Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாத­ணி­க­ளைப் பாது­கா­வ­ல­ரி­டம் கொடுத்­துச் சுத்­த­மாக்­கிய பூஜித்

Featured Replies

பாத­ணி­க­ளைப் பாது­கா­வ­ல­ரி­டம் கொடுத்­துச் சுத்­த­மாக்­கிய பூஜித்

 
பாத­ணி­க­ளைப் பாது­கா­வ­ல­ரி­டம் கொடுத்­துச் சுத்­த­மாக்­கிய பூஜித்
0
SHARES
 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று யாழ்ப்­பா­ணத்­தில் கலந்துகொண்ட நிகழ்­வுக்கு வந்­தி­ருந்த பொலிஸ் மா அதி­பர் பூஜித் ஜெய­சுந்­தர தனது பாத­ணியை மெய்ப் பா­து­கா­வ­லரான பொலிஸ் உத்­தி­யோத்­த­ரி­டம் சுத்­தம் செய்­யக் கொடுத்­தார்.

வீதி­யோ­ரத்­தில் பல­ரும் பார்த்­தி­ருக்க இந்­தச் சம்­ப­வம் நடந்­தது.

யாழ்ப்­பா­ணத்­துக்கு நேற்று வந்த அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பா­ணத் இந்­துக் கல்­லூ­ரி­யில் நடை­பெற்ற தேசிய தமிழ் மொழித்தின விழா­வில் கலந்துகொண்­டார்.

அந்த நிகழ்­வுக்கு பொலிஸ் மா அதி­பர் பூஜித் ஜெய­சுந்­த­ர­வும் வந்­தார். அவர் காரில் இருந்து இறங்கி ஓர­மாக நின்று கொண்டு தனது ஒரு பாத­ணி­யைக் கழற்றி மெய்ப்­பா­து­கா­வ­ல­ரி­டம் சுத்­தம் செய்­யக் கொடுத்­தார். மற்­றைய பாத­ணி­யை­யை­யும் கழற்றி அங்­கி­ருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரி­டம் கொடுத்­தார்.

அதன் பின்­னர் கால­ணியை அணிந்து நிகழ்­வுக்குச் சென்­றார்.
மெய்ப்­பா­து­கா­வ­ல­ரும், பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரும் வீதி­யோ­ரத்­தில் பாத­ணி­யைக் கையில் எடுத்­துத் துணி­யால் துடைத்­துச் சுத்­தம் செய்­த­னர்.

அந்­தச் சந்­தர்ப்­பத்­தில் அந்த இடத்­தில் அரச தலை­வ­ரின் பாது­காப்­புப் பிரி­வி­னர், பொலி­ஸார், பொது­மக்­கள், ஆசி­ரி­யர்­கள், மாண­வர்­கள் எனப் பல­ரும் இருந்­த­னர்.

Snapshot_26.pngSnapshot_22.pngSnapshot_20.pngSnapshot_19.pngSnapshot_18.pngSnapshot_25.png

http://newuthayan.com/story/37170.html

உதயனுக்கு வேற வேலையே இல்லியா?சமூக பிரச்னைஇமுன்னாள் போராளிகள் எல்லாம் தெரிவதில்லைஇஆனால் சப்பாத்து மட்டும் தெரியுது.மானம்இரோசம் இல்லாத பேப்பர்.

  • தொடங்கியவர்

மெய்ப்பாதுகாவலரிடம் தனது பாதணியை சுத்தம் செய்யக்கொடுத்த பொலிஸ் மா அதிபர் ( காணொளி இணைப்பு )

 

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜிதஜெயசுந்தர யாழ்ப்பானம் இந்துக் கல்லூரி வீதியில் பலர் மத்தியில் தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுத்தம் செய்யக் கொடுத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

police-12.jpg

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தேசிய தமிழ்த் தினவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.

 

இந்நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த பொலிஸ்மா அதிபர் யாழ். இந்துக்கல்லூரியை வந்தடைந்ததும் அவரது வாகனத்தில் இருந்து இறங்கினார். மழை காரணமாக அப்பகுதியில் சேறு காணப்பட்டது. வாகனத்தில் இருந்து இறங்கிய அவரது பாதணியில் சேறு பூசப்பட்டதன் காரணாமாக அதனை சுத்தம் செய்ய முற்பட, அவரது மெய்ப் பாதுகாவலர் துணியால் சுத்தம் செய்தார்.

 

இதையடுத்து அவருக்கு உதவியாக கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரும் சுத்தம் செய்து கொடுத்தார். இவ்வாறு தனது இரண்டு பாதணிகளையும் கழற்றி கொடுத்து சுத்தம் செய்த பின்னரே நிகழ்வு இடத்துக்கு சென்றார்.

இதேவேளை இந்த சம்பவம் இடம்பெற்றவேளை அவ்விடத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறப்பு அதிரடிப் படையினர்,பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/25877

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.