Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு.!

Featured Replies

இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு.!

 

 

ரயில்வே ஊழி­யர்­களின் சம்­பள உயர்வு குறித்து அர­சாங்கம் காலத்தை கடத்­து­வ­தாக குற்­றம் ­சு­மத்தி இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் கால­வ­ரையறை­யின்­றியபணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர். அர­சாங்­கத்­து­ட­னான எந்த பேச்­சு­வார்த்­தை­களும் வெற்­றி­ய­ளி­க்கா­த­மையே இதற்கு கார­ண­மென அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர். 

Image result for Virakesari

சம்­பள உயர்வு கோரிக்­கை­யினை முன்­வைத்து கடந்த மாதம் 18 ஆம் திகதி புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணி­ப­கிஸ்­க­ரிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்த நிலையில்  அவர்­களின் சம்­பள உயர்வு தொடர்பில் கடந்த மாதம் 20 ஆம் திகதி பிர­த­மரின் செய­லாளர் தலை­மையில் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  

இதன்­போது   இம்­மாத சம்­ப­ளத்தில் உயர்வு  உள்­ள­டக்­கப்­ப­டு­வ­தா­கவும் அதற்­கான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு 19ஆம் திகதி  வழங்­கப்­படும்  எனவும் கூறப்­பட்ட நிலையில் உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்தல் எவையும் வராத கார­ணத்­தினால் இவர்கள் மீண்டும் கால­வ­ரை­யின்­றிய பணிப்­ப­கிஸ்­க­ரிப்பில் ஈடு­ப­டு­வ­தாக கூறு­கின்­றனர். 

இது தொடர்பில் ரயில்வே நட­வ­டிக்­கைகள் மேற்­பார்வை சங்­கத்தின் ஏற்­பாட்­டாளர் லால் ஆரி­ய­ரத்ன  குறிப்­பி­டு­கையில், 

கடந்த மாதம் 20 ஆம் திகதி எமது தொழிற்­சங்­கங்கள் அனைத்தும் பிர­த­மரின் செய­லா­ள­ருடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். இதன் போது திறை­சேரி அதி­கா­ரி­களும் கலந்­து­கொண்­டனர்.  எமக்­கான சம்­பள உயர்வை இரண்டு கட்­டங்­களில் உள்­ள­டக்­கு­வ­தா­கவும் இன்­றைய தினத்தில்  அதற்­கான உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்­தலை சகல தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் வழங்­கு­வ­தா­கவும் பிர­த­மரின் செய­லாளர் எமக்கு வாக்­கு­றுதி வழங்­கினார். 

இந்த சம்­பள உயர்வின் பிர­காரம் 300 ரூபாய் அள­வி­லான அதி­க­ரிப்பே ஏற்­படும், எம்.பி1, எம்.பி2 தர ஊழி­யர்­க­ளுக்கு ஊதிய உயர்வை வழங்­கு­மாறு, பிர­த­மரின் செய­லாளர் சமன் ஏக்­க­நா­யக்க பணிப்­புரை விடுத்­தி­ருந்தார்.  எனவே ஒரு­மாத காலத்தில் அதனை நிறை­வு­செய்து தரு­வ­தாக இவர்கள் வாக்­கு­றிதி வழங்­கினர். ஆனால் உரிய அதி­கா­ரிகள் இது­வ­ரையில் அதற்­கான எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை. ஆகவே பிர­த­மரின்  செய­லா­ளரின் வாக்­கு­றுதி மீறப்­பட்­டுள்ள நிலையில் புகை­யி­ரத தொழிற்­சங்­கங்கள், புகை­யி­ரத நிலைய அதி­கா­ரிகள், அதி­பர்கள்  மற்றும் புகை­யி­ரத கட்­டுப்­பாட்­டா­ளர்கள் எமது சகல தொழிற்­சங்­கங்கள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து ஏக­ம­ன­தாக ஒரு தீர்­மா­னத்­தினை எடுத்­துள்ளோம். 

அதா­வது நாளை( இன்று ) 20 ஆம் திகதி நள்­ளி­ரவு தொடக்கம்  நாட­ளா­விய ரீதியில் கால­வ­ரை­ய­றை­யின்றி பணிப்­ப­கிஸ்­க­ரிப்பில் ஈடு­பட தீர்­மானம் எடுத்­துள்ளோம். நாம் நியா­ய­மாக எமது கோரிக்­கை­களை முன்­வைத்து அமை­தி­யாக பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்ட போதிலும் எமது பிரச்­சி­னை­களை அர­சாங்கம் கவனத்தில் கொள்ள மறுக்கின்றனர். எனவே மக்களை அசௌகரியப்படுத்தும் செயற்பாடாக  அமைந்தாலும் கூட எமது போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளின் மூலமாக காலத்தை கடத்தாது எமக்கு கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றும் வரையில் நாம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம்  என்றார். 

http://www.virakesari.lk/article/26052

  • தொடங்கியவர்

ரயில்வே வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது.!

 

ரயில்வே சாரதிகள் சங்கம்  இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளனர்.

train.jpg

இன்றுகாலை போக்குவரத்து அமைச்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, ரயில்வே நட­வ­டிக்­கைகள் மேற்­பார்வை சங்­கத்தின் ஏற்­பாட்­டாளர் லால் ஆரி­ய­ரத்ன கூறியுள்ளார். 

இதற்கமையவே தமது வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த தாம் தீர்மானித்ததாக, லால் ஆரி­ய­ரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். 

சம்­பள உயர்வு கோரிக்­கை­யினை முன்­வைத்து கடந்த மாதம் 18 ஆம் திகதி புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணி­ப­கிஸ்­க­ரிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்த நிலையில்  அவர்­களின் சம்­பள உயர்வு தொடர்பில் கடந்த மாதம் 20 ஆம் திகதி பிர­த­மரின் செய­லாளர் தலை­மையில் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  

இதன்­போது   இம்­மாத சம்­ப­ளத்தில் உயர்வு  உள்­ள­டக்­கப்­ப­டு­வ­தா­கவும் அதற்­கான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு 19ஆம் திகதி  வழங்­கப்­படும்  எனவும் கூறப்­பட்ட நிலையில் உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்தல் எவையும் வராத கார­ணத்­தினால் இவர்கள் மீண்டும் கால­வ­ரை­யின்­றிய பணிப்­ப­கிஸ்­க­ரிப்பில் ஈடு­ப­டு­வ­தாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/26068

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.