Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு எதிர்கட்சியாக இருந்து ஒத்தாசை வழங்கி வருகின்றோம் – சுமந்திரன்!

Featured Replies

அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு எதிர்கட்சியாக இருந்து ஒத்தாசை வழங்கி வருகின்றோம் – சுமந்திரன்!

 

2060586460Sumanthiran-1-300x225.jpgஅரசாங்கத்தின் முற்போக்கான செயற்றிட்டங்களுக்கு நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து உதவியாகவும், உறுதுணையாகவும் செயற்பட்டு வருகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று வவுனியாவில் நடைபெற்ற ஜனாதிபதியின் நடமாடும் சேவை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் முற்போக்கானசெயற்றிட்டங்களுக்கு நாங்கள் எதிர்க்கட்சி வரிசையிலிருந்து உதவியாகவும் உறுதுணையாகவும் செயற்படுவதுஅரசாங்கத்துக்கு மாத்திரமல்ல அனைவருக்குமே நன்கு தெரியும்.

வடமாகாணத்தில் வவுனியாமாவட்டம் முக்கியமானதொரு மாவட்டமாகும். இங்கு தமிழ் மக்களுடன் சிங்கள மக்களும் வாழ்கின்றனர்.

நாட்டில் இன ஐக்கியம் ஏற்படவேண்டும். தமிழ் மக்களின் அதிகளவான பங்களிப்புடனேயே இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது.

இந்த அரசாங்கம் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அந்த வேலைத்திட்டத்திற்காக நாங்கள் எங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கி வருகின்றோம்.

அது சரியான முறையில் நிறைவேறினால்தான், இத்தகைய வேலைத்திட்டத்தின் முழுப் பெறுமதியையும் நாங்கள் அடையக்கூடியதாக இருக்கும்.

இந்த நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த நாட்டிலே வாழுகின்ற அனைத்து மக்களும் சம பிரஜைகள் என்று வாழ்வதற்கான அத்த்திவாரமாகபோடப்படவேண்டிய புதிய அரசியலமைப்பு உருவாக்கந்தான் இந்த நாடு சுபீட்சம் அடைவதற்கும், ஒரு புதுப் பாதையில் பயணிப்பதற்கும் அத்திவாரமாக இருக்கும்.

அந்தப் பணியை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆரம்பித்திருக்கின்றனர். அப்பணி திறம்படத் தொடரவேண்டுமென வாழ்த்துகின்றேன் எனத் தெரிவித்தார்.

http://www.etr.news/அரசாங்கத்தின்-செயற்திட்/

 

மைத்ரியும் ரணிலும் வவுனியாவில் நிலமற்ற 5000 பேருக்கு காணிகளின் உறுதிப்பத்திரங்கள் வழங்கினர்.

இன்று வவுனியா சைவ பிரகாச மகளிர் வித்தியாலத்தில் இடம் பெற்ற வைபத்தில் கலந்து கொண்ட அதிபர் மைத்ரி மற்றும் பிரதமர் ரணில் நிலமற்ற 5000 மக்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களை வழங்கினார்.

 
ජනපති හා අගමැති ප්‍රධානත්වයෙන් නිල මෙහෙවර වව්නියාවේදී
 
nila mehewara 1
nila mehewara 2
nila mehewara 3
nila mehewara 4
nila mehewara 5
nila mehewara 6
nila mehewara 7
nila mehewara 8
nila mehewara 9
nila mehewara 10
nila mehewara 11
nila mehewara 12
nila mehewara 13

http://sinhala.lankanewsweb.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.