Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல்போனோர் அலுவலகத்துக்கு சகலரும் ஏற்கும் உறுப்பினர்கள் அவசியம் ஜனாதிபதியிடம் ஹுசேன் வலியுறுத்து

Featured Replies

காணாமல்போனோர் அலுவலகத்துக்கு சகலரும் ஏற்கும் உறுப்பினர்கள் அவசியம்

Image-01-cc1ff00c4eb6d12aca4e51ed83af5fe3932ad9fe.jpg

 

ஜனாதிபதியிடம் ஹுசேன் வலியுறுத்து

நியூயோர்க்­கி­லி­ருந்து ரொபட் அன்­டனி

காணாமல் போனோர் குறித்த அலு­வ­ல­கத்தை விரைவில் நிறு­வு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­துடன் சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய உறுப்­பி­னர்கள் அந்த அலு­வ­ல­கத்­துக்கு நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்று நேற்று நியூயோர்க்கில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்த ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் வலி­யு­றுத்­தினார்.

இது­வரை அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள செய்­பா­டுகள் தொடர்பில் பாராட்டு தெரி­விப்­ப­தா­கவும் எனினும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை கைவி­டாமல் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­க­வேண்டும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் செய்ட் அல் ஹுசேன் குறிப்­பிட்டார்.

இதே­வேளை இலங்­கை­யா­னது ஜெனி­வாவில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமைய செயற்­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் வழங்­கப்­பட்­டுள்ள இரண்­டு­வ­ருட கால அவ­கா­சத்தில் முன்­னேற்­றத்தை காட்ட முடியும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன செய்ட் அல் ஹுசே­னிடம் சுட்­டிக்­காட்­டினார்.

அத்­துடன் அவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­படும் முன்­னேற்­றங்­களை நேரில் பார்­வை­யி­டு­வ­தற்­காக 2018 ஆம் ஆண்டு இலங்­கைக்கு வரு­மாறும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசே­னுக்கு ஜனா­தி­பதி அழைப்பு விடுத்தார்.

ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக அமெ­ரிக்கா வந்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேனை நேற்று நியு­யோர்க்கில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே இந்த விட­யங்கள் பரி­மா­றப்­பட்­டன.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தங்­கி­யி­ருந்த லோவ்ஸ் ரிஜன்ஸி ஹோட்­டலில் இந்த சந்­திப்பு நடை­பெற்­றது. இந்த சந்­திப்­பின்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் குறித்து அல் ஹுசே­னுக்கு விளக்­க­ம­ளித்­துள்ளார்.

அத்­துடன் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பதில் காணப்­ப­டு­கின்ற தடைகள் குறித்தும் ஜனா­தி­பதி அல் ஹுசே­னிடம் எடுத்­து­ரைத்­துள்ளார். சந்­திப்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பி­டு­கையில்   ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேனை மூன்­றா­வது தட­வை­யா­கவும் சந்­திப்­பதில் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். இலங்­கை­யா­னது ஐக்­கிய நாடுகள் சபையின் 62 வரு­ட­கால நண்பன். ஐக­கிய நாடு­களின் சாச­னங்கள் மற்றும் பட்­ட­யங்­க­ளுக்கு அமை­வாக இலங்கை ‍செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது.  

நாம் சர்­வ­தே­சத்­து­ட­னான தொடர்­பு­களை முன்­னேற்றி நட்­பு­றவை வளர்ப்­பதன் மூலம் மக்­க­ளுக்கு நன்­மை­களை பெற்­றுக்­கொ­டுப்போம். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமை­வாக இலங்கை அர­சாங்கம் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. அதன் கீழ் பல விட­யங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக காணாமல் போனோர் தொடர்­பாக ஆராயும் அலு­வ­ல­கத்தை அமைப்­பற்­கான வர்த்­த­மா­னியில் நான் அண்­மையில் கைச்­சாத்­திட்டேன். மேலும் காணாமல் போனோரின் உற­வி­னர்கள் சிலர் என்னை அண்­மையில் சந்­தித்து பேச்சு நடத்­தினர். அதன்­போது தமது காணாமல் போன உற­வி­னர்­களை சில இடங்­களில் கண்­ட­தாக கூறினர். உட­ன­டி­யாக பொலிஸ் பாது­காப்பும் வாகனம் தரு­வ­தாக கூறி அவர்­களை கண்­டு­பி­டிக்­கு­மாறு அந்த உற­வி­னர்­க­ளுக்கு நான் கூறினேன்.

அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை அமைப்­ப­தற்­கான முத­லா­வது இடைக்­கால அறிக்கை அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அது தொடர்­பான நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­படும்.

காணி­களை விடு­விக்கும் செயற்­பா­டுகள் கிரமம் கிர­ம­மாக நடை­பெற்­று­வ­ரு­கின்­றன. அர­சாங்கம் அந்த செயற்­பாட்டை வெற்­றி­க­ர­மாக படிப்­ப­டி­யாக முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது. இந்த விட­யத்தில் அடிப்­ப­டை­வா­திகள் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து சுய இலாபம் அடைய முயற்­சிக்­கின்­றனர். அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை குறை­தது மதிப்­பி­டு­கின்­றனர்.

சிறையில் உள்ள சந்­தேக நபர்கள் தொடர்­பான விப­ரங்கள் அடங்­கிய பட்­டியல் ‍ வெ ளியி­டப்­பட்­டுள்­ளது. இந்த விட­யங்­களை ஜெனி­வாவில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­ட­ட­தற்­காக நாங்கள் செய்­ய­வில்லை. மாறாக மக்­களின் தேவை­களை இனம் கண்டு செய்­கின்றோம்.

குறிப்­பாக உலக நிலைமை மற்றும் உள்­நாட்டு அர­சியல் கார­ணி­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டே இந்த வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்றோம். தேவை­யற்ற அவ­ச­ரத்தை காட்­டினால் சிக்­க­லா­கி­விடும். மிகவும் அவ­தா­னத்­துடன் பய­ணிக்­க­வேண்­டி­யுள்­ளது.

சிலர் நாங்கள் எவ்­வி­த­மான முன்­னேற்­றத்­தையும் வெ ளிக்­காட்­ட­வில்லை என்று கூறு­கின்­றனர். அவ்­வாறு கூறு­வதன் மூலம் இந்த செயற்­பா­டு­களை அழிக்­கவே முயற்­சிக்­கின்­றனர்.

இலங்­கை­யா­னது ஜெனி­வாவில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமைய அர­சாங்கம் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது, எமக்கு வழங்­கப்­பட்­டுள்ள இரண்­டு­வ­ருட கால அவ­கா­சத்தில் முன்­னேற்­றத்தை காட்ட முடியும் .

அவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­படும் முன்­னேற்­றங்­களை நேரில் பார்­வை­யி­டு­வ­தற்­காக 2018 ஆம் ஆண்டு இலங்­கைக்கு வரு­மாறும் உங்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கின்றேன் என்றார்.

தொடர்ந்து இந்த சந்­திப்­பின்­போது ஐக­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் குறிப்­பி­டு­கையில் என்னை சந்­திக்க இணக்கம் தெரி­வித்­த­மைக்­காக நன்றி தெரி­விக்­கின்றேன். நீங்கள் இது­வரை மேற்­கொண்­டுள்ள முன்­னேற்­றங்­களை பாராட்­டு­கின்றேன். ஆனால் இந்த முன்­னேற்­றத்தில் தொடர்ச்சி என்­பது மிகவும் முக்­கி­ய­மா­கின்­றது. அந்த தொடர்ச்­சியை நீங்கள் இடை­வி­டாது பேண­வேண்டும்.  

அத்­துடன் காணாமல் போனோர் குறித்த அலு­வ­ல­கத்தை விரைவில் நிறு­வு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அதே­போன்று சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய உறுப்­பி­னர்கள் அந்த அலு­வ­ல­கத்­துக்கு நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்று கோரு­கின்றேன். உங்­களின் இந்த அனைத்து முயற்­சி­க­ளுக்கும் உதவி செய்­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை தயா­ராக இருக்­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு பிரச்­சி­னையில் நல்­லி­ணக்­கத்தை ஒரே இரவில் மேற்­கொள்ள முடி­யாது என்­ப­தனை ஏற்­றுக்­கொள்­கின்றேன். ஆனால் இங்கு முன்­னேற்­றங்­களின் தொடர்ச்சி என்­பதே மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக உள்­ளது என்றார்.

இதே­வேளை இந்த சந்­திப்பு தொடர்பில் நேற்று நியு­யோர்க்கில் நடை­பெற்ற இரவு விருந்­து­ப­சா­ர­த­தின்­போது கருத்து வெ ளியிட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பி­டு­கையில்

 நல்­லி­ணக்­கத்தை முன்­னெ­டுப்­பதில் காணப்­ப­டு­கின்ற தடைகள் குறித்து விளக்­க­ம­ளித்தேன். மேலும் எமக்கு இரண்டு வரு­டங்கள் கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அந்த இரண்டு வரு­டங்­களில் முன்­னேற்­றத்தைக் காட்­டு­வ­தாக நான் கூறினேன்.

ஹுசேன் உலகின் பல்­வேறு பிரச்­சி­னைகள் குறித்து என்­னிடம் கலந்­து­ரை­யா­டினார். மியன்மார் பிரச்­சினை தொடர்­பா­கவும் என்­னிடம் பேசினார் என்றார்.

இந்த நிகழ்வில் கலந்­து­கொண்ட வெ ளியு­றவு அமைச்சின் செய­லாளர் பிரசாத் காரி­ய­வசம் குறிப்­பி­டு­கையில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ள­ரிடம் ஜனா­தி­பதி பல்­வேறு விட­யங்­களை எடுத்­துக்­கூ­றினார். நல­லி­ணக்கம் மற்றும் அபி­வி­ருத்தி தொடர்பில் அர­சாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அல் ஹுசேனிடம் எடுத்துரைத்தார்.  

மேலும் படிப்படியாகவே முன்னேறிச் செல்வோம் என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு ஜனாதிபதி விளக்கினார். அதனை செய்ட் அல் ஹுசேன் ஏற்றுக்கொண்டார்.

நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான எமது முன்னேற்ற பயணம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இணக்கப்பாட்டை தெரிவித்தார். நல்லிணக்கம் தொடர்பான எமது எதிர்கால பயணத்துக்கு காணப்படுகின்ற தடைகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார். அவருக்கு அந்த தெளிவை வழங்கவேண்டியது அவசியம். அதனை ஜனாதிபதி செய்தார். எமக்கு உள்நாட்டு ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தடைகள் உள்ளன என்பதனை ஜனாதிபதி எடுத்து கூறினார். சர்வதேசத்தின் சில போக்குகளும் எமக்கு தடையாக உள்ளன என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-09-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.