Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழிசை பின்னால் பிணம் கூடப்போகாது நரகல் நடையில் தரங்கெட்ட தமிழில் பேசிய ந(ா)ஞ்சில் சம்பத்

Featured Replies

தமிழிசை பின்னால் பிணம் கூடப்போகாது

 

நரகல் நடையில் தரங்கெட்ட தமிழில் பேசிய ந(ா)ஞ்சில் சம்பத்

அனல் தெறிக்கும் பேச்சால் எதி­ரா­ளியைத் துவம்சம் செய்­ப­வர்தான் அ.தி.மு.க. துணைக் கொள்கை பரப்புச் செய­லாளர் நாஞ்சில் சம்பத். தன் வழக்­க­மான பாணியில் தமி­ழக பா.ஜ.க. தலைவர் தமி­ழி­சையை அர்ச்­சனை செய்ய, பா.ஜ.க. தொண்­டர்கள் வெகுண்­டெ­ழுந்து நாஞ்­சி­லாரைச் சில மணி நேரத்­திற்கு வியர்க்க வைத்­து­விட்­டார்கள். இந்த கல­வ­ரங்­க­ளுக்கு மத்­தியில், பல­ரது புரு­வத்­தையும் உயரச் செய்­தது நாஞ்­சிலார் பய­ணித்த ‘ஆடி’ கார்தான்!

டி.டி.வி. தின­கரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், தனது ஒவ்­வொரு பேட்­டி­யிலும் பா.ஜ.க. மீதும் எடப்­பாடி பழ­னிச்­சாமி, ஓ. பன்­னீர்­செல்வம் மீதும் கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கிறார். அடுக்­கு­மொழி கடந்து வரும் இந்த விமர்­ச­னங்கள், பல நேரங்­களில் தனி நபர் தாக்­கு­த­லாக உரு­வெ­டுத்து விடு­வதும் உண்டு.

சமீ­பத்­திய பேட்டி ஒன்றில் தமி­ழிசை சவுந்­த­ர­ராஜன் பற்றி நாஞ்சில் சம்பத் குறிப்­பிட்டுப் பேசிய சில வார்த்­தைகள், பா.ஜ.க. வட்­டா­ரத்தில் கடும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. இதை­ய­டுத்து பா.ஜ.க. சார்பில் சென்னை, பல்­லா­வரம், பம்மல், அம்­பத்தூர் எஸ்டேட், பட்­டி­னப்­பாக்கம் காவல் நிலை­யங்­களில் நாஞ்சில் சம்பத் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கக்­கோரி புகார் அளித்­தனர். இந்­நி­லையில் பட்­டினப்பாக்­கத்தில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டை தென் சென்னை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் தலை­மையில் பா.ஜ.க. வினர் முற்­று­கை­யிட்டுப் போராட்டம் நடத்­தினர். அச் சம­யத்தில் நாஞ்சில் சம்பத் வீட்டில் இல்லை. டி.டி.வி. தின­க­ரனின் அடை­யாறு இல்­லத்­திற்கு சென்­று­விட்டு பட்­டினப் பாக்­கத்­தி­லுள்ள சங்­கீதா உண­வ­கத்தில் உண­வ­ருந்திக் கொண்­டி­ருந்தார். அவர் அங்கே இருப்­பதை அறிந்து கொண்ட பா.ஜ.க. வினர் ஹோட்­ட­லுக்குச் சென்று முற்­று­கை­யிட்­டனர்.

தொண்டைக் குழிக்குள் சூடான இட்லி இறங் கும் போதே பா.ஜ.க. வினர் சூழ்ந்து கொண்­டதால் நாஞ்சில் சம்­பத்தால் இட்­லியை விழுங்­கவும் முடி­ய­வில்லை. ஹோட்­டலை விட்டு வெளியே வரவும் முடி­ய­வில்லை. கார­சா­ர­மாக பேசு­ப­வரின் இன்­னோவா காரைத் தேடினர். ஹோட்டல் வாசலில் அவர் வந்து இறங்­கி­யது ஆடி காரில். அதில்தான் வந்தார் என்று ஹோட்டல் காவ­லாளி போட்டுக் கொடுக்க, ஆடி கார் டயரில் இருந்த காற்றைப் பிடுங்­கி­விட்­டார்கள்.

இரண்டு மணி­நேர முற்­று­கைக்குப் பிறகு சில அ.தி.மு.க. வினர் வந்து நாஞ்சில் சம்­பத்தை மீட்ட பின்­னர்தான் போராட்டம் முடி­வுக்கு வந்­தது. ஹோட்­டலை விட்டு சம்பத் தனி­யாக வெளி­யே­றி­யி­ருந்தால் அடி உதை அள­வுக்கு நிலைமை மாறி­யி­ருக்கும். நல்ல வேளை­யாக சம்பத் பா.ஜ.க. வின­ரிடம் இருந்து தப்­பித்­து­விட்டார்.

பெண்­களை அவ­தூ­றாகப் பேசி­ய­தாக நாஞ்சில் சம்பத் மீது பா.ஜ.க. வும் கொலை முயற்சி செய்­த­தாக பா.ஜ.க. வின் மீது நாஞ்சில் சம்­பத்தும் பரஸ்­பரம் காவல்­து­றையில் புகார் அளித்­துள்­ளனர்.

தென் சென்னை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் டால்பின் ஸ்ரீ தரிடம் பேசி­ய­போது, அர­சி­யலில் எதி­ரெதிர்க் கருத்­துகள் இருக்­கலாம். விமர்­சிக்­கலாம். தப்பே கிடை­யாது. ஒரு பெண் தலை­வரை நாயை விடக் கீழா­னவர், பிணம் கூட அவர் பின்னால் போகாது என்­றெல்லாம் தரங்­கெட்ட தமிழில் பேசு­வதை யாராலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஒரு இன்­னோவா காருக்­காக கொள்­கை­களை மாற்றிக் கொண்­டவர். ஆயிரம் இரண்­டா­யிரம் பணத்­துக்­காக தன் தலை­வ­ரையே மாற்­றிக்­கொள்­பவர். அவ­ருக்கு எந்த மொழியில் சொன்னால் புரி­யுமோ, அதில் சொன்­னால்தான் புரியும். அத­னால்தான் முற்­று­கை­யிட்டோம். இதற்கு மேலும் அவர் தொடர்ந்து இவ்­வாறே பேசிக்­கொண்­டி­ருந்தால் எங்கள் போராட்டம் தீவி­ர­ம­டையும் என்றார் உஷ்­ண­மாக.

இவ்­வ­ளவு கல­வ­ரங்­க­ளுக்கு மத்­தியில் பல­ரது கவ­னத்தையும் ஈர்த்­தது நாஞ்சில் சம்பத் பய­ணித்த ஆடி ரக கார். ம.தி.மு.க. வில் இருந்து விலகி 2012 இல் அ.தி.மு.க.வில் அவர் இணைந்த பொழுது, இன்­னோவா கார் ஒன்றை அவ­ருக்கு ஜெய­ல­லிதா வழங்­கினார். அதன் பிறகு டொயாட்டா நிறு­வனம் தனக்கு ராயல்டி தர வேண்டும் என்னும் அள­விற்கு இன்­னோவா காரை பட்டி தொட்டி எங்கும் பிர­ப­லப்­ப­டுத்­தி­யவர் நாஞ்சில் சம்பத். ஜெயாவின் மறை­விற்குப் பின்னர் காரை கட்சி அலு­வ­ல­கத்தில் ஒப்­ப­டைத்து, மீண்டும் பெற்றார்.

இன்­னோவா சம்பத் என்று தனக்­கென்று அடை­மொ­ழியைக் கொண்­டவர். தற்­பொ­ழுது ஆடி ஏ 6 ரக காரில் பய­ணிப்­பது தான் பல­ரது புருவம் உயரக் காரணம். இக்­காரின் விலை 62.55 லட்­சமாம். இன்­னோ­வா­விற்கு டீசல் போடவே முடி­ய­வில்லை என்­ற­வ­ருக்கு அரைக் கோடியில் கார் வாங்கப் பணம் எப்­படி வந்­தது என்று பா.ஜ.க. வினர் கேள்வி எழுப்புகின்றனர்.

நாஞ்சிலாருக்கு நெருங்கிய வட்டாரங்கள் பேசுகையில்; அந்தக்கார் நாஞ்சில் சம்பத்தின் நண்பர் கார்த்திக் என்பவருக்குச் சொந்தமானது. அதில் பயணித்தாரே தவிர, கார் அவருடையதல்ல என்றும் அவர் யாரிடமும் அடியும் வாங்கவில்லை. ஆடிக் காரையும் வாங்கவில்லை என்றனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-23#page-8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.