Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம்

Featured Replies

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம்
 
- எஸ். நிதர்ஷன்
image_4913fd861b.jpg
 
அநுராதபுரத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக் கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், யாழ். பல்கலைகழக முன்றலில் ஆரம்பித்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அரசியல்-கைதிகளுக்கு-ஆதரவாக-உண்ணாவிரதப்-போராட்டம்/71-205691

  • தொடங்கியவர்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்.!

 

 

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுவிக்க கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.

IMG-dff5c4a8f84635621e37b585f0dca40a-V.j

பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று காலை கலைப்பீட மாணவர்கள் நான்கு பேர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை  ஆரம்பித்துள்ளனர்.

IMG-e9304b089102c5d2247cfef77bc4ddd8-V.j

இதனையடுத்து, இப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக ஏனைய மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/25904

  • தொடங்கியவர்

தீபாவளி தினத்தில் அரசியல் கைதிகளின் நலன்வேண்டியும் விடுதலை வேண்டியும் பிரார்த்தியுங்கள். – பல்கலை மாணவர்கள்

jaff-uni3-1024x768.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தீபாவளி தினத்தினை கறுப்பு தீபாவளியாக அனுஸ்டிக்குமாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கோரி உள்ளனர்.  யாழ்.பல்கலைகழகம் முன்பாக இன்று காலை முதல் மாணவர்கள் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஜனாதிபதியுடன் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் சந்தித்து அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக பேச இருக்கின்ற போதிலும் , உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உடல்நிலை மிக மோசமாக பாதிப்படைந்து வருவதனால் , நாம் இன்றைய தினம் அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் , அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனைகள் இன்றி விடுவிக்க வேண்டும் எனவும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

அதேவேளை நாளைய தினம் தீபாவளி தினத்தினை கொண்டாட உள்ள மக்கள் தீபாவளியினை ஆடம்பரமாக கொண்டாடாமல் , கறுப்பு தீபாவளியாக அனுஸ்டியுங்கள். அதேவேளை ஆலய வழிபாடுகளில் ஈபடுபவர்கள் அரசியல் கைதிகளின் நலன் வேண்டியும் , அவர்களின் விடுதலை வேண்டியும் வழிபாடுகளில் ஈடுபடுங்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மாணவர்கள் கோரியுள்ளனர்.

jaff-uni-4-1024x768.jpg

http://globaltamilnews.net/archives/45739

  • தொடங்கியவர்

யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்.

IMG_5852.jpg
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யாழ்.பல்கலைகழக மாணவர்கள் தமது போராட்டத்தினை தற்காலிகமாக கைவிட்டு உள்ளனர்.

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் , சகல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க கோரியும் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி (நாளை மறுதினம்) யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற உள்ளது.

குறித்த சந்திப்பில் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தாம் அழுத்தமாக பேசி தீர்வினை பெற்றுக்கொள்ள போராடுவோம். எமது கோரிக்கைக்கு ஜனாதிபதி செவி சாய்க்காத நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பல்கலை கழக மாணவர்களை ஒன்று திரட்டி தீர்வு கிடைக்கும் வரையில் போராடுவோம். அதுவரையில் இன்றைய போராட்டத்தை சற்று தளர்த்தி இன்றைய போராட்டத்தினை அடையாள உண்ணாவிரத போராட்டமாக மாற்றி இன்றுடன் போராட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு மாணவர் ஒன்றியம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கோரியதை அடுத்து மாணவர்கள் தமது போராட்டத்தை தற்காலிகமாக இன்று மாலை 4 மணியுடன் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

IMG_5859-1024x768.jpgIMG_5861-1024x768.jpgIMG_5863-1024x768.jpg

http://globaltamilnews.net/archives/45746

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.