Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழைய பூச்சாண்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழைய பூச்சாண்டி

[06 - March - 2007]

முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் அரசாங்கத்தரப்பு பின்வரிசை எம்.பி.க்களாக இருந்து கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் அவருக்கு நெருக்கமான குழாமுக்கும் எதிரான `போராட்டத்தை'த் தொடர்ந்த வண்ணமிருக்கிறார்கள். அவர்களின் இந்தப் போராட்டம் பெரும்பாலும் கொழும்பில் செய்தியாளர் மகாநாடுகளைக் கூட்டி குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ராஜபக்‌ஷ தரப்பினர் விடுதலைப் புலிகளுடன் இரகசிய உடன்படிக்கையொன்றைச் செய்திருந்ததாக சமரவீரவும் சூரியாராச்சியும் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு தென்னிலங்கையில் இப்போது பெரும் அரசியல் சர்ச்சையாக மாற்றப் பட்டுக் கொண்டு வருகிறது.

அந்த இரகசிய உடன்படிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென்று சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டாரவிடம் சமரவீரவும் சூரியாராச்சியும் விடுத்திருக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குரல் கொடுத்திருக்கிறது. `இரகசிய உடன்படிக்கையை முழுநாட்டுக்கும் அம்பலப்படுத்த வேண்டும். அதன் காரணத்தினால் தான் நாம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோருகின்றோம். தெரிவுக்குழு நியமிக்கப்படுமானால், இரகசிய உடன்படிக்கை குறித்த விபரங்கள் தெரிந்தவர்கள் அக்குழு முன்னிலையில் வந்து சாட்சியம் அளிக்கக் கூடியதாக இருக்கும்' என்று கடந்த வாரம் செய்தியாளர் மகாநாட்டில் சூரியாராச்சி தெரிவித்திருந்தார். இரகசிய உடன்படிக்கை தொடர்பான குற்றச்சாட்டு அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வரக்கூடிய அளவுக்கு பாரதூரமானதாக இருப்பதால், பிரதான எதிர்க்கட்சி என்றவகையில் தாங்களும் நாட்டுமக்களுக்கு உடன்படிக்கை குறித்த விடயங்களை தெரிவிக்க வேண்டியிருக்கிறது என்று கூறியிருக்கும் ஐ.தே.க.வின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க, தெரிவுக்குழுக் கோரிக்கையை தாங்கள் முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி ராஜபக்‌ஷ தரப்பினர் விடுதலைப் புலிகளுடன் இரகசிய உடன்படிக்கையைச் செய்து கொண்டதாக இப்போது குற்றஞ்சாட்டும் சமரவீரவும் சூரியாராச்சியும் ஜனாதிபதித் தேர்தலின் போது ராஜபக்‌ஷவின் பிரசாரங்களில் முன்னணியில் நின்று செயற்பட்டவர்கள். தேர்தல் பிரசார முகாமையாளராக இருந்தவரே சமரவீரதான். இவர்கள் இருவரும் கடந்த மாதம் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்படும்வரை இரகசிய உடன்படிக்கை குறித்து நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டுமென்று நினைக்காததன் காரணம் என்ன? அல்லது பதவி நீக்கப்பட்டதன் பின்னர்தான் இரகசிய உடன்படிக்கை குறித்த விடயங்கள் இவர்களுக்குத் தெரியவந்ததா? இரகசிய உடன்படிக்கை விவகாரம் மாத்திரமல்ல, மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும் சமரவீரவும் சூரியாராச்சியும் இன்று பெரும் கூச்சல் போடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தின் கீழ் நாட்டில் இடம்பெற்றுவருகின்ற படுமோசமான மனித உரிமை மீறல்கள் காரணமாக இலங்கைக்கு சர்வதேச சமூகத்தின் மத்தியில் களங்கம் ஏற்பட்டிருப்பதாக முன்னாள் வெளியுறவு அமைச்சரான சமரவீர கூறித்திரிவதை காண்கின்றோம். அரசியல் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றின் அடிப்படையிலேயே விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இவ்விருவரும் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால், படுமோசமான மனித உரிமை மீறல்களோ அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் கூறும் இராணுவ நடவடிக்கைகளோ அல்லது விடுதலைப்புலிகளுடன் செய்து கொள்ளப்பட்டதாக கூறப்படும் இரகசிய உடன்படிக்கையோ சமரவீரவும் சூரியாராச்சியும் ஜனாதிபதி ராஜபக்‌ஷவுடன் முரண்பட்டுக்கொண்டதற்கான காரணங்கள் அல்ல.

இதுவரைகாலமும் அரசாங்கத்தில் இருந்து விட்டு ஒரு அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு ஜனாதிபதி ராஜபக்‌ஷவுக்கு எதிராகக் கிளம்பிய இவர்கள் உண்மையிலேயே மக்களை முட்டாள்களாக நினைக்கிறார்கள். சமரவீரவும் சூரியாராச்சியும் விடுதலை புலிகளுடனான இரகசிய உடன்படிக்கை குறித்தும் மனித உரிமைமீறல்கள் குறித்தும் ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தின் மீது சுமத்துகின்ற முற்றச் சாட்டுக்களை நோக்கும் போது காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலம் தான் உடனடியாக நினைவுக்கு வருகிறது. பிரேமதாசவின் அரசாங்கத்தில் தங்களுக்கு பிரதமர் பதவி கிடைக்குமென்று நம்பிய முன்னாள் அமைச்சர்களான காமினி திசாநாயக்கவும் லலித் அத்துலத் முதலியும் ஒரு சிலவருடங்கள் அமைச்சர்களாக பதவிவகித்த பின்னர், பிரேமதாசவுக்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டுப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கான எதிரணியின் முயற்சிகளுக்கு ஒத்துழைத்தார்கள். நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி சாத்தியமான சகல வழிகளிலும் தனக்கு எதிரான முயற்சிகளை பிரேமதாச முறியடித்த பின்னர் திசாநாயக்கவும் அத்துலத் முதலியும் ஐ.தே.க.வில்கூட இருக்கமுடிய வில்லை.

ஐனநாயக ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிய இருவரும் ( இன்று சமரவீரவும் சூரியாராச்சியும் விடுதலைப்புலிகளை சம்பந்தப்படுத்தி ஜனாதிபதி ராஜபக்‌ஷவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதைப் போன்று) இந்திய அமைதி காக்கும் படைகளுக்கு எதிரான சண்டையில் விடுதலைப் புலிகளுக்கு பிரேமதாச ஆயுதங்களையும் பண உதவியையும் வழங்கியதாகக் குற்றஞ்சாட்டிப் பிரசாரம் செய்தனர். பிரேமதாசவின் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நிறைந்திருந்ததாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்ததா இல்லையா என்பதல்ல. இங்கு சர்ச்சைக்குரியவிடயம். குற்றச்சாட்டுகளை எப்போது, யார் முன்வைத்தார்கள் என்பதே அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டியதாகும். தங்களது அரசியல் எதிரியை அசௌகரியத்துக்கு உள்ளாக்குவதற்கு மாத்திரமே அந்தக் குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமத்தத் தொடங்கினார்கள். தங்களுக்கு வளமான ஒரு அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்குரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால், திசாநாயக்கவும் அத்துலத்முதலியும் அன்று பிரேமதாசவுக்கு எதிராகக் கிளம்பியிருக்கமாட்டார்கள். அவர் செய்த சகலதையும் ஏற்றுக்கொண்டு வாளாவிருந்திருப்பார்கள். சமரவீரவையும் சூரியாராச்சியையும் பொறுத்தவரையிலும்கூட இதுவே நிலைமை.

இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், தங்களது அரசியல் வியூகங்களைச் சிங்கள மக்கள் மத்தியில் செல்லுபடியாகச் செய்வதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகளின் விவகாரங்களுடன் தங்களது அரசியல் எதிரிகளைத் தொடர்புபடுத்துகின்றமைதான். இது இன்று நேற்று அல்ல, இருதசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாகத் தொடருகின்றது. நாட்டின் இன்றைய அனர்த்தத்தனமான நிகழ்வுப் போக்குகளைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாகத் தேவைப்படுவது போருக்கு முடிவும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுமேயாகும். ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தின் அணுகுமுறைகள் இந்த இரண்டையுமே சாத்தியமாக்குவதற்கு உதவாமல் மறுதலையாகவே விவகாரங்களைக் கையாளுகிறது. ஜனாதிபதியுடன் முரண்பட்டுக்கொண்ட இருவரும் அரசாங்கத்தின் இந்தப் போக்கிற்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தால் வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால், இவர்கள் சிங்க மக்களை மேலும் பிழையாக வழிநடத்தக்கூடிய `புலிப்பூச்சாண்டி' காட்டும் பழைய தவறான அணுகுமுறையையே கையாளும் பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் விசித்திரத்தையே காண்கிறோம்.

தினக்குரல்

மல்பரி குருப்பா............... :P

கறுப்பியின் கண்ணுக்குப்பட்டவை சரியான பார்வை என்று கருதுகின்றேன்

நன்றி உங்கள் கருத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா ,திமுகவின் ஆட்சியினை வீழ்த்துவதற்கு கிளப்பும் புலிகள் கதைகள் போல அல்லவா இருக்குது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.