Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்ந்தாலும் கேப்பாப்பிலவில் வீழ்ந்தாலும் கேப்பாப்பிலவில்

Featured Replies

வாழ்ந்தாலும் கேப்பாப்பிலவில் வீழ்ந்தாலும் கேப்பாப்பிலவில்

தமது நிலைப்பாட்டில் மக்கள் உறுதி

 
வாழ்ந்தாலும் கேப்பாப்பிலவில் வீழ்ந்தாலும் கேப்பாப்பிலவில்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

முல்­லைத்­தீவு மாவட்­டம், கேப்­பாப்­பி­லவு மக்­கள் தங்­கள் சொந்த வாழ்விடங் க­ளில் மீள்குடியேறுவதில் மிக நீண்ட இழு­பறி நிலை காணப்­ப­டு­கின்­றது.

தமக்­குச் சொந்­த­மான நிலங்­க­ளைக் கொண்ட 138 குடும்­பங்­க ­ளுக்கு மாற்று நிலம், வீடு போன்ற வசதி வாய்ப்­புக்­கள் அர­சால் ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­பட்ட போதி லும், அவர்­கள் தங்­கள் சொந்த நிலங்கள்­தான் தமது வாழ்­வா­தா­ரத்­துக்­குத் தேவை எனக் கோரி தொடர் போராட்­டம் நடத்­திக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள்.

இவர்­க­ளது போராட்­டம் தற்­போது 200 நாள்­க­ளைக் கடந்­துள்­ளது. தாங்­கள் வாழ்ந்த மண்­ணில்­தான் தங்­க­ளது உட­லங்­கள் அடக்­கம் செய்­யப்­பட வேண்­டும் என்று உறு­தி­பூண்­டுள்ள அந்தத் தாய்­மார்­க­ளின் ஆசை நிறைவேறுமா?

‘‘கடந்த மார்ச் மாதம் முத­லாம் திகதி எங்்­கள் போராட்­டத்­தைத் தொடக்­கி­னோம். 200 நாள்­க­ளுக்கு மேலாக வீதியே வீடான மாதிரி, கொட்­டும் மழை­யி­லும் கொளுத்­தும் வெயி­லி­லும் உட்­கார்ந்து இருக்­கின்­றோம்’’ என்று தமது மன உணர்­வு­களை வெளிப் படுத்­து­கின்­றார் கேப்­பாப்­பி­ல­வைச் சேர்ந்த மாலா என்ற குடும்பப் பெண்ணொருவர்.

நில விடு­விப்புக்குக் 
கால அவ­கா­சம் கோருகின்றனர்
அர­சி­யல்வாதி­கள்

எங்­கள் அர­சி­யல்­வா­தி­கள் ஆரம்­பத்­தில் எங்­கள் சொந்த மண்ணை விடு­வித்­துத் தரு­வோம் என்று உறுதி வழங்­கி­னார்­கள். ஆனால் இன்­று­வரை அவர்­க­ளால் அதனைச் செய்ய இய­ல­வில்லை. இவர்­க­ளின் வாய்ப்­பேச்சை நம்பி நாங்­கள் ஏமாற்­றம் அடைந்­த­து­தான் மிச்­சம்.

நாங்­கள் வாழ்ந்­தது எங்­கள் பூர்­வீ­கக் காணி­கள்­தான் என்­பதைச் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு உரிய ஆதா­ரங்­க­ளு­டன் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளோம். இவர்­கள் தவ­ணை­கள் சொல்­லிச் சொல்லி ஏமாற்றி வரு­கின்­றார்­கள். எவ­ரும் தீர்க்­க­மான , சாத­க­மான முடி­வைக் கூறு­கி­றார்­கள் இல்லை. வடக்­கில் படை ­யி­னர் வச­முள்ள மக்­க­ளின் பல இடங்­கள் விடு­பட்டு வரு­கின்­றன. ஆனால் எமது விட­யத்­தில் எல்­லோ­ரும் பாரா­மு­கமாக நடந்து கொள்கின்றனர்..

எமது நிலங்­க­ளின் 
வளங்­களை 
அனு­ப­விக்கின்றனர் 
படை­யி­னர்

உண்­மை­யில் எங்­கள் மண் ணிலுள்ள வாழ்­வா­தார வளங் களை படை­யி­னர் அனு­ப­விக்­கின்­ற­னர். இங்கு வாழ்ந்த எங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரிடமும் சொந்­த­மாக 100 தொடக்­கம்200 வரை­யான மாடு­கள் இருந்­தன. கஷ்­டப்­பட்­ட­வர்­க­ளி­டம் கூட 25 வரை­யான மாடு­கள் இருந்­தன. வேறு பல வளங்­க­ளூ­டாக போதி­ய­ளவு வரு­மா­னம் எங்­க­ளுக்­குக் கிடைத்து வந்­தது.

10 தொடக்­கம் 12 ஏக்­கர் வரை­யான வயல் நிலக் காணி­கள் எம் ஒவ்வொருவருக்கும் உள்­ளன. மேட்­டுக் காணி­கள் என வீட்­டு­டன் இருக்­கின்­றன. வளங்­கொண்ட எங்­கள் மண்­ணில் இன்று படை­யி­னர் விவ­சாய முயற்­சி­களை மேற்­கொண்டு அதிக இலாபம் ஈட்­டு­கின்­ற­னர். தென்­னை­க­ளில் உள்ள தேங்­காய்­க­ளை­யும் படை­யி­னர்­தான் அனு­ப­விக்கின்­றார்­கள். இவ்­வாறு பெரும் வரு­மா­னம் கிடைப்­ப­ தால் இரா­ணு­வத்­தி­னர் எங்­கள் மண்­ணை­விட்டு வெளி­யே­றத் தய­ங்குகின்­ற­னர்.

கேப்­பாப்­பி­லவு கடற்­க­ரை­யில் 70 ஏக்­கர் வரை­யான காணியை விடு­விப்­போம் என்று சொன்­னார்­கள். ஆனால் தற்­போது அங்கு சுற்றுமதில் கட்­டிக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள். எங்­கள் பூர்­வீக இடத்­தில் நாம் என்­றைக்குக் குடி­ய­மர்கிறோமோ, அன்­று­தான் நாங்­கள் எங்­கள் போராட்­டத்தை நிறைவு செய் வோம். அது­வரை எமது போராட்­டம் தொட­ரும்.

எங்­கள் சொந்த மண்­ணில் எங்­க­ளைச் சாக­வி­டுங்­கள். நாங்­கள் வாழ்ந்த மண்­ணில்­தான் தங்­கள் உட­லங்கள் அடக்­கம் செய்­யப்­பட வேண்­டும் என்று பிடி­வா­த­மாக இருக்­கும் எங்­கள் தாய்­மா­ருக்கு எந்­தப் பதி­லும் சொல்­ல­மு­டி­யா­மல் நாங்­கள் தவிக்­கின்­றோம்’’ என்று போராட்டக் களத்தில் இருக்கும் மாலா என்ற ெ பண் விரக்தி தொனிக்­கும் குர­லில் தனது ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தி­னார்.

பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண கேப்­பாப்­பி­லவு மாதி­ரிக் கிரா­மம் அமைப்பு
இந்த மக்­க­ளின் சொந்­தக் காணி­ கள் படை­யி­ன­ரின் தேவைக்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த தால், மாற்­றுக் காணி­கள் இந்த மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.

இதற்­காக, கேப்­பாப்­பி­லவு மாதி­ரிக் கிரா­மம் என்று ஒன்று அமைக்­கப்­பட்டு அங்கு சூரிபு­ரம், சீனி­யா­மோட்டை, கேப்­பாப்­பி­லவு, பிலக்­கு­டி­யி­ருப்பு பகு­தி­க­ளில் பரம்­பரை பரம்­ப­ரை­யாக வாழ்ந்து வந்த சுமார் 373 குடும்­பங்­கள் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 20 ஆம் திக­தி­யன்று தற்­கா­லிக கொட்­ட­கை­க­ளில் மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டி­ருந்­த­னர். ஒரு குடும்­பத்­துக்கு கால் ஏக்­கர் வீதம் காணி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

கேப்­பாப்­பி­லவு மற்­றும் அதனை அண்­டிய பகு­தி­க­ளும் படை­யி­ன­ரி்ன் கட்­டுப்­பாட்­டில் இருந்து கட்­டம் கட்­ட­மாக விடு­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. முதற்­கட்­ட­மாக கடந்த 2014ஆம் ஆண்டு சீனி­யா­மோட்டை பகு­தி­யில் 14 ஏக்­கர் விவ­சாய நிலங்­கள் விடுவிக் கப்­பட்­டுள்­ளது. இதன் அடுத்த கட்­ட­மாக உடை­யா­வெளி, பொறுக்­கன்­மோட்டை, ஈச்­சம்­பு­லவு ஆகிய வயல் மற்­றும் மேட்டு நிலங்­களான 150 ஏக்­கர் விவ­சாய நிலங்­கள் விடு­விக்­கப்­பட்­டன.

பிலக்­கு­டி­யி­ருப்பில் குறித்த சில பகு­தி­கள் இன்­ன­மும் விமா­னப்­ப­டை­யி­ன­ரின் கட்­டுப்­பாட்­டில் உள்­ளன.
பிலக்­கு­டி­யி­ருப்­பில் 78 குடும்­பங்­க­ளுக் குச் சொந்­த­மான விவ­சா­யக் காணி­க­ளும், மேட்டு நிலக் காணி­க­ளும் இருந்­தன. 78 குடும்­பங்­க­ளுக்­கும் கேப்­பாப்­பி­லவு மாதி­ரிக் கிரா­மத்­தில் கால் ஏக்­கர் காணி வீதம் வழங்கி வீடு மற்­றும் மல­ச­ல­கூ­டம் கட்­டிக் கொடுக்­கப்­பட்­டுள்ளன.

பிலக்­கு­டி­யி­ருப்­பில் வாழ்­கின்ற மக்­க­ளுக்­கான உத­வி­கள் வாழ்­வா­தா­ரங்­கள்­இ­து­வரை செய்து கொடுக்­கப்­ப­ட­வில்லை என மக்­கள் தெரி­வித்­துள்ள போதி­லும், அரச அதி­கா­ரி­க­ளால் பல வாழ்­வா­தார நட­வ­டிக்­கைள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இங்கு வாழ்­கின்ற மக்­க­ளுக்­குக் கிணறு கட்­டிக் கொடுக்க முன்­வந்­த­போ­தும் சில மக்­கள் தங்­கள் மாதி­ரிக் கிரா­மத்­தில்தான் கட்டி தரு­மாறு கோரி­யுள்­ள­தற்கு அமை­வாக அங்கு கட்­டிக் கொடுக்­கப்­பட்­டுள்­ள­து­டன் பிலக்­கு­டி­யி­ருப்­பில் தற்­போது உள்ள குடும்­பங்­க­ளில் 8 குடும்­பங்­க­ளுக்கு சூரிய மின்­க­லங்­கள் வழங்கி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பிர­தேச செய­லக புள்ளி விவ­ரங்­கள் ஊடாக அறி­ய­மு­டி­கின்­றது.

மீண்­டும் மக்­கள் வாழ்­வ­தற்­கான வீட்­டுத் திட்­டங்­கள் இவர்­க­ளுக்­குக் கிடைக்க வாய்ப்­பில்லை எனத் தெரி­ய­வந்­துள்­ளது. இலங்கை அர­சின் வீட்­டுத் திட்­டங்­கள் ஒரு­வ­ருக்கு ஒரு தட­வை­தான் வழங்­கப்­ப­டு­வது வழக்­கம். அதற்­கேற்­றால்­போல் இவர்­க­ளுக்­கான வீட்­டுத்­திட்­டம் இவர்­க­ளின் மாற்­றுக் காணி­யில் கட்­டிக் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தென பிர­தேச செய­ல­கம் ஊடாக அறிய முடி­கின்­றது.

482 ஏக்­கர் காணி­கள்
படை­யி­னர் வசம்

கேப்­பாப்­பி­லவு என்ற பல கிரா­மங்­களை அடக்­கிய பிர­தே­சத்­தில், கட்­டம் கட்­ட­மாக படை­யி­ன­ரின் கட்­டுப்­பாட்­டில் இருந்த காணி­கள் மக்­க­ளின் பாவ­னைக்­காக விடு­விக்­கப்­பட்­டு­வ­ரும் நிலை­யில், இன்­று­வரை கேப்­பாப்­பி­ல­வில் 35 குடும்­பங்­க­ளுக்­குச் சொந்­த­மான 42 ஏக்­கர் காணி­யும் 9 குடும்­பங்­க­ளுக்­குச் சொந்­த­மான உறுதிக் காணி­யான 38 ஏக்­க­ரும், 79 குடும்­பங்­க­ளுக்­குச் சொந்­த­மான ‘பேர்­மிற்’ காணி­யான 172 ஏக்­க­ரும், மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 47 ஏக்­கர் வயல் நிலங்­க­ளும், பெருந்­தோட்­டத்­தைச் சேர்ந்த 150 ஏக்­க­ரும் பொது விளை­யாட்டு மைதா­னம், கோயில்­கள், பாட­சா­லை­களை உள்­ள­டக்­கிய 8 ஏக்­கர் காணி­யும் இது­வரை படை­யி­ன­ரின் தேவைக்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

கேப்­பாப்­பி­ல­வில் நிலை­கொண்­டுள்ள படை­யி­னரை வெளி­யேற்றி மக்­க­ளுக்­குச் சொந்­த­மான மொத்­தம் 482 ஏக்­கர் காணி­களை மீட்­டுத்­த­ரக் கோரி அந்­தப் பகுதி மக்­கள் போராட்­டத்­தைத் தொடர்ந்த வண்­ண­முள்­ளார்­கள். இந்த மக்­க­ளின் காணி­களை இலங்கை இரா­ணு­வத்­தின் 59 ஆவது படைப்­பி­ரிவு பயன்­ப­டுத்தி வரு­கின்­றது. அதன்­படி 285 குடும்­பங்­க­ளக்­குத் தலா 3 இலட்­சம் ரூபா பெறு­ம­தி­யுள்ள வீடு­கள் 2014 ஆம் ஆண்டு கேப்­பா­பி­லவு மாதி­ரிக் கிரா­மம் என்ற பெய­ரில் கட்­டிக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

இவை தவிர ஒவ்­வொன்­றும் ஒரு இலட்­சத்து 20 ஆயி­ரம் ரூபா செல­வில் 13 குழாய்க் கிண­று­கள், ஒவ்­வொன்­றும் மூன்று இலட்­சத்து 50 ஆயி­ரம் ரூபா செல­வில் 16 பொதுக்­கி­ண­றுகள், முன்­பள்­ளிக் கட்­டடம் ஒன்று, இரண்டு இலட்­சத்து 50 ஆயி­ரம் ரூபா செல­வில் பொது­நோக்கு மண்­ட­பம் ஒன்று, கிறிஸ்­தவ ஆலங்­கள் இரண்டு, இந்து ஆல­யங்­கள் 2, ஆரம்ப சுாதார நிலை­யம் ஒன்று, பொதுச் சந்தை ஒன்று, கிராம அலு­வ­லர் கட்­ட­டம் என்­ப­ன­வற்­று­டன் மக்­க­ளுக்­குத் தேவை­யான அடிப்­படை வச­தி­கள் இந்த மாதி­ரிக் கிராம மக்­க­ளுக்­குச் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன. அத்­தோடு வீதி­கள், குறுக்கு வீதி­க­ளும் செப்­ப­னி­டப்­பட்டு வழங்­கப்­பட்டுள்­ளன.

இவ்­வா­றான நிலை­யில்­தான் இந்த மக்­கள் தங்­கள் சொந்தக் காணிகளைத் தமக்கு வழங்­கு­மாறு கோரிப் போரா­டு­கின்­ற­னர். படை­யி­னர் மக்­க­ளுக்கு மாற்­றுக் காணி­கள், வீடு­கள் கட்­டிக் கொடுத்­துள்ள நிலை­யில், குறித்த மக்­க­ளின் பகு­தி­க­ளில் ஒரு நாட்­டின் படைப்­பி­ரிவு ஒன்றின் தேவைக்­கான அனைத்து நிர்­வாக செயற்­பாட்­டின் மைய­மா­க­வும், இந்த இடங்­களை பயன்­ப­டுத்தி வரு­கின்­றார்­கள் என்­பது உண்மை.

இந்த நிலை­யில் தமது பூர்­வீக நிலங்­க­ளுக்­கா­கப் போராட்­டம் நடத்­தும் மக்­க­ளது குறிக்­கோள் என்ன என்று அவர்­க­ளது போராட்­டத்­துக்கு தலை­மையேற்று நடத்­தும் ஆறு­மு­கம் வேலா­யு­தம் என்­ப­வ­ரி­டம் வினவி­னோம்.

பல்­வேறு வளங்­கள் கொண்­டுள்ள பகுதி படை­யி­னரது கட்­டுப்­பாட்­டில்
இந்­தப் பகு­தி­யில் ஆண்­டாண்டு கால­மாக வாழ்ந்த மக்­க­ளில் ஒவ்­வொரு குடும்­பத்­துக்­கும் மேட்டு நிலங்­க­ளும், வயல் நிலங்­க­ளும், பயன்­தரு தென்னை மரங்­க­ளும் இருந்­துள்­ளன. இவற்­றின் மூலம் இந்த மக்­கள் நல்ல வரு­மா­னம் ஈட்டி வந்­துள்­ள­னர்.

அத்­தோடு இவர்­க­ளில் ஒரு சாரார் கடற்­றொ­ழில் செய்து வந்­துள்­ள­னர். அவர்­கள் வாழ்ந்த இடத்­தில் பல வகை­யான வளங்­கள் காணப்­ப­டு­வ­தா­க­வும், தற்­போது தங்­களை குடி­யேற்­றி­யுள்ள கால் ஏக்­கர் காணி­யில் கட்­டிக்­கொ­டுக்­கப்­பட்ட வீடு­கள் தங்­க­ளுக்­குத் திருப்தி தரு­வ­தாக இல்லை என்­றும் , கால் ஏக்­கர் காணி­யில் தங்­க­ளால் என்ன வரு­மா­னத்தை ஈட்ட முடி­யும் என்றும் அவர் கேள்வி எழுப்­பி­னார்?

இந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த பெண்­கள் முன்­னர் பெரும்­பா­லும் மாடு வளர்த்­தும், மேட்டு நிலப் பயிர்ச் செய்கை மேற்­கொண்­டும் தங்­கள் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்தி வந்­தி­ருந்­த­னர். தற்­போது இவர்­கள் வாழும் இடத்­தில் இருந்து வரு­மா­னம் எத­னை­யும் பெற்­றுக் கொள்ள இய­லா­தென கவ­லை­யு­டன் தெரி­வித்­த­னர்.

அரசு இவர்­க­ளது காணிப் பிரச்­சினை தொடர்­பாக பல்­வேறு கட்ட பேச்­சுக்­களை மேற்­கொண்ட போதி­லும் தங்­கள் நிலைப்­பாட்­டில் இருந்து தாங்­கள் விட்டுக் கொடுக்­க­வில்லை என உறு­தி­ப­டத் தெரி­விக்­கின்­றார்­கள்.
இந்த மக்­க­ளின் காணி­களை விடு­விக்க மீள்­கு­டி­யேற்ற அமைச்சு படைத்­த­ரப்­பு­டன் பேச்­சுக்­களை நடத்தி படை­யி­னர் வெளி­யே­று­வ­தற்­கான செல­வு­களை வழங்க முன்­வந்­துள்­ளது.

இதன் முதற்­கட்­ட­மாக படைத்­த­ரப்­புக்கு 5 மில்­லி­யன் ரூபா செலுத்தி 189 ஏக்­கர் காணி படை­யி­ன­ரால் விடுவிக்­கப்­பட்­டா­லும், இங்கு போராட்­டம் நடத்­து­வர்­க­ளின் காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. வெளி­நா­டு­க­ளில் வாழ்­கின்ற மக்­க­ளது காணி­கள்­தான் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன.

கேப்­பாப்­பி­லவு காணி­களை விடு­விக்க நிதி வழங்­கும் மீள்­கு­டி­யேற்ற அமைச்சுகேப்­பாப்­பி­லவு மக்­க­ளின் 111 ஏக்­கர் காணியை விடு­விப்­ப­தற்கு 148 மில்­லி­யன் ரூபா பணத்­தை­மீள்­கு­டி­யேற்ற அமைச்­சால் படைத்­த­ரப்­புக்கு வழங்க இணக்­கம் காணப்­பட்­டுள்­ளது.

அர­சின் மாற்­றுக் காணி­க­ளை­யும், வீட்­டுத் திட்­டங்­க­ளை­யும் பெற்­றுக் கொண்டா லும் மக்­கள் தங்­கள் சொந்த இடங்­க­ளி லேயே குடி­யே­றத் துடிக்­கின்­றார்­கள். இந்த மக்­கள் தமது முன்­னைய சொந்த வாழ்­வி­டங்­கள்­தான் தங்­க­ளுக்கு நிம்­ம­தி­யான வாழ்­வை­யும் வரு­மா­னத்­தை­யும் தரும் என நம்பு­வதை ஏற்க முடி­கி­ றது.

சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் இந்த மக்­க­ளின் காணி­களை விரை­வில் விடு­விப்­ப ­தன் ஊடாக இந்த மக்­க­ளின் நிம்­ம­தி­யான வாழ்வுக்கு வழி­வ­குத்­துக் கொடுக்க இய­லும் என்­பது திண்­ணம்.

http://newuthayan.com/story/32752.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.