Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டு அரசினை  வீட்டுக்கு அனுப்பல் கூட்டு எதிரணியின்  தலையாய எண்ணம்

Featured Replies

கூட்டு அரசினை  வீட்டுக்கு அனுப்பல் கூட்டு எதிரணியின்  தலையாய எண்ணம்

 
கூட்டு அரசினை  வீட்டுக்கு அனுப்பல் கூட்டு எதிரணியின்  தலையாய எண்ணம்
 
 

 ‘‘எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் இனங்­க­ளின் அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ளப்­ப­டும் சகல பிரிப்­புக்­க­ளை­யும் நான் கடு­மை­யாக எதிர்க்­கி­றேன். எனது வாழ்­நாள் பூரா­வும் நான் அதற்கு எதி­ரா­கப் போரா­டி­னேன்.

தற்­போது மட்­டு­மன்றி எனது உயிர் பிரி­யும் வரை அதற்­கா­கப் போரா­டு­வேன்’’ என நெல்­சன் மண்­டேலா பல சந்­தர்ப்­பங்­க­ளில் தெரிவித்துள்ளார். நூறு ஆண்­டு­கள் கால­மாக ஐரோப்­பா­வின் குடி­யேற்ற நாடா­க­இ­ருந்த தென்­னா­பி­ரிக்க நாட்­டில் நில­விய அடி­மைத்­தன நிற­பே­தத்­துக்கு எதி­ரான சுதந்­தி­ரப் போராட்­டத்­துக்­குத் தலைமை தாங்­கிய நெல்­சன் மண்­டேலா, இன­பே­தத்தை ஒழிப்­ப­தற்­காக மட்­டு­மன்றி உலக மேம்­பாடு குறித்­தும் கன­வு­கண்ட பெருந்­த­லைத்­த­லை­வ­ரா­வார்.

‘‘ஆரம்­பத்­தில் எம்­மி­டம் இனத்­துக்­காக இருக்க வேண்­டிய அடிப்­படை அம்­சங்­க­ளான சொந்த மக்­கள் தொகை, இனத் துக்­கே ­யு­ரிய மொழி, தனித்­து­வ­மான பண்­பாடு என்­றவை எது­வும் இருந்­தி­ருக்­க­வில்லை.

நாம் தென்­சீனா, தென்­னிந்­தியா, பாகிஸ்­தான், பங்­க­ளா­தேஷ் (தனி­நா­டா­வ­தற்கு முன்­னர்) இலங்கை, மற்­றும் தீவுக் கூட்­டங்­க­ளி­லி­ருந்து வந்து குடி­யே­றி­யோ­ரா­ வோம்.

எம்மிடம் இருக்கும் முக்கிய என்­ன­வெ­னில் வெவ்­வே­று­பட்ட  இந்த இனத்­த­வர்­களை ஒன்­றி­ணைத்து வாழ இய­லுமா என்­பதே?’’ என முன்­னர் பல சந்­தர்ப்­பங்­க­ளில் சிங்­கப்­பூரை உரு­வாக்­கிய அர­சி­யல் சிற்­பி­யான லீ குவான் யூ தெரி­வித்­தி­ருந்­தார்.

ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தன் மூல­மா­க­வன்றி பல்­வேறு பிரி­வு­க­ளா­கப் பிரிந்து இயங்­கு­ வ­தன் மூலம் ஒரு நாட்டை முன்­னேற்ற இய­லாது என்­பதை லீ குவான் யூ ஏற்­றுக் கொண்­டி­ருந்­தார்.

எல்­லோ­ருமே சிங்­கப் பூர் பிர­சை­கள் என்ற எண்­ணத்­தைச் சகல மக்­கள் மனங்­க­ளி­லும் உரு­வாக்கி, இனங்கள் மத்­தி­யில் ஐக்­கி­யத்தை  வளர்த்தெ­டுத்து உலக அரங்­க­ளில் சிங்­கப்­பூரை வெற்­றி­பெற்­ற­தொரு நாடாக ஆக்­கி­வைத்­தார்.

சிங்­கப்­பூ­ரின் சிற்பி  லீ குவான் யூ நாடு குறித்­துக் கண்­ட­க­னவு

1948ஆம் ஆண்­டில் ஆசி­யா­வில் வளர்ச்­சி­ய­டைந்த நாடாக ஜப்­பான் திகழ்ந்து வந்­தது. இரண்­டாம் இடத்தை இலங்கை வகித்து வந்­தது. சிங்­கப்­பூரை அபி­வி­ருத்தி கண்­ட­தொரு நாடாக ஆக்க பெரும் கஷ்­டங்­களை எதிர்­நோக்­கிய லீ குவான் யூ இலங்­கைக்கு பய­ணம் மேற்­கொண்­ட­வேளை ‘‘இலங்­கை­போன்று சிங்­கப்­பூ­ரை­யும் ஆக்­கி­விட வேண்­டு­மென்­பதே எனது கனவு’’ எனத் தெரிவித்திருந்­தார்.

அன்று அவ்­வி­தம் தெரி­வித்த அவர், பின்பொரு சம­யம்,  ‘‘எதிர்­கால எதிர்­பார்ப்­பு­க­ளு­டன் இருந்து வந்த இலங்கை, சுதந்­தி­ரத்­தின் பின்­னர் எவ்­வாறு பின்­ன­டை­வுக்கு உட்­பட்டு நலி­வு­கண்­டது என்­ப­தை­யும் நான் கண்­டேன்’’ எனத் தெரி­வித்­தி­ருந்­தார்.அது இன மத குல பேதங்­க­ளுக்கு ஆட்­பட்டு உடை­வ­டைந்து போன­தன் விளை­வே­யா­கும்.

1953ஆம் ஆண்­டில் நாட்­டின் வட­ப­கு­திக்­கு வந்த ஐ.தே. கட்­சி­யின் தலை­மை­யி­லான அர­சின் தலைமை அமைச்­சர் சேர்.ஜோன்.கொத்­த­லா­வல, இங்கு வைத்து சிங்­கள மற்­றும் தமிழ் மொழி­ கள் இரண்­டை­யும் இலங்­கை­யின் அரச கருமமொழி­யாக்­கு­வேன் என வாக்­கு­றுதி வழங்­கி­யமை நாட்­டின் தென்­ப­கு­திச் சிங்­கள மக்­க­ளைக் குழப்­பத்துக்கு உள்­ளாக்­கி­யது.

சேர்.ஜோன், சிங்­கள இனத்­தைக் காட்­டிக் கொடுத்­து­விட்­டார் என்று எதிர்க்­கட்­சி­யி­னர் குற்­றம் சாட்­டி­னர். பெளத்த பிக்­கு­மார் தலைமை அமைச்­சர் சேர்.ஜோனுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொண்­ட­து­டன், அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக அவ்­வே­ளை­யில் எதிர்க்­கட்சியாகச் செயற்­பட்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க மற்­றும் பிலிப் குண­வர்த்­தன ஆகி­யோ­ரும் இணைந்­து­கொண்­டமை எரி­கிற நெருப்­பில் எண்­ணெய் ஊற்­றி­யமை போன்­றா­கி­யது. ஆயி­னும் எவர்­தான் எதிர்த்­த­போ­தி­லும் தாம் தமது நிலைப்­பாட்டை மாற்­றிக்கொள்­ளப் போவ­தில்­லை­யென சேர்.ஜோன் உறு­தி­ப­டத் தெரி­வித்­து ­விட்­டி­ருந்­தார்.

மொழி­வெ­றியை வளர்த்­து  பத­வி­யைக் கைப்­பற்­றினார்    பண்­டா­ர­நா­யக்க

1956ஆம் ஆண்­டுப் பொதுத் தேர்­த­லில் ‘‘சிங்­கள மொழியை அரச கரும மொழி ஆக்­கு­வோம்’’ என்ற உறு­தி­மொ­ழியை முன்­வைத்து பண்­டா­ர­நா­யக்க தேர்­தல் அறிவிப்பை வெளி­யிட்­டி­ருந்­தார். இத­னால் சிங்­கள மக்­க­ளது ஆத­ரவு அலை பண்­டா­ர­நா­யக்கவின் பக்­கம் திரும்­பி­யி­ருந்­தது.

ஐ.தே.கட்­சிக்கு எட்டு ஆச­னங்­க­ளி­லேயே வெற்­றி­வாய்ப்­புக் கிட்­டி­யது. சேர்.ஜோன் கொத்­த­லா­வ­ல­வின் இறுக்­க­மான பிடி­வா­த­மான போக்­குக் கார­ண­மா­கவே ஐ.தே.கட்­சிக்­குப் படு­தோல்வி ஏற்­பட்­ட­தாக ஐ.தே.கட்­சி­யின் தீவிர ஆத­ர­வா­ளர்­கள் விமர்­சிக்­கத்    தலைப்­பட்­ட­னர்.

எத்­த­கைய விமர்­ச­னங்­க­ளை­ யும் பொருட்­ப­டுத்­தாத சேர்.ஜோன். பண்­டா­ர­நா­யக்­க­வி­டம் ஆட்­சிப் பொறுப்பை ஒப்­ப­டைத்­து­விட்­டுத் தமது சொந்த வள­வில் கொத்­த­லா­வல சென்று ஓய்வு எடுத்­துக் கொண்­டார்

.
காலப்­போக்­கில் பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான சுதந்­தி­ரக் கட்சி அர­சும் பின்­ன­டைவு காண ஆரம்­பித்­தது. பொதுத்­தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தில் சுதந் திரக் கட்சி அர­சும் பின்­ன­டைவு காண ஆரம்­பித்­தது.

பொதுத்­தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­ வ­தில் சுதந்­தி­ரக் கட்சி அரசு அக்­கறை காட்­டா­தி­ருந்­த­மையே பிரச்  சி­னை­க­ளைத் தோற்­று­விக்­கக் கார­ண­மா­கி­யது. சிங்­கள மொழியை அரச கரு­ம­மொ­ழி­யாக்க பண்­டா­ர­நா­யக்க  அரசு  தாம­தித்­த­தால்  பெளத்த குரு­மார் பண்­டா­ர­நா­யக்­கா­வுக்கு எதி­ராக அணி­தி­ரள ஆரம்­பித்­த­னர். எது எப்­ப­டியோ கடை­சி­யில் பெளத்த துற­வி­யொ­ரு­வ­ரது துப்­பாக்­கிச் சூட் டில் பண்­டா­ர­ நா­யக்க  கொல்­லப்­பட்­டார்.

பண்­டார  நாயக்க குறித்த கொத்­த­லா­வ­ல­வின் விமர்­சிப்பு

தலைமை அமைச்­சர் பண்­டா­ர­நா­யக்­கவின் பூத­வு­ட­லுக்கு மரி­யாதை செலுத்­தச் சென்­றி­ருந்த சேர்.ஜோன்.கொத்­த­லா­வல, ‘‘இப்­ப­டி­யான அசம்­பா­வி­தம் நடக்­கக் கூடுமென நான் எதிர்­பார்த்­தேன்.

கடை­சி­யில் அவ்­வி­தம் ஆகி­விட்­டுள்­ளது. நான் கட்டி வைத்­தி­ருந்த நாய்­களை பண்­டா­ர­நா­யக்க கட்­டுக்­களை அவிழ்த்­த­விட்­டி­ருந்­தார். அவை கடை­சி­யில் அவ­ரையே கடித்து நாசம் விளைத்­துள் ளன’’ என கருத்து வெளி­யிட்­டி­ருந் தார்.

இன­வா­தி­க­ளைக் குறிப்­பிட்­டுக் கூறவே சேர்.ஜோன்.அத்­த­கைய உவ­மா­னத்­தைத் தெரி­வித்­தி­ருந்­தார்.  இன­வாத குழப்­பங்­கள் கடை­சி­யில் நாசத்­தையே ஏற்­ப­டுத்­தும் என்பதை சேர்.ஜோன் நன்கு­ உணர்ந்­தி­ருந்­தார்.

அத­னா­லேயே அவர் இன­வா­தக் கருத்து நிலைப்­பாட்டை நிரா­க­ரித்­தி­ரந்­தார். அந்த வகை­யில் இன்று இன­வா­தக் கோட்­பாட்­டில் நம்­பிக்கை வைத்­துச் செயற்­ப­டும் அர­சி­யல்­வா­தி­கள்  சிலர், இன்­றைய கூட்­ட­ரசு இடை­நிலைக்  கொள்கை நிலை­ப்­பாட்­டில் செயற்­ப­டு­வ­தாக விமர்­சிக்­கின்­ற ­னர். இன­வாத இறுக்­கப் போக்­கைக் கடைக்­கொள்­ளத் தவ­று­வ­தா­கக் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர். தென்­ப­கு­திக்­குச் சம­மா­கவே வட­ப­கு­தி­யை­யும் கரு­து கிறோம் என்று   ஏசு­கின்­ற­னர்.

அர­ச தலை­வர் என்ற வகை­யில் சிங்­கள மக்­க­ளு­டன் மைத்­தி­ரி­பால நெருக்­க­மா­கச் செயற்­ப­டும் போக்­கைக் கைக்­கொள்­வ­தில்லை என் பதும் அத்­த­கைய சார­ரது கருத்­தா­கும். ‘‘மகிந்த அப்­ப­டிப்­பட்ட போக்­கு­டை­ய­வ­ரல்ல.

விடு­த­லைப் புலி­கள் கெப்­பட்­டிக்­கொல்­லா­வ­வில் குண்­டுத் தாக்­கு­தல் மேற்­கொண்­ட­போது தமது உயி­ரை­யும் துச்­ச­மாக மதித்து மகிந்த அங்கு சென்று பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைச் சந்­தித்து உத­வி­கள் வழங்­கி­னா­ரல்­லவா? அது­வல்­லவா தலை­மைத்துவம்’’ என மகிந்­த­வைப் போற்­றிப் புக­ழ­வும் அந்­தத் தரப்­பி­னர் முன்னிற்கின்றனர்.

சேர்.ஜோனி­னது ஆட்­சிக் காலத்­தில் நாட்­டின் தேவை குறித்து எவ்­வித அக்­க­றை­யும் இல்­லாத மனி­த­ரென இத்­த­கை­ய­தொரு தரப்­பி­னர் சேர்.ஜோனை விமர்ச்­சித்­த­து­ முண்டு. ஆனால் தமது ஒன்­றரை ஆண்டு­கள் கால நிர்­வா­கத்­தில் சேர்.ஜோன் நாட்­டுக்­கா­கக் குறிப்­பிடத் தக்க சேவை ஆற்­றி­யி­ருந்­தார் என்ற விமர்­ச­ன­மும் அவர் குறித்து வெளி­வந்­த­தண்டு.

 ஜோன் கொத்­த­லா­வலவின்அளப்­ப­ரிய சேவை

1954ஆம் ஆண்­டில் சேர்.ஒலி­வர் குண­தி­ல­கவை இலங்­கை­யின் கவர்­ணர் ஜென­ர­லாக ஆக்­கி­வைத்து இலங்­கை­யர்­க­ளையே இந்த நாட்­டில் கவர்­ணர் ஜென­ரல் பத­விக்கு நிய­மிக்­கும் வழக்­கத்தை ஆரம்­பித்து வைத்­த­வர் சேர்.ஜோன்.கொத்­த­லா­வலவே.

சகல சுதந்­திர தினக் கொண்­டாட்­டங்­க­ளி­லும் நாட்­டின் தேசி­யக் கொடி­யு­டன் பிரிட்­டன் அர­சின் தேசி­யக் கொடி­யை­யும் ஏற்­றி­வைக்­கும் நடை­ மு­றையை நிறுத்தி இலங்­கை­யின் தேசி­யக் கொடியை மட்­டுமே ஏற்றி வைக்­கும் வழக்­கத்தை ஆரம்­பித்து வைத்­த­வ­ரும் சேர்.ஜோனே. இலங்­கைக்கு ஐ.நா. சபை­யின் உறுப்­பு­ரி­மை­யைப் பெற்­றுக்­கொள் வ­துக்­குக் கார­ண­மாய் அமைந்­த­ வ­ரும் சேர்.ஜோன். கொத்­த­லா­ வ­லவே.

பிரிட்­டன் அரசி எலி­ச­பெத் மகா­ராணி தமது கண­வ­ரு­டன் இலங்­கைக்கு முதன் முத­லாக பய­ணம் மேற்­கொள்ள வழி­ச­மைத்­த­வ­ரும் சேர்.ஜோனே. அந்த வகை­யில் சேர்.ஜோன் கொத்­த­லா­வல அதி­ச­யிக்­கத்­தக்­க­தொரு அர­சி­யல் தலை­வ­ராக கரு­தப்­ப­டத்­தக்­க வரே.

அதே­போன்­று­தான் இன்­றைய மைத்­திரி– ரணில் கூட்­ட­ர­சை­யும், சிங்­கள இனம் குறித்து அக்­கறை காட்­டாத அர­சென ஒரு சில தரப் பினர் விமர்­சித்து வரு­கின்­ற­னர். தலதா மாளி­கை­யின் முன்­னால் இர­வுக் கார் ஓட்­டப் பந்­த­யம் நடத்­தும்­வரை பார்த்­தி­ருந்த மகிந்த தரப்­பி­னர் இன்­றைய கூட்­ட­ர­சைக் குறை குற்­றம் கூறு­வது நகைப்­புக்கு இட­மா­னது.

அமெ­ரிக்­கக் குடி­யு­ரிமை பெற்­றி­ருந்த முன்­னைய ஆட்­சித் தரப்­பைச் சேர்ந்­தோர் இன்று எதி­ர­ணி­யில் இருந்­து­கொண்டு இன்­றைய அரசை விமர்­சிப்­பது வேடிக்­கைக்கு உரி­யது., என்­றல்ல வோ நாட்டு மக்­கள் மகிந்த தரப்­பி­னரை குறை­கூ­று ­கின்­ற­னர்.

நாட்டு மக்­கள் மத்­தி­யில் தேசிய நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கும் நோக்­கில் அதற்­கான அலு­வ­ல­க­மொன்றை  நிறுவி நாட்­டின் இனப் பிரச்­சி­னைக்கு உரிய  தீர்­வொன்றை எட்­டு­வ­தற்­கான முயற்­சி­யில் இன்­றைய கூட்­ட­ரசு ஈடு­பட்டு வரு­கி­ற­தல்­லவா?
1954ஆம் ஆண்­டில் சேர்.ஜோன் கொத்­த­லா­வல ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு மேற்­கொண்ட உத்­தி­யோ­க­பூர்வ பய­ணத்­தின் பின்­னர், கடந்த 58 ஆண்­டு­க­ளாக எந்­த­வொரு இலங்­கை­யின் அரச தலை­வர்­களோ, தலைமை அமைச்­சர்­களோ ஆஸ்­தி­ரே­லிய நாட்­டுக்­குப் பய­ணம் மேற்­கொள்­ளு­மாறு அழைக்­கப்­பட்­ட­தில்லை. இன்று உல­கின் பல­மிக்க சகல நாடு­க­ளும் இலங்­கை­யு­டன் நல்­லு­ற­வைப் பேணி வரு­கின்­ற­ன.

அன்­றைய கால­கட்­டத்­தில் சேர்.ஜோன்.கொத்­த­லா­வ­ல­வின் செயற்­பா­டு­க­ளின் பெறு­ம­தியை உண­ராத சிங்­க­ளத் தரப்­பி­னர்­கள் அவரை அர­சி­யல் ரீதி­யில் தோற்­க­டித்த அவ­ரது சொந்த இட­மான கந்­த­வளை வள­வுக்­குள் அவரை முடங்க வைத்­தி­ருந்­த­னர்.

அதற்­குப் பின்­னர் அரச அதி­கா­ரங்­க­ளைப் பெற்­ற­வர்­கள் எல்­லோ­ரும் வாயில்­போட்டு உமி­ழும் இனிப்­புக்­குள் மறைத்து வைத்த விசத்­தைப் போன்­ற­வர்­க­ளா­கவே அமைந்­த­னர்.

அந்த வகை­யில் இன்­றைய கூட்­ட­ர­சுக்கு எதி­ரா­கக் குழப்­பங்­களை உரு­வாக்­கும் கூட்டு எதி­ர­ணித் தரப்­பி­னர்­க­ளது நோக்­கம் அன்று  சேர்.ஜோன்.கொத்­த­லா­வ­லவை தலைமை அமைச்­சர் பத­வி­லி­ருந்து வெளி­யேற்­றி­யமை போன்று இன்­றைய அர­சை­யும் பத­வி­யி­லி­ருந்து அகற்­று­வ­து­தானா? என்­பது குறித்து சந்­தே­கம் கொள்ள வேண்­டி­யுள்­ளது.

http://newuthayan.com/story/37420.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.