Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உன்னதமான தாய்மையினை வெளிப்படுத்திய தமிழச்சி; நெகிழ்ந்துபோன சிங்கள மக்கள்!

Featured Replies

உன்னதமான தாய்மையினை வெளிப்படுத்திய தமிழச்சி; நெகிழ்ந்துபோன சிங்கள மக்கள்!

 

இலங்கையின் மலையகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த, தொடருந்து ஒன்றில் பயணித்த தமிழ் பெண்ணொருவரிடம் கண்ட அன்பினால் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பதுளை நோக்கிச் செல்லும் ’உடரட்ட மெனிக்கே’ என்ற பெயரைத் தாங்கிய தொடருந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த தொடருந்தினுள் தமிழ் பெண் ஒருவர் நடந்துகொண்ட பண்பினை வியந்தே மேற்படி தென்னிலங்கை சிங்கள இனத்தவர்கள் பாராட்டியுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித்த உடரட்ட மெனிக்கே தொடருந்தில் கொழும்பை சேர்ந்த ஒருவர் தனது பிள்ளையுடன் பயணித்துள்ளார். அந்த வேளையில் கூட்டம் அதிகமாக இருந்ததனால் அவர் பிள்ளையுடன் அவதியுறுவதைப் பார்த்த குறித்த தமிழ்ப் பெண், அவரது பிள்ளையினை வாங்கி தனது மடியில் வைத்திருந்தார்.

உன்னதமான தாய்மையினை வெளிப்படுத்திய தமிழச்சி; நெகிழ்ந்துபோன சிங்கள மக்கள்!

இவ்வாறு மடியில் பிள்ளையை வைத்துப் பயணம் செய்துகொண்டிருந்தபோது தொடருந்தின் வேகத்தினால் உள்ளே காற்று பலமாக வந்துகொண்டிருந்தது. இதனால் அந்த பெண், தனது மடியில் வைத்திருந்த பிள்ளையின் மீது காற்றுப் படாதவாறு கைகளை அணைத்து கொண்டு நீண்ட தூரம்வரை பயணித்துள்ளார்.

இதனைக் கண்ணுற்று கொழும்பில் இருந்து சென்ற சிங்களவர் தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

“இன்று காலை உடரட்ட மெனிக்கே தொடருந்தில் தமிழ் தாய் ஒருவர் எனது பிள்ளையை தனது கரங்களில் பெற்றுக் கொண்டார்” என புகைப்படங்களுடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவைப் பார்த்த அவரது பேஸ்புக் சிங்கள நண்பர்கள் பலர், குறித்த தமிழ்ப் பெண்ணுக்கு மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துள்ளதுள்ளனர். அத்துடன் தமிழர்கள் மிகவும் அன்பானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் இனவாதத்தை தூண்டிவிடுவதில் இந்த நாட்டு அரசியல்வாதிகளே முன்னிற்கின்றனர் என பலர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை மேலும் அழகாக பதிவிட்டு பலருக்கு இதனை சுட்டிக்காட்டியிருக்கலாம் என பெரும்பாலான சிங்கள நண்பர்கள் தங்களின் ஆதங்கத்தை குறித்த பதிவின்கீழ் வெளிப்படுத்தியுள்ளனர்.

தொடருந்து பயணத்தில் நீண்ட தூரம் இன்னொருவரது பிள்ளையை தனது மடியில் வைத்துப் பயணிக்கும்போது உள்ள அசௌகரியத்தினையும் பொருட்படுத்தாது இந்த அவசரமான உலகத்திலும் பிறர் பிள்ளையையும் தன் பிள்ளை போல பார்த்துக்கொண்ட அந்த தமிழ்ப் பெண் தமிழர் பண்பாட்டின் பெருமைமிகு ஒர் எடுத்துக்காட்டாவார்!

உன்னதமான தாய்மையினை வெளிப்படுத்திய தமிழச்சி; நெகிழ்ந்துபோன சிங்கள மக்கள்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Tamil-girl-who-reveals-motherhood

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.