Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் பின்புலத்தை இராஜதந்திரிகள் தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் பின்புலத்தை இராஜதந்திரிகள் தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம்

வி.திருநாவுக்கரசு-

இலங்கையில் சாந்தி சமாதானம் நிலவ வேண்டுமென அங்கலாய்க்கும் எல்லா மக்களும், நாட்டு வளங்கள் யாவும் முழுமையாக அபிவிருத்திக்குப் பயன்படுத்தி நாடு சுபிட்சப் பாதையில் பயணிக்க வேண்டுமென ஆவல் கொண்டுள்ள சகல மக்கட் பிரிவினரும், நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு அன்றி அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்றே ஆதங்கப்படுகின்றனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பதவியேற்ற நாள் முதல் விடுதலைப் புலிகளுடன் எந்த நேரமும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராயிருப்பதாகக் கூறி வந்துள்ளார். ஆனால், இன்று வரை தீர்வுக்குரிய யோசனைகள் எவையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்படவில்லை.

குறிப்பாக, அண்டை நாடாகிய இந்தியா அடங்கலாக பிரபலமான எல்லா மட்டங்களிலுமான சர்வதேச சமூகத்தினர் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்குத் தேவை ஒரு நீதி நியாயமான அரசியல் தீர்வே ஒழிய, பேரழிவு நிறைந்த இராணுவ அணுகுமுறையல்ல என்பதை இலங்கை அரசாங்கத்திடம் இறுக்கமாக வலியுறுத்தி வருகின்றனர். ஏனெனில், இராணுவ நகர்வானது அப்பாவி மக்களுக்கு பேரவலங்களை ஏற்படுத்துவதோடு பல்வேறுபட்ட மனித உரிமை மீறல்களுக்கும் கொலைக் கலாசாரத்துக்கும் வழிசமைத்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் முழு நாட்டுக்குமே அபிவிருத்தியோ சுபிட்சமோ எட்டாக் கனியாகி விடும் என்பதையும் "தோல்வியடைந்த அரசு" எனும் இழிநிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுவிடும் என்பதையும் நாட்டு நலனில் அக்கறையுள்ள எந்த ஒருவருக்கும் மிகுந்த மன உழைச்சலைக் கொடுக்குமல்லவா?

தூதுவர் பிளேக்

காலி நகரில் கடந்த ஜனவரி 29 ஆம் 30 ஆம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை அபிவிருத்தி மன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக முன்னர் மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். அதாவது, உலக வங்கியின் ஆசிய பிராந்திய உப தலைவர் பிரவூல் பட்டேல் இலங்கையின் அபிவிருத்தி முயற்சிக்கு சமாதானம் முதன்மையானது என எடுத்துரைத்தார். அடுத்து, தேசிய இனப்பிரச்சினையானது இராணுவ ரீதியாகத் தீர்க்க முடியாதென அமெரிக்க தூதுவர் றொபேட் பிளேக் சுட்டிக் காட்டியிருந்தார். "இந்த கொடுமையான பிணக்கினைத் தீர்ப்பதற்கு இராணுவ அணுகுமுறை ஏற்புடையதல்ல எனும் எமது உறுதியான நிலைப்பாட்டில் மாற்றமில்லை" என பிளேக் குறிப்பிட்டிருந்தார். எனினும், அவர் அத்தோடு நின்று விடாமல் (இலங்கை) இராணுவம் மேலும் பலப்படுத்தப்படுவது முக்கியமானதாகும். இராணுவத்தினருக்கு போதிய தளபாடங்களும் பயிற்சியும் வழங்கப்படுவது அவசியமாகும் பயங்கரவாதத்தினை முறியடிப்பதற்கும், விடுதலைப்புலிகளுக்கு நிதி மற்றும் ஆயுத வசதிகள் வந்தடைவதை முடக்குவதற்கும் ஆதரவளிக்கப்படும்" எனவும் தூதுவர் பிளேக் கூறி வைத்தார். இதன் காரணமாகவோ எவ்வாறாகவோ உற்சாகமடைந்த நிலையிலேயே விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து விடலாமென தென்னிலங்கை சிங்கள சமூகத்தினை நம்பச் செய்யுமுகமாக இலங்கை அரசாங்கம் குறிப்பாக கடுமையான வான் தாக்குதல்கள் அடங்கலான இராணுவத் தாக்குதல்களை மேன்மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது எனலாம்.

அதன் பின்னர், 25.02.07 இல் இந்தியசெய்திச் சேவை ஒன்றிற்கு ( IANS) வழங்கிய செவ்வியில் இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏற்புடையதல்ல என்பதாகிய அமெரிக்க நிர்வாகத்தின் நிலைப்பாட்டினை பிளேக் மீண்டும் வலியுறுத்தியிருந்தார். அத்தோடு இப்பிரச்சினையைப் பொறுத்தவரை ஒரு விதமான சாதகமான சமிக்ஞை அண்மிப்பது தென்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருப்பதுடன்,தமிழ

இவர்களெல்லாம் சாதாரணமாகப் புரிந்து கொள்ளமாட்டார்கள். சொல்லும் விதத்தில்

சொன்னால்தான் புரிந்து கொள்வார்கள். அதற்குச் சிறிது காத்திருக்கத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழவிடுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.