Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்பார்ப்பு

Featured Replies

மெஜாரிட்டி, நிரூபிக்க, இந்த வாரம், சட்டசபை,கூடுமா?,எதிாபாா்ப்பு

முதல்வர் பழனிசாமி அரசு, மெஜாரிட்டியை நிரூபிக்க, இந்த வாரம் சட்டசபை கூடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து முடிவு செய்ய, கவர்னர் வித்யாசாகர் ராவ், நாளை சென்னை வருகிறார். பலப்பரீட்சையை சந்திக்க, ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகின்றன.

 

மெஜாரிட்டி, நிரூபிக்க, இந்த வாரம், சட்டசபை,கூடுமா?,எதிாபாா்ப்பு

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், ஆகஸ்ட், 22ல், கவர்னரை நேரில் சந்தித்து, முதல்வருக்கு அளித்து வரும் ஆதரவை, வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதனால், முதல்வருக்கு பெரும்பான்மை

இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என, எதிர்க்கட்சிகளும், கவர்னரை சந்தித்து வலியுறுத்தின.

தினகரன் ஆதரவு,எம்.எல்.ஏ.,க்கள், கவர்னரிடம் வழங்கிய கடிதத்தில், 'முதல்வரை மாற்ற வேண்டும். நாங்கள்,அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வாக தொடர்கிறோம்' என, தெரிவித்திருந்தனர். எனவே, 'முதல்வரை மாற்றுவது, உட்கட்சி விவகாரம்' எனக்கூறி, கவர்னர் அமைதி காத்தார்.

அதைத் தொடர்ந்து, தினகரன்,மேலும் மூன்று எம்.எல்.ஏ.,க்களுடன், கவர்னரை சந்தித்தார். அந்த எம்.எல்.ஏ.,க் களும், முதல்வருக்கு அளித்து வரும் ஆதரவை, வாபஸ் பெறுவதாக, கடிதம் கொடுத்தனர்.

அதன்பிறகும், சட்டசபையை கூட்டி, பெரும் பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு

 

கவர்னர் உத்தரவிடாததால், தி.மு.க., நீதி மன்றத்திற்கு சென்றது. தினகரன் தரப்பிலும், நீதிமன்றம் சென்றனர். இந்த வழக்கு விசாரணை, 20ம் தேதிக்கு ஒத்தி வைக்க பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், நாளை சென்னை வருகிறார். அவர் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, சட்டசபை கூடும் தேதியை அறிவித்து, பெரும் பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு உத்தரவிடுவார் என, தகவல் வெளியாகி உள்ளது.எனவே, சட்டசபையில், பெரும் பான்மையை நிரூபிக்க தேவையான நடவடிக்கைகளை, முதல்வர் தரப்பு மேற்கொண்டுஉள்ளது.

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களில், ஏழு பேர், தங்களுக்கு ஆதரவு தருவர் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.அதேபோல், சட்ட சபையில் பலப்பரீட்சையை சந்திக்க, தி.மு.க., கூட்டணி கட்சிகளும், தினகரன் அணியினரும் தயாராகி வருகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1856649

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.