Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்கடத்தல்களில் படையினர் ஈடுபட்டிருப்பதை ஒப்புக்கொள்கிறார் பொலிஸ் மா அதிபர்

Featured Replies

ஆட்கடத்தல்களில் படையினர் ஈடுபட்டிருப்பதை ஒப்புக்கொள்கிறார் பொலிஸ் மா அதிபர்

சிறீலங்காவின் பொலீஸ் மா அதிபர் சிறீலங்காவில் நடந்துவரும் பெருமளவிலான ஆட்கடத்தல்கள், கொலைகள் பணப்பறிப்புகள் ஆகியவற்றில் சிறீலங்கா இராணுவத்தினர மற்றும் காவல்துறையின் உறுப்பினர்களும் பெருமளவில் சம்பந்தப்பட்டிருபதாகவும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஆட்கடத்தல்கள் தொடர்பாக கடந்த செப்ரம்பர் முதல் 433 பேரை தாம் கைது செய்துள்ளதாகவும் கூறிய அவர், அவர்களில் பலர் காவல்துறை உறுப்பினர்கள், இராணுவத்தினர் அல்லது இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியர்கள் என்று குறிப்பிட்டார்.

இவர்களில் இராணுவத்தினர் எவ்வளவு பேர், காவல்துறையினர் எவ்வளவு பேர் என குறிப்பிட மறுத்துள்ளதோடு அவர்குறிப்பிட்ட கைதுகள் தொடர்பில் மேலதிகமா எவற்றையும் தெரிவிக்கவில்லை.

சிறீலங்கா படையினருடன் இணைந்து செயற்படும் துணைப்படையான கருணா குழுவினரின் கடத்தல்கள் பணப்பறிப்புக்கள் மற்றும் கொலைகள் பற்றி அவர் எதையும் குறிப்பிடத் தவறியிருந்தார். ஆனால் அவர் பாவித்த சிறீலங்கா ‘இராணுவத்தினர்’ என்ற பதத்தினுள் கருணா ஒட்டுக்குழுவும் அடங்கும் என்ற காரணத்தால் அவர் அதை தனியாக குறிப்பிட தவறியிருக்கக் கூடும்.

அண்மைக்காலத்தில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்த நூற்றுக்கணக்கான ஆட்கடத்தல்கள் வன்முறையின் ஊடான கப்பங்கள் மற்றும் கொடிய படுகொலைகள் பற்றி சிறீலங்கா காவல்துறையினரிடம் அவ் அமைப்புக்கள் வினவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

ராஜபக்ஷாவை மீறி பொலிஸ் மா அதிபர் இந்த உண்மையை கூறியிருக்க முடியாது.

ஏதாவது ராஜ தந்திரம் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அரச படைகளுக்கு ஆட்கடத்தலில் பங்குண்டு: சிறீலங்கா காவல்துறை அதிகாரி சொல்கிறார்

சிறீலங்கா அரச படைகளுக்கு, நாட்டில் தொடரும் ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் மீது முக்கிய பங்குண்டு என்பது அண்மைக்கால கைதுகள் மூலம் தெரியவந்திருப்பதாக, சிறீலங்கா காவற்துறை அதிகாரியான இன்ஸ்பெக்ரர் ஜெனரல் விக்ரர் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆட்களைக் கடத்திச்சென்று, கப்பம் பெறுவது அல்லது துன்புறுத்தி சித்திரவதைக்குள்ளாக்குவதன் மூலம் நினைத்த காரியத்தைச் சாதிப்பது போன்றவை தொடர்பாக ஏராளமானவர்கள் கைதாகியிருப்பதாகத் தெரிவித்த காவற்துறை மாஅதிபர், இவர்களில் அரச படையின் பல்வேறு தரப்பினரும், படையிலிருந்து தப்பிச் சென்றவர்களும் கணிசமான அளவு அடங்குவதாகத் தெரிவித்தார்.

கடந்த செப்ரம்பர் மாதத்திலிருந்து இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 433 சந்தேக நபர்களில், அதிகமானவர்கள் சிறீலங்கா படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இவர்களுக்குப் பின்னிருந்து, துணைப் படைகளும் நிலக்கீழ் கிரிமினல் குழுக்களும் செயற்பட்டு வருவதும் உறுதியாகத் தெரியவந்திருக்கிறது. தமிழர்கள், மலையகத் தமிழர்களில், குறிப்பாக பணக்கார வர்த்தகர்கள் அல்லது வசதிபடைத்தவர்களைக் குறிவைத்து நடாத்தப்படும் இத்தகைய கடத்தல் சம்பவங்களில், பாரிய நிதித்தொகை கப்பமாக அறவிடப்பட்ட பின்னர், அவர்கள் விடுதலை அடைவதும், அல்லது கப்பம் பெற்றதும் காணாமல் போவதும் பரவலாக இடம்பெற்று வருகிறது.

இத்தகைய சம்பவங்களில் உயர்மட்ட அரசியல் பிரமுகர்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வாகனங்கள், எதுவித சோதனைகளுமின்றி பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கடந்து செல்கின்றன.

கடத்தப்படுபவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் கடும் மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உளவியல் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப் படுகின்றனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றபின்னர் உருவாகியிருக்கும் இந்த வன்முறைக் கலாச்சாரமும், இராணுவத் தீர்வு என்ற மகிந்த நிலைப்பாட்டினால் கிரிமினல்களும் இனவாதிகளும் பெற்றிருக்கும் உற்சாகமும் இதற்கான மேலதிகக் காரணங்களாக இருக்கின்றன.

உள்நாட்டு வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்களும் சர்வதேச நாட்டின் பிரதிநிதிகளும் தங்களது கவலையை வெளியிட்டு வருகின்ற போதிலும், மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இனவெறி அரசுக்கு, அவை பற்றிய கவலையிருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், நாட்டில் மிகவும் மோசமடைந்து செல்லும் மனித உரிமை மீறல்கள், சிறீலங்கா அரசுக்கு சர்வதேச மட்டத்தில் கடும் அழுத்தங்களைக் கொடுத்து வருவதையும் பொலிஸ்மா அதிபர் விக்ரர் பெரேரா ஒத்துக் கொண்டார்.

இத்தகைய திட்டமிட்ட கடத்தல் மற்றும் கொலைகளுடன், அரசுக்கு சிக்கல்களை உருவாக்க விளையும் தனிப்பட்ட குழுக்களும் தொடர்புபட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இத்தகையோரைக் கண்டுபிடிப்பதற்கு உதவிசெய்யும் அல்லது தகவல் தரும் பொதுமக்களுக்கு பெருந்தொகைப் பணத்தை பரிசாக வழங்கும் திட்டத்தையும் அரச அதிகாரிகள் அறிவித்துள்ளனர் என்றார் அவர்.

பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரின் 5 வயது மகள் கடத்தப்பட்டு, அவரை விடுவிப்பதற்கான கப்பப்பணமாக 4 மில்லியன் ரூபாய்கள் கோரப்பட்டுள்ள நிலையில், இந்தக் கடத்தல்களில் அரச படைகளுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்ற பொலிஸ்மா அதிபரின் கருத்து வெளியாகியிருக்கிறது.

தெற்கில் பல இடங்களிலும் சூட்டுக் காயங்கள், சித்திரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளுடன் சடலங்கள் மீட்கப்படுகின்றன. அனுராதபுரம், கந்தன போன்ற பகுதிகளில் சிதைவடைந்த நிலையில் உடலங்கள் மீட்கப்பட்டன.

சிறீலங்கா அரசின் மிலேச்சத்தனமான அராஜக இராணுவ முனைப்புக்களும், அரச பயங்கரவாத செயற்பாடுகளும், தமிழினத்தை இல்லாதொழிக்கும் வெறியுடனான போர் முகமும், பொதுமக்களைக் கிலி கொள வைத்துள்ளன.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.