Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2020 வரை நீடிக்குமா கூட்டு அரசு?

Featured Replies

2020 வரை நீடிக்குமா கூட்டு அரசு?

 
 
2020 வரை நீடிக்குமா கூட்டு அரசு?
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்­த­வின் அரசு கவிழ்க்­கப்­பட்டு மைத்­திரி-– ரணில் தலை­மை­யி­லான கூட்டு அரசு உரு­வா­ன­போது, இந்த நாட்டு மக்­கள் மத்­தி­யில் ஒரு புதுவித­ உற்­சா­க­மும் நம்­பிக்­கை­யும் பிறந்­தன.

இத்­தோடு ஊழல்,மோச­டி­கள் ஒழிந்து விடும்; வாழ்க்­கைச் செல­வி­னம் குறைந்­து­வி­டும்; பொரு­ளா­தார ரீதி­யில் நாடு அபி­வி­ருத்தி அடையப் போகிறது என்­றெல்­லாம் மக்­கள் கனவு காணத் தொடங்­கி­னர்.போர் முடி­ வுக்கு வந்த வேளை­யில் கண்ட கனவு போன்றதே அதுவும்.

வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ள
ஐ.தே.கட்சியின் மதிப்பு

ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆட்­சிக்கு வந்­தாலே மக்­க­ளின் கைக­ளில் பணப்­பு­ழக்­கம் அதி­க­ரித்­து­வி­டும்;திருட்­டுக்­கள் குறைந்­து ­வி­டும் என்ற நம்­பிக்கை காலா­தி­கா­ல­மாக பொது­மக்­கள் மத்­தி­யில் இருந்து வரு­கின்­றது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வின் கை சுத்­த­மா­னது.ஏனைய அர­சி­யல்­வா­தி­க­ளைப்­போல் திருட்­டில் ஈடு­ப­டா­த­வர். நாட்டை மேற்கு நாடு­கள்­போல் அபி­வி­ருத்தி செய்­யக்­கூ­டி­ய­வர்.

ஏனைய தலை­வர்­க­ளை­விட பன்­னாட்­டுத் தொடர்­பு­களை அதி­கம்­கொண்­ட­வர் என்­றெல்­லாம் ரணில் பற்­றிப் பதி­வு­கள் உள்­ளன.அந்த அடிப்­ப­டை­யில்­தான் அவர் ‘மிஸ்­டர் கிளீன்’ என்று அழைக்­கப்­ப­டு­கின்­றார்.

இவ்­வா­றான பதி­வு­கள் ஏற்­ப­டு­வ­தற்கு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் கடந்­த­கால வர­லா­று­கள்­தான் கார­ணம்.ஆனால்,அந்த நிலை இப்­போது மாறி­விட்­டது என்­றும், மகிந்­த­வின் அர­சு­டன் ஒப்­பி­டு­கை­யில், ஐக்­கிய தேசிய கட்சி அரசு எந்­த­வ­கை­யி­லும் வேறு­பட்­ட­தல்ல என்­றும் மக்­கள் நினைக்­கும் அள­வுக்கு இப்­போது நிலைமை மாறி­யுள்­ளது என்றே கொள்ள வேண்­டி­யுள்­ளது. ஆட்­சியைப் பொறுப் பேற்று ஒரு மாதத்­தி­லேயே இடம்­பெற்ற மத்­திய வங்கி பிணை­முறி ஊழலே இதற்கு முக்கிய காரணமாக அமைந் தது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­மீது மக்­கள் வைத்­தி­ருந்த நல்­லெண்­ணத்தை அந்த ஊழல் விவ­கா­ரம் சிதைக்­கத் தொடங்­கி­யது.அத­னோடு இணைந்­த­தாக மேலும் பல ஊழல்­கள் குறித்த விவ­ரங்­கள் ஒன்­றன்­பின் ஒன்­றாக வெளி­வ­ரத் தொடங்­கின.

குறிப்­பாக,முன்­னாள் நிதி அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்கவால் மேற்­கொள்­ளப்­பட்ட பல ஊழல்­கள் அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்­டன.வாகன இறக்­கு­ம­தி­யின்­போது 1000 கோடி ரூபா வரி விலக்­க­ளிக்­கப்­பட்ட சம்­ப­வம், அதே­போன்று கார்­கள் இறக்­கு­ம­தி­யில் 650 கோடி ரூபா வரி விலக்கு,ரவி­யின் மனைவி மற்­றும் மக­ளது பெயர்­க­ளில் உள்ள நிறு­வ­னங்­கள் புரிந்த ஊழல்­கள் மற்­றும் ‘பெர்­பேச்­சு­வல்’ நிறு­வன உரி­மை­யா­ளர் அர்­ஜுன அலோ­சி­ய­ஸி­டம் லஞ்­ச­மாக வீடு வாட­கைக்­குப் பெற்­றமை போன்ற ரவி கரு­ணா­நா­யக்கவு­டன் தொடர்­பு­பட்ட பல ஊழல்­கள் அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்­டன.

கூட்டு அரசின்
ஊழல்களை அம்பலப்படுத்தும்
மகிந்த தரப்பு

மகிந்த அணி­யி­னர் ‘டொப் 10’ என்ற பெய­ரில் இந்த ஊழல்­களை அம்­ப­லப்­ப­டுத்­தத் தொடங்­கி­னர்.மத்­திய வங்கி ஊழ­லைத் தவிர்த்து இரண்டு வரு­டங்­க­ளுக்­குள் இடம்­பெற்ற ஏனைய ஊழல்­க­ளால் 13 ஆயி­ரம் கோடி ரூபா இந்த நாட்­டுக்கு நட்­டம் ஏற்­பட்­டுள்­ளது என்று மகிந்த தரப்­பி­னர் கூறு­கின்­ற­ னர்.மத்­திய வங்கி ஊழ­லால் ஒரு லட்­சம் கோடி ரூபா நட்­டம் ஏற்­பட்­டுள்­ளது என்று அமைச்­சர் லக்ஸ்­மன் யாப்பா அப­ய­வர்­தன தெரி­வித்­துள்­ளார்.

இந்த நிலை­யில் அர்­ஜுன அலோ­சி­ய­ஸி­டம் ரவி கருணா நாயக்க வீடு வாட­கைக்­குப் பெற்ற குற்­றச்­சாட்­டின் கீழ் மகிந்த அணி­யி­னர் ரவிக்கு எதி­ரான நம்­பிக்கை இல்­லாப் பிரே­ர­ணை­ யைக் கொண்டு வந்­த­தும், அவர் தமது அமைச்­சுப் பத­வி­யைத் தாமாக முன்­வந்து துறந்­தார். இந்த விவ­கா­ரம் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குப் பலத்த அவ­மா­னத்தை ஏற்­ப­டுத்தி விட்டி­ருந்­தது. கட்­சிக்கு இருந்த நல்ல பெயர் அற்­றுப் போனது.ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் ஊழல்­வா­தி­கள் உள்ள கட்­சி­தான் என்று மக்­கள் கணக்­குப்­போ­டும் நிலை தோன்­றி­யது.அது கட்­சிக்­குப் பின்­ன­டை­வைக் கொடுத்­துள்­ளது.

கூட்டு அரசின் மீது
அதன் ஆதரவாளர்களே
அதிருப்தி அடையும் நிலை

ஊழல்,மோச­டி­கள் தொடர்­பில் மக்­கள் அதி­ருப்தி அடைந்­தமை போதா­தென்று, போது­மான அபி­வி­ருத்­தி­யின்மை, முத­லீடு இன்மை, விலை­வாசி அதி­க­ரிப்பு மற்­றும் நாட்­டின் சொத்­துக்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­றல் போன்­ற­வற்­றால் மக்­கள் இந்த அர­சின்­மீது மேலும் அதி­ருப்­தி­ய­டை­யத் தொடங்­கி­விட்­ட­னர்.

திரும்­பும் பக்­க­மெல்­லாம் அர­சுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்­கள் மற்­றும் வேலை நிறுத்­தப் போராட்­டங்­கள்.இவை மக்­களை மேலும் அசௌ­க­ரி­ய­கத்­துக்­குத் தள்­ளி­யுள்­ளன.இந்த அரசை உரு­வாக்­கு­வ­தற்கு வாக்­க­ளித்த மக்­க­ளில் அதி­க­மா­ன­வர்­கள் இப்­போது இந்த அர­சுக்கு எதி­ரான மனோ­நி­லை­யி­லேயே இருக்­கின்­ற­னர்.

இந்த நிலை தொடர்ந்­தால், கூட்டு அரசை நடத்­திச் செல்­கின்ற ஐக்­கிய தேசிய கட்­சிக்­கும் சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் தேர்­தல்­களை எதிர்­நோக்­கு­வது சிர­ம­மா­கப் போய்­வி­டும். மகிந்த தரப்­பின் செல்­வாக்கு அதி­க­ரித்­து­வி­டும்.

இரண்டு முதன்மைக் கட்­சி­க­ளும் கூட்டு அர­சைத் தக்­க­வைப்­ப­தன் மூலம்­தான் மகிந்­த­வின் எழுச்­சி­யைத் தடுக்க முடி­யும். கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் மக்­கள் மத்­தி­யில் நல்­லெண்­ணம்நில­வி­ய­போ­தி­லும்,அந்­தக் கட்­சி­கள் எவை­யும் தனித்து ஆட்சி அமைப்­ப­தற்கு மக்­கள் ஆணை கிட்டியிருக்கவில்லை.

தனித்தனியாக பயணிக்க 
முயன்றால் 
இரு தரப்புகளுக்கும்
சிக்கல்

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு 106 ஆச­னங்­க­ளும், சுதந்­தி­ரக் கட்­சிக்கு 95 ஆச­னங்­க­ளும் கிடைத்­தன.ஆனால்,இதே செல்­வாக்கு மக்­கள் மத்­தி­யில் இப்­போ­தும் உண்டு என்று சொல்ல முடி­யாது.இந்த இரு கட்­சி­க­ளின் செல்­வாக்­கும் சரிந்து மகிந்த அணி­யின் செல்­வாக்கு உயர்ந்தே உள்­ளது.மேற்­கு­றிப்­பி­டப்­பட்­டுள்ள ஊழல்,மோச­டி­கள்­தான் இதற்­குக் கார­ணம்.

இந்த நிலை­யில் தேர்­தல் ஒன்றை எதிர்­கொண்­டாலோ அல்­லது கூட்டு அரசை கவிழ்த்­து­விட்டு தனித்­த­னியே பய­ணிக்க முற்­பட்­டாலோ இரண்டு கட்­சி­க­ளும் சிக்­க­லையே எதிர்­நோக்­கும்.குறிப்­பாக,மைத்­திரி தரப்­பின் நிலை­தான் மிக மோச­மா­கி­வி­டும்.

மைத்­திரி அணியை விட மகிந்த அணி­யில்­தான் உறுப்­பி­னர்­கள் அதி­கம்.அது­போக மைத்­திரி அணி­யில் உள்­ளோ­ரில் 50 வீத­மா­ன­வர்­கள் மகிந்­த­வின் விசு­வா­சி­க­ளா­வர். மகிந்­தவை நாட்­டின் தலைமை அமைச்­ச­ராக நிய­மிக்க வேண்­டும் என்று மைத்­தி­ரிக்கு அழுத்­தங்­கொ­டுப்­ப­வர்­க­ளும் அவர்­கள்­தான்.

அர­சில் இருந்து வில­கப் போகி றோம் எனக் கூறு­ப­வர்­க­ளும் அவர்­கள்­தான். ஒப்பந்தத்தின்படி இந்த வரு­டம் டிெசம்­பர் மாதம் கூட்டு அர­சின் ஒப்பந்த காலம் முடி­வ­டைகி­றது.அவ்­வாறு முடி­வ­டைந்­தால் ஐக்­கிய தேசிய கட்­சியே தனித்து ஆட்சி அமைக்­கும்.ஆட்சி அமைப்­ப­தற்கு மகிந்த அணியே ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு உத­வும்.
அவ்­வி­தம் இடம்­பெற்­றால், மைத்­திரி தரப்­பின் நிலை­மை­தான் மோச­மா­கி­வி­டும்.எதிர்க்­கட்­சி­யில் அமர வேண்­டி­யேற்­ப­டும்.ஆனால், மகிந்­த­வு­டன் இணைந்து செல்­வ­தற்கு மைத்­திரி இணங்­க­மாட்­டார்.மகிந்­த­வும் இணங்­க­மாட்­டார்.

இத­னால் மைத்­திரி அணி தனி­யா­க­வும் மகிந்த அணி தனி­யா­க­வும் எதிர்க்­கட்சி வரி­சை­யில் அம­ரும்.அப்­படி நடந்­தால் மகிந்­தவை மைத்­தி­ரி­யால் பல­வீ­னப்­ப­டுத்த முடி­யா­மல் போகும். அரச தலை­வர் பத­வியை மாத்­தி­ரம் வைத்­துக்­கொண்டு மகிந்­தவை வீழ்த்­து­வ து கடி­னம்.அமைச்­சுக்­கள் அடங்­க­லான அரச அதி­கா­ரம் கையில் இருந்­தால்­தான் மைத்­திரி அணி­யால் எழுந்து நிற்க முடி­யும்.

கூட்டு அரசின் தேவை
சுதந்திரக் கட்சிக்கே
மிக அவசியம்

அது­போக,மைத்­திரி அணி எதிர்க்­கட்­சி­யில் அமர்ந்­தால் அவ­ரது அணி­யில் உள்ள மகிந்த விசு­வா­சி­கள் மகிந்­த­வு­டன் இணைந்­து­கொள்­வர்.அப்­போது சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை மகிந்­த­வுக்­குக் கிடைத்­து­வி­டும்.

மூன்­றில் ஒரு பங்கை வைத்­துக்­கொண்டு மகிந்­தவை வீழ்த்­து­வது மைத்­தி­ரிக்குச் சாத்­தி­யப்­ப­டாது.அப்­படி மூன்­றில் ஒரு பங்­காக இருந்­தா­லும் அரச அதி­கா­ரத்­து­டன் இருக்க வேண்­டும்.அப்­போ­து­தான் மகிந்­தவை வீழ்த்­து­வ­தைப் பற்றி யோசிக்­க­லாம். அது­வும் கூட்டு அர­சாக இருக்க வேண்­டும்.

ஆகவே, கூட்டு அர­சின் தேவை, ஐக்­கிய தேசிய கட்­சியை விட­வும் சுதந்­தி­ரக் கட்­சிக்கே அதி­க­மாக உண்டு.இதன் கார­ண­மாக 2020 வரை மாத்­தி­ர­மல்ல அதற்கு அப்­பா­லும் தற்­போ­தைய கூட்டு அர­சைக் காப்­பாற்­று­வ­தற்கு மைத்­திரி நட­வ­டிக்கை எடுப்­பார் என்று நம்­ப­லாம்.

கூட்டு அரசின் நிர்வாகம் தொடருமானால் மகிந்த அணி தலைதூக்க இயலாது

2020இல் தனித்து ஆட்சி அமைத்­தல் என்ற திட்­டத்­தோடு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சுதந்­திர கட்­சி­யும் இருக்­கின்­ற­போ­தி­லும்,அப்­போ­தைய தேர்­த­லில் கிடைக்­கும் முடி­வு­கள் இந்­தத் திட்­டத்­தில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும்.

நாங்­கள் 2025 வரை­யும் கூட்டு அர­சைப் பாது­காப்­ப­தற்கு விரும்­பு­கி­ றோம் என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் கபீர் ஹாசிம் கூறி­யமை இதை மன­தில் வைத்­துக்­கொண்­டு­தான்­போ­லும். அவ்­வாறு 2025 வரை இந்­தக் கூட்டு அரசு இருக்­கு­மாக இருந்­தால் மகிந்த அணி தலை தூக்­கு­வது கஷ்­டம்­தான்.ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­ன­தும் சுதந்­தி ­ரக் கட்­சி­யி­ன­தும், வாக்கு வங்­கி­யைத் தாண்­டிய ஒரு வாக்கு வங்­கியை மகிந்­த­வால் ஒரு­போ­தும் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.

சுதந்­தி­ரக் கட்­சி­யும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் இணைந்து ஆட்சி அமைத்­தால்,-அந்­தத் தேர்­த­லில் மகிந்த அணி தனித்­துப் போட்­டி­யிட்­டால் முக்கிய எதிர்க்­கட்­சி­யாக வரு­வ­தற்கு அதற்கு வாய்ப்பு உண்டு.

கூட்டு அரசைக் கவிழ்க்கும் தேவை
மகிந்தவுக்கு அவசியமாகியுள்ளது

இந்த உண்­மையை உணர்ந்­த­மை­யால்­தான் கூட்டு அர­சில் இருந்து விலகி எதிர்க்­கட்சி வரி­சை­யில் அம­ரு­மாறு மைத்­திரி அணி­யில் உள்ள மகிந்த விசு­வா­சிகள் மைத்­தி­ரிக்கு அழுத்­தம் கொடுத்து வரு­கின்­ற­னர்.

கூட்டு அர­சைக் கலைத்து ஆட்­சியை ஐக்­கிய தேசிய கட்­சி­யி­டம் ஒப்­ப­டைத்­தால் மைத்­திரி அணி எதிர்க்­கட்­சி­யாக மாறி­வி­டும்.அந்த எதிர்க்­கட்­சி­யில் உள்ள மகிந்­த­வின் விசு­வா­சி­கள் மகிந்­த­வு­டன் போய் இணைந்­து­கொள்­வர்.பல­மான ஓர் எதிர்க்­கட்­சி­யாக இருந்து இனி­வ­ரும் தேர்­தல்­க­ளில் போட்­டி­யிட்டு ஆட்­சி­யைப் பிடிக்க முடி­யும் என்று இவர்­கள் கணக்­குப் போடு­கின்­ற­னர். கூட்டு அரசு தொடர்ந்­தால் இவர்­க­ளின் வெற்றி சாத்­தி­யப்­ப­டாது என்று அவர்­க­ளுக்­குத் தெரி­யும்.

கூட்டு அர­சின் இருப்பு மைத்­தி­ரிக்­கும் அதன் கவிழ்ப்பு மகிந்­த­வுக்­கும் தேவைப்­ப­டு­கின்­றது.இத­னால் 2020 வரை தேசிய அரசை தக்­க­வைப்­ப­தற்கு மைத்­திரி நட­வ­டிக்கை எடுப்­பார் என்று சொல்­ல­லாம்.

http://newuthayan.com/story/33117.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.