Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.வின் விசேட அறிக்கையாளருடன் அமைச்சர்களான ஹக்கீம்,ரிஷாட் சந்திப்பு

Featured Replies

ஐ.நா.வின் விசேட அறிக்கையாளருடன் அமைச்சர்களான ஹக்கீம்,ரிஷாட் சந்திப்பு

15-54ff11b780c58222974e33b8de122706a32af392.jpg

 

முஸ்லிம்களின் அபிலாஷைகளடங்கிய அறிக்கையும் கையளிப்பு

(ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்)

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உண்மை,நீதி,இழப்பீடு மற்றும் மீள்நிக ழாமை உத்தரவாதங்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீபினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர ஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான  குழுவினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலை  வரும் அமைச்சருமான  ரிஷாட் பதியூர்தீன் தலைமையிலான குழுவினரும் சந்தித்துள்ளனர். 

அத்துடன் குறித்த இரு தரப்பினரும் முஸ்லிம்களின் அபிலாஷைகளையும், பிரச்சினைகளையும் தெளிவு படுத்தும் வகையிலான இரு அறிக்கைகளையும் தனித்தனியாக ஐ.நா விசேட அறிக்கையாளரிடத்தில் கையளித்தனர்.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதியின் அலுவலத்தில் நேற்று வெ ள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்

இதன்போது ஐ.நா. சபையின் நிலைமாறு கால நீதி தொடர்பான அறிக்கையில் இலங்கை முஸ்லிம்களுடைய கரிசனைகள், வகிபாகம் என்பன தொடர்பில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் மு.கா.தலைவர் சுட்டிக்காட்டி எடுத்துரைத்தார். யுத்தத்தின் போது நிகழ்ந்த அசம்பாவிதங்கள், வடகிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள், இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் முஸ்லிம் விரோத செயல்பாடுகள் ஆகியன தொடர்பிலும் வரிவாக எடுத்துக்கூறியுள்ளார்.

அதனையடுத்து முஸ்லிம்களின் அபிலாஷைகள், முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான அறிக்கையொன்றையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஐ.நா. சபையின் விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீபிடம் கையளித்தார்.

இதேவேளை இச்சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கரஸின் தலைவர் ரிஷாட் பதியூர்தீன் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கட்சியின் தவிசாளர், பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி, அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் அரசியல் விவகார சட்டப் பணிப்பாளர் ருஸ்தி ஹபீப் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது முஸ்லிம்கள் தற்போது இந்த அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகவும் கவலையடைந்து வருகின்றனர். மீள்குடியேற்றம், காணிப் பிரச்சினை, யுத்த காலத்தில் நடந்த இழப்புகளுக்கான நஷ்டஈடு வழங்கப்படாமை போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளை இந்த சமூகம் நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்ற போதும்,இன்னும் அவைதீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டே வருகின்றது.

அரசாங்கம் மேற்கொண்டு வரும்தேர்தல் முறை மாற்றம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உட்பட இன்னும் பல மறுசீரமைப்புக்களில்,முஸ்லிம்சமூகத்தின் அபிலாஷைகளும், கோரிக்கைகளும் உள்வாங்கப்படாத நிலையே இருக்கின்றது.

எந்தவொரு அரசியல் மாற்றத்திலும் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகமும் புறக்கணிக்கப்படாது கருத்திற்கெடுக்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச சமூகம், உறுதிப்படுத்த வேண்டும். ஐ.நா.வும் இந்த விடயங்களில் கரிசனை காட்ட வேண்டும்.

சகல நடவடிக்கைகளிலும் முஸ்லிம் சமூகமும் மூன்றாம் தரப்பாகப் பங்கேற்று, நாட்டின் முஸ்லிம் சனத்தொகை விகிதாசாரத்துக்கு ஏற்ப அவர்களது பங்கினை பெறுவதற்கு உரியநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

எந்தவொரு காலத்திலும் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் பிரிவினையையோ, பிளவினையோ விரும்பாது, அனைத்து சமூகங்களுடனும் ஐக்கியமாகவும், ஒருமைப்பாடாகவும் வாழ்ந்து வருகின்றது.

எனினும்,அண்மைய காலங்களில் இனவாதப் பேச்சுக்களும், செயற்பாடுகளும் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து மேற்கொள்ளப்படுவதுடன், அவர்கள கொச்சைப்படுத்தப்பட்டும், தூஷிக்கப்பட்டும் வருகின்றனர்.

எனவே,இந்த நாட்டில் வெறுப்பூட்டும் பேச்சுக்களையும், செயல்பாடுகளையும் நிறுத்துவதற்கு ஐ.நா. காத்திரமான பணிகளை ஆற்றி, இன ஐக்கியம் வலுப்பெற உதவ வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்தச் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனையடுத்து அமைச்சர் ரிஷாட்டும் முஸ்லிம் மக்களின் நிலைமைகளை தெளி வுபடுத்தும் விரிவான அறிக்கையொன்றையும் ஐ.நா.விசேட அறிக்கையாளரிடத்தில் கையித்திருந்தார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-21

  • தொடங்கியவர்

மைத்­திரி ஆட்­சி­யி­லும் முஸ்­லிம்­கள் மீதான இன­வெ­றுப்பு பரப்­புரை

 
மைத்­திரி ஆட்­சி­யி­லும்  முஸ்­லிம்­கள் மீதான  இன­வெ­றுப்பு பரப்­புரை
 
 

முஸ்­லிம் சமூ­கத்தைக் குறி­வைத்து அண்­மைக் காலங்­க­ளில் இன­வா­தப் பேச்­சுக்­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­து­டன், அவர்­கள் கொச்­சைப்­ப­டுத்­தப்­பட்டு தூசிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­தச் செயற்­பா­டு­களை நிறுத்­து­வ­தற்கு ஐ.நா. காத்­தி­ர­மான பணி­களை முன்­னெ­டுத்து இன ஐக்­கி­யம் வலுப்­பெற உத­வ­வேண்­டும் இவ்­வாறு அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீன், ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் பப்லோ கி­ரிப்­பி­டம் வேண்­டு­கோள் விடுத்­தார்.

இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யா­ளரை, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­வர் ரவூப் ஹக்­கீம், அகில இலங்கை மக்­கள் காங்­கி­ர­ஸின் தலை­வர் ரிசாத் பதி­யு­தீன் இரு­வ­ரும் தனித் தனி­யா­கச் சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னர்.

முஸ்­லிம் சமூ­கத்­தின் வேண­வாக்­கள், பிரச்­சி­னை­க­ளைத் தெளி­வு­ப­டுத்­தும் வகை­யில் இரு­வ­ரும் தனித் தனி­யான அறிக்­கை­யை­யும் சமர்ப்­பித்­த­னர்.

ஐ.நா. சபை­யின் நிலை­மாறு கால நீதி தொடர்­பான அறிக்­கை­யில் இலங்கை முஸ்­லிம்­க­ளு­டைய கரி­ச­னை­கள், வகி­பா­கம் என்­பன தொடர்­பில் சேர்த்­துக் கொள்­ளப்­பட வேண்­டிய விட­யங்­கள் குறித்து ஹக்­கீம் சந்­திப்­பில் எடுத்­து­ரைத்­தார்.

போரின் போது முஸ்­லிம் சமூ­கத்­தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றை­கள், வடக்கு – கிழக்கு காணி ஆக்­கி­ர­மிப்பு, இன­வா­தி­க­ளால் முஸ்­லிம்­களை வெறு­ப் பேற்­றும் பரப்­புரை உள்­ளிட்ட விட­யங்­க­ளை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­ யுள்­ளார்.

அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீன் சந்­திப்­பின்­போது, முஸ்­லிம்­கள் இந்த அர­சின் நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் கவ­லை­ய­டை­கின்­ற­னர். போர்க்­கால இழப்­பீ­டு­கள் வழங்­கப்­ப­ட­வில்லை.

முஸ்­லிம்­க­ளின் மீள்­கு­டி­ யேற்­றம் முழு­மை­ய­டை­ய­ வில்லை என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் முஸ்­லிம் சமூ­கத்­தின் கோரிக்கை புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

முஸ்­லிம்­க­ளின் சனத்­தொகை விகி­தா­சா­ரத்­துக்கு ஏற்ப அவர்­க­ளுக்கு உரிய இடம் எல்லா விட­யங்­க­ளி­லும் வழங்­கப்­பட வேண்­டும் என்று அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

http://newuthayan.com/story/39218.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.