Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக திருமதி சார்ள்ஸ்

Featured Replies

இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக திருமதி சார்ள்ஸ்

 

இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக பி.எஸ்.எம்.சார்ள்ஸை அமைச்சரவை இன்று (26) நியமித்துள்ளது.

12_Charls.jpg

இலங்கைச் சுங்கத்தின் இயக்குனர் ஜெனரலாக கடந்த இரண்டு வருடங்களாகப் பணியாற்றிய சூலானந்த பெரேராவுக்குப் பதிலாகவே சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு பிரதேச செயலகத்தின் செயலாளராகக் கடமையாற்றிய சார்ள்ஸ், அரச  நிர்வாக சேவையில் இருபத்தாறு வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார்.

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த நிலையிலேயே அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/24955

  • தொடங்கியவர்

இலங்கை : நிதி அமைச்சின் கீழ் அதி உச்ச பதவிகளில் பெண்கள்

இலங்கையில் சுங்க திணைக்களத்தின் அதி உச்ச பதவியான இயக்குநர் நாயகம் பதவிக்கு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நிதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை : நிதி அமைச்சின் கீழ் அதி உச்ச பதவிகளில் பெண்கள்

இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தர அதிகாரியான இவர் இலங்கை சுங்க திணக்களத்தின் இயக்குநர் நாயகமாக நியமனம் பெற்றுள்ள முதலாவது பெண் என்றும் முதலாவது சிறுபான்மை இனத்தவர் என்றும் கூறப்படுகின்ற போதிலும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இலங்கை நிர்வாக சேவையில் 26 வருடங்களாக பணியாற்றி வரும் பி. எஸ். எம் . சார்ள்ஸ் ஏற்கனவே வவுனியா மாவட்டத்தில் பிரதேச செயலாளராகவும் மாவட்ட அரசாங்க அதிபராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இவரது புதிய நியமனத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுங்கவரிகள் திணைக்கள இயக்குநர் நாயகமாக பணியாற்றிய டப்ளியு. ஏ. சூலானந்த பெரேரா பொது நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் நிதி அமைச்சராக மங்கள சமரவீர நியமனம் பெற்ற பின்னர் அவரது அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் அதி உச்ச பதவிகளுக்கு பெண்கள் முன்னுரிமை பெறுவதை காண முடிகின்றது.

சென்ற வாரம் மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாகவும் பெண்ணொருவர் முதல் தடவையாக நியமனம் பெற்றிருக்கின்றார். இலங்கை நிர்வாக சேவையில் 32 வருட அனுபவத்தை கொண்டுள்ள ஏ. மீகாஸ்முல்ல என்ற பெண்மணி கடந்த வாரம் தனது கடமையை பொறுப்பேற்றிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/sri-lanka-41403480

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.