Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகுதிநீக்கம்: நாளை விசாரணைக்கு வருகிறது சபாநாயகர் தனபாலுக்கு எதிரான வழக்கு

Featured Replies

தகுதிநீக்கம்: நாளை விசாரணைக்கு வருகிறது சபாநாயகர் தனபாலுக்கு எதிரான வழக்கு

 

தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரின் எம்.எல்.ஏ-க்கள் பதவியை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தனபாலின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு  நாளை விசாரணைக்கு வருகிறது. 

high court
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர்.  இந்த நிலையில், 19 பேரின் எம்.எல்.ஏ பதவியைப் பறிக்க வேண்டும் என்று அரசுத் தலைமைக் கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, "கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உங்கள்மீது ஏன்  நடவடிக்கை எடுக்கக்கூடாது" என்பதற்கு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர் தனபால். இதற்கு, 19 பேரும் விளக்கம் அளித்தனர்.  அதை நிராகரித்தார் சபாநாயகர் தனபால். இதனிடையே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான ஜக்கையன், திடீரென சபாநாயகரைச் சந்தித்து விளக்கம் அளித்ததோடு, முதல்வர் பழனிசாமிக்குத்தான் எனது ஆதரவு என்றும் அதிரவைத்தார்.

 

இந்த நிலையில், ஜக்கையனைத் தவிர்த்து, 18 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நேற்று திடீரென நடவடிக்கை எடுத்தார். சபாநாயகரின் உத்தரவை  எதிர்த்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.  இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதி துரைசாமி அறிவித்துள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/102684-admk-mlas-disqualified-case-filed-against-assembly-speaker-dhanapal.html

  • தொடங்கியவர்
 
 
எம்.எல்.ஏ.,க்கள்,தகுதி நீக்கத்திற்கு,எதிரான,வழக்கு,விசாரணை, இன்று

சென்னை:கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், சசி ஆதரவு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ௧௮ பேரை, தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள், இன்று நீதிபதி எம்.துரைசாமி முன், விசாரணைக்கு வருகின்றன.

 

எம்.எல்.ஏ.,க்கள்,தகுதி நீக்கத்திற்கு,எதிரான,வழக்கு,விசாரணை, இன்று

இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றம், என்ன தீர்ப்பு கூறுமோ என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, கவர்னரை சந்தித்து, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்,19 பேர், கடிதங்கள் அளித்தனர். இதையடுத்து, அரசு கொறடா அளித்த புகாரில், 19 எம்.எல்.ஏ.,க்களிடமும் விளக்கம் கேட்டு, சபாநாயகர் தனபால், 'நோட்டீஸ்' அனுப்பினார்; நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தினகரன் அணியில் இருந்த, எம்.எல்.ஏ., ஜக்கையன், சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார்; பின், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். அதே

நேரத்தில், சபாநாயகர் முன், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், வழக்கறிஞர், என்.ராஜா செந்துார் பாண்டியன் ஆஜராகி, சில ஆவணங்களை கோரினர்.
 

மனு தாக்கல்


இந்நிலையில், பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, கவர்னர் உத்தர விடகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.இம் மனுவை,நீதிபதி எம்.துரைசாமி விசாரித்தார். விசாரணையின் போது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், பி.எஸ்.ராமன், 'நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கும் விதத்தில், தகுதி நீக்கம் செய்யக் கூடும்; எனவே, அதுகுறித்து நாங்கள் தாக்கல் செய்யும் மனுவை விசாரிக்க வேண்டும்' என்றார்.

இவ்வழக்கு விசாரணையை, ௨௦ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி துரைசாமி, 'அதுவரை, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது' என, உத்தரவிட்டார். ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவும், வெற்றிவேல் மனுவும், நீதிபதி துரைசாமி முன், இன்று விசாரணைக்கு வர உள்ளன.

இதற்கிடையில், 18 எம்.எல்.ஏ.,க்களையும்
தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தர விட்டுள்ளார். அந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 18

 

எம்.எல்.ஏ.,க்களும் மனு தாக்கல் செய்கின்றனர். நேற்று மாலை வரை, வெற்றிவேல் உள்ளிட்ட எட்டு, எம்.எல்.ஏ.,க்கள், மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
 

உத்தரவு செல்லாது


மனுக்களில், 'எங்களுக்கு பதில் அளிக்க, உரிய சந்தர்ப்பம் தரப்படவில்லை; கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வில்லை. சபாநாயகரின் உத்தரவு செல்லாது. 'விசாரணை முடியும் வரை, சபாநாயகரின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்' என, கோரப்பட்டுள்ளது.

முன்னதாக, நீதிபதி எம்.துரைசாமி முன், வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் ஆஜராகி, ''எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்படும் மனுக்களை, அவசரமாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்,'' என்றார். அதற்கு, நீதிபதி துரைசாமி, ''வழக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில், நாளை விசாரணைக்கு எடுக்கிறேன்,'' என்றார்.

சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே ஆகியோர் ஆஜர் ஆகின்றனர். எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்புக்கு முழுமையான தடை விதிக்கப்படுமா; நிபந்தனைகளுடன் கூடிய தடை இருக்குமா அல்லது எதிர் தரப்பில் பதில் அளிக்க, நோட்டீஸ் அனுப்பப்படுமா என்பது, இன்று தெரிய வரும்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1858689

  • தொடங்கியவர்

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் : உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்

 
 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது. உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

advocates
 

தினகரன் தரப்பில் துஷ்யந்த் தவே உள்ளிட்ட  மூத்த வழக்கறிஞர்கள் ஆஜர் ஆகியுள்ளனர்.  சபாநாயகர் சார்பாக அரிமா சுந்தரம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வைத்தியநாதன், சோமயாஜி, ஆளுநர் சார்பாக ராகேஷ் திவேதி , மாநில அரசு சார்பாக சுப்ரமணிய பிரசாந்த், 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பாக சல்மான் குர்ஷித், துஷ்வந்த தவே, திமுக சார்பில் கபில் சிபில் ஆகிய முத்த வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/102802-18-mla-disqualification-case-trial-begins-in-the-high-court.html

  • தொடங்கியவர்

’தமிழக அரசை டெல்லி இயக்குகிறது!’ - உயர் நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு

எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

Madras_HC_13488.jpg

அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகினார். அப்போது,’அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரவைத் தலைவர் சபாநாயகராகச் செயல்படாமல், ஒரு கட்சிக்கு ஆதரவாக கட்சிக்காரர் போல செயல்படுகிறார். முதல்வரை மாற்ற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதால் முதலமைச்சருக்கான ஆதரவை திரும்பப் பெற்றோம். எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க போதிய அவகாசம் அளிக்கப்படவில்லை. 18 எம்.எல்.ஏக்களும் அரசுக்கு எதிராக செயல்படவில்லை. 3 வார காலத்துக்குள் அவசர கதியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக வேறு ஒருவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம். நாங்கள் எந்த அணிக்கும், கட்சிக்கும் மாறவில்லை. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவளித்தோம். ஆனால், கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?. சபாநாயகர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல. அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டவர். கட்சியின் அடிப்படை உறுப்பினராக நீடிக்கும் போது கொறடா உத்தரவால் எங்களை எப்படி தகுதிநீக்கம் செய்ய முடியும்?. 

சபாநாயகரின் நடவடிக்கை நீதிக்கு எதிரானது. கட்சித் தாவல் தடை சட்டத்தை சபாநாயகர் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பாவுக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் கடிதம் அளித்ததையும், அதில் நீதிமன்றம் அளித்த உத்தரவையும் கருத்தில் கொள்ள வேண்டும். எடியூரப்பா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்த வழக்கிற்கும் பொருந்தும். தமிழகத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை டெல்லியில் உள்ள சிலர் முடிவு செய்கிறார்கள் என்று வாதிடப்பட்டது. தற்போதுள்ள அரசியல் சூழலால் டெல்லியில் உள்ள சிலர் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழக அரசை சிலர் டெல்லியில் இருந்து இயக்குகிறார்கள் என்று வாதிடப்பட்டது.  

http://www.vikatan.com/news/tamilnadu/102810-18-mlas-disqualification-case-dave-says-anti-defection-law-is-misused-by-speaker.html

  • தொடங்கியவர்

நம்பிக்கை வாக்கெடுப்பு தடை நீட்டிப்பு: சென்னை கோர்ட் அதிரடி

 

 
 
நம்பிக்கை வாக்கெடுப்பு தடை நீட்டிப்பு: சென்னை கோர்ட் அதிரடி

 

நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தடை நீட்டிப்பு: சென்னை கோர்ட் உத்தரவு


மறு உத்தரவு வரும் வரையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கூடாது: சென்னை கோர்ட் 


திமுக வழக்குக்கும் தினகரன் தரப்பு வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என கூற முடியாது- கபில் சிபல் 


பெரும்பான்மையை நிரூபிக்க போடப்பட்டுள்ள தடையை தேவைப்பட்டால் நீட்டிக்கலாம் - சபாநாயகர் தரப்பு


சபாநாயகர் குறித்து கண்மூடித்தனமாக குற்றச்சாட்டுகளை வைப்பது கண்டனத்திற்குரியது: சபாநாயகர் தரப்பு 


18 எம்.எல்.ஏக்களும் அரசுக்கு எதிராக செயல்படவில்லை- தவே


தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதால் முதலமைச்சருக்கான ஆதரவை திரும்பப் பெற்றோம்- தவே


முதல்வரை மாற்ற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை- தவே


நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- தவே


அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்- தவே


அடிப்படை உறுப்பினராக நீடிக்கும்போது கொறடா உத்தரவால் எங்களை எப்படி நீக்க முடியும்? தவே


எம்.எல்.ஏக்களை நீக்கும் முன்பு ஆரம்பகட்ட விசாரணை நடத்தியிருக்க வேண்டும்: துஷ்யந்த் தவே


எடப்பாடி அரசைக் காப்பாற்றுவதுதான் சபாநாயகரின் நோக்கம்: தவே 


கட்சி தாவல் தடை சட்டத்தை சபாநாயகர் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்- தவே


சென்னை ஐகோர்டில் வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர்.


சென்னை ஐகோர்ட் நீதிபதி துரைசாமி முன்பு விசாரணை நடைபெறுகிறது.


சபாநாயகர் தனபால் சார்பில் அரிமா சுந்தரம் வாதிடுகிறார்.


தினகரன் தரப்பில் துஷ்யந்த் தவே உள்ளிட்ட  மூத்த வழக்கறிஞர்கள் ஆஜர் ஆகியுள்ளனர். 


முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வைத்தியநாதன், சோமயாஜி ஆஜர் ஆகியுள்ளனர். 


ஆளுநர் சார்பாக ராகேஷ் திவேதி ஆஜர் ஆகியுள்ளனர். 


மாநில அரசு சார்பாக சுப்ரமணிய பிரசாந்த் ஆஜர் ஆகியுள்ளனர். 


18 எம்.எல்.ஏ-க்கள் சார்பாக சல்மான் குர்ஷித், துஷ்வந்த தவே ஆஜர் ஆகியுள்ளனர். 


திமுக சார்பில் கபில் சிபில் ஆகிய முத்த வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளனர். 

http://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hc-extends-stay-order-on-floor-test-297452

  • தொடங்கியவர்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை: ஐகோர்ட்டு

 

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க இயலாது. அவர்கள் ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்பதற்கு முதலமைச்சர், அரசு தலைமை கொறடா, சட்டசபை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 
 
 
 
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை: ஐகோர்ட்டு
 
சென்னை:

அ.தி.மு.க.வின் 134 எம்.எல்.ஏ.க்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 113 பேரும், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக 21 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

இந்த 21 எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் கடந்த மாதம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் எனவே அவருக்கு கொடுக்கும் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் கடிதம் கொடுத்தனர்.

இது கட்சிக்கு எதிரான செயல் என்றும் எனவே 19 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இதை ஏற்று 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீசு அனுப்பி சபாநாயகர் விளக்கம் கேட்டார்.

அப்போது கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் மட்டும் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து பிரிந்து மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். மற்ற 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி இழப்பு செய்து நேற்று முன்தினம் சபாநாயகர் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இது தமிழக அரசிதழிலும் அன்றே உடனடியாக வெளியிடப்பட்டது.

18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது பற்றி தேர்தல் ஆணையத்துக்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெறும். இந்த வழக்குடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி துரைசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று 18 எம்.எல்.ஏ.க்களின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அரசு தரப்பில் சோமயாஜி, அரிமா சுந்தரம், வைத்தியநாதன், விஜயநாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வக்கீல்கள் துஷ்யந்த் தவே, சல்மான்குர்ஷித், பி.ஆர்.ராமன் ஆகியோர் வாதாடினார்கள். தி.மு.க. தரப்பில் கபில்சிபல் ஆஜரானார்.

முதலில் 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே வாதாடினார். அவர் கூறியதாவது:-

தமிழக அரசில் ஊழல் மிகவும் மலிந்து விட்டது. எனவே 18 எம்.எல்.ஏ.க்களும் முதல்-அமைச்சருக்கு கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றனர்.

இந்த நிலையில் சபாநாயகர் அவர்கள் 18 பேரையும் தகுதி இழப்பு செய்துள்ளார். இது நீதிக்கு எதிரானது. தவறான நடவடிக்கை.

கடந்த பிப்ரவரி மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது 18 எம்.எல்.ஏ.க்களும் அரசை ஆதரித்து வாக்களித்தனர். தற்போது அவர்கள் கட்சி தாவி விட்டதாக சொல்வதை ஏற்க இயலாது. அவர்கள் கட்சி தாவவில்லை. எனவே கட்சி தாவல் தடை சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

சபாநாயகரின் இந்த உத்தரவு கோர்ட்டின் பரிசீலனைக்கு உட்பட்டதே. சபாநாயகர் என்பவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல.

18 எம்.எல்.ஏ.க்களும் வேறு எந்த கட்சிக்கும் தாவி செல்லவில்லை. அவர்கள் முதல்-அமைச்சர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மட்டுமே சொல்லி உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி அரசில் ஊழல் நடக்கிறது என்று 18 எம்.எல்.ஏ.க்களும் சொல்கிறார்கள். இதை ஏற்காமல் சபாநாயகர் கட்சிக்காரர் போல செயல்பட்டுள்ளார்.

எடியூரப்பா ஆட்சியில் நடந்ததை தற்போதைய வழக்குடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் 18 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவவில்லை. இதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை, டெல்லியில் உள்ள சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. டெல்லியில் உள்ள சிலர் இந்த அரசை இயக்குகிறார்கள். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக ஆட்சி மீது சில மாதங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஊழல் புகார்களை கூறினார்கள். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இதில் இருந்தே சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொண்டிருப்பது தெளிவாகியுள்ளது.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்ற திட்டத்துடன்தான் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பை செல்லாது என்று அறிவித்து ரத்து செய்ய வேண்டும்.

 
201709201359563295_1_pondicherry._L_styv

18 எம்.எல்.ஏக்களும் அ.தி.மு.க. கொறடா உத்தரவை மீறவில்லை. மேலும் சபாநாயகர் உத்தரவுகள் தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்புகளும் நம்மிடம் தெளிவாக உள்ளன.

ஒரு எம்.எல்.ஏ. முதல்- அமைச்சருக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே தகுதி இழப்பு செய்ய முடியும். எனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு செல்லாது. தமிழக அரசை யார் வழி நடத்துகிறார்கள் என்றே தெரியவில்லை.

“18 எம்.எல்.ஏ.க்களும் உரிய விளக்கம் அளிக்க சபாநாயகரிடம் சில ஆவணங்கள் கேட்கப்பட்டது. அந்த ஆவணங்களை சபாநாயகர் தரவில்லை. அந்த ஆவணங்களை தந்தால் விசாரணைக்கு ஆஜராக 18 எம்.எல்.ஏ.க்களும் தயாராக உள்ளனர். இந்த நிலையில் அவர்களை தகுதி இழப்பு செய்தது சட்டப்படி செல்லாது”

மேலும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்புக்கான உத்தரவு நேரில் வழங்கப்படவில்லை. இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ததை பார்த்தே தெரிந்து கொண்டனர். தகுதி நீக்க நோட்டீஸ் வழங்காததும் தவறாகும்.

இவ்வாறு மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே வாதாடினார்.

இதையடுத்து சபாநாயகர் தரப்பில் வக்கீல் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார். அவர் கூறியதாவது:-

வழக்குக்கு தேவை இல்லாத வாதங்களை டி.டி.வி.தினகரன் அணியினர் முன் வைக்கிறார்கள். இந்த வழக்கில் தேவை இல்லாமல் மத்திய அரசை குறை சொல்லக் கூடாது.

மேலும் சபாநாயகர் மீதும் கண்மூடித்தனமாக குற்றச்சாட்டுகளை கூறக் கூடாது.

இந்த வழக்குக்கு தேவை இல்லாத வாதங்கள் பல தடவை வைக்கப்பட்டுள்ளன. அரசு மீதும், சபாநாயகர் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருப்பதால் நாங்கள் உரிய பதில் அளிக்கவும், விளக்கம் அளிக்கவும் கூடுதல் கால அவகாசம் தர வேண்டும்.

18 எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி இழப்பு செய்துள்ளோம் என்பதற்கு தேவையான ஆவணங்களை இந்த கோர்ட்டில் நாங்கள் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். எனவே நாங்கள் ஆவணங்களை ஒப்படைக்க 10 நாட்கள் கால அவகாசம் தர வேண்டும்.

அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

இவ்வாறு வக்கீல் அரிமா சுந்தரம் கூறினார்.

இதையடுத்து நீதிபதி துரைசாமி குறுக்கிட்டு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்புக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு வக்கீல் அரிமா சுந்தரம், “18 எம்.எல்.ஏ.க்களும் சட்டத்துக்கு உட்பட்டுதான் தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

இதையடுத்து நீதிபதி கூறுகையில், “நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை ஏன் நீட்டிக்கக் கூடாது?” என்று கேட்டார். பிறகு நீதிபதி துரைசாமி கூறியதாவது:-

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்ற உத்தரவு மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்ற உத்தரவு நீடிக்கும்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு காரணமாக 18 தொகுதிகள் காலியாக உள்ளது. மறு உத்தரவு வரும் வரை அந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கூடாது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க இயலாது. அவர்கள் ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்பதற்கு முதல்-அமைச்சர், அரசு தலைமை கொறடா, சட்டசபை செயலாளர் ஆகியோர் உரிய பதில் அளிக்க வேண்டும்.

இந்த வழக்கு மீண்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதுவரை 18 தொகுதிகளுக்கான அறிவிப்பு எதையும் வெளியிடக் கூடாது.

இவ்வாறு நீதிபதி துரைசாமி உத்தரவிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.