Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைமீறல்களும் அரசாங்கத்தின் பிரதிபலிப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைமீறல்களும் அரசாங்கத்தின் பிரதிபலிப்பும்

இலங்கையில் மனித உரிமைகள் படுமோசமாக மீறப்படுகின்ற தற்போதைய நிகழ்வுப் போக்கு எங்குபோய் முடியுமோ தெரியவில்லை. கடந்த சனிக்கிழமை கொழும்புக்கு வெளியே முத்துராஜவெலவில் சதுப்பு நிலப்பகுதியில் உருக்குலைந்த ஐந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மறுநாள் களனி கங்கையில் மிதந்து கொண்டிருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலையும் வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம் பகுதியில் ஐந்து பேரின் சடலங்கள் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் அன்றாடம் குறைந்தது ஐந்து பேராவது சுட்டுக்கொலை செய்யப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆட்கடத்தல்களும் ஓய்ந்தபாடாக இல்லை. இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் மாத்திரம் தலைநகரிலும் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் ஆட்கடத்தல் மற்றும் ஆட்கள் காணாமல் போன சுமார் 100 சம்பவங்கள் குறித்து முறையிடப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது. மக்களைப் பெரும் பீதிக்குள்ளாக்கியிருக்கும் இந்த பயங்கர நிகழ்வுப் போக்கு தணிவதற்கான எந்தவொரு அறிகுறியையும் காணவில்லை.

அண்மைக்காலமாக இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கடுமையான கவலை வெளியிட்ட வேளைகளில் எல்லாம் அரசாங்கத் தரப்பின் பிரதிபலிப்பு பொறுப்புணர்ச்சியுடன் கூடியதாக இருக்கவில்லை. அரசு இயந்திரத்தின் அனுசரணையுடனேயே மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக வெளிப்படையாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. சிவில் கண்காணிப்புக் குழுவின் அமைப்பாளரான மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. நேற்றைய தினம் ஆங்கிலத் தினசரியொன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் சுட்டிக்காட்டியிருந்த சில முக்கிய அம்சங்கள் உன்னிப்பாக நோக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. `அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலேயே ஆட்கடத்தல் மற்றும் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இந்தச் சம்பவங்களில் அரசாங்கத்தினதும் பாதுகாப்பு துறையினதும் செல்வாக்குமிக்க ஒரு பிரிவினருக்கு தொடர்பு இருக்கிறது. ஆட்கள் கடத்திச் செல்லப்பட்ட வாகனங்களில் எந்தவொன்றுமே சோதனை நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு, கடத்தல்காரர்கள் கைது செய்யப்படவோ அல்லது விசாரணை செய்யப்படவோ இல்லை' என்று மனோ கணேசன் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகையதொரு பின்புலத்திலே நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேராவும் நேற்று புதன்கிழமை அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் கொழும்பில் செய்தியாளர் மகாநாடுகளில் தெரிவித்திருக்கும் விடயங்கள் எமது கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கின்றன. ஆட்கள் கடத்தப்பட்டு பெருந்தொகைப் பணம் கப்பமாகக் கோரப்படுகின்ற சம்பவங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர் பெரேரா, `பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் இந்தச் சம்பவங்களில் தொடர்புபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதிகரிக்கும் ஆட்கடத்தல்களையும் கொலைகளையும் தடுத்துநிறுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று கூறியிருந்தார். ஆட்கடத்தல்கள் மற்றும் பணம் பறிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல பொலிஸ் அதிகாரிகளும் படையதிகாரிகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் கப்பப் பணம் வெளிநாடுகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கடந்த வருடம் செப்டெம்பருக்குப் பிறகு கைது செய்யப்பட்டிருக்கும் 433 பேரில் பெரும் எண்ணிக்கையான பொலிஸ் அதிகாரிகளும் படைவீரர்களும் படைகளிலிருந்து தப்பியோடியவர்களும் அடங்குகிறார்கள்' என்றும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் செய்தியாளர் மகாநாட்டில் பேசிய கெஹலிய ரம்புக்வெல, `ஆட்கடத்தல்களிலும் கொலைகளிலும் அரசாங்க பாதுகாப்பு படைகளின் சில அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக அரசாங்கம் சந்தேகிக்கின்றது. இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கடந்த செப்டெம்பருக்குப் பிறகு 450 க்கும் அதிகமானவர்களை பொலிஸார் கைது செய்திருக்கிறார்கள். இவர்களில் 20 பேர் பொலிஸையும் இராணுவத்தையும் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட பொலிஸார் மற்றும் படையதிகாரிகளில் சிலர் ஆட்கடத்தல், ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்களிலும் கொலைகளிலும் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.