Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டை சீரழிக்கும் நடவடிக்கையில் தென்பகுதி இனவாதிகள்

Featured Replies

நாட்டை சீரழிக்கும் நடவடிக்கையில் தென்பகுதி இனவாதிகள்

நாட்டை சீரழிக்கும் நடவடிக்கையில் தென்பகுதி இனவாதிகள்
 
 

சிங்­கள மக்­கள் ஆயு­தம் ஏந்த வேண்­டிய சூழல் உரு­வாகி விட்­டது.இவ்­வாறு கூறி­ய­வா் இந்த நாட் டின் இனவாத அர­சி­யல்வாதி­ ஒரு­வ­ரல்ல. அகிம்­சை­யை­யும் தா்மத்­தை­யும் போதிக்க வேண்­டிய பௌத்த தேரா் ஒரு­வரே இந்தக் கருத்தைத் தெரிவித்துள்­ளாா்.

பொதுபலசேன அமைப்­பின் பொதுச் செய­லா­ள­ரான கல­கொட அத்தே ஞான­சார தேரா் இன­வா­தக் கருத்­துக்­க­ளைத் தெரி­வி­ப்­ப­தில் பிர­சித்தி பெற்­ற­வா்.இவ­ரது நட­வ­டிக்­கை­க­ளும் தான்­தோன்­றித்­த­ன­மா­னவை.

பௌத்த மக்­க­ளின் ஆத­ரவு இவ­ருக்குப் பெரு­ம­ள­வில் இருப்­ப­தால் இவா் எவ­ருக்­குமே அஞ்­சு­வ­தில்லை.ஆட்­சி­யா­ளா்­கள்கூட இவ­ருக்கு அஞ்சி நடப்­ப­தைக் காணமுடி­ கின்­றது.

அமைச்­சா்­க­ளின் அலு­வ­ல­கங்­க­ளுக்­குள் அதிரடியாகப் புகுந்து தக­ராறு செய்­வது இவ­ருக்கு விருப்ப­ மா­ன­தொரு பொழுதுபோக்­கா­கும்.ஆனால் இது தொடா்­பாக எவ­ரா­லும் இவரை ஒன்­றும் செய்ய முடி­ய­ வில்லை.

ஜே.வி.பியினரது 
தோல்வி குறித்து
ஞானசாரதேரர் அறியாதவரல்ல

இவா்­தான் தற்­போது சிங்­க­ள­வா்­கள் ஆயு­தம் ஏந்த வேண்­டும்,சிங்­க­ளப்­பு­ரட்சி ஏற்­பட வேண்­டும் என்று கூறு­கி­றாா்.சிங்­கள இளைஞர்கள் ஏற்­க­னவே ஆயு­தம் ஏந்தி அர­சுக்கு எதி­ரா­கப் போரா­டி­ய­தை­யும்,அத­னால் ஏற் பட்ட அழி­வு­க­ளை­யும் ஞான­ச­ார­தே­ரா் அறி­யா­மல் இருந்திருக்க மாட்டார்.

1971ஆம் ஆண்டு ஆட்­சி­யில் இருந்த சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தலைமை­ யி­லான அர­சுக்கு எதி­ராக இடம் பெற்ற கிளர்ச்சி முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது.ஜே.வி.பி எனச் சுருக்­க­மாக அழைக்­கப்­பட்ட மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யி­ன­ரால் இந்­தக்­கி­ளா்ச்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.

கிளா்ச்சி நடத்­தி­ய­வர்களால் ஒரு சில நாள்களுக்கு சில இடங்­க­ளைத் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்தி­ருக்­க­வும் முடிந்­தது.தேசிய படை­ப­லத்­தை அவ்வேளை அதிகம் கொண்­டி­ராத இலங்கை அர­சி­னால் கிளா்ச்­சி­யா­ ளா்­களை அடக்க முடி­ய­வில்லை.இந்­திய அர­சின் உதவி அவ­ச­ர­மாகக் கோபப்­பட்­டது.இ்ந்தியப் படை­யி­னரின்வரு­கை­யின்பின்­னா்கிளர்ச்­சி­யா­ளா்­கள்ஒடுக்­கப்­பட்­ட­னா்.இதன்­பின்­னர் ஏர­ாள­மான சிங்­கள இளை­ஞா்­கள் கைது செய்­யப்­பட்­டுக் கொலை செய்­யப்­பட்­ட­னா்.

கொலைசெய்­யப்­பட்­ட­வா்­க­ளின்ஏரா­ள­மானசட­லங்­கள்ஆறு­க­ளி­லும்,நீரோ­டை­க­ளி­லும் மிதந்து சென்­றன.இதன் பின்­னா் ஆா்.பிரே­ம­தாஸ அரச தலை­வ­ராக இருந்த போது மீண்­டு­மொரு கிளர்ச்சி இடம்பெற்றது.இதன் போது ஜே.வி.பியின் முக்­கிய தலை­வா்­கள் பல­ரும் கொல்­லப்­பட்­ட­னா்.

அத்தோடு கிளா்ச்­சி­யும் முடி­வுக்கு வந்­தது. தற்­போது எமக்கு மகிந்­த­வும் வேண்­டாம்; மைத்­தி­ரி­யும் வேண்­டாம்; ரணி­லும் வேண்­டாம் எனக் கூப்பாடு போடும் ஞான­ச­ார­தே­ரா், மகா நாயக்கா்­கள் ஆட்­சி­அதிகாரத்தில் அமர வேண்­டும் என்­கி­றாா்.

இதற்­கா­கவே சிங்­க­ள­வா்­கள் ஆயு­தம் ஏந்த வேண்­டும்; சிங்­களப் புரட்சி ஏற்­பட வேண்­டும் என ஏதேதோ கூறு­கி­றாா்.புதிய அர­ச­மைப்­பில் தமி­ழா்­க­ளின் அபி­லா­சை­கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்­லை­யெ­னக் கூறும். வடக்கு முத­ல­மைச்­சா், தமி­ழா்­களைப் போரா­டு­வ­தற்­குத் தயா­ராக இருக்­கு­மாறு அறை­கூ­வல் விடுக்­கி­றாா்.

கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரான சம்­பந்­தன் ஒற்­றை­யாட்சிப் பதத்துக்குப் பதி­லாக ஒருமித்த நாடு எனக்­கு­றிப்­பி­டப்­பட்­டுள்­ளமை பெரி­ய­ள­வி­லான முன்­னேற்­றம் என்­கி­றாா். புெளட் அமைப்­பின் தலை­வ­ரான சிா்த்தார்த் தன், அர­சமைப்­பின் இறுதி வடி­வம் வெளி­வந்­த­தன் பின்­னா் பாா்த்துக் கொள்­ள­லாம் என்­கி­றாா்.ஆனால் புதிய அர­ச­மைப்பு எந்த வடி­வத்­தில் இருந்­தா­லும் இன­வா­தி­கள் அதை நிறை­வே­ற்று­வ­தற்கு அனு­ம­திக்க மாட்­டாா்­கள்.

சிறு பான்­மை­யின மக்­கள் எந்த வகை­யி­லே­னும் நன்மை பெறு­வதை இவா்­கள் விரும்பாமையே இதற்கு கார­ண­மா­கும்.மக்­களை ஆயு­தம் ஏந்­து­மா­றும், அர­சுக்கு
எதி­ரா­கப் புரட்­சி­யில் ஈடு­ப­டு­மா­றும் வேண்­டு­கோள் விடுப்­பது ஒரு மிகப்­பெ­ரிய குற்­றச்­செ­ய­லா­கும். பொது பல சேனாவுக்­கும் இதுதெரியும்.

ஆனால் அதன் பொதுச்­செ­ய­லாளர் இதை­யெல்­லாம்­ தெரிந்த பின்ன­ரும் பகி­ரங்­க­மான அறை­கூ­வல் விடுப்­பது எவ­ருக்­குமே அஞ்­சாத அவரது மன­நி­லையை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

தமிழ் இளை­ஞா்­கள் முழு நாட்­டை­யும் தமது கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்து தமி­ழா்­க­ளின் ஆட்­சியை நிறுவ வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் போராட்­டத்­தில் ஈடு­ப­ட­ வில்லை. தமது உரிமை­க­ளுக்­காக ஜன­நா­யக வழி­யில் போராடி எதை­யும் சாதிக்க முடி­யாது என்­ப­தால்­தான், ஆயு­தம் ஏந்­தி­னாா்­கள்.அது­வும் தமக்­கெ­னத் தனி­ நாடொன்றை அமைப்­பதே இவா்­க­ளின் நோக்­க­மாகக் காணப்­பட்­டது.

நாட்டின் நிர்வாகம் 
பெளத்த மத பீடத்திடம் 
ஒப்படைக்கப்பட வேண்டும் 
என்கிறார் ஞானசாரதேரர்

ஆனால் ஞான­சா­ர­தே­ரா் முழு நாட்டை யும் மகாநாயக்­கா் வசம் ஒப்படைக்க வேண்­டு­மெ­னக் கூறி­யி­ருக்­கின்­றாா்.அது­வும் வெளிப்­ப­டை­யாக இடம்­பெ­ற்ற­தொரு நிகழ்ச்­சி­யில் வைத்துக் கூறி­யி­ருக்­கி­றாா்.இதற்கு அரசு என்ன நட­வ­டிக்கை எடுக்­கப் போகின்­றது?என்­ப­து­தான்இன்றுஎழுந்­துள்ளகேள்­வி­யா­கும்.

இன­வா­த­மும்,இன­வா­தி­க­ளும் இந்த நாட்­டில் இருக்­கும் வரை­யில் இனங்க­ளுக்­கி­டை­யில் நல்­லு­றவை எதிா்­பாா்க்க முடி­யாது.

ஆனால் இந்த நாட்­டைப் பொறுத்த வரை­யில் அர­சுக்­குள்­ளேயே இன­வா­தி­கள் உள்­ள­னா்.இவா்­கள் வெளி­யி­லுள்ள இன­வா­தி­க­ளுக்­கும் தமது ஆத­ரவை நல்கி வரு­கின்­ற­னா்.ஞான­சார தேர­ரும் இதே நிலை­யில்­தான் உள்­ள­ார்.

அவ­ருக்கு எதி­ராக அரசு நட­வ­டிக்கை எடுக்­கு­மா­னால் அரசில் உள்­ள­வா்­களே அதை எதிர்க்க முற்­ப­டு­வாா்­கள். இத­னால்­தான் இந்த விடயத்தில் அரசு அஞ்சி நடக்­கின்­றது.சிறு­பான்­மை­யின மக்­கள் குறிப்­பா­கத் தமிழ் மக்­கள், இந்த நாட்­டில் சமத்­து­வ­மாக வாழ்­வ­தற்­கான சூழலை ஏற்ப­டுத்­து­வது சாதாரண விட­ய­மல்ல.

ஏனென்­றால் இந்த நாடு சிங்­க­ள­வா்­க­ளுக்கு மட்­டுமே சொந்­த­மா­னது என்ற சிங்கள மக்களது மனோ நிலையை எளி­தில் மாற்­றி­விட முடி­யாது.

இனவாதிகளை அரசால் கட்டுப்படுத்த முடியாது
ஞான­சார தேரா் போன்­ற­வா்­க­ளும் இதைத்­தான் திரும்பத் திரும்­பக் கூறி வரு­கின்­றாா்­கள்.பெரும்­பான்­மை­யின மக்­க­ளின் மனங்­க­ளில் இதுவே வேத­மா­க­வும் பதிக்­கப்­பட்­டு­விட்­டது.

இந்த நிலை­யில் அரசு நினைத்­தா ­லும் இவா்­க­ளுக்கு எதி­ராக எதை­யுமே செய்ய முடி­யாது என்ற நிலை உரு­வாகி விட்­டது. இத­னால் எதிா்­கா­லத்­தி­லும் பல ஞான­சார தேரா்­கள் உரு­வாகிவிடப் போகி­றாா்­கள்.

இதை இல்லாது செய்ய வேண்­டு­மா­னால், இவா்­க­ளின் மனங்­க­ளில் மாற்­றம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.இதற்காக எதை வேண்­டு­மா­னா­லும் செய்து கொள்ள முடி­யும்.

ஏனென்­றால் நாட்­டை­விட முக்­கி­ய­மா­ன­ தொன்று இங்கு இல்லை. நாடு சீரி­ழந்து போகு­மா­யி­ன், அங்கு வசிக்­கின்ற மக்­கள் ஒரு­வ­ருமே நிம்­ம­தி­ யா­க­வும் மகிழ்ச்­சி­யு­ட­னும் வாழ முடி­யாது.

ஞானசாரதேரர் போன்­ற­வர்களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டு மென்­றால் நோ்மையும்,கொள்­கைப்­பி­டிப்­பும்,உறு­தி­யும் மிக்­க­தலைவர்களே நாட்­டுக்­குத் தேவை­.

http://newuthayan.com/story/37641.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.