Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குரு

Featured Replies

இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறவர் மணிரத்னம். தனிமனிதப் பிரச்சனைகளை தாண்டி தேசிய பிரச்சனைகளை கையிலெடுத்ததை தொடர்ந்து - குறிப்பாக சொல்வதென்றால் 'ரோஜா' திரைப்படத்திற்குப் பிறகு இந்திய அளவில் இயக்குனராக இவரது இருப்பு பிரகாசமடைய தொடங்கியது. இவரது புதிய படம் 'குரு' வும் பிராந்திய எல்லைகளை தாண்டிய ஒரு மாபெரும் தொழிலதிபரைப் பற்றியது.

குருபாய் என அழைக்கப்படும் குரு கான்ட் தேசாய்க்கு பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என சிறு வயது முதலே கனவு. துருக்கி சென்று சம்பாதிக்கும் பணம் முதலீடு செய்ய போதவில்லை. வரதட்சணையாக பணம் கிடைக்கும் என்பதற்காக சுஜாதாவை (ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்ததும் மனைவி மைத்துனருடன் மும்பை சொல்கிறார். அங்கு தனக்கு தடையாக இருக்கும் சட்டத்தையும், மனிதர்களையும் பணத்தால், அறிவால், பத்திரிகை பலத்தால் சாதகமாக வளைத்தும் உடைத்தும் தனது தொழிலதிபர் கனவை நனவாக்குகிறார். இதன் நடுவே குருபாயின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் பத்திரிகை ஆசிரியர் நானாஜி, குருபாய் தவறான வழியில் செல்கிறார் என தெரிந்ததும் அவருக்கு எதிராக தடயங்களை உருவாக்கி குருபாயின் தொழில் சாம்ராஜ்யத்தை முடக்குகிறார். அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் குருபாய், இறுதியில் தனது ஷேர் ஹோல்டர்களிடம், இந்தியாவிலேயே பெரிய தொழில் நிறுவனமாக நாம் இருந்தால் போதுமா? உலக அளவில் நம்பர் ஒன்றாக வேண்டாமா என கிளர்ச்சியூட்டும் கேள்வியை எழுப்புவதுடன் படம் முடிவடைகிறது.

மணிரத்னத்தின் 'நாயகன்' படத்தின் ஹீரோ வேலு நாயக்கரும் குருபாயை ஒத்தவர்தான். இருவருமே கிராமத்திலிருந்து மும்பை வந்தவர்கள். சட்டத்தை மீறியவர்கள். அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிகாரம் படைத்தவர்கள். ஒரே அடிப்படை வித்தியாசம், வேலு நாயக்கரின் வாழ்க்கை குருபாயை போல அவராகவே விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. இன்னொரு வகையில் சொன்னால், வேலு நாயக்கரின் சட்டத்தை மீறிய செயல்கள் அனைத்தும் அவர் விரும்பாமலே சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்மீது திணித்தவை. மாறாக, குருபாய் செய்த சட்டமீறல்கள் அவரது லட்சிய கனவுக்காக அவரே நூறுசதவீத உடன்பாட்டுடன் மேற்கொண்டவை.

'நாயகன்' ஹீரோ தனது சட்டவிரோத நடவடிக்கைகளின் பயனாக தனது நண்பர்களை இழக்கிறார். மனைவி, மகனை பலி கொடுக்கிறார். மகள் பிரிந்து செல்கிறாள். நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் குற்றவுணர்வில் தடுமாறுகிறார். இறுதியில் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

இதே தவறுகளை-கொலை நீங்கலாக - செய்யும் குருபாய் எதையும் இழக்கவில்லை. முக்கியமாக, தனது தவறுகளை அவரால் நியாயப்படுத்த முடிகிறது; எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல்!

சட்டமீறல்களை செய்யும் வேலுநாயக்கருக்கு மரணமும் குருபாய்க்கு சிவப்பு கம்பள வரவேற்பும் கிடைக்க காரணமென்ன? அரசியல் சட்டமும், சமூக நீதியும் இருவர் காலங்களிலும் வேறு வேறா?

இல்லை! நாயக்கர் செய்யும் அனைத்து நல்ல செயல்களையும் தாண்டி அரசும் சமூகமும் அவரை குற்றவாளியாகவே மதிப்பிடுகிறது. குருபாய் செய்யும் எல்லா தவறுகளையும் மீறி அவரை அரசும் சமூகமும் தொழிலதிபராக பார்க்கிறது. சரியாக சொல்வதென்றால், சாதாரண ஜனங்கள் சட்டத்தை மீறினால் மட்டுமே குற்றம். அதையே தொழிலதிபர்கள் செய்தால் அது வியாபார தந்திரம், தேசத்தை முன்னேற்றுவதற்காக செய்யப்படும் ஆக்கப்பூர்வமான செயல்! இந்திய சமூகத்தில் இந்த மோசமான பாரபட்சம் அனைத்து தளத்திலும் நீர்க்கமற கலந்திருக்கிறது.

ஒரு படைப்பாளியாக இந்த முரணை 'குரு' வில் மணிரத்னம் கேள்விக்குட்படுத்தியிருக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.