Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘மகிழ்ச்சியை பெற்றுக்கொடுக்க வேண்டும்’

Featured Replies

‘மகிழ்ச்சியை பெற்றுக்கொடுக்க வேண்டும்’
 

image_a1c07afb6e.jpg“தீபத்திருநாளானது, அதனைக் கொண்டாடும் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் சுபீட்சத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதுடன், அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

“மனிதனின் ஆன்மீக வாழ்க்கைக்கும் லௌகீக வாழ்க்கைக்கும் ஒளியின் பங்கு மிக முக்கியமாக அமைகின்றது. அந்தவகையில், தீபாவளி தினத்தன்று இந்து பக்தர்களால் ஏற்றப்படும் தீப ஒளியானது, அவர்களது உள்ளங்களில் பிரகாசத்தை ஏற்படுத்துவதைப் போன்றே நம் நாட்டின் அனைத்து மக்களின் இதயங்களிலும் ஒளியேற்றி சகல இனங்களையும் ஒன்றிணைக்கும் ஒளிப்பாலமாக அது அமைய வேண்டுமென்பதே எனது பிரார்த்தனையாகும்.   

“மேலும், ஒற்றுமை என்பது நமது நாட்டுகு மாத்திரமன்றி முழு உலகத்தினதும் இருப்புக்கு கட்டாயத் தேவையாக அமைந்துள்ள இன்றைய பொழுதில், இலங்கையர் என்ற வகையில் நாமும் இன, மத என பிரிவடைந்து காணப்படுவதற்கு பதிலாக சகவாழ்வு, நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆழமான பிணைப்பு மிக்க புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட, இவ்வாறான கலாசார விழாக்கள் பெரும் ஆதாரமாக அமையுமென்பதே எனது எண்ணமாகும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.    

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மகிழ்ச்சியை-பெற்றுக்கொடுக்க-வேண்டும்/71-205711

  • தொடங்கியவர்

கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வை காணும் பழக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் – றெயினோல்ட் குரே

reginold-cooray.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் அனைத்து மக்களினதும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகி நாம் அனைவரும் இலங்கையர் என்று வாழும் நிலை தோன்ற வேண்டும் என இந்நாளில் இறைவனை பிராத்திப்பதாக வட மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் தீபாவளித் திருநாளில் இன்று உலங்கெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி கொண்டாட முக்கிய காரணம் கிருஷ்ணரின் லீலைதான் என்பது யாவரும் அறிந்ததே! உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றி பெறுகிறார் கிருஷ்ணன் ஆனால் அதேசமயம் அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கின்றார் கிருஷ்ணன்

இந்த இதிகாசத்தினை உதாரணமாக கொண்டு இலங்கைத் திருநாட்டில் வாழும் ஏனைய இனத்தவரும் தமிழ் மக்களின் தீபத்திருநாளை தமிழ் மக்களோடு இணைந்து கொண்டாடவேண்டும். இதேபோன்று வெசாக், நத்தார் பண்டிகைகளையும் மூவின மக்களும் ஒன்றாக தேசிய ரீதியில் கொண்டாட வேண்டும் என இந்நாளில் நான் வலியுறுத்தி நிற்கின்றேன்.

எம்மிடையே இன,மத, மொழி பேதங்கள் இல்லாது ஐக்கியப்பட்டு வாழ்வதற்குரிய வழிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும், ஜனநாயக ரீதியில் கலந்துரையாடல்கள் மூலம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வை காணும் பழக்கத்தினை நாம் அனைவரும் ஏற்படுத்திக் கொண்டு வாழ வேண்டும். அதன் மூலமே வன்முறையற்ற சமூகம் ஒன்றினை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/45715

  • தொடங்கியவர்

சமாதானத்துடன் வாழ தீபாவளித் திருநாள் வழி வகைசெய்ய வேண்டும் – இரா.சம்பந்தன்

சமாதானத்துடன் வாழ தீபாவளித் திருநாள் வழி வகைசெய்ய வேண்டும் – இரா.சம்பந்தன்
 
 

அனைத்து மக்களும் இன, மத வேறுபாடுகளின்றி ஒருமித்த நாட்டில் ஐக்கியமாக சாந்தி, சமாதானத்துடன் வாழ தீபாவளித் திருநாள் வழி வகைசெய்ய வேண்டும் – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உலகுக்கு கதிரவன்,சந்திரன் ஆகிய கோள்கள் ஒளி தருகின்றன. இவற்றைவிட மனிதர்களால் ஏற்றப்படும் விளக்குகளும் இருளை விலக்கி ஒளியைத் தருகின்றன. விளக்கு என்பதை தீபம் என்றும் அழைப்பர். இத் தீபங்களை வரிசையாக ஏற்றும்போது அதனை ஆவளி (வரிசை) என்று கூறுவர்.

எனவே, தீபங்களை வரிசை வரிசையாக அடுக்கி எண்ணெய் அல்லது நெய் விட்டு அவற்றைப் பிரகாசமாக ஒளிர விடும்போது, அவை மக்கள் மனங்களில் இருளாக உள்ள கோபம், குரோதம், அகங்காரம், பொறாமை மற்றும் பிற தீய எண்ணங்களை அகற்றுமென்பது தமிழர்களின் ஐதீகம்.

தீபாவளிப் பண்டிகை, இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்றாகும். இறைவனிடம் சக்தி பொருந்திய வரத்தைப் பெற்றுக்கொண்ட நரகாசுரன் என்னும் அரக்கன், மக்களுக்கும் தேவர்களுக்கும் துன்ப துயரங்களைச் செய்பவனாகவும், பெரும் அச்சுறுத்தலானவனாகவும் விளங்கினான்.

அவ்வாறு துன்பங்களை அனுபவித்த தேவர்கள் நரகாசுரன் எனும் அரக்கனிடமிருந்து தம்மைக் காப்பாற்றுமாறு இறைவனிடம் வேண்டுகோள் விடுத்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கமைய இறைவனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டான். அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தையே தீபாவளியாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர்.

இத் தீபாவளித் திருநாளானது ஐப்பசி மாதத்து அமாவாசைக்கு முன்தினமான சதுர்த்தசி தினத்தில் கொண்டாடப்படுகின்றது. இவ்விழாவின் பொருட்டு எமது நாட்டில் மட்டுமல்ல, இந்தியா, நேபாளம், மியன்மார், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளிலும் அரசு விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளமை இத் திருநாளின் சிறப்புக்குச் சான்றாகும்.

இடப் பெயர்வுகள், அகதி வாழ்க்கை, வாழ்வாதாரப் பிரச்சினைகளால் துன்ப, துயரங்களை அனுபவித்து வந்த எமது மக்கள், அவற்றிலிருந்து விடுபட்டு சம அந்தஸ்துடன் கூடிய உரிமைகளுடன் வாழ வேண்டும். இதற்காக இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டும். அனைத்து மக்களும் இன, மத வேறுபாடுகளின்றி ஒருமித்த நாட்டில் ஐக்கியமாக சாந்தி, சமாதானத்துடன் வாழ இத் தீபாவளித் திருநாள் வகைசெய்ய வேண்டும்.

இதற்காக எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி, இந்நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் தொப்புள் கொடி உறவுகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்றார்

http://newuthayan.com/story/37990.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.