Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு அமைச்சுக்குள்ளும் புலிகளின் ஊடுருவல்

Featured Replies

பாதுகாப்பு அமைச்சுக்குள்ளும் புலிகளின் ஊடுருவல்

அண்மையில் கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை பிரிவைச் சேர்ந்த புலனாய்வுப் பொலிஸ் உத்தியோகத்தர்களால் அரச பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் உத்தியோத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்தவர் என்ற குற்றச்சாட்டுச் சம்பந்தமாகச் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதே குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கருதப்படும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேற்படி இரண்டு கைதுகளைப் பொறுத்தவரையிலும் குறிப்பிடத்தக்க விடயம் அவர்கள் இருவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் என்பதாகும்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் உத்தியோத்தர் பொலன்னறுவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட அவ்வூர் வாசியாகும். இவர் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வீடொன்றில் வாடகை அறையில் தங்கியிருப்பவர் எனவும் குறித்த வீடு தமிழர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.மேலும், இவர் மாலபே பிரதேசத்தில் குறிப்பிட்ட இடங்களில் வைத்து கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு வருகின்ற புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் இருவரை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார் எனவும் இவ்வாறு சில வருடங்களாக இவர் புலிகளுடன் தொடர்புடையவராக இருந்துள்ளார் எனவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக புலனாய்வுப் பொலிஸ் தரப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகத்தராகிய இவர் கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத தடுப்பு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளர், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வருபவர் எனவும் இவர் கடந்த 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் கூறியுள்ளனர்.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்தும் புலிகள் அமைப்புடன் இவர் வைத்திருந்த பணக் கொடுக்கல் வாங்கல்கள் உட்பட தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருப்பதாகப் பொலிஸ் தரப்பு தெரிவித்தது. அத்துடன் இவர் சில தடவைகள் கிளிநொச்சிக்குச் சென்று உயர்மட்ட புலிகள் இயக்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது பற்றியும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த இருவரும் கைது செய்யப்படுவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சில சிங்கள இனத்தவர்களிடம் புலனாய்வுப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது பெற்றுக் கொண்ட தகவல்களைக் கொண்டே குறித்த பாதுகாப்பு அமைச்சு உத்தியோகத்தரையும் அரச சார்பற்ற நிறுவனப் பணிப்பாளரையும் கைது செய்ய முடிந்ததாகவும் இதைத் தொடர்ந்து புலிகள் இயக்க உயர் மட்டப் பிரமுகர்களுடன் தொடர்புகள் வைத்திருந்த மேலும் சிலர் கைது செய்யப்பட இருப்பதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் மேற்படி இருவரும் தடுத்து வைப்புக் கட்டளையின் பிரகாரம் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

- லங்காதீப : 05.03.2007 -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.