Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் மறைவு!

Featured Replies

pon4.jpg?w=620

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் இன்று அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தியுள்ளார்.

தமிழ் மக்கள் மீதும் தமிழீழ மண் மீதும் தீவிர பற்றுறுதியுடன் செயற்பட்டுவந்த பொன்.சத்தியநாதன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு தொடக்கம் உயிர் பிரியும் நேரம் வரையில் எண்ணிலடங்கா சேவைகளைப் புரிந்துவந்திருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பிற்கான பல்வேறு தேவைகளை தொடர்ந்தும் புரிந்துவந்த ஒருவராகவே காணப்பட்டிருக்கின்றார். அமைப்பிற்கு கணனி போன்ற இலத்திரனியல் பொருட்களை வழங்கி தொழிநுட்பரீதியாக தமிழர்களின் வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றினார்.

அதேவேளையில், விடுதலைப்புலிகள் அமைப்பில் துறைசார்ந்த ஆர்வமானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுடைய கல்விமேப்பாட்டிற்கான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்த பெருமைக்குரிய ஒருவராக விளங்கிவந்திருகின்றார்.

பொன்.சத்தியநாதன் அவர்கள், ஈழத் தமிழ் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும் அவ் அமைப்பின் தலைவராகவும் இருந்து ஈழத்தமிழச் சங்கத்தின் செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.

மெல்பேர்ணில் தமிழ்ப்பாடசாலைகளை தொடக்கி நடத்துவதில் முன்னோடியாக செயற்பட்டுவந்த அவர், புலம்பெயர் தேசங்களில் தமிழ்க் கல்வி கற்பிக்கும் முறைமையை வடிவமைப்பதில் முன்னோடியாக இருந்தார்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் அவுஸ்திரேலிய மருத்துவ நிதியம் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கு முதுகெலும்பாக இருந்து செயற்பட்ட சத்தியநாதன் அவர்கள் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையிலான உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.

தமிழில் ஒலியை தட்டச்சாக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிவதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த அவர் அதனை இறுதி செய்வதற்க முன்பாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் அர்ப்பணிப்பாளராக செயற்பட்டுவந்த பொன்.சத்தியானந்தன் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்குரியவராகவே விளங்கிவந்திருக்கின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பிய பொழுதுகளில் எல்லாம் தேசியத் தலைவர் அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் பெற்றவர்களில் ஒருவராகவும் விளங்கியிருக்கின்றார்.

இடையறாது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பெரும் தொண்டாற்றிய உன்னத சேவையாளர் பொன்.சத்தியநாதன் அவர்களுக்கு தமிழ்லீடர் ஆசிரியர் பீடம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

http://tamilleader.org/?p=4137

 

  • தொடங்கியவர்

மெல்பேர்னில் ஒரு தமிழ் மலர் உதிர்ந்தது!

21743000_1648633635181252_70551838132228

தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் நேற்று(15) மெல்பேர்னில் காலமானார்.

யாழ்ப்பாணம் கரவெட்டியில் 1948ம் ஆண்டு நவம்பர் 17ம் திகதி பிறந்த பொன்.சத்தியநாதன்  அவர்கள், ஒரு மருத்துவராக, தாயகத்திலும் பின்பு புலம்பெயர்வாழ்விலும் அரும்பணியாற்றியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல்  ஈழவிடுதலைப் போராட்டம் மீதும் தமிழ் மீதும் ஆழ்ந்த பற்றுக்கொண்ட இவர், இதற்கென பல்வேறுவழிகளில் பங்காற்றியுள்ளார்.

ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களிடையே திருவள்ளுவரையும் திருக்குறளையும் பரவச்செய்வதற்காக, தமது சொந்தச்செலவில் திருவள்ளுவர் சிலைகளை வடிவமைத்து மக்களின் இல்லங்களில் அவை இடம்பெறுவதற்கு திரு.சத்தியநாதன் அவர்கள் வழிவகுத்திருந்தார்.

மேலும், தாயகத்திலிருந்து பல இளைஞர்கள் ஆஸ்திரேலியாவில் கல்வி வாய்ப்பு பெறுவதற்கும் ஆக்கபூர்வமாக ஆதரவு வழங்கிய இவர், தமிழ் உலகம் என்ற இருமொழிப்பத்திரிகையை சிறிதுகாலம் வெளியிட்டவர்.

தமிழ்ப் பணிகளுக்கும் தாயகத்திற்கான உதவிகளுக்கும், தனது சொந்த உழைப்பில் கிடைத்த வருமானத்தையே செலவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்.சத்தியநாதன் அவர்கள், ஈழத் தமிழ் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும் அவ்வமைப்பின் தலைவராகவும் இருந்து, ஈழத்தமிழச் சங்கத்தின் செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.

மெல்பேர்னில் தமிழ்ப்பாடசாலைகளை தொடக்கி நடத்துவதிலும், புலம்பெயர் தேசங்களில் தமிழ்க் கல்வி கற்பிக்கும் முறைமையை வடிவமைப்பதிலும் முன்னோடியாக விளங்கினார்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவ நிதியம் ஆகியவற்றின் செயற்பாடுகளிலும் முன்னின்று செயற்பட்ட சத்தியநாதன் அவர்கள், தமிழின உணர்வாளர் பழ.நெடுமாறன் தலைமையிலான உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.

கணினி வழி தமிழை உருவாக்க வேண்டும் என்ற உணர்வால் கணினித் துறையில் சிறப்புப் பட்டம் பெற்று தமிழைப் பேச்சு வடிவத்திலிருந்து எழுத்து வடிவத்தில் பதிக்கும் மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதற்கான மொழியியல் ஆய்வுக்காக சிங்களம், சமஸ்கிருதம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றவர்.

2012ம் ஆண்டு ஆஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் சான்றோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட பொன். சத்தியநாதன் அவர்கள் dementia எனப்படும் மறதி நோய்க்கு ஆளானநிலையில், தனது 69வது வயதில் நேற்றிரவு காலமானார்.

http://thuliyam.com/?p=78882

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.