ல. பல நாடுகள் இதற்கு முன்னுதாரணம். எனினும் அதிகாரத்தை பகிர்வதால் நாடு பிளவடையும் என நாம் கூறவில்லை. எனினும் நாடு பிளவடைவதற்கான வாய்ப்பு இந்த யாப்பின் ஊடாக அது நடைபெறும். புலிகள் அமைப்புடன் சமாதான உடன்படிக்கைக்குச் சென்ற பிரதமர், யுதத்தத்தை வெற்றிக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட நோர்வேயுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி, புலிகளே தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் எனக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவர்களே புதிய யாப்பு தொடர்பில் பேசுகின்றனர். இனவாத முகாம்கள் இரண்டு காணப்படுகின்றன. முதலாவது இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை இல்லாது செய்து வெளிநாட்டு சக்திகளின் தேவைக்கேற்ப செயற்படுவது. இரண்டாவது இந்த நாட்டில் சிங்களவர்கள் மாத்திரமே வாழ்கின்றோம் என்ற எண்ணத்தில் செயற்படுபவர்கள். ஆகவே இவை இரண்டையும் நிராகரித்து யாப்பில் ஏதாவது திருத்தங்களை மேற்கொள்ள முடியும். அதனைவிடுத்து அரசினை மாற்றியமைக்கும் இந்த யாப்பு உருவாக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை.“

https://news.ibctamil.com/ta/internal-affairs/The-new-constitution-is-the-requirement-of-the-TNA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.