Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேகரிப்பு..! சசிகலாவால் மிரட்டி வாங்கப்பட்ட சொத்து விவரம்... ஆட்சியை கலைக்க முயல்வதால் பழனிசாமி முடிவு

Featured Replies

சேகரிப்பு..!
சசிகலாவால் மிரட்டி வாங்கப்பட்ட சொத்து விவரம்...
ஆட்சியை கலைக்க முயல்வதால் பழனிசாமி முடிவு
 
 
 

பழனிசாமி ஆட்சியைக் கலைக்க முயலும், சசி கும்பலின் ஆட்டத்தை அடக்கும் வகையில், ஜெ., உயிருடன் இருந்தபோது சசிகலா, மற்றவர்களை மிரட்டி வாங்கிய சொத்துக் களின் விவரங்கள் திரட்டப்படுகின்றன. ஆதாரங்கள் முழுமையாக கிடைத்தவுடன், அவற்றை வைத்து, சசிகலா மீது வழக்கு போடலாம் என, முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

 

சசிகலாவால்,மிரட்டி,வாங்கப்பட்ட,சொத்து விவரம்,சேகரிப்பு..!

முதல்வராக இருந்த, ஜெ., இறந்த பின், அப் பதவியில் அமர முயன்றார் சசிகலா; ஆனால், அ.தி.மு.க.,வின் மற்ற உறுப்பினர்கள், பன்னீர்செல்வத்தை முதல்வராக அமர்த்த விரும்பினர்.

வேறு வழியில்லாமல் அதைச் செய்த சசிகலா, அவரை, பல வகைகளில் அவமானபடுத்தினார். இதனால், பதவியை ராஜினாமா செய்து, சசிகலாவிடமிருந்து பிரிந்து சென்றார் பன்னீர்.

பின் சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்ததால், பழனிசாமியை முதல்வர் ஆக்கினர். முதல்வர் பதவியில் அமர்ந்த பின், பழனிசாமி தனித்து செயல்படத் துவங்கினார். அந்தப் பதவிக்கு, தினகரன் வர ஆசைப்படுவது தெரிந்ததும், அவரை ஓரம் கட்டினார்.

அவர்,தன் ஆதரவு,எம்.எல்.ஏ.,க்கள் உதவியுடன், ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தார்; முதல்வர் முந்திக் கொண்டார்.பிரிந்து சென்ற பன்னீர்செல்வம் அணியை இணைத்து, பொதுக்குழுவை கூட்டி, சசிகலாவின் பொதுச்செயலர் பதவியை பறித்தார்.

கட்சி மற்றும் ஆட்சிக்கும், சசிகலா குடும்பத்திற்கும் தொடர்பே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தினார். அதிர்ச்சி அடைந்த தினகரன், ஆதரவு, எம்.எல்.ஏ.,க் களை பயன்படுத்தி, தி.மு.க., உதவியுடன்,ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டார்.

இதை அறிந்த முதல்வர், அதிரடியில் இறங்கினார். தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.தமிழகஅரசியலில், 33 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆதிக்கம் செலுத்திய தங்கள் குடும்பத்தை, அரசியலில் இருந்து ஒழிக்க, முதல்வர் பழனிசாமி முயல் வதை, சசி குடும்பத்தால் ஏற்க முடியவில்லை.

எனவே, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதுள்ள ஊழல், சொத்து பட்டியல் புகார்களைச் சேகரிக்கும் பணியை துவக்கி உள்ளனர். இதற்காக, வழக்கறிஞர்

 

குழுவை நியமித்துள்ளனர். இக்குழுவினர், தகுந்த ஆதாரங்களை சேகரித்தபின், அவற்றை புத்தகமாக வெளியிடுவது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.

இதை அறிந்த முதல்வர் தரப்பு, சசிகலா குடும்பத்தினர் வாங்கிய சொத்து; யாரை எல்லாம் மிரட்டி வாங்கினர்;

எந்த வழியில் எல்லாம் பணம் வந்தது என்ற, விவரங்களை சேகரிக்க துவங்கி உள்ளனர். அதன் அடிப்படையில், விரைவில், அவர்கள் மீது வழக்குகள் பாயலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1861483

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.