Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடகா விடுதியில் குவிந்த தமிழக போலீஸார்!

Featured Replies

கர்நாடகா விடுதியில் குவிந்த தமிழக போலீஸார்!

 
 

கர்நாடகா, குடகு பகுதியில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருக்கும் விடுதியில் தமிழக போலீஸார் சென்றுள்ளனர். கோவை பதிவு எண் கொண்ட தமிழக காவல்துறை வண்டிகள் விடுதிக்குச் சென்றுள்ளன. ஆட்சிக்கு எதிராக தினகரன் தரப்பு போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் தமிழக போலீஸ் குவிந்துள்ளது. 

தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக தினகரன் தரப்பும் எதிர்க்கட்சியினரும் போர்க்கொடி தூக்கிவரும் சூழ்நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் ரத்து செய்யப்படுவதாக அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது எனவும், ஜெயலலிதா நியமித்த உறுப்பினர்கள், கட்சிப் பொறுப்புகளில் நீடிப்பார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

அ.தி.மு.க-வின் உட்கட்சிப் பூசல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இன்று கர்நாடகா, குடகில் உள்ள தனியார் விடுதிக்குள் தமிழக போலீஸார் சென்றுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

http://www.vikatan.com/news/india/102009-tamilnadu-police-arrived-to-resort-in-karnataka-where-dinakaran-faction-mlas-are-staying.html

  • தொடங்கியவர்

கர்நாடக ரிசார்ட்டுக்கு தமிழக போலீஸ் வருகை ஏன்? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ பேட்டி

 
 

 IMG-20170828-WA0007_07328_12440_15226.jp

 

மிழகத்தில் நடந்து வரும் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. இதனால் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோன்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், ஆளுநரை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதன் பின்னர் புதுச்சேரிக்கு சென்ற எம்எல்ஏக்கள், பின்னர் அங்கிருந்து கர்நாடக மாநிலம் குடகுக்கு சென்றனர். அங்குள்ள ரிசார்ட்டில் அவர்கள் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று கூடிய அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் விரைந்த தமிழக போலீஸார் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள குடகு விடுதிக்குச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். போலீஸாரின் இந்த நடவடிக்கை குறித்து அங்கு தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்புகொண்டு பேசினோம். "தமிழகத்திலிருந்து 200 போலீஸார் இங்கு வந்துள்ளனர். எங்களுடன் தற்போது அமர்ந்து போலீஸார் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இங்கு தங்கியுள்ள 19 எம்.எல்.ஏ-க்களும் தங்களது சுய விருப்பத்தின் பேரில்தான் தங்கியுள்ளனர். எங்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதற்காக கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் அமைந்துள்ள இந்த விடுதிக்கு வந்து தங்கியுள்ளோம். எதற்காக இங்கே போலீஸார் வந்தார்கள் என்பது தெரியாது. முதல்வருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரும் விவகாரத்தில் அடுத்த கட்டமாகக் குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேச உள்ளோம். அதன் பின்னரே எங்களது இறுதிக்முடிவை எடுக்க உள்ளோம். எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்து இன்னும் எம்.எல்.ஏ-க்கள் தினகரன் அணிக்கு வர உள்ளனர். இன்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை நீக்கியிருப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சசிகலாவை நீக்கும் அதிகாரம் அங்குள்ள யாருக்குமில்லை" என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/102021-dinakaran-faction-mla-explains-the-reason-behind-tn-police-visit-to-resort.html

  • தொடங்கியவர்

'ஆட்சியைக் கலைக்க ரெடி!'- கர்நாடக ரிசார்ட்டில் கொதித்த எம்.எல்.ஏ-க்கள்

 
 

TTV_MLAs_16596.jpg

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கலைக்க ரெடியாகி விட்டதாக கர்நாடக ரிசார்ட்டில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பார்த்து தினகரன் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். குறிப்பாக, சசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியும், அவர் அறிவித்த நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் தினகரனுக்கு சொல்லப்பட்டதும் மீடியாக்களைச் சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டதாக தினகரன் தெரிவித்தார்.

பொதுக்குழுவில் சசிகலாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதை எதிர்பார்த்த தினகரன் தரப்பு, அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்த ஆலோசனையில் சில நாள்களாக ஈடுபட்டுவருகின்றனர். தீர்மான நகலை வரி விடாமல் படித்த தினகரன் சட்ட நிபுணர்கள், அதுதொடர்பான விவாத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச்சூழ்நிலையில் புதுச்சேரியில் தங்கியிருந்தால் சிக்கல் எனக்கருதிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள குடகு சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த இன்று மதியம் கோவை போலீஸார் சொகுசு விடுதிக்குச் சென்றனர். விடுதிக்குள் சென்ற கோவை போலீஸார் எம்.எல்.ஏ-க்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, எம்.எல்.ஏ-க்களில் சிலர் போலீஸ் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் போலீஸாரிடம், எங்களது சுயவிருப்பத்தின்பேரிலேயே தங்கியிருக்கிறோம். எங்களை யாரும் கடத்தவில்லை என்றும் சொல்லியுள்ளனர். அந்ததகவலை வீடியோவாகவும் போலீஸார் பதிவுசெய்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் பேசினோம். "சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய மகிழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உள்ளனர். எங்களைப் பொறுத்தவரை, அது பொதுக்குழு கூட்டமே இல்லை. வெறும் கூட்டம். அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அ.தி.மு.க. விதிப்படி செல்லாது. ஏனெனில் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது. டிசம்பரில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில்தான் சசிகலா, பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலாவை ஆதரித்து தேர்தல் ஆணையத்திடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அஃபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்தவித முடிவும் அறிவிக்கவில்லை. அதற்குள் மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடத்தி சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தினகரன் தயாராகிவிட்டார். அவரது முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். ஆட்சியும் அதிகாரமும் இருப்பதால் போலீஸார் மூலம் விசாரணை என்ற பெயரில் எங்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. அந்த மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். தேவையென்றால் எங்களது எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்துவோம். அதன்பிறகு நடக்கும் தேர்தலில் நிச்சயம் எங்களுக்கும் தி.மு.க-வுக்கும் மட்டுமே போட்டியிருக்கும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பா.ஜ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தால் மக்கள் அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள். தற்போது நடந்துவருவது ஜெயலலிதா விரும்பிய ஆட்சியல்ல. சுயநலத்துக்காக, மக்கள் விரோத ஆட்சி நடந்துவருகிறது. சட்ட ரீதியாக போராடி கட்சியை மீட்டெடுப்போம்" என்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/102026-we-are-ready-to-dissolve-this-govt-says-dinakaran-faction-mlas.html

  • தொடங்கியவர்

ரூ.20 கோடி தருவதாக காவல்துறையை வைத்து மிரட்டுகின்றனர்: தங்கத்தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ பேட்டி

 

 
download%203jpg

குடகு பகுதியில் விடுதியில் தங்கியிருக்கும் தங்களை போலீஸ் அதிகாரிகளை வைத்து ரூ.20 கோடி வரை தருகிறோம் அணி தாவுங்கள் என்று மிரட்டுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கத்தமிழ் செல்வன் பேட்டி அளித்தார்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் குடகுமலையில் உள்ள சுன்டிகோப்பா காவல்நிலையத்தில் இன்று புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில் தமிழக காவல்துறை எங்களை அச்சுறுத்துகிறது, பணம் தருவதாக கூறி அணி மாறச்சொல்லி மிரட்டுகிறது என்று தெரிவித்திருந்தனர்.

இது குறித்து குடகு பகுதியில் விடுதியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கத்தமிழ் செல்வனிடம் தி இந்து தமிழ் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

இன்று காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தீர்களே அதன் சாராம்சம் என்ன?

ஒவ்வொரு எம்.எல்.ஏவையும் மிரட்டுகிறார்கள், தனித்தனியாக மிரட்டுகிறார்கள். உங்கள் பதவியை பறித்துவிடுவோம், எங்களுடன் வந்துவிடுங்கள், ரூ.20 கோடி வாங்கிக்கொள்ளுங்கள் என்று மிரட்டினார்கள். தனித்தனியாக எம்.எல்.ஏக்கள் அறைக்குச் சென்று மிரட்டினார்கள்.

போனது யார் என்று சொல்ல முடியுமா?

போலீஸார் தான் , 4 டிஎஸ்பிக்கள், சில போலீஸார். தமிழ்நாடு போலீஸ், எல்லோரும் கோவையிலிருந்து வந்துள்ளனர்.

அவர்கள் பெயர் விபரம் எதாவது சொல்ல முடியுமா?

கோவை டிஎஸ்பி வேல்முருகன் சட்டம் ஒழுங்கு, சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் இன்னும் 4 டிஎஸ்பிக்கள் பெயர் தெரியவில்லை.

அவர்கள் என்ன சொன்னார்கள் என்று விபரமாக சொல்ல முடியுமா?

எடப்பாடி அனுப்பியுள்ளார், நீங்கள் வந்து விடுங்கள் எடப்பாடிக்கு சப்போர்ட் பண்ணுங்கள் ரூ.20 கோடி வரை கொடுக்க சொல்கிறோம், போன் போட்டுத்தருகிறோம் பேசுங்கள் என்றார்கள். ஆனால் யாரும் அதை விரும்பவில்லை. நேற்றும் வந்தார்கள், இன்றும் வந்தார்கள். அதனால் தான் அவர்கள் மீது இங்குள்ள டிஎஸ்பியிடம் புகார் அளித்தோம்.

புகாரில் விடுதிக்கு வந்த போலீஸார் போட்டோக்களை இணைத்து கொடுத்துள்ளீர்களா?

ஆமாம் புகார் காப்பியுடன் அவர்கள் அனைவரது போட்டோக்களையும் இணைத்து கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19677316.ece?homepage=true

 

 

நாங்கள் விசாரணை நடத்தவே சென்றோம்: குடகு விடுதிக்கு சென்ற டிஎஸ்பி மறுப்பு

download%202

தினகரன் தரப்பு எம்.எல்.ஏ தங்கத்தமிழ் செல்வன் புகார் உண்மையல்ல பழனியப்பன் குறித்து விசாரிக்கவே சென்றோம் என டிஎஸ்பி வேல்முருகன் மறுத்துள்ளார்.

குடகு விடுதியில் தங்களை மிரட்டி அணி தாவ சொல்கிறார்கள் என்று கோவை டிஎஸ்பி வேல்முருகன் உள்ளிட்ட போலீஸார் மீது தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் தங்கத்தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி ஆகியோர் குடகுமலையில் உள்ள சுன்டிகோப்பா காவல்நிலையத்தில் இன்று புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில் தமிழக காவல்துறை எங்களை அச்சுறுத்துகிறது, பணம் தருவதாக கூறி, அணி மாறச்சொல்லி மிரட்டுகிறது என்று தெரிவித்திருந்தனர்.

தொடர்புடையவை

download%203jpg
 

இது குறித்து தங்கத்தமிழ்செல்வன் குறிப்பிட்ட காவல் அதிகாரி, குடகுமலை விடுதிக்கு சென்று விசாரணை நடத்திய கோவை பேரூர் டிஎஸ்பி வேல்முருகனிடம் தி இந்து தமிழ் சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:

தங்கத்தமிழ் செல்வனிடம் அவர் அளித்த புகார் கொடுத்தது பற்றி கேட்டபோது 4 டிஎஸ்பிக்களுடன் நீங்கள் சென்று மிரட்டியதாக கூறினார், நீங்கள் அங்கு சென்றீர்களா?

ஆமாம் சென்றேன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி போலீஸாருடன் நேற்று போனோம். நேற்று அவர் இல்லை. வந்துவிட்டோம். அங்குள்ள சிசிடிவி பதிவுகள் கேட்டிருந்தோம். இன்று ஒரு தகவல் பழனியப்பன் வருவதாக தகவல் வந்தது.

இன்று போனோம் அவர்கள் அனைவரும் நன்றாகத்தான் பேசினார்கள். திடீரென்று இன்று மாற்றி பேட்டி அளித்துள்ளனர். எங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. போனது விசாரணைக்கு மட்டுமே. அவர்கள் அதை அரசியலாக்குகிறார்கள்.

காவல்துறை தரப்பில் ரூ.20 கோடி தருவதாகவும் அணி மாறச்சொல்லி வற்புறுத்தியதாக கூறியுள்ளாரே?

அப்படி எல்லாம் இல்லை, லாஜிக் இல்லாத விஷயம். காவல்துறையில் கீழ்மட்ட அதிகாரிகளாக நாங்கள் செல்கிறோம். எங்களால் இப்படி பேச முடியுமா? அப்படி அவசியமும் இல்லை.

சிபிசிஐடி வழக்குக்காக சட்டம் ஒழுங்கு டிஎஸ்பி செல்லலாமா?

சிபிசிஐடிக்கு உதவி செய்ய சென்றோம். அவர்களுக்கு மேன் பவர் குறைவு என்பதால் உதவிக்காக செல்வோம். சென்னை, நாமக்கல்லிலிருந்து சிபிசிஐடி வந்தார்கள் உதவி என்ற முறையில் சென்றோம் அவ்வளவே.

இன்று சென்றதற்கு காரணம் பழனியப்பன் அங்குதான் இருப்பதாக சொல்கிறார்கள். அது பெரிய ரிசார்ட் என்பதால் குறிப்பிட்ட இடத்தில் உள்ள சிசிடிவி பதிவை கேட்டோம். அங்கு போனாலும் நான் எதுவும் பேசவில்லை சிபிசிஐடி டிஎஸ்பி தான் சிசிடிவி பதிவு கேட்டு கடிதம் கொடுத்து பேசினார் அவ்வளவே.

இவ்வாறு டிஎஸ்பி வேல்முருகன் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19677635.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.