Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை பகடைக்காயாக பயன்படுத்தி தேர்தலை பிற்போட அரசு முயற்சிக்கவில்லை

Featured Replies

என்னை பகடைக்காயாக பயன்படுத்தி தேர்தலை பிற்போட அரசு முயற்சிக்கவில்லை

p21-ab2726b199eac81ae0812edbf700c67d7e8e5afb.jpg

 

நுவரெலியா,அம்பகமுவை எல்லை நிர்ணயம் குறித்து இன்று பேச்சு; அதன் பின் வர்த்தமானி அறிவித்தல் என்கிறார் அமைச்சர் மனோ
(ஆர்.யசி)

நுவ­ரெ­லியா, அம்­ப­க­முவை பிர­தே­ச­ச­பை­களின் எல்­லை­ நிர்­ணயம் தொடர்பில் இன்று மாகா­ண ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுடன் பேச்­சு­வா­ர்த்தை நடத்தவுள்ளோம். இதற்கு தீர்வு கண்­ட­பின்னர் மாந­கர, நகர மற்  

றும் பிர­தே­ச­சபை திருத்த சட்­ட­ம் தொடர்பான வர்த்­த­மானி அறி­வித்­தல் வெளியிடப்படும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.

என்னை பக­டைக்­கா­யாக பயன்ப­டுத்தி தேர்­தலை பிற்­போட அர­சாங்கம் முயற்­சிக்­க­வில்லை, என்னை எவரும்

பக­டைக்­கா­யாக பயன்­ப­டுத்த முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

மலை­நாட்டு புதிய

 கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறி­ய­தா­னது.

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பலர் பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். ஆனால் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் நடக்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை. நான் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வரின் வேலை­யினை செய்­ய­வில்லை. எனது அறி­வுக்கு எட்­டி­யதை நான் கூறு­கின்றேன். ஆனால் பஸில் ராஜபக் ஷ என்­னையும் தொடர்பு படுத்து சில கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளார். என்னை பக­டைக்­கா­யாக பயன்­ப­டுத்தி உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை தள்­ளிப்­போட அர­சாங்கம் முயற்­சித்து வரு­வ­தாக கூறி­யுள்ளார்.

என்னை யாரும் பக­டைக்­கா­யாக பயன்­ப­டுத்த முடி­யாது, அதற்­கான இடம் கொடுக்­கவும் மாட்டேன். இன்று எம்மை விமர்­சிக்கும் பஸில் ராஜபக் ஷவின் அன்­றைய மோச­மான செயற்­பா­டு­களே தேர்தல் இவ்­வ­ளவு குள­று­ப­டிக்குள் தள்­ளப்­பட கார­ண­மாகும். அன்று இவர்­களின் எல்லை நிர்­ணய திட்­டமே அனைத்துக் குழப்­பங்­க­ளுக்கும் கார­ண­மாகும். தமது கட்­சிக்கு தேவை­யான வகையில் எல்லை நிர்­ண­யத்தை செய்­த­வர்கள் இன்று எம்மை விமர்­சிக்­கின்­றனர். அவர்­க­ளுக்கு எவ்­வாறு அர­சியல் செய்ய வேண்­டுமோ அவ்­வாறு எல்லை நிர்­ண­யத்தை செய்­து­கொண்­டனர். அதன் விளைவே நாடு மோச­மான நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது.

மேலும் மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி சபை தேர்தல் குறித்து அமைச்சர் சில தினங்­க­ளுக்கு முன்னர் உரிய சட்­ட­மூ­லத்­தினை தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரிடம் கைய­ளித்­துள்ளார். விரைவில் வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு விடப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.அர­சாங்­க­மாக எடுக்கும் இந்த தீர்­மா­னங்­களை நாம் வர­வேற்­கின்றோம். ஆனால் மறு­புறம் அர­சாங்கம் எமக்கு கொடுத்த வாக்­கு­று­தி­க­ளையும் நாம் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றோம்.

இந்த நாட்டின் மிகப்­பெ­ரிய பிர­தேச சபைகள் இரண்டு உள்­ளன. நுவ­ரெ­லியா மற்றும் அம்­ப­க­முவ பிர­தேச சபைகள்­ அவையாகும். அம்­ப­க­முவ பிர­தேச சபையில் மக்கள் தொகை இரண்டு இலட்­சத்து இரு­பத்­தை­யா­யிரம் ஆகும். நுவ­ரெ­லியா பிர­தே­சச பையில் இரண்டு இலட்­சத்து ஐம்­ப­தா­யிரம் மக்கள் வாழ்­கின்­றனர். ஏனைய பிர­தேச சபை­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இவை இரண்டும் மிகவும் மோச­மான வகையில் கையா­ளப்­பட்­டுள்­ளது. இதனை மாற்­றி­ய­மைக்க வேண்டும் என நாம் தொடர்ச்­சி­யாக கூறி­வந்­துள்ளோம். எமது கோரிக்­கை­யினை ஏற்­றுக்­கொண்டு தீர்வை தரு­வ­தாக கூறி­யுள்­ளனர்.

இந்த விவ­காரம் தொடர்பில் நாம் உரிய அமைச்­ச­ருடன் பேசி­யி­ருந்தோம். நாளை (இன்று) எம்­முடன் கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை நடத்­த­வுள்ளார். நுவ­ரெ­லியா மற்றும் அம்­ப­க­முவ பிர­தேச சபைகள் குறித்து சரி­யாக எல்லை நிர்­ணயம் செய்­து­கொள்ள வேண்­டி­யுள்­ளது. அவை விரைவில் நடத்­தப்­படும். பிர­தேச சபைகள் குறித்து திட்டம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எவ்­வாறு பிரிக்­கப்­ப­டு­வது என்­பது தீர்­மா­னித்­துள்ளோம். நாளை(இன்று) இந்த விட­யங்கள் தொடர்பில் உறிய நபர்கள் அனை­வ­ரையும் வர­வ­ழைத்து கலந்­து­ரை­யா­டு­கின்றோம்.

தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் வேண்­டு­கோளின் பேரில் இந்த கலந்­து­ரை­யாடல் இடம்­பெ­று­கின்­றது. அதன் பின்னர் ஒரு தீர்வை பெற்­றுக்­கொண்டு வர்த்­த­மானி அறி­வித்­தல் வெளியிடப்படும். நாளை (இன்று) வெளியிடவிருந்த வர்த்­த­மானி அறி­வித்தல் மேலும் சில தினங்கள் காலதாமதமாகும். அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் 20 ஆம் திகதி நடத்­தப்படவுள்ள தேர்தல் சில தினங்கள் தள்­ளிப்போகும். அந்த மாற்றம் மட்­டுமே இடம்­பெறும் மாறாக தேர்தல் நடத்­த­ப­டாது ஏமாற்­றப்­போ­வ­தில்லை.

என்னை பக­டைக்­கா­யாக பயன்­ப­டுத்­து­வ­தாக பஸில் ராஜபக் ஷ கூறு­வதை ஒரு­போதும் நான் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. அவர்கள் எவ்­வாறு மாகா­ண­ச­பை­களை பயன்­ப­டுத்­தினர், சில அர­சி­யல்­வா­திகள் எவ்­வாறு இவர்­களால் பயன்­ப­டுத்­தப்­பட்­டனர் என்­பது எமக்குத் தெரியும். இது­வரை காலம் எவ­ரதும் கண்­களில் படாத தவ­றொன்று எமது கண்­களில் பட்­டுள்­ளது. எமது மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்வு வேண்டும் என கேட்­டுக்­கொண்டு நாளை (இன்று) பேச்­சு­வார்த்­தைக்கு செல்­கின்றோம்.

இதில் இறுதி வடி­வத்தை கண்­ட­பின்னர் வர்த்­த­மானி அறி­வித்­த­லை வெளியிடுமாறு வலி­யு­றுத்­தி­யுள்ளோம். ஆகவே இதனை தவிர வேறு எந்த மாற்றங்களும் இடம்பெறப்போவதில்லை. சில தினங்கள் மாத்திரமே தேர்தல் தாமதமாகும் ஆனால் எமது மக்களுக்கு தீர்வு கிடைக்கும். நாம் மாகாணசபை அதிகாரங்களுக்காக பொலிஸ், இடம் அதிகாரங்கள் கேட்கவில்லை, நாம் எமது மக்கள் இலகுவாக வாழக்கூடிய வகையில் எல்லை நிர்ணய முறைமையினை சரியாக செய்துகொள்ளவேண்டிய தேவை உள்ளது. நுவரெலியாவில் இப்போது உள்ள ஐந்து பிரதேச சபைகளை பன்னிரண்டு பிரதேச சபைகளாக மாற்றியமைக்க வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.