Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புல்லுமலை நோக்கிய ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஆரம்பம்

Featured Replies

தென்தமிழீழத்தில் புல்லுமலை நோக்கிய படை நடவடிக்கை ஒன்றை சிறீலங்கா படையினர் ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்புச் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மதியம் இப்படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கனரக ஆயுதங்கள், எறிகணை, மற்றும் பல்குழல் சகிதம் முன்னேற்ற நகர்வு இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கருத்துரைத்திருக்கும் தமிழீழ இராணுவப் பேச்சாளர் திருமலையின் களயதார்தம் கடந்த 25 வருடங்களாக கரத்தடிப் போர் முறையே முன்னெடுக்கப்பட்டதாகவும் தற்போது புல்லுமலைப் பகுதி நோக்கி முன்னேறும் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளின் போராளிகள் களமாடி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பூர் மற்றும் வாகரை ஆக்கிரமிப்பு நடவடிக்கையை பெரும்வெற்றிச் செய்தியாக காட்டியிருக்கிறார்கள். அது தவிர வேறு சம்பவங்கள் அண்மைக்காலமாக வேறு ஒரு நடவடிக்கையும் இடம்பெறவில்லை.

மட்டக்களப்பில் தற்போது மிகக்கொடூரமான படைநடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அதன் நோக்கம் விடுலைப் புலிகளை வெல்வது அல்ல. அங்கு பொதுமக்களுக்கு பெரும் அவலம் ஒன்றை ஏற்படுத்தவே இப்படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகளை விரைவில் எதிர்பாருங்கள்.

http://www.pathivu.com

புல்லுமலை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பகுதி. ஆனால் இதன் மீதான ஆக்கிரமிப்புச் செய்திக்கு திருமலையில் சிங்களப் படைகள் நடத்திய நகர்வு முயற்சிக்கு இளந்திரையன் வழங்கிய விளக்கத்தை பதிவு கொடுத்துள்ளது.

புல்லுமலையூடான ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு - 6 படையினரின் சடலங்களும் பெருமளவு ஆயுதங்களும் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆளுகையில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் இன்று மூன்றாவது முனையூடாக சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் ஆளுகையில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் நேற்று சிங்களப் படைகளால் பாரிய படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

வாழைச்சேனை காகிதஆலை படைமுகாம், கொம்மாந்துறைப் படைமுகாம், மற்றும் மட்டு நகரில், வெபர் அரங்கிற்கு அருகேயுள்ள 23-3 பிரிகேட் தலைமையகம் ஆகியவற்றிலிருந்து கொக்கட்டிச்சோலை மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்விடங்களை நோக்கி ஆட்டிலறி பீரங்கிகள் மூலமும், பலகுழல் வெடிகணை செலுத்திகள் மூலமும் எறிகணைகளை படையினர் இடைவிடாது ஏவிக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக கடந்த 48 மணிநேரத்தில் கொக்கட்டிச்சோலை மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த நாற்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்புத் தேடி பல்வேறு பகுதிகளிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

நேற்று செங்கலடி கறுத்தப்பாலம் ஊடக கொடுவாகமடு நோக்கியும் புழுக்குணாவ மற்றும் சியாம்பலண்டுவ பகுதிகள் ஊடக உன்னிச்சை நோக்கியும் இரு முனை நகர்வினை படையினர் ஆரம்பித்தனர்.

கறுத்தப்பாலம் ஊடான நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளால் நேற்றே முறியடிக்கப்பட்டது. இதன்போது கொல்லப்பட்ட படையினன் ஒருவரது சடலமும் பெருமளவு ஆயுதங்களும் விடுதலைப் புலிளால் மீட்கப்பட்டிருந்தது.

புளுக்குணாவ பகுதியூடாக உன்னிச்சை நோக்கிய நகர்விற்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல் இரண்டாவது நகளாக தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன

இந்நிலையில் இன்று பகல் புல்லுமலைப் பகுதியூடாக மூன்றாவது முனையில் சிங்கள சிறப்பு அதிரடிப்படையினர் பாரிய நகர்வு முயற்சியை ஆரம்பித்தனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான பதிலடியை நடத்தி படையினருக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தி படை நகர்வை முறியடித்துள்ளனர்.

இதன்போது கொல்லப்பட்ட ஆறு அதிரடிப் படையினரின் சடலங்கள் உட்பட பல ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களி;ல் ஓர் ஆர்.பி.ஜி. உந்துகணை, கனரக இயந்திரத் துப்பாக்கி உட்பட 20 சுடுகலன்களும் அடங்குகின்றன.

http://sankathi.org/news/index.php?option=...03&Itemid=1

20 படையினர் வரை கொல்லப்பட்டிருக்கலாமென புதினத்தின் 2வது இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை போராளி ஒருவரும் இந்த முறியடிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.