Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுவியுங்கள் : சபையில் சம்பந்தன்

Featured Replies

அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுவியுங்கள் : சபையில் சம்பந்தன்

 

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உண்ணா விரதமிருக்கும் அரசியல் கைதிகளின் அரசியலமைப்பு உரிமை முற்றாகமறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் அரசியல் ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டு  விடுவிக்கப்படவேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.

sampanthan-maithri-ranil.jpg

அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகள் இல்லை எனக் கூறமுடியாது எனச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், அரசாங்கம் இப்பிரச்சினையில் தீவிரமான தன்மையைக் காட்டாமையினால் தாங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழந்து வருகின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம்  தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்படவேண்டும், உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் ஆகிய விடயங்களை வலியுறுத்தி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று அரசாங்கம் உறுதிமொழி அளித்துள்ளது. பயங்கரவாதச் தடைச்சட்டத்தில் பல்வேறு தீங்குகள் காணப்படுவதால் அச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்பது அனைத்து தரப்பினரதும் கோரிக்கையாகும். 

அரசாங்கத்தினால் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதிக்கு அமைவாக அச்சட்டம் நீக்கப்பட்டு சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற வகையிலான சட்டம் உருவாக்கப்பட வேண்டும். 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கைது செய்யப்பட்ட காலப்பகுதியில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு  தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் தற்போது வரையில் அவர்கள் சிறைச்சாலையில் கழித்த காலத்தினை வைத்துப் பார்க்கையில் தண்டனைக் காலத்தினையே அவர்கள் அனுபவித்து நிறைவுசெய்திருப்ப்பார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கான தண்டனைக் காலத்தினை விடவும் அதிகளவு காலப் பகுதியினை சிறைச்சாலையில் கழித்துள்ளார்கள். 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள   அந்த நபர்கள் அரசியல் காரணங்களுக்காக சில செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பதை மறுக்க முடியாது.  தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்று   வழங்கப்பட்டிருந்தால் இவ்வாறான அரசியல் ரீதியான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்காது. மோதல் நிலைமைகள் ஏற்பட்டிருக்காது. 

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தினை வெறுமனே  சட்டப் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. அதற்கு அரசியல் பரிமானம் காணப்படுகின்றது. ஆகவே இந்த பிரச்சினை  அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. 

1970, 1980களில் ஜே.வி.பி.கிளர்ச்சியின் போது பாரிய குற்றச்செயல்களில்  ஈடுபட்டவர்கள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்கள். அன்று அவ்வாறான கிளர்ச்சி மேற்கொள்ளப்படுவதற்கு அரசியல் பரிமாணமொன்று இருக்கின்றது. அந்த அரசியல் ரீதியான பரிமாணத்தின் அடிப்படையிலேயே அவர்கள் தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டு தீர்வு வழங்கப்பட்டது. பொதுமன்னிப்பு அடிப்படையில் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள். 

அவ்வாறிருக்கையில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை. அவர்கள் விடுவிக்கப்படாது நீண்டகாலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் குடும்பத்தினர் இவ்வாறு நீண்டகாலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள். 

தற்போது நல்லிணக்கம் தொடர்பாக பேசப்படுகின்றது. பயங்காரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் விடுவிப்பதானது நல்லிணக்கத்தின் அடிப்படையாக அமையும். நுல்லிணக்கத்தினை மையமாக வைத்து நீங்கள் செயற்படவேண்டியது அவசியமாகும். 

அவ்வாறிருக்கையில் தற்போது மூவரின் வழக்குகள் வவுனியாவிலிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அவ்வாறு மாற்றப்பட்டமைக்கு சாட்சிகளின் பாதுகாப்பே காரணமாக கூறப்பட்டுள்ளது. உண்மையிலேயே இவர்களின் வழக்குளை மாற்றாது சாட்சிகளுக்கு பாதுகாப்பினை வழங்கியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. 

வழக்குகள் திடீரென மாற்றப்பட்டுள்ளமையால் அந்த நபர்களும் குடும்பத்தினரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு  முகங்கொடுக்கின்றனர். குறிப்பாக வழக்குகள் மாற்றப்பட்டுள்ள மூவர் தொடர்ச்சியாக உண்ணாவிரதப்போராட்டத்தினை மேற்கொண்டு வருவதால் உடல் நிலை மோசமடைந்துள்ளனர். 

வவுனியாவில் நீதிமன்றத்தின் மொழி தமிழாகும். அநுராதபுரத்தில் நீதிமன்ற மொழி சிங்களம் ஆகும். இந்த நபர்களுக்கு சிங்களம் தெரியாது. சிங்கள மொழி அறிவற்ற ஒருவர் தனது வழக்கினை தமிழில் விசாரிப்பதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றார். இதற்கு அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடும் காணப்படுகின்றது. ஆகவே வழக்குகள் மாற்றப்பட்டமையானது அரசியலமைப்புக்கு முரணான விடயமாகும். 

அதுமட்டுமன்றி சிறைச்சாலையில் உள்ளவர்கள் விரும்பும் சட்ட உதவி  மறுப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தமக்கான நீதியை அடைவதற்கான மறுப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தனிப்பட்ட முறையில் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை. அவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட அரசியல் பரிணாமம் இருக்கின்றது. அதனைப் புரிந்து கொள்ளுங்கள். அரசியல் ரீதியான பரிணமம் காணப்பட்டதால் ஜே.வி.பி.க்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. 

அரசாங்கத்தினை எதிர்க்கவில்லை. இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. இந்தப்பிரச்சினையை தீர்க்க வேண்டிய காலம் வந்து விட்டது. அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று அரசாங்கத்தினால் கூறமுடியது. இந்த நாட்டில் மோதல் ஏற்பட்டிமையால் தான் அவர்கள் தடுப்புக்காவலில் இருக்கின்றார்கள். இந்த நபர்கள் அரசியல் ரீதியாக சில செயற்பாடுகளில் ஈடுபட்டமையால் தான் இவ்வாறு தடுப்புக்காவலில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.  

அரசியல் கைதிகள் விடயம் தனியே சட்டப்பிரச்சினையல்ல.  அது  அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தினை தீவிரமற்ற பிரச்சினையாக பார்க்க கூடாது. தமிழ் அரசியல் கைதிகளை ,  தீவிரமான முறையில் அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்ற மன நிலையில் தமிழ் மக்கள் உள்ளார்கள். வழக்குகள் மாற்றப்பட்டமை ஏற்றுக்கொள்ளப்படமுடியாது. அரசியலமைப்பில் உள்ள உரிமை மறுக்கப்படுவதற்கு அனுமதிக்க முடியாது. இப்பிரச்சினையை மிகவும் தீவிரமாக அனுக வேண்டும் என்றார்.  

இதேவேளை சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க பதிலளித்து உரையாற்றுகையில் குறுக்கீடு  செய்த எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமானது. அது நீக்கப்படவேண்டும் என்று வாக்குறுதி அளித்துள்ளீர்கள். அதனை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். அப்படியென்றால் அந்தச் சட்டம் நீக்கப்படவேண்டும். 

அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பிரச்சினையில் அரசாங்கம் தீவிரமான போக்கினை காட்டாமையினால் நாங்கள் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழந்து வருகின்றோம். ஆகவே நீங்கள்(அரசாங்கம்) காலதாமதம் செய்யாது தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/25932

  • தொடங்கியவர்

அரசியல் கைதிகள் விடயத்தில் சம்­பந்­தன் காட்டம்

அரசியல் கைதிகள்  விடயத்தில்  சம்­பந்­தன் காட்டம்
 

பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் கைதி­கள் தனிப்­பட்ட முறை­யில் குற்­றச் செயல்­க­ளில் ஈடு­ப­ட­வில்லை.

அவர்­கள் அத்­த­கைய செயல்­க­ளில் ஈடு­பட்­ட­மைக்கு ஓர் பின்­னணி அர­சி­யல் பரி­மா­ணம் இருக்­கின்­றது. அத­னைப் புரிந்து கொள்­ளுங்­கள்.எனவே அர­சி­யல் கைதி­கள் என்று எவ­ரும் இல்லை என்று கூற­மு­டி­யாது.

இவ்­வாறு நேற்று வலி­யு­றுத்­தி­னார் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன்.

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லையை வலி­யு­றுத்தி நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுச் சபை ஒத்­தி­வைப்பு வேளைப் பிரே­ரணை மீது அவர் உரை­யாற்­றி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஜே.வி.பியி­னர் கிளர்ச்சி­யில் ஈடு­பட்­டார்­கள். அவர்­கள் பொது­மன்­னிப்­பின் கீழ் விடு­விக்­கப்­பட்­டார்­கள். அன்று அவ்­வா­றான கிளர்ச்சி மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு அர­சி­யல் பரி­மா­ணம் ஒன்று இருந்­தது.

அந்த அர­சி­யல் பரி­மா­ணத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே அவர்­கள் தொடர்­பில் முடிவு எடுக்­கப்­பட்­டுத் தீர்வு வழங்­கப்­பட்­டது.

தற்­போது நல்­லி­ணக்­கம் தொடர்­பா­கப் பேசப்­ப­டு­கின்­றது. பயங்­கா­ர­வாத தடைச்­சட்­டத்­தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­கள் அனை­வ­ரை­யும் விடு­விப்­ப­தா­னது அந்த நல்­லி­ணக்­கத்­தின் அடிப்­ப­டை­யாக அமை­யும்.

பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்ட மூவ­ரின் வழக்­கு­கள் வவு­னி­யா­வி­லி­ருந்து அநு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்­ளன. அதற்­குச் சாட்­சி­க­ளின் பாது­காப்பே கார­ண­மா­கக் கூறப்­பட்­டுள்­ளது.

உண்­மை­யி­லேயே இவர்­க­ளின் வழக்­குளை மாற்­றாது சாட்­சி­க­ளுக்கு பாது­காப்­பினை வழங்­கி­யி­ருக்க முடி­யும். ஆனால் அவ்­வாறு செய்­யப்­ப­ட­வில்லை.

வழக்­கு­கள் திடீ­ரென மாற்­றப்­பட்­டுள்­ள­மை­யால் அவர்­க­ளும், அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ரும் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்­கின்­ற­னர்.

வழக்­கு­கள் மாற்­றப்­பட்­டுள்ள மூவர் தொடர்ச்­சி­யாக உணவு ஒறுப்பை மேற்­கொண்­டுள்­ள­னர். வழக்­கு­கள் மாற்­றப்­பட்­ட­மை­யா­னது அர­ச­மைப்­புக்­கும் முர­ணா­னது.

இந்த விட­யத்­தில் அரசு உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது. இந்­தப் பிரச்­சி­னையை தீர்க்க வேண்­டிய காலம் வந்­து­விட்­டது.

அர­சி­யல் கைதி­கள் எவ­ரும் இல்லை என்று அர­சி­னால் கூற­மு­டி­யது. இந்த நாட்­டில் மோதல் ஏற்­பட்­ட­மை­யால்­தான் அவர்­கள் தடுப்­புக்­கா­வ­லில் இருக்­கின்­றார்­கள்.

இந்த நபர்­கள் அர­சி­யல் ரீதி­யான செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்­ட­மை­யால்­தான் இவ்­வாறு தடுப்­புக்­கா­வ­லில் இருக்க வேண்­டிய நிலமை ஏற்­பட்­டுள்­ளது.

அர­சி­யல் கைதி­கள் விட­யம் தனியே சட்­டப்­பி­ரச்­சி­னை­யல்ல அதனை அர­சி­யல் ரீதி­யா­கவே தீர்க்­க ­வேண்­டும். அரசு இந்த விட­யத்­தினை தீவி­ர­மற்ற பிரச்­சி­னை­யா­கப் பார்க்­கக்­கூ­டாது.

அரசு அத்­த­கைய மனோ­நி­லை­யில்­தான் உள்­ளது என்றே தமிழ் அர­சி­யல் கைதி­க­ளும் தமிழ் மக்­க­ளும் எண்­ணு­கின்­றார்­கள். அரசு இப்­ப­டிச் செயற்­ப­டு­வ­தால் நாங்­க­ளும் மக்­கள் மத்­தி­யில் செல்­வாக்­கி­ழந்து வரு­கின்­றோம்.

வழக்­கு­கள் மாற்­றப்­பட்­டமை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அர­ச­மைப்­பின் மூலம் எந்­த­வொரு குடி­ம­க­னுக்­கும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள உரிமை மறுக்­கப்­ப­டு­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது- என்­றார்.

http://newuthayan.com/story/37999.html

  • தொடங்கியவர்

தமி­ழர் என்­ப­தாலா   அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை இழுத்­த­டிப்பு?

 
 தமி­ழர் என்­ப­தாலா   அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை இழுத்­த­டிப்பு?
 

அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்­டுள்ள சிங்­கள கைதி­களை விடு­விக்க முடி­யுமா­ யின் ஏன் தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­தலை செய்ய முடி­யாது. தமி­ழர்­கள் என்­ப­தால் இந்த விவ­கா­ரம் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கி­றதா?

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ. சுமந்­தி­ரன் கேள்வி எழுப்­பி­னார்.

அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லையை வலி­யு­றுத்தி எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னால் கொண்­டு­வ­ரப்­பட்ட சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை மீதான விவா­தத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஆட்­சி­மாற்­றத்­தின் பின்­னர் நாங்­கள் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை குறித்து பல தட­வை­கள் அரச தலை­வ­ரி­டம் எடுத்­துக் கூறி­னோம்.

சட்­டமா அதி­பர் உள்­ளிட்ட பல அதி­ காரி­க­ளு­டன் பேச்­சு­கள் நடத்­தப்­பட்­டன. ஒரு­சில கைதி­களை சிறை­யில் இருந்து விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

சில கைதி­க­ளுக்கு குறைந்த தண்­ட­னை­யின் அடிப்­ப­டை­யில் விடுக்­கப்­பட்­ட­ னர். இன்­னும் பலர் சிறை­யில் உள்­ன­னர். இதற்கு அரசு பல கார­ணி­க­ளைக் கூற­லாம்.

தேசிய பிரச்­சினை தீர்க்­கப் ப­டாது உள்­ள­மையே இதற்கு முக்­கிய கார­ண­மா­கும். தமிழ் கைதி­கள் அர­சி­யல் நோக்­கங்­க­ளுக்­காவே கைது­செய்­யப்­பட்டுத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதை­யொத்த போராட்­டத்­தில் தெற்­கில் கைது­செய்­யப்பட்­ட  சிங்­கள கைதி­கள் அன்று விடு­விக்­கப்­பட்­டி­ருந்த னர். தமிழ் கைதி­கள் என்­ப­தால் இந்த விவ­கா­ரம் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கி­றதா? – என்று கேள்வி எழுப்­பி­னார்.

http://newuthayan.com/story/38220.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.