Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெர்சல் பட வெற்றிக்கு 'ஜோசப்' விஜய் நன்றி

Featured Replies

மெர்சல் பட வெற்றிக்கு 'ஜோசப்' விஜய் நன்றி

மெர்சல் பட வெற்றிக்கு 'ஜோசப்' விஜய் நன்றிபடத்தின் காப்புரிமைG VENKET RAM

சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் நடித்து வெளியான 'மெர்சல்' படத்தை வெற்றியடையச் செய்ததற்கு, நடிகர் விஜய் நன்றி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தப் படத்திற்கு சில எதிர்ப்புகள் வந்ததாகவும் அந்தத் தருணத்தில், அந்த எதிர்ப்புகளுக்குப் பதில்சொல்லும் வகையில், திரையுலகைச் சேர்ந்தவர்கள், மாநில, தேசிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ஊடகங்கள் ஆகியவை தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

'ஜோசப் விஜய்' என்று பெயர் அச்சிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ லெட்டர்பேடில் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

மெர்சல் பட வெற்றிக்கு 'ஜோசப்' விஜய் நன்றிபடத்தின் காப்புரிமைG VENKET RAM

விஜய் நடித்த மெர்சல் படத்தில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை விமர்சிக்கும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது போன்ற விமர்சனங்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் கோரினர்.

ஆனால், அந்தக் காட்சிகள் நீக்கப்படவில்லை. தவிர, திரையுலகைச் சேர்ந்தவர்களும் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்தத் திரைப்படம் குறித்து தொடர்ந்து கடுமையாகப் பேசிவந்த பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, விஜய்யைக் குறிப்பிடும்போது அவரது மதத்தை சுட்டிக்காட்டும் வகையில் அவரை 'ஜோசப் விஜய்' என்று குறிப்பிட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

http://www.bbc.com/tamil/india-41752132

விவாசாயிகள் பஞ்சத்தால் வரிசையாக தற்கொலை செய்யும் ஒரு நாட்டில், மனித மலத்தை கைகளால் அள்ளும்  ஒரு நாட்டில், வட்டிக் கொடுமைகளால் குழந்தைகள் உட்பட எரிந்து கருகி சாகும் மாநிலத்தில், தகுந்த மருத்துவ வசதிகள் இல்லாமல் ஏழைகள் மரணிக்கும் ஒரு நாட்டில், மரணித்த ஏழைக்கு சடலத்தைத் கொண்டு செல்ல கூட வாகனம் கிடைக்காமல் தோளில் சுமந்து செல்லும்  ஒரு நாட்டில் , பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகள் கூழித்தொழிலாளியாக மாறிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில் .................,

தனது பத்து தலைமுறைகளுக்குத் தேவையான பெரும் சொத்தைக் கொண்டுள்ள ஒருவர் வரி ஏய்ப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனம் ,  இந்த அயோக்கியத் தனத்தை தாராளமாகச் செய்யும் ஜோசப் விஜய் , அரசின் ஜி.எஸ்.டி வரியைக் கண்டிக்கிறாராம்.

ஒரு குடிமகனுக்கு கல்வி, மருத்துவ , பாதுகாப்பு வசதிகளைக் கொடுத்து அவர்களுக்குரிய உட் கட்டமைப்புவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, ஏன் இவர்களின் திரைப்படங்களை பார்ப்பதற்கு மக்கள் வரும் வீதியே அரசாங்கம் போட்டுக் கொடுத்தது தானே......., மக்கள் வரி செலுத்தா விட்டால் எப்படி இவையெல்ல்லம் சாத்தியம்...  அதேமக்களிடம் தமது படங்களைக் காட்டி கொள்ளையடிக்கும் ஜோசப் விஜய் போன்ற வகையறாக்கள் வரி ஏய்ப்பு செய்வது......, ? இவர்கள் தான் மிகப் பெரிய சமூக பயங்கரவாதிகள்........

இதில வேற கடிதத்தின் தலையங்கம் "JESUS SAVES" . இவர்களால் மததிற்குத்தான் இழிவு.

சமூக விரோத பயங்கரவாத அயோக்கியர்கள்

செய்தி

வருமான வரி சோதனையில் விஜய் ரூ.5 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/it-officials-clarify-raid-on-vijay-office-117102400008_1.html

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

 

ஆளப்போறான்...யாரை சொல்கிறார் விஜய் ? |

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.